-அமரர் கல்கி. பாரதத் திருநாடு சுதந்திரம் பெற்ற 1947 ஆகஸ்ட் 15, அன்றைய கல்கி இதழில் அமரர் கல்கி அவர்கள் எழுதிய சுதந்திர தின சிறப்புக் கட்டுரை..பேரிகை கொட்டுங்கள்! முரசம் முழங்குங்கள்! சங்கம் ஊதுங்கள்! கொடி உயர்த்துங்கள்! விழா நடத்துங்கள்! "வந்தே மாதரம்" என்று வணங்குங்கள்! "வாழ்க பாரதம்!" என்று வாழ்த்துங்கள்! "ஜே ஹிந்த்!" என்று கோஷமிடுங்கள்!.கனவு அல்ல; பிரமை அல்ல; கற்பனையும் அல்ல; – நம்முடைய வாழ்க்கையில், நம்முடைய கண் முன்னே, இதோ பாரத புண்ணிய பூமி பூரண சுதந்திரம் அடைந்தது! இருநூறு வருஷத்து அன்னிய ஆட்சி முடிவடைந்தது! பரத கண்டத்துப் பெரியோர்கள் செய்த தவம் சித்தி அடைந்தது! ஆயிரமாயிரம் தேச பக்தர்கள் கண்ட கனவு நனவாயிற்று! லட்சோப லட்சம் தேசத் தொண்டர்கள் செய்த தியாகம் பலன் தந்தது. பகவத் கீதையில் பகவான் அருளிய திருவாக்குப் பலித்தது! சத்தியம் ஜயித்தது!.அதோ, இந்தியாவின் சுதந்திரக் கொடி நாடெங்கும் பறப்பதைப் பாருங்கள்! நேற்று வரையில் பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடி பறந்து கொண்டிருந்த கவர்ன்மெண்ட் மாளிகைகளிலும், இராணுவக் கோட்டைகளிலும், சர்க்கார் காரியாலயங்களிலும் இன்று தாயின் மணிக்கொடி வானளாவப் பறப்பதைப் பாருங்கள்! அதில் நீல வர்ணத்தில் பொறித்திருக்கும் அசோக சக்கரத்தையும் பாருங்கள்! இந்தியாவின் ஒருமையையும் பழம்பெருமையையும் ஒருங்கே காட்டி, இமயமலை முதல் குமரிமுனை வரையில் இந்தியா ஒரே சாம்ராஜ்ய மாயிருந்த காலத்தை நினைவூட்டும், அந்த தர்ம சக்கரத்தை நன்றாய்ப் பாருங்கள்!.புது டில்லியில் நடக்கும் அதிசய நிகழ்ச்சியையும் கவனியுங்கள்! இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை பிரிட்டிஷ் சர்க்காரின் பிரதி நிதியிடமிருந்து இந்தியப் பொதுமக்கள் தேர்ந்தெடுத்த தலைவர்கள் ஏற்றுக்கொள்வதைப் பாருங்கள்!.பிரிட்டிஷ் சர்க்கார் நியமித்த மாகாண கவர்னர்கள், தேசீய சர்க்கார் நியமித்த புதிய சுதந்திர கவர்னர்களிடம் மாகாண ஆட்சியை ஒப்புவிக்கும் அற்புதத்தைப் பாருங்கள்!.இந்தியாவின் கவர்னர் ஜெனரலும், கவர்னர்களும், மந்திரிமார்களும் இத்தனை காலமும் பிரிட்டிஷ் மன்னருக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்து வந்ததற்குப் பதிலாக, இன்றைக்கு இந்திய மக்களுக்கு விசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொள்ளும் விந்தையைப் பாருங்கள்!. ***************.இப்படியெல்லாம் நம்முடைய வாழ்நாளில் நடக்கும் என்றும், நம் கண்ணாலே பார்ப்போமென்றும் நம்மில் யாராவது நம்பியிருந்தோமா? அதிலும் இவ்வளவு சீக்கிரத்தில் இந்த 1947ம் வருஷம் ஆகஸ்டு 15 இத்தகைய அற்புதம் நடக்கும் என்று எதிர்பார்த்தோமா?.ஆம்; யாரும் எதிர்பாராத அதிசயந்தான் நடைபெற்றிருக்கிறது. நடக்க முடியாது என்று பலரும் நினைத்த காரியந்தான் நிறைவேறியிருக்கிறது..இந்த அற்புதம் நடப்பதற்கு மூல காரணமாயிருந்து நடத்திவைத்த மகா மந்திரவாதி யார்? சொல்லவும் வேண்டுமா? கையில் ஆயுதம் எடுக்காமல் பாரத யுத்தத்தை நடத்தி வைத்த மாயக்கண்ணனைப் போல், இன்று அஹிம்சா தர்மத்தையே ஆயுதமாகக் கொண்டு வீர சுதந்திரப் போரை நடத்தி, மகத்தான வெற்றியும் அளித்தவர் மகாத்மா காந்தியேதான்! அத்தகைய மாய மந்திரவாதி மகாத்மாவுக்கு வணக்கம் செலுத்துகிறோம். அவருடைய ஆத்மா சக்திக்குப் போற்றி கூறுகிறோம்.. ***************.பாரத நாடு பூரண சுதந்திரம் பெற்ற இந்தப் புனிதத் திருநாளில், தாயின் சுதந்திரத்துக்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்டு வானுலகம் எய்திய பெரியோர்களை நினைவோமாக!.தாதாபாய் நெளரோஜி என்ன, லோகமானிய திலகர் என்ன, லாலா லஜிபதிராய் என்ன, கோபாலகிருஷ்ண கோகலே என்ன, சுரேந்திரநாத் பானர்ஜி என்ன, விபின்சந்திர பாலர் என்ன, வ.உ.சிதம்பரம் பிள்ளை என்ன, – இத்தகைய பெரியோர்களுடைய புனித ஞாபகத்தைப் போற்றுவோம்..மோதிலால் நேருவையும், தேசபந்து தாஸையும், அஜ்மல்கானையும் டாக்டர் அன்ஸாரியையும், அன்னை கஸ்தூரிபாய் தெய்வத்தையும், நமது சத்தியமூர்த்தியையும், நேதாஜி சுபாஷ்போஸையும் வணங்கி வாழ்த்துவோம்..பெரியோர்களே! அனைவரும் வாருங்கள்! ஆவி வடிவிலே ஆகாயத்திலே வந்து நின்று பாருங்கள். உங்களுடைய வாழ்நாள் மனோரதம் நிறைவேறி, பாரதநாடு பூரண சுதந்திரம் அடைந்திருக்கும் அற்புதக் காட்சியைக் கண்டு ஆனந்தப்படுங்கள்! ஆசி கூறுங்கள்!.பிரசித்தி பெற்ற தலைவர்களை நினைந்து போற்றிய நாம் பெயரும் புகழும் இல்லாமல் ஜன்ம தேசத்துக்குத் தொண்டு செய்து உயிரையும் அர்ப்பணம் செய்த தேச பக்த வீர திலகங்களையும் நினைப்போம். அவர்களுடைய தொண்டையும் தியாகத்தையும் வாழ்த்திப் போற்றுவோம்!.சுயநலமென்னும் நினைவே இல்லாமல், பட்டம், பதவி மோகமில்லா தாயின் விலங்கை முறித்தெறிய அரும்பாடு பட்ட தேசபக்தர் திருக்கூட்டத்துக்கு வணக்கம் செலுத்துவோம்..தொண்டர்களே! தேச பக்தர்களே! தியாக மூர்த்திகளே! அலையென வாருங்கள்! ஆகாசவெளியில் நின்று உங்கள் கனவு நிறைவேறும் காட்சியைக் கண்டு மகிழுங்கள்! பாரதத் தாயின் உள்ளம் நிறைந்த ஆசியைப் பெற்றுக் கொள்ளுங்கள்!. ***************.காலஞ்சென்ற தேச பக்தர்களையும் தலைவர்களையும் தொண்டர்களையும் வாழ்த்தி வணங்கிய பிறகு உயிரோடிருக்கும் தேசத் தலைவர்களையும் நினைவோம். அவர்களை வாழ்த்துவோம். வணங்குவோம். அவர்களுக்கு நமது இரு மடங்கு நன்றியைச் செலுத்துவோம்..தாதாபாய் நெளரொஜி முதல் நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் வரையில் தியாக மூர்த்திகளான தேசத் தலைவர்கள் அநேகர் தாய்நாட்டுக்கு அரும்பெரும் தொண்டு செய்திருக்கிறார்கள். உண்மை; சந்தேகமில்லை..ஆனால் அவர்கள் எல்லாரையும் காட்டிலும் இன்று உயிரோடிருக்கும் தேசத் தலைவர்கள் நமது நன்றிக்கு பாத்திரமாகிறார்கள். அவர்கள் உயிரோடிருப்பதே ஒரு பெரிய தொண்டு, பாரதத் தாய் செய்த பாக்கியம்; பாரத மக்களின் தவப்பயன்..ஜவாஹர்லால்ஜியும், வல்லபாய் பட்டேலும், ராஜாஜியும் ராஜேந்திரரும், மெளலானா ஆஸாதும் எல்லாருக்கும் மேலாக காந்தி மகாத்மாவும் உயிரோடிருப்பதால் அல்லவா இன்றைய தினம் பாரத நாடு சுதந்திரம் அடைந்த திருவிழாவை நாம் இவ்வளவு கோலாகலமாகக் கொண்டாடுகிறோம்? மேற்கூறிய உத்தமத் தலைவர்களுடைய காலத்துக்குப் பிறகு பாரத நாடு சுதந்திரம் அடைந்தால் மக்கள் இத்தனை குதூகலம் அடைய முடியுமா? அப்படிக் காலந்தப்பி வரும் சுதந்திரத்தால் நாடு பயன்தான் அடையுமா?.***************.இதையெல்லாம் நன்கு சிந்தித்துப் பார்த்து இந்த ஆனந்த சுதந்திரத் திருநாளில் ஒரு திட சங்கல்பம் எடுத்துக் கொள்வோம்..உலக சரித்திரத்தில் என்றும் இல்லாத விதமாக அன்னிய ஆட்சியிலிருந்து நம்மை இத்தனை எளிதில் விடுதலை செய்து பாரத நாட்டில் சுதந்திரத்தை ஸ்தாபித்த அருமைத் தலைவர்களைப் பிடிவாதமாகப் பின்பற்றுவது என்று உறுதி கொள்வோம். நமது சொந்த சுயநலங்களை மறந்து நாட்டின் பொதுநலமே பெரிதென அறிந்து, தலைவர்களின் கஷ்டங்களை உணர்ந்து கட்டுப்பாட்டுடன் நடப்பதென்று பிரதிக்ஞை செய்வோம்..சுதந்திரம் நிரந்தரமாவதற்கு அது ஒன்றே மார்க்கம். தேச நன்மைக்கும் மக்களின் முன்னேற்றத்துக்கும் அது ஒன்றே சாதனம். வேறு வழி கிடையாது..வாழ்க சுதந்திரம்! வாழ்க நிரந்தரம்!
-அமரர் கல்கி. பாரதத் திருநாடு சுதந்திரம் பெற்ற 1947 ஆகஸ்ட் 15, அன்றைய கல்கி இதழில் அமரர் கல்கி அவர்கள் எழுதிய சுதந்திர தின சிறப்புக் கட்டுரை..பேரிகை கொட்டுங்கள்! முரசம் முழங்குங்கள்! சங்கம் ஊதுங்கள்! கொடி உயர்த்துங்கள்! விழா நடத்துங்கள்! "வந்தே மாதரம்" என்று வணங்குங்கள்! "வாழ்க பாரதம்!" என்று வாழ்த்துங்கள்! "ஜே ஹிந்த்!" என்று கோஷமிடுங்கள்!.கனவு அல்ல; பிரமை அல்ல; கற்பனையும் அல்ல; – நம்முடைய வாழ்க்கையில், நம்முடைய கண் முன்னே, இதோ பாரத புண்ணிய பூமி பூரண சுதந்திரம் அடைந்தது! இருநூறு வருஷத்து அன்னிய ஆட்சி முடிவடைந்தது! பரத கண்டத்துப் பெரியோர்கள் செய்த தவம் சித்தி அடைந்தது! ஆயிரமாயிரம் தேச பக்தர்கள் கண்ட கனவு நனவாயிற்று! லட்சோப லட்சம் தேசத் தொண்டர்கள் செய்த தியாகம் பலன் தந்தது. பகவத் கீதையில் பகவான் அருளிய திருவாக்குப் பலித்தது! சத்தியம் ஜயித்தது!.அதோ, இந்தியாவின் சுதந்திரக் கொடி நாடெங்கும் பறப்பதைப் பாருங்கள்! நேற்று வரையில் பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடி பறந்து கொண்டிருந்த கவர்ன்மெண்ட் மாளிகைகளிலும், இராணுவக் கோட்டைகளிலும், சர்க்கார் காரியாலயங்களிலும் இன்று தாயின் மணிக்கொடி வானளாவப் பறப்பதைப் பாருங்கள்! அதில் நீல வர்ணத்தில் பொறித்திருக்கும் அசோக சக்கரத்தையும் பாருங்கள்! இந்தியாவின் ஒருமையையும் பழம்பெருமையையும் ஒருங்கே காட்டி, இமயமலை முதல் குமரிமுனை வரையில் இந்தியா ஒரே சாம்ராஜ்ய மாயிருந்த காலத்தை நினைவூட்டும், அந்த தர்ம சக்கரத்தை நன்றாய்ப் பாருங்கள்!.புது டில்லியில் நடக்கும் அதிசய நிகழ்ச்சியையும் கவனியுங்கள்! இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை பிரிட்டிஷ் சர்க்காரின் பிரதி நிதியிடமிருந்து இந்தியப் பொதுமக்கள் தேர்ந்தெடுத்த தலைவர்கள் ஏற்றுக்கொள்வதைப் பாருங்கள்!.பிரிட்டிஷ் சர்க்கார் நியமித்த மாகாண கவர்னர்கள், தேசீய சர்க்கார் நியமித்த புதிய சுதந்திர கவர்னர்களிடம் மாகாண ஆட்சியை ஒப்புவிக்கும் அற்புதத்தைப் பாருங்கள்!.இந்தியாவின் கவர்னர் ஜெனரலும், கவர்னர்களும், மந்திரிமார்களும் இத்தனை காலமும் பிரிட்டிஷ் மன்னருக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்து வந்ததற்குப் பதிலாக, இன்றைக்கு இந்திய மக்களுக்கு விசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொள்ளும் விந்தையைப் பாருங்கள்!. ***************.இப்படியெல்லாம் நம்முடைய வாழ்நாளில் நடக்கும் என்றும், நம் கண்ணாலே பார்ப்போமென்றும் நம்மில் யாராவது நம்பியிருந்தோமா? அதிலும் இவ்வளவு சீக்கிரத்தில் இந்த 1947ம் வருஷம் ஆகஸ்டு 15 இத்தகைய அற்புதம் நடக்கும் என்று எதிர்பார்த்தோமா?.ஆம்; யாரும் எதிர்பாராத அதிசயந்தான் நடைபெற்றிருக்கிறது. நடக்க முடியாது என்று பலரும் நினைத்த காரியந்தான் நிறைவேறியிருக்கிறது..இந்த அற்புதம் நடப்பதற்கு மூல காரணமாயிருந்து நடத்திவைத்த மகா மந்திரவாதி யார்? சொல்லவும் வேண்டுமா? கையில் ஆயுதம் எடுக்காமல் பாரத யுத்தத்தை நடத்தி வைத்த மாயக்கண்ணனைப் போல், இன்று அஹிம்சா தர்மத்தையே ஆயுதமாகக் கொண்டு வீர சுதந்திரப் போரை நடத்தி, மகத்தான வெற்றியும் அளித்தவர் மகாத்மா காந்தியேதான்! அத்தகைய மாய மந்திரவாதி மகாத்மாவுக்கு வணக்கம் செலுத்துகிறோம். அவருடைய ஆத்மா சக்திக்குப் போற்றி கூறுகிறோம்.. ***************.பாரத நாடு பூரண சுதந்திரம் பெற்ற இந்தப் புனிதத் திருநாளில், தாயின் சுதந்திரத்துக்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்டு வானுலகம் எய்திய பெரியோர்களை நினைவோமாக!.தாதாபாய் நெளரோஜி என்ன, லோகமானிய திலகர் என்ன, லாலா லஜிபதிராய் என்ன, கோபாலகிருஷ்ண கோகலே என்ன, சுரேந்திரநாத் பானர்ஜி என்ன, விபின்சந்திர பாலர் என்ன, வ.உ.சிதம்பரம் பிள்ளை என்ன, – இத்தகைய பெரியோர்களுடைய புனித ஞாபகத்தைப் போற்றுவோம்..மோதிலால் நேருவையும், தேசபந்து தாஸையும், அஜ்மல்கானையும் டாக்டர் அன்ஸாரியையும், அன்னை கஸ்தூரிபாய் தெய்வத்தையும், நமது சத்தியமூர்த்தியையும், நேதாஜி சுபாஷ்போஸையும் வணங்கி வாழ்த்துவோம்..பெரியோர்களே! அனைவரும் வாருங்கள்! ஆவி வடிவிலே ஆகாயத்திலே வந்து நின்று பாருங்கள். உங்களுடைய வாழ்நாள் மனோரதம் நிறைவேறி, பாரதநாடு பூரண சுதந்திரம் அடைந்திருக்கும் அற்புதக் காட்சியைக் கண்டு ஆனந்தப்படுங்கள்! ஆசி கூறுங்கள்!.பிரசித்தி பெற்ற தலைவர்களை நினைந்து போற்றிய நாம் பெயரும் புகழும் இல்லாமல் ஜன்ம தேசத்துக்குத் தொண்டு செய்து உயிரையும் அர்ப்பணம் செய்த தேச பக்த வீர திலகங்களையும் நினைப்போம். அவர்களுடைய தொண்டையும் தியாகத்தையும் வாழ்த்திப் போற்றுவோம்!.சுயநலமென்னும் நினைவே இல்லாமல், பட்டம், பதவி மோகமில்லா தாயின் விலங்கை முறித்தெறிய அரும்பாடு பட்ட தேசபக்தர் திருக்கூட்டத்துக்கு வணக்கம் செலுத்துவோம்..தொண்டர்களே! தேச பக்தர்களே! தியாக மூர்த்திகளே! அலையென வாருங்கள்! ஆகாசவெளியில் நின்று உங்கள் கனவு நிறைவேறும் காட்சியைக் கண்டு மகிழுங்கள்! பாரதத் தாயின் உள்ளம் நிறைந்த ஆசியைப் பெற்றுக் கொள்ளுங்கள்!. ***************.காலஞ்சென்ற தேச பக்தர்களையும் தலைவர்களையும் தொண்டர்களையும் வாழ்த்தி வணங்கிய பிறகு உயிரோடிருக்கும் தேசத் தலைவர்களையும் நினைவோம். அவர்களை வாழ்த்துவோம். வணங்குவோம். அவர்களுக்கு நமது இரு மடங்கு நன்றியைச் செலுத்துவோம்..தாதாபாய் நெளரொஜி முதல் நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் வரையில் தியாக மூர்த்திகளான தேசத் தலைவர்கள் அநேகர் தாய்நாட்டுக்கு அரும்பெரும் தொண்டு செய்திருக்கிறார்கள். உண்மை; சந்தேகமில்லை..ஆனால் அவர்கள் எல்லாரையும் காட்டிலும் இன்று உயிரோடிருக்கும் தேசத் தலைவர்கள் நமது நன்றிக்கு பாத்திரமாகிறார்கள். அவர்கள் உயிரோடிருப்பதே ஒரு பெரிய தொண்டு, பாரதத் தாய் செய்த பாக்கியம்; பாரத மக்களின் தவப்பயன்..ஜவாஹர்லால்ஜியும், வல்லபாய் பட்டேலும், ராஜாஜியும் ராஜேந்திரரும், மெளலானா ஆஸாதும் எல்லாருக்கும் மேலாக காந்தி மகாத்மாவும் உயிரோடிருப்பதால் அல்லவா இன்றைய தினம் பாரத நாடு சுதந்திரம் அடைந்த திருவிழாவை நாம் இவ்வளவு கோலாகலமாகக் கொண்டாடுகிறோம்? மேற்கூறிய உத்தமத் தலைவர்களுடைய காலத்துக்குப் பிறகு பாரத நாடு சுதந்திரம் அடைந்தால் மக்கள் இத்தனை குதூகலம் அடைய முடியுமா? அப்படிக் காலந்தப்பி வரும் சுதந்திரத்தால் நாடு பயன்தான் அடையுமா?.***************.இதையெல்லாம் நன்கு சிந்தித்துப் பார்த்து இந்த ஆனந்த சுதந்திரத் திருநாளில் ஒரு திட சங்கல்பம் எடுத்துக் கொள்வோம்..உலக சரித்திரத்தில் என்றும் இல்லாத விதமாக அன்னிய ஆட்சியிலிருந்து நம்மை இத்தனை எளிதில் விடுதலை செய்து பாரத நாட்டில் சுதந்திரத்தை ஸ்தாபித்த அருமைத் தலைவர்களைப் பிடிவாதமாகப் பின்பற்றுவது என்று உறுதி கொள்வோம். நமது சொந்த சுயநலங்களை மறந்து நாட்டின் பொதுநலமே பெரிதென அறிந்து, தலைவர்களின் கஷ்டங்களை உணர்ந்து கட்டுப்பாட்டுடன் நடப்பதென்று பிரதிக்ஞை செய்வோம்..சுதந்திரம் நிரந்தரமாவதற்கு அது ஒன்றே மார்க்கம். தேச நன்மைக்கும் மக்களின் முன்னேற்றத்துக்கும் அது ஒன்றே சாதனம். வேறு வழி கிடையாது..வாழ்க சுதந்திரம்! வாழ்க நிரந்தரம்!