
"உன் புருஷனுக்கு சமைப்பது 'கைவந்த கலை'ங்கிறியே! ரொம்ப வருஷமா சமைத்திருக்கிறாரா?"
"இல்லை! நேத்துதான் முதன் முதலா சமைச்சார்! அதுலேயே கையில கொதிக்க, கொதிக்க சாம்பாரை கொட்டிக்கிட்டு, 'கைவெந்த கலை' ஆயிடுச்சு!
-சம்பத்குமாரி, பொன்மலை
…………………………………………
"சர்வர் சரியா கிடைக்காததால தொழில்ல ஏகப்பட்ட நஷ்டம்கிறாரே! அவர் என்ன ஓட்டல் வச்சிருக்காரா?"
"இல்லை. IT கம்பெனி வச்சிருக்கார்!"
-சம்பத்குமாரி, பொன்மலை
…………………………………………
"அந்த இளைஞர் அப்படி என்ன கேட்டார்…? நம்ம பேங்க் மானேஜர் கடுப்பாயிட்டார்?"
"ஸ்டார்ட் – அப் நிறுவனங்களுக்கு கடன் தர்ற மாதிரி, ஸ்டார்ட் – அப் காதலுக்கு கடன் தர முடியுமான்னு கேட்டாராம்!"
-சம்பத்குமாரி, பொன்மலை
…………………………………………
என்னது? "சாப்பிடற பண்டங்கள் ருசியே தெரியாமல் மண்ணு மாதிரி இருக்கா?"
"முப்பது வருஷமா அப்படித்தான் இருக்கு டாக்டர். கல்யாணம் ஆனதில் இருந்து!"
– ஆர். யோகமித்ரா, சென்னை
…………………………………………
"புலவரே… முதலில் உமது எழுத்தாணியை கூர் தீட்டும்."
"ஏன் மன்னா?"
"ஓலையில் எழுத்தே பதியவில்லை"
– ஆர். யோகமித்ரா, சென்னை
…………………………………………
"என்னது இட்லியில மல்லிகைப்பூ வாசனை வருது?"
"நீங்கதானே இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருக்கணும்னு சொன்னீங்க!
– எஸ். ராஜம், ஸ்ரீரங்கம்
…………………………………………
"என்ன புது டிபன் செய்தாலும் முதல்ல என் மாமியாருக்கக் கொடுப்பேன்!
"டேஸ்ட் பண்ணவா?"
"இல்ல டெஸ்ட் பண்ண!
– எஸ். ராஜம், ஸ்ரீரங்கம்