களஞ்சியம்.மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும், அவற்றுள் சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக அமைகிறது. அந்த வகையில் 2004 ஜூலை – இதழில் வெளியான ஓர் கிளாசிக் கட்டுரை உங்களுக்காக….-ராணி பாலகிருஷ்ணன்.நம்ம வீட்டுப் பெண் குழந்தைகள் எல்லோரும் இப்போது விரும்பி அணிவது சல்வார் கமீஸ், சூடிதார்தான். சல்வார் கமீஸ் டாப்ஸ் + பாட்டம்ஸ் சீக்கிரம் பழசாகிவிடும். ஆனால், அத்துடன் வாங்கிய துப்பட்டா புதுசு மாறாமல் அழகாக இருக்கும். அந்தத் துப்பட்டாக்களை பலவிதமாக உருவம் மாற்றினால் நமக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.(காந்தியக் கொள்கை கடைபிடிப்பவர்களாயிற்றே நாம்!).1) சில துப்பாட்டாக்கள் நீள அகலம் அதிகமாக இருக்கும். காட்டனாக இருந்தால் பெட் ஸ்பிரெட்டாகப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு பேபி ஸ்பிரெட் ஆக உபயோகப்படும். புதுவித டிசைனோட அழகாக இருக்கும். தூள் கிளப்பும்..சிந்தெடிக் துப்பட்டாக்கள் வாசல், ஜன்னல் திரைச் சீலைகளுக்கு அழகாக இருக்கும். சூப்பராக இருக்கும்.ப்ளெயினாக இருக்கும் துப்பட்டாவில் பெயிண்ட் அல்லது எம்பிராய்டரி செய்து மேசை விரிப்பாகப் பயன்படுத்தலாம்.சில துப்பட்டாக்கள் ரொம்பப் புதியதாக சூப்பர் டிசைனோடு இருக்கும். அவற்றைத் திரும்பவும் சல்வார் டாப்ஸாக தைத்துக்கொள்ளலாம். பாட்டம்ஸ் தனியாகத் தைக்க வேண்டும்.சிறு பெண் குழந்தைகளுக்கு கவுன் தைத்துப் போடலாம்.சில துப்பட்டாக்கள் நீள அகலம் குறைவாக இருக்கும். அவற்றைக் காட்டனாக இருந்தால் தலையணை உறை ஃபிரில் வைத்துத் தைத்துக்கொள்ளலாம்.டீ.வி. அல்லது ஃப்ரிட்ஜுக்குக் கவராக உபயோகப்படுத்தலாம்.நெட்டட் துப்பட்டாக்கள் சோபா கவராக டிசைன் செய்யலாம்.அபூர்வா போன்ற அல்லது தஸ்ஸர் சில்க் துப்பட்டாக்களை புடவைகளுக்கு மாட்சாக ரவிக்கை தைத்தால் அமர்க்களமாக இருக்கும்.சில சிந்தெடிக் துப்பட்டாக்கள் டிசைன் லுங்கிக்கு ஏற்ப இருக்கும். அவற்றை இரு முனைகளையும் சேர்த்துத் தைத்து லுங்கியாக கட்டிக்கொள்ளலாம். (நவீன நளன்!)நல்ல காட்டன் துப்பாட்டாக்களை தலையணை உறை அளவிற்குத் தைத்து அந்தப் பையினுள் பட்டுப் புடவைகளை பத்திரப்படுத்தி பீரோவில் வைக்கலாம். புடவைகள் அதிக நாட்கள் வரும்.சில சமயங்களில் தானியங்களை வெயிலில் உலர்த்த வேண்டி இருக்கும். அப்போது அணில், காகம் தானியங்களைச் சாப்பிடாமல் இருக்க தலையணை உறை போன்ற பைகளுக்குள் தானியங்களைப் போட்டு வாயை ரப்பர் பாண்டினால் மூடி வெயிலில் உலர்த்தலாம்.நாற்காலிகளுக்குச் சின்ன குஷன் பருத்தித் துணிகளால் செய்யலாம்.நல்ல காட்டன் துப்பட்டாக்களை சதுரமாக வெட்டி ஓரம் தைத்து வைத்துக்கொண்டால், பனிக்காலம், வெயில் காலம் ஸ்கார்ஃப் ஆகப் பயன்படுத்தலாம்..இப்படி இன்னும் பல விதமாக நமக்குப் பிடித்த வண்ணம் துப்பட்டாக்களை கலை நயத்துடன் மாற்றிக்கொள்ளலாம்.
களஞ்சியம்.மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும், அவற்றுள் சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக அமைகிறது. அந்த வகையில் 2004 ஜூலை – இதழில் வெளியான ஓர் கிளாசிக் கட்டுரை உங்களுக்காக….-ராணி பாலகிருஷ்ணன்.நம்ம வீட்டுப் பெண் குழந்தைகள் எல்லோரும் இப்போது விரும்பி அணிவது சல்வார் கமீஸ், சூடிதார்தான். சல்வார் கமீஸ் டாப்ஸ் + பாட்டம்ஸ் சீக்கிரம் பழசாகிவிடும். ஆனால், அத்துடன் வாங்கிய துப்பட்டா புதுசு மாறாமல் அழகாக இருக்கும். அந்தத் துப்பட்டாக்களை பலவிதமாக உருவம் மாற்றினால் நமக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.(காந்தியக் கொள்கை கடைபிடிப்பவர்களாயிற்றே நாம்!).1) சில துப்பாட்டாக்கள் நீள அகலம் அதிகமாக இருக்கும். காட்டனாக இருந்தால் பெட் ஸ்பிரெட்டாகப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு பேபி ஸ்பிரெட் ஆக உபயோகப்படும். புதுவித டிசைனோட அழகாக இருக்கும். தூள் கிளப்பும்..சிந்தெடிக் துப்பட்டாக்கள் வாசல், ஜன்னல் திரைச் சீலைகளுக்கு அழகாக இருக்கும். சூப்பராக இருக்கும்.ப்ளெயினாக இருக்கும் துப்பட்டாவில் பெயிண்ட் அல்லது எம்பிராய்டரி செய்து மேசை விரிப்பாகப் பயன்படுத்தலாம்.சில துப்பட்டாக்கள் ரொம்பப் புதியதாக சூப்பர் டிசைனோடு இருக்கும். அவற்றைத் திரும்பவும் சல்வார் டாப்ஸாக தைத்துக்கொள்ளலாம். பாட்டம்ஸ் தனியாகத் தைக்க வேண்டும்.சிறு பெண் குழந்தைகளுக்கு கவுன் தைத்துப் போடலாம்.சில துப்பட்டாக்கள் நீள அகலம் குறைவாக இருக்கும். அவற்றைக் காட்டனாக இருந்தால் தலையணை உறை ஃபிரில் வைத்துத் தைத்துக்கொள்ளலாம்.டீ.வி. அல்லது ஃப்ரிட்ஜுக்குக் கவராக உபயோகப்படுத்தலாம்.நெட்டட் துப்பட்டாக்கள் சோபா கவராக டிசைன் செய்யலாம்.அபூர்வா போன்ற அல்லது தஸ்ஸர் சில்க் துப்பட்டாக்களை புடவைகளுக்கு மாட்சாக ரவிக்கை தைத்தால் அமர்க்களமாக இருக்கும்.சில சிந்தெடிக் துப்பட்டாக்கள் டிசைன் லுங்கிக்கு ஏற்ப இருக்கும். அவற்றை இரு முனைகளையும் சேர்த்துத் தைத்து லுங்கியாக கட்டிக்கொள்ளலாம். (நவீன நளன்!)நல்ல காட்டன் துப்பாட்டாக்களை தலையணை உறை அளவிற்குத் தைத்து அந்தப் பையினுள் பட்டுப் புடவைகளை பத்திரப்படுத்தி பீரோவில் வைக்கலாம். புடவைகள் அதிக நாட்கள் வரும்.சில சமயங்களில் தானியங்களை வெயிலில் உலர்த்த வேண்டி இருக்கும். அப்போது அணில், காகம் தானியங்களைச் சாப்பிடாமல் இருக்க தலையணை உறை போன்ற பைகளுக்குள் தானியங்களைப் போட்டு வாயை ரப்பர் பாண்டினால் மூடி வெயிலில் உலர்த்தலாம்.நாற்காலிகளுக்குச் சின்ன குஷன் பருத்தித் துணிகளால் செய்யலாம்.நல்ல காட்டன் துப்பட்டாக்களை சதுரமாக வெட்டி ஓரம் தைத்து வைத்துக்கொண்டால், பனிக்காலம், வெயில் காலம் ஸ்கார்ஃப் ஆகப் பயன்படுத்தலாம்..இப்படி இன்னும் பல விதமாக நமக்குப் பிடித்த வண்ணம் துப்பட்டாக்களை கலை நயத்துடன் மாற்றிக்கொள்ளலாம்.