வாழ்வியல்!.-சேலம் சுபா .காலை நேரம். கணவனும் மனைவியும் வீட்டுக்குள்ளேயே சடுகுடு ஆடினர். பிள்ளைகளை எழுப்பி தயார் செய்து, பள்ளி வேனில் திணித்துவிட்டு, வெந்தும் வேகாத உணவுடன் இவர்களும் அலுவலகம் ஓடவேண்டும். அதற்குத்தான் இந்தச் சடுகுடு ஆட்டம். மனைவி தோசைகளைச் சுட்டு அடுக்கிய நேரம் கணவனின் குரல். "ஏண்டி இன்னுமா டிபன் ரெடியாகல?" மனைவி கடுப்பானாள். "இதென்ன கேள்வி? சுட்டு வெச்சதை ஐயாவுக்கு ஊட்டிவிடணுமா?" எரிச்சலில் வார்த்தைகள் காட்டமாக வெளிவர கணவனும் சும்மாயிராமல் "ஏய் ரொம்ப அலட்டிக்காதே… என்னமோ நீ மட்டும்தான் வேலைக்குப் போற மாதிரி…" என குண்டைப் போட அங்கே வெடித்தது குடும்ப வன்முறை… பேச்சுக்கள் வளர்ந்ததில் தோசைகள் கவனிப்பாரற்று முழித்தன. எவ்வளவு சண்டை போட்டாலும் ஆபிஸ் போயாக வேண்டுமே. வீட்டில் சண்டை என்று காரணம் சொன்னாலும் கட் ஆகப்போவது சம்பளம் மட்டுமே..நேரம் சென்றது. இருவரும் 'உர்' என்ற முகத்துடன் அலுவலகம் சென்றனர். அன்று முழுவதும் இருவருக்கும் பிரச்னைகளைச் சந்திக்கும் நாளாகவே கழிந்தது. வேதனையுடன் வீட்டுக்குத் திரும்பிய கணவன் காலை நடந்த சம்பவத்துக்குச் சென்றான். காலையில், இன்னுமா டிபன் ரெடியாகல என்று கேட்டதற்குப் பதில் இப்போது "என்னம்மா இந்நேரமேல்லாம் இந்தாங்க டிபன்னு எனக்கு ஊட்டாத குறையா துருவியே இன்னிக்கு என்ன ஆச்சு? உடம்பு முடியலையோ? சொல்லியிருந்தா கடையில வாங்கியிருக்கலாமே?" எனக் கேட்டிருந்தால் மனைவியின் உபசரிப்பில் தானும் மகிழ்ந்து, அவளையும் மகிழ்வித்து இருக்கலாமே. இந்த நாளும் இனிதாக ஆகியிருக்குமே என்று வருந்தினான்..இவைதான் ஒப்பனை வார்த்தைகள். இது தெரியாமல் உண்மையாக பேசுகிறோம் என்று நினைத்து, வலியமாக வம்பை விலைக்கு வாங்குகிறோம். நம் முகம் என்னமோ அழகுதான். ஆனால், அதற்கு பவுடர் இத்யாதிகளைப் பூசி ஒப்பனை செய்து அழகு படுத்திக்கொள்வது போலத்தான் இதுவும். பேசும்முன் சற்று நிதானித்து வார்த்தைகளுக்கு ஒப்பனை செய்து பேசிப் பாருங்கள். பல மாயாஜாலங்களைச் சந்திக்கலாம்..சிலரை "அவன் யாரு வாயாலேயே பந்தல் போடற வாய்ஜாலக்காரனாச்சே… அவன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?" எனச் சொல்வார்கள். பேசியே காரியத்தைச் சாதித்துக்கொள்ளும் திறமை அனைவருக்கும் வந்துவிடுவதில்லை. வாயுள்ள பிள்ளை பிழைக்கும்… உண்மைதான். பேச்சுத்திறமை இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் ஜெயிக்கலாம். அதே சமயம் இந்தப் பேச்சு சுற்றி உள்ளவர்களை மகிழ்விக்கும்படி மேல் பூச்சு பூசி (அதாவது ஒப்பனை செய்து) பிறகு பேசினால் வெற்றியுடன் நிம்மதியும் கிடைக்கும்..கலாவும் மாலாவும் ஒரே பூக்காரம்மாவிடம் வாடிக்கையாக வாங்குவார்கள். மாலாவிற்கு அவள் கேட்ட அளவே கத்தரித்துக் தருபவள், கலாவிற்கோ கேட்டதற்கும் மேல் அரை முழமாவது சேர்த்துத் தருவாள். காரணம் இதுதான்… மாலாவைப் போல் காட்டமாக "ஏன் இன்னும் நல்லா முழம் போட்டாத்தான் என்ன? காசைக் குறைச்சு தந்தா ஒத்துப்பியா?.." எனக் கேள்விகளாய் வீசாமல், "என்ன வள்ளி இன்னிக்கு நச்சுன்னு நயன்தாரா மாதிரி ஜொலிக்குறே? ஏதாவது விசேசமா…?" என்று அவளை நயன்தாரா ரேஞ்சுக்கு உயர்த்திப் பேசிய கலாவின் ஒப்பனை வார்த்தைகள் செய்த மாயாஜாலம்தான்..இதற்காக நயன்தாராவும் கோபிக்கப்போவதில்லை. இதைக் கேட்கும் வள்ளியும் கோபம் கொள்ளப்போவதில்லை. மாறாக தன்னை மதித்து, நயன்தாரா மாதிரி என்று சொல்லி உற்சாகப்படுத்திய கலாவிற்கு முக மலர்ந்து அரை முழம் பூ கூடுதலாகக் கிடைக்கிறது.இப்படித்தான் நம் அன்றாட வாழ்வில், நம்முடன் பயணிக்கும் உறவுகளிடமும், நண்பர்களிடமும் நம்மைச் சுற்றி உள்ளவர்களிடமும் ஒப்பனை வார்த்தைகளைப் பிரயோகிக்கத் துவங்கினால் வாழ்வும் இனிக்கத் துவங்கும். மாமியார் என்ற நினைப்பில் அதிகார வார்த்தைகளை இறைக்காமல், "உன்னைவிட எனக்கு நல்ல மருமகள் கிடைக்கவே மாட்டாள். எல்லா விசயத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கிறாயே" எனக் கூறும் மாமியாரை ராணி போல் அமரவைத்து உபசரிப்பாள் மருமகள்..அம்மாடியோவ் ஐஸ் வைப்பதைதான் இவ்வளவு நேரம் விளக்கிச் சொன்னீர்களா? எங்களுக்குத்தான் கைவந்த கலையாச்சே… என நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. ஹி ஹி… இருங்கள்… இருங்கள் முடித்து விடுகிறேன்..தினம் நம் வீட்டு வாசலில் தண்ணீரைத் தேங்குமாறு தள்ளிவிடும் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் எரிச்சலைக் காண்பிக்காமல், "ஹலோ பார் நீ தினம் எங்க வீட்டு வாசலுக்கும் நான் கேட்காமலேயே தண்ணீர் தெளித்து உதவி செய்கிறாய். நன்றிமா உனக்கு" எனக் கூறி புன்னகைத்துத் திரும்புங்கள். அந்தப் பெண் தன் தவறை உணர்ந்து திருத்திக்கொள்வாள். இதை விடுத்து கோபப்பட்டால் நிம்மதி இழக்கப்போவது நாம்தான். இப்படி பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்..ஆகவே, ஒவ்வொரு முறை பேசும்போதும் அதில் சிறிது ஒப்பனை கலந்து பேசிப் பழகுங்கள். நம் மகிழ்ச்சி அதிகரிப்பதோடு, நம் வேலைகளும் எளிதில் முடியும். முக்கியமாக உங்கள் கூற்றுப்படி ஐஸ் வைப்பதாகவே இருந்தாலும் யாருக்கும் எந்த மன வருத்தமும் இன்றி நம் உறவுகள் பாதிக்கப்படாமல் பலப்படும் என்பது மட்டும் உண்மை.
வாழ்வியல்!.-சேலம் சுபா .காலை நேரம். கணவனும் மனைவியும் வீட்டுக்குள்ளேயே சடுகுடு ஆடினர். பிள்ளைகளை எழுப்பி தயார் செய்து, பள்ளி வேனில் திணித்துவிட்டு, வெந்தும் வேகாத உணவுடன் இவர்களும் அலுவலகம் ஓடவேண்டும். அதற்குத்தான் இந்தச் சடுகுடு ஆட்டம். மனைவி தோசைகளைச் சுட்டு அடுக்கிய நேரம் கணவனின் குரல். "ஏண்டி இன்னுமா டிபன் ரெடியாகல?" மனைவி கடுப்பானாள். "இதென்ன கேள்வி? சுட்டு வெச்சதை ஐயாவுக்கு ஊட்டிவிடணுமா?" எரிச்சலில் வார்த்தைகள் காட்டமாக வெளிவர கணவனும் சும்மாயிராமல் "ஏய் ரொம்ப அலட்டிக்காதே… என்னமோ நீ மட்டும்தான் வேலைக்குப் போற மாதிரி…" என குண்டைப் போட அங்கே வெடித்தது குடும்ப வன்முறை… பேச்சுக்கள் வளர்ந்ததில் தோசைகள் கவனிப்பாரற்று முழித்தன. எவ்வளவு சண்டை போட்டாலும் ஆபிஸ் போயாக வேண்டுமே. வீட்டில் சண்டை என்று காரணம் சொன்னாலும் கட் ஆகப்போவது சம்பளம் மட்டுமே..நேரம் சென்றது. இருவரும் 'உர்' என்ற முகத்துடன் அலுவலகம் சென்றனர். அன்று முழுவதும் இருவருக்கும் பிரச்னைகளைச் சந்திக்கும் நாளாகவே கழிந்தது. வேதனையுடன் வீட்டுக்குத் திரும்பிய கணவன் காலை நடந்த சம்பவத்துக்குச் சென்றான். காலையில், இன்னுமா டிபன் ரெடியாகல என்று கேட்டதற்குப் பதில் இப்போது "என்னம்மா இந்நேரமேல்லாம் இந்தாங்க டிபன்னு எனக்கு ஊட்டாத குறையா துருவியே இன்னிக்கு என்ன ஆச்சு? உடம்பு முடியலையோ? சொல்லியிருந்தா கடையில வாங்கியிருக்கலாமே?" எனக் கேட்டிருந்தால் மனைவியின் உபசரிப்பில் தானும் மகிழ்ந்து, அவளையும் மகிழ்வித்து இருக்கலாமே. இந்த நாளும் இனிதாக ஆகியிருக்குமே என்று வருந்தினான்..இவைதான் ஒப்பனை வார்த்தைகள். இது தெரியாமல் உண்மையாக பேசுகிறோம் என்று நினைத்து, வலியமாக வம்பை விலைக்கு வாங்குகிறோம். நம் முகம் என்னமோ அழகுதான். ஆனால், அதற்கு பவுடர் இத்யாதிகளைப் பூசி ஒப்பனை செய்து அழகு படுத்திக்கொள்வது போலத்தான் இதுவும். பேசும்முன் சற்று நிதானித்து வார்த்தைகளுக்கு ஒப்பனை செய்து பேசிப் பாருங்கள். பல மாயாஜாலங்களைச் சந்திக்கலாம்..சிலரை "அவன் யாரு வாயாலேயே பந்தல் போடற வாய்ஜாலக்காரனாச்சே… அவன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?" எனச் சொல்வார்கள். பேசியே காரியத்தைச் சாதித்துக்கொள்ளும் திறமை அனைவருக்கும் வந்துவிடுவதில்லை. வாயுள்ள பிள்ளை பிழைக்கும்… உண்மைதான். பேச்சுத்திறமை இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் ஜெயிக்கலாம். அதே சமயம் இந்தப் பேச்சு சுற்றி உள்ளவர்களை மகிழ்விக்கும்படி மேல் பூச்சு பூசி (அதாவது ஒப்பனை செய்து) பிறகு பேசினால் வெற்றியுடன் நிம்மதியும் கிடைக்கும்..கலாவும் மாலாவும் ஒரே பூக்காரம்மாவிடம் வாடிக்கையாக வாங்குவார்கள். மாலாவிற்கு அவள் கேட்ட அளவே கத்தரித்துக் தருபவள், கலாவிற்கோ கேட்டதற்கும் மேல் அரை முழமாவது சேர்த்துத் தருவாள். காரணம் இதுதான்… மாலாவைப் போல் காட்டமாக "ஏன் இன்னும் நல்லா முழம் போட்டாத்தான் என்ன? காசைக் குறைச்சு தந்தா ஒத்துப்பியா?.." எனக் கேள்விகளாய் வீசாமல், "என்ன வள்ளி இன்னிக்கு நச்சுன்னு நயன்தாரா மாதிரி ஜொலிக்குறே? ஏதாவது விசேசமா…?" என்று அவளை நயன்தாரா ரேஞ்சுக்கு உயர்த்திப் பேசிய கலாவின் ஒப்பனை வார்த்தைகள் செய்த மாயாஜாலம்தான்..இதற்காக நயன்தாராவும் கோபிக்கப்போவதில்லை. இதைக் கேட்கும் வள்ளியும் கோபம் கொள்ளப்போவதில்லை. மாறாக தன்னை மதித்து, நயன்தாரா மாதிரி என்று சொல்லி உற்சாகப்படுத்திய கலாவிற்கு முக மலர்ந்து அரை முழம் பூ கூடுதலாகக் கிடைக்கிறது.இப்படித்தான் நம் அன்றாட வாழ்வில், நம்முடன் பயணிக்கும் உறவுகளிடமும், நண்பர்களிடமும் நம்மைச் சுற்றி உள்ளவர்களிடமும் ஒப்பனை வார்த்தைகளைப் பிரயோகிக்கத் துவங்கினால் வாழ்வும் இனிக்கத் துவங்கும். மாமியார் என்ற நினைப்பில் அதிகார வார்த்தைகளை இறைக்காமல், "உன்னைவிட எனக்கு நல்ல மருமகள் கிடைக்கவே மாட்டாள். எல்லா விசயத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கிறாயே" எனக் கூறும் மாமியாரை ராணி போல் அமரவைத்து உபசரிப்பாள் மருமகள்..அம்மாடியோவ் ஐஸ் வைப்பதைதான் இவ்வளவு நேரம் விளக்கிச் சொன்னீர்களா? எங்களுக்குத்தான் கைவந்த கலையாச்சே… என நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. ஹி ஹி… இருங்கள்… இருங்கள் முடித்து விடுகிறேன்..தினம் நம் வீட்டு வாசலில் தண்ணீரைத் தேங்குமாறு தள்ளிவிடும் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் எரிச்சலைக் காண்பிக்காமல், "ஹலோ பார் நீ தினம் எங்க வீட்டு வாசலுக்கும் நான் கேட்காமலேயே தண்ணீர் தெளித்து உதவி செய்கிறாய். நன்றிமா உனக்கு" எனக் கூறி புன்னகைத்துத் திரும்புங்கள். அந்தப் பெண் தன் தவறை உணர்ந்து திருத்திக்கொள்வாள். இதை விடுத்து கோபப்பட்டால் நிம்மதி இழக்கப்போவது நாம்தான். இப்படி பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்..ஆகவே, ஒவ்வொரு முறை பேசும்போதும் அதில் சிறிது ஒப்பனை கலந்து பேசிப் பழகுங்கள். நம் மகிழ்ச்சி அதிகரிப்பதோடு, நம் வேலைகளும் எளிதில் முடியும். முக்கியமாக உங்கள் கூற்றுப்படி ஐஸ் வைப்பதாகவே இருந்தாலும் யாருக்கும் எந்த மன வருத்தமும் இன்றி நம் உறவுகள் பாதிக்கப்படாமல் பலப்படும் என்பது மட்டும் உண்மை.