கதை -பாரதி மணி.ஓவியம்: தமிழ்.தேவாவுக்கு நம்ப முடியவில்லை!?.அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோரில் இருந்து அவன் வெளியே வந்த போது, வெண்ணிலவே பெண்ணாக வானத்திலிருந்து வந்தது போல… ஒரு பெண், கண்ணில் பட்டாள்..அவளை அவன் சந்தித்ததாக தெரியவில்லை, ஆனால் இதற்கு முன் எங்கோ பார்த்தது போலவே தோன்றியது..'எங்கே எப்போது?! உடனடியாக நினைவுக்கு வரவில்லை..அவள் முகத்தை உற்றுப் பார்த்தான். பார்த்ததும் அவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது..`இது எப்படி சாத்தியம் ?!`அவனுக்கு அதிர்ச்சியோடு குழப்பமுமாக இருந்தது..அவளைத் தொடர்ந்து சென்று பார்த்து விடலாம் என்று நினைத்து, ஓடிப்போய் அவன் பைக்கில் ஏறி முடுக்கினான்.அவள் ஒரு நீல நிற இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுச் செல்லவே, கூடவே தேவாவும் தொடர்ந்து சென்றான் ..ஆனால், இந்த வயதிலும், இப்படி ஒரு பெண்ணை தொடர்வது தேவையா? என்று மனது உறுத்தினாலும் 'இது அப்படியில்லை! இவளை எங்கே பார்த்திருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளாமல் விடக்கூடாது' என்று உள் மனது சொல்லியது..அது ஒரு மாலை நேரமென்பதால், இரவு மெல்லக் கவிழ ஆரம்பித்தது..தேவாவோ, அவளை விடாமல் தொடர்ந்து சென்று கொண்டு இருந்தான். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்ற பிறகு, அவள் வலது பக்கமாக திரும்பி, ஒரு தெருவில் நுழைந்தாள்..அந்த தெருவில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது..ஒரு காய்கறி வண்டிக்காரர், நிறைய பெண்கள் சூழ பரபரப்பாக விற்பனை செய்து கொண்டிருந்தார்..அவள் அந்த சாலையில் மெதுவாக நிதானித்து, அவள் வீட்டை அடைந்தாள்..வீட்டின் வாசலில் வாகனத்தை நிறுத்தியபடியே, "அம்மா" என்று குரல் கொடுத்தாள்..உள்ளே இருந்து யாரும் வராததால், வெளிக்கதவை தட்டி "அம்மா" என்றாள்..அப்போது வீட்டினுள் இருந்து முக்காடு அணிந்தபடி, ஒரு பெண்மணி வெளியே வந்தாள். அவள்தான் அவளுடைய அம்மாவாக இருக்க வேண்டும் என்று தேவா நினைத்தான்.."ஏம்மா? ஏன் இவ்வளவு நேரம்.?!"."இன்னமும் காணலையேன்னு யோசிச்சுட்டு இருந்தேன்.ஆபிசில் வேலை அதிகமோ!" என்ற அம்மாவிடம்."இல்லம்மா டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கொஞ்சம் கூட்டம் அதிகம் அதுதான் " என்றாள்."ம்ம்.. சரி".அந்த அம்மா மீண்டும் வீட்டுக்குள் திரும்பி நடக்கத் துவங்கினாள்..தேவா, அவனை யாராவது கவனிக்கிறார்களா? என்று பயத்தோடு சுற்றிலும் பார்த்துக்கொண்டே திரும்பிய போது, அந்த அம்மாவின் முகத்திரை விலகியதை கவனித்தான்..அவனுக்கு மீண்டும் அதே குழப்பம். அம்மாவும் பெண்ணும் ஒரே மாதிரி அச்சில் வார்த்த மாதிரி இருந்தார்கள்..சட்டென்று அவனுக்குள் பொறி தட்டியது. `இது இந்த முகம் … ஆம் அவளாகத்தான் இருக்க வேண்டும்.`.`இது.. ராஜி தானே.?!` அவன் மனதுக்குள் முணுமுணுத்தான்..அவனுக்குள் வெகு காலமாக ஆழமாக பதிந்து போன அந்த முகம், அவனுடைய மனதை கவர்ந்த அதே முகம்..`ராஜி" என்று மீண்டும் மனதுக்குள் சொல்லிக் கொண்டான்..இதே முகம்தான், கல்லூரி நாட்களில் தேவாவுக்கு தூக்கம் வராமல் செய்தது..அவன் கல்லூரியில் இறுதி வருடத்தில் படிக்கின்ற போது, முதல் வருட மாணவியாக அவளை பார்க்க நேரிட்டது. முதன் முதலாக பார்த்த போதே, அவள் அழகு தேவாவை அசத்தியது. பிறகு, அவளை நூலகத்தில் சந்திக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொண்டு, அவளோடு பேசிப் பழக தொடங்கினான்..அவனுக்கு பிடித்த சுஜாதா, பாலகுமாரன், வைரமுத்து அவளுக்கும் பிடித்திருக்கிறது என்றதும், மனது அவளை நேசிக்க தொடங்கியது..அவளிடம் சொல்லாமலே, அவளை ரசித்து, ஒரு தலை காதலாக நிறைய கவிதைகள் எழுதினான். இறுதியாக காதல் கடிதம் கொடுக்க துணிந்து , காதலைச் சொல்லும் போதுதான்…...அவள் ஏற்கனவே திருமணமானவள் என்று அவனுக்கு தெரிய வந்தது..அதிர்ந்து போனான். ஏமாற்றத்தில் அவனுடைய காதல்… அவன் இதயத்திலேயே உறைந்து போனது..அவளுடைய வீட்டின் ஏழ்மை சூழ்நிலையில், அவளை வற்புறுத்தி, இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என்றும், அவள் கணவன் வேலை விஷயமாக துபாயில் இருப்பதாகவும்,அவளுடைய கணவன் அனுமதி பெற்றுதான்,கல்லூரியில் சேர்ந்து படிக்கிறாள் என்பதையும் அவளே சொன்னாள்..சிறு வயதிலேயே, வறுமையால் நிறைய சோதனைகளை அவள் அனுபவித்ததால், வாழ்க்கையை நேர் மறையாக பார்க்க பழகி விட்டதாகவும் சொன்னாள்..அவன் அணுகு முறையையும் தவறாக எடுத்துக் கொள்ளாமல், அவனை என்றும் நல்ல நண்பனாக நினைப்பதாக சொன்னதும், தேவாவுக்கு அவளுடைய தனித்தன்மை மிகவும் பிடித்துப் போனது..இருந்தாலும் காதல் முயற்சி தோல்வியில் முடிந்ததில் மனம் நொந்து போனது. அவளை பார்க்க நேரும் போதெல்லாம் அவன் மனசு கனக்கும். நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று ஏக்கத்தோடு பல நாட்கள் சோர்வோடு இருந்தான்..ஆனால் அவள், அவனை சந்திக்கும் போதெல்லாம், எப்போதும் போல கதை கவிதை என்று பேசிக்கொண்டு இருந்தாள். தேவாவுக்கு மனசுக்கு ஒரு மாதிரி குற்ற உணர்வு இருந்து கொண்டே இருந்ததால்… அவளை அதிகமாக சந்திப்பதை தவிர்த்தான்..கல்லூரி படித்து முடித்த பிறகு,அவனுக்கு மீண்டும் அவளை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை..அதற்கு பிறகு அவனுக்கு எந்த பெண்ணையும் நேசிக்கவும் தோன்றவில்லை..திரைப்படங்களில் காதல் காட்சிகள் வரும் போது, அவனுக்கு அவள் நினைவு வெறுமனே வந்து போகும்..பிறகு, அம்மா அப்பா பார்த்து, பேசி கைப்பிடித்த மனைவி, குடும்பம், குழந்தைகள் என்று இது நாள் வரை காலம் போய்க்கொண்டிருக்கிறது..தேவா கடந்த கால நினைவுகளில் மூழ்கி நின்று கொண்டிருந்ததை, அந்த பெண்மணி கவனித்து விட்டாள்..கண்களை சுருக்கிபடி, அவள் தேவாவை உற்றுப் பார்த்தாள். "சார், என்ன வேணும்!` என்று அவள் கேட்க, அவளின் மகளும் அவனைப் பார்த்தாள்..தேவா சட்டென்று சுதாரித்துக் கொண்டான். அவனுக்கு நெஞ்செல்லாம் படபடத்தது. இப்போது அவள் முகத்தை அவனால் இன்னும் தெளிவாக பார்க்க முடிந்தது..அவள் முகம் சற்று வாடியது போல இருந்தாலும், அந்த பொலிவு அப்படியே மாறாமல் இருந்தது.அவள் குரலும் மாறவே இல்லை என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்..அவனுடைய தற்போதைய வயதான தோற்றம், `அவன் தான் தேவா` என்று சொன்னாலும், அவளுக்கு புரியாது என்று அவனுக்கு தோன்றியது. அவளிடம் தன்னை அறிமுகப்படுத்தி பேசலாமா? என்று நினைத்தவனை பேச விடாமல் எதுவோ தடுத்தது..'என்னவென்று சொல்வது?! நான் தான் கல்லூரியில் உன்னை காதலித்த தேவா என்று சொல்வதா?'.`தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று இருப்பவளிடம், பழைய கதை பேச, அதை அவள் தவறாக எடுத்துக் கொண்டால் என்ன செய்வது ?!` அவனுக்கு அது சரியாக பட வில்லை..`அவள் என்னை காதலிக்கவில்லை. நான் தான் அவளை காதலித்தேன். நிலாவை வானத்தில் பார்த்து ரசிப்பது போல,என் மனதில் அவள் காதல் வெண்ணிலாவாக வாழ்ந்து கொண்டிருக்கட்டும்' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்..அவன் மௌனமாக அவளிடம் ஒன்றும் இல்லை என்பது போல தலையை ஆட்டி விட்டு, அங்கிருந்து தன் வாகனத்தை நகர்த்த தொடங்கியதும், அவர்கள் இருவரும் உள்ளே சென்று கதவை சாத்திக்கொண்டார்கள்..அவன் பைக்கில் அமர்ந்து ஸ்டார்ட் செய்ய நினைக்கையில், சாத்தப்பட்ட கதவு திறந்த சப்தம், அவன் காதில் விழுந்தது..'ராஜிக்கும் அவனை யாரென்று மீண்டும் பார்க்க தோன்றியதோ என்னவோ…' அவள் அவன் போவதை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.."எங்கிருந்தாலும் வாழ்க " என்று ராஜியை மனதுக்குள் வாழ்த்திக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான் தேவா. அவன் மனது தெளிவு பெற்றிருந்தது.
கதை -பாரதி மணி.ஓவியம்: தமிழ்.தேவாவுக்கு நம்ப முடியவில்லை!?.அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோரில் இருந்து அவன் வெளியே வந்த போது, வெண்ணிலவே பெண்ணாக வானத்திலிருந்து வந்தது போல… ஒரு பெண், கண்ணில் பட்டாள்..அவளை அவன் சந்தித்ததாக தெரியவில்லை, ஆனால் இதற்கு முன் எங்கோ பார்த்தது போலவே தோன்றியது..'எங்கே எப்போது?! உடனடியாக நினைவுக்கு வரவில்லை..அவள் முகத்தை உற்றுப் பார்த்தான். பார்த்ததும் அவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது..`இது எப்படி சாத்தியம் ?!`அவனுக்கு அதிர்ச்சியோடு குழப்பமுமாக இருந்தது..அவளைத் தொடர்ந்து சென்று பார்த்து விடலாம் என்று நினைத்து, ஓடிப்போய் அவன் பைக்கில் ஏறி முடுக்கினான்.அவள் ஒரு நீல நிற இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுச் செல்லவே, கூடவே தேவாவும் தொடர்ந்து சென்றான் ..ஆனால், இந்த வயதிலும், இப்படி ஒரு பெண்ணை தொடர்வது தேவையா? என்று மனது உறுத்தினாலும் 'இது அப்படியில்லை! இவளை எங்கே பார்த்திருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளாமல் விடக்கூடாது' என்று உள் மனது சொல்லியது..அது ஒரு மாலை நேரமென்பதால், இரவு மெல்லக் கவிழ ஆரம்பித்தது..தேவாவோ, அவளை விடாமல் தொடர்ந்து சென்று கொண்டு இருந்தான். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்ற பிறகு, அவள் வலது பக்கமாக திரும்பி, ஒரு தெருவில் நுழைந்தாள்..அந்த தெருவில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது..ஒரு காய்கறி வண்டிக்காரர், நிறைய பெண்கள் சூழ பரபரப்பாக விற்பனை செய்து கொண்டிருந்தார்..அவள் அந்த சாலையில் மெதுவாக நிதானித்து, அவள் வீட்டை அடைந்தாள்..வீட்டின் வாசலில் வாகனத்தை நிறுத்தியபடியே, "அம்மா" என்று குரல் கொடுத்தாள்..உள்ளே இருந்து யாரும் வராததால், வெளிக்கதவை தட்டி "அம்மா" என்றாள்..அப்போது வீட்டினுள் இருந்து முக்காடு அணிந்தபடி, ஒரு பெண்மணி வெளியே வந்தாள். அவள்தான் அவளுடைய அம்மாவாக இருக்க வேண்டும் என்று தேவா நினைத்தான்.."ஏம்மா? ஏன் இவ்வளவு நேரம்.?!"."இன்னமும் காணலையேன்னு யோசிச்சுட்டு இருந்தேன்.ஆபிசில் வேலை அதிகமோ!" என்ற அம்மாவிடம்."இல்லம்மா டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கொஞ்சம் கூட்டம் அதிகம் அதுதான் " என்றாள்."ம்ம்.. சரி".அந்த அம்மா மீண்டும் வீட்டுக்குள் திரும்பி நடக்கத் துவங்கினாள்..தேவா, அவனை யாராவது கவனிக்கிறார்களா? என்று பயத்தோடு சுற்றிலும் பார்த்துக்கொண்டே திரும்பிய போது, அந்த அம்மாவின் முகத்திரை விலகியதை கவனித்தான்..அவனுக்கு மீண்டும் அதே குழப்பம். அம்மாவும் பெண்ணும் ஒரே மாதிரி அச்சில் வார்த்த மாதிரி இருந்தார்கள்..சட்டென்று அவனுக்குள் பொறி தட்டியது. `இது இந்த முகம் … ஆம் அவளாகத்தான் இருக்க வேண்டும்.`.`இது.. ராஜி தானே.?!` அவன் மனதுக்குள் முணுமுணுத்தான்..அவனுக்குள் வெகு காலமாக ஆழமாக பதிந்து போன அந்த முகம், அவனுடைய மனதை கவர்ந்த அதே முகம்..`ராஜி" என்று மீண்டும் மனதுக்குள் சொல்லிக் கொண்டான்..இதே முகம்தான், கல்லூரி நாட்களில் தேவாவுக்கு தூக்கம் வராமல் செய்தது..அவன் கல்லூரியில் இறுதி வருடத்தில் படிக்கின்ற போது, முதல் வருட மாணவியாக அவளை பார்க்க நேரிட்டது. முதன் முதலாக பார்த்த போதே, அவள் அழகு தேவாவை அசத்தியது. பிறகு, அவளை நூலகத்தில் சந்திக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொண்டு, அவளோடு பேசிப் பழக தொடங்கினான்..அவனுக்கு பிடித்த சுஜாதா, பாலகுமாரன், வைரமுத்து அவளுக்கும் பிடித்திருக்கிறது என்றதும், மனது அவளை நேசிக்க தொடங்கியது..அவளிடம் சொல்லாமலே, அவளை ரசித்து, ஒரு தலை காதலாக நிறைய கவிதைகள் எழுதினான். இறுதியாக காதல் கடிதம் கொடுக்க துணிந்து , காதலைச் சொல்லும் போதுதான்…...அவள் ஏற்கனவே திருமணமானவள் என்று அவனுக்கு தெரிய வந்தது..அதிர்ந்து போனான். ஏமாற்றத்தில் அவனுடைய காதல்… அவன் இதயத்திலேயே உறைந்து போனது..அவளுடைய வீட்டின் ஏழ்மை சூழ்நிலையில், அவளை வற்புறுத்தி, இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என்றும், அவள் கணவன் வேலை விஷயமாக துபாயில் இருப்பதாகவும்,அவளுடைய கணவன் அனுமதி பெற்றுதான்,கல்லூரியில் சேர்ந்து படிக்கிறாள் என்பதையும் அவளே சொன்னாள்..சிறு வயதிலேயே, வறுமையால் நிறைய சோதனைகளை அவள் அனுபவித்ததால், வாழ்க்கையை நேர் மறையாக பார்க்க பழகி விட்டதாகவும் சொன்னாள்..அவன் அணுகு முறையையும் தவறாக எடுத்துக் கொள்ளாமல், அவனை என்றும் நல்ல நண்பனாக நினைப்பதாக சொன்னதும், தேவாவுக்கு அவளுடைய தனித்தன்மை மிகவும் பிடித்துப் போனது..இருந்தாலும் காதல் முயற்சி தோல்வியில் முடிந்ததில் மனம் நொந்து போனது. அவளை பார்க்க நேரும் போதெல்லாம் அவன் மனசு கனக்கும். நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று ஏக்கத்தோடு பல நாட்கள் சோர்வோடு இருந்தான்..ஆனால் அவள், அவனை சந்திக்கும் போதெல்லாம், எப்போதும் போல கதை கவிதை என்று பேசிக்கொண்டு இருந்தாள். தேவாவுக்கு மனசுக்கு ஒரு மாதிரி குற்ற உணர்வு இருந்து கொண்டே இருந்ததால்… அவளை அதிகமாக சந்திப்பதை தவிர்த்தான்..கல்லூரி படித்து முடித்த பிறகு,அவனுக்கு மீண்டும் அவளை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை..அதற்கு பிறகு அவனுக்கு எந்த பெண்ணையும் நேசிக்கவும் தோன்றவில்லை..திரைப்படங்களில் காதல் காட்சிகள் வரும் போது, அவனுக்கு அவள் நினைவு வெறுமனே வந்து போகும்..பிறகு, அம்மா அப்பா பார்த்து, பேசி கைப்பிடித்த மனைவி, குடும்பம், குழந்தைகள் என்று இது நாள் வரை காலம் போய்க்கொண்டிருக்கிறது..தேவா கடந்த கால நினைவுகளில் மூழ்கி நின்று கொண்டிருந்ததை, அந்த பெண்மணி கவனித்து விட்டாள்..கண்களை சுருக்கிபடி, அவள் தேவாவை உற்றுப் பார்த்தாள். "சார், என்ன வேணும்!` என்று அவள் கேட்க, அவளின் மகளும் அவனைப் பார்த்தாள்..தேவா சட்டென்று சுதாரித்துக் கொண்டான். அவனுக்கு நெஞ்செல்லாம் படபடத்தது. இப்போது அவள் முகத்தை அவனால் இன்னும் தெளிவாக பார்க்க முடிந்தது..அவள் முகம் சற்று வாடியது போல இருந்தாலும், அந்த பொலிவு அப்படியே மாறாமல் இருந்தது.அவள் குரலும் மாறவே இல்லை என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்..அவனுடைய தற்போதைய வயதான தோற்றம், `அவன் தான் தேவா` என்று சொன்னாலும், அவளுக்கு புரியாது என்று அவனுக்கு தோன்றியது. அவளிடம் தன்னை அறிமுகப்படுத்தி பேசலாமா? என்று நினைத்தவனை பேச விடாமல் எதுவோ தடுத்தது..'என்னவென்று சொல்வது?! நான் தான் கல்லூரியில் உன்னை காதலித்த தேவா என்று சொல்வதா?'.`தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று இருப்பவளிடம், பழைய கதை பேச, அதை அவள் தவறாக எடுத்துக் கொண்டால் என்ன செய்வது ?!` அவனுக்கு அது சரியாக பட வில்லை..`அவள் என்னை காதலிக்கவில்லை. நான் தான் அவளை காதலித்தேன். நிலாவை வானத்தில் பார்த்து ரசிப்பது போல,என் மனதில் அவள் காதல் வெண்ணிலாவாக வாழ்ந்து கொண்டிருக்கட்டும்' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்..அவன் மௌனமாக அவளிடம் ஒன்றும் இல்லை என்பது போல தலையை ஆட்டி விட்டு, அங்கிருந்து தன் வாகனத்தை நகர்த்த தொடங்கியதும், அவர்கள் இருவரும் உள்ளே சென்று கதவை சாத்திக்கொண்டார்கள்..அவன் பைக்கில் அமர்ந்து ஸ்டார்ட் செய்ய நினைக்கையில், சாத்தப்பட்ட கதவு திறந்த சப்தம், அவன் காதில் விழுந்தது..'ராஜிக்கும் அவனை யாரென்று மீண்டும் பார்க்க தோன்றியதோ என்னவோ…' அவள் அவன் போவதை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.."எங்கிருந்தாலும் வாழ்க " என்று ராஜியை மனதுக்குள் வாழ்த்திக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான் தேவா. அவன் மனது தெளிவு பெற்றிருந்தது.