– வெங்கடராமன் ராமசுப்ரமணியன்.நினைப்பிற்கும் நடப்பிற்கும் இடையே உள்ள வித்தியாசம் கவலையாக மலர்கிறது என்று வேதாத்திரி மகரிஷி கூறுகிறார். psychosomatic அதாவது மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பின் காரணமாக, மனதில் கவலை இருந்தால், அது உடம்பின் நோயாகவும் மாறுகிறது. இதனால், நரம்புத் தளர்ச்சி, இரத்த அழுத்தம், நாளமிலா சுரப்பிகள் குறைபாடு, இதய நோய் என்று பல்வேறு பிரச்னைகள் உருவாகலாம். கவலைப்படுவதை எவ்வாறு நிறுத்தி, வாழ்க்கையை வாழத் தொடங்குவது (How to stop worrying and start living) என்ற கவலை ஒழித்தல் புத்தகத்தில் கவலைகளை எவ்வாறு வெற்றிகொள்வது என்பதற்குப் பல்வேறு வழிமுறைகளை டேல் கார்னகி அவர்கள் பகிர்ந்துக் கொள்கிறார். அவற்றிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம்..பிரச்னையின் படுமோசமான விளைவுக்கு தயாராகிவிடுங்கள்: அதனைப் படிப்படியாக அணுகுங்கள்..பிரச்னையைக் கண்டு பயப்படாமல் அலசி ஆராய்ந்து, என்ன படுமோசமாக நடந்துவிடும் என்று கண்டுபிடியுங்கள்அந்தப் படுமோசமான நிகழ்ச்சி நடந்துவிட்டதாக பாவியுங்கள்மனதளவில் தயாராகிவிட்ட, அந்தப் படுமோசமான நிகழ்ச்சி நடந்தால், எவ்வாறு கையாளலாம் அல்லது பாதிப்பைக் குறைக்கலாம் என்று பாருங்கள்.உதாரணமாக, அலுவலகத்தில் ஆட்குறைப்பு என்ற கவலை இருந்தால், படுமோசமான விளைவான வேலை இழப்புக்கு மனதளவில் தயாராகி விடுங்கள். வேலை இழப்பு நிகழ்ந்தால், குடும்பத்தைச் சமாளிக்க, பணம் போதிய அளவு சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். புதிய நிறுவனங்களுக்கு நேர்முகத் தேர்வுக்கு, உங்களைத் தயார் செய்துக் கொள்ளுங்கள். உங்களது கவலை ஒழியும்..தரவு அடிப்படையில் பிரச்னைகளைக் கையாளுங்கள்;எந்த ஒரு பிரச்னைக்கும் உடனே கவலைப்படாமல், தரவுகள் சேகரித்து, அலசி, முடிவெடுங்கள்..உதாரணமாக, வீட்டு வரி பாக்கிகளை அரசாங்கம் வசூலிக்கிறது என்றால், உங்களுக்கு வரி பாக்கி இருக்கிறதா என்று தரவுகளைச் சேகரித்து, ஏதேனும் இருந்தால், அதை எடுத்து, வரியை அபராதத்தொகையுடன் கட்டிவிடுங்கள். வரி பாக்கி இல்லாவிட்டால், கவலைப்பட ஒன்றுமில்லை..பிரச்னையை திட்டத்துடன் அணுகும் முறை;பிரச்னையை நோக்கி பின்வரும் கேள்விகளை எழுப்பி, அதற்கு பதிலளித்து முறைப்படி கையாளுங்கள்..எதைப் பற்றி நான் கவலை கொண்டுள்ளேன்?அந்தக் கவலையை நான் எப்படி கையாள முடியும்?முடிவாக, அந்தக் கவலையை எப்படிக் கையாளப் போகிறேன்?அந்தக் கவலையைக் கையாள்வதை எப்போது தொடங்குவேன்?.உதாரணத்திற்கு, கடன்காரர் உங்களை நச்சரிக்கிறார் என்றால், எவ்வாறு கடனை அடைப்பது என்று எண்ணி, தங்கநகை அல்லது வேறு ஏதாவது சொத்தினை விற்று பணமாக மாற்றி, குறிப்பிட்டத் தேதியில் கடனை அடைப்பது என்று முடிவெடுங்கள்..பிரச்னைகளை 4 கேள்விகளின்படி கையாளுங்கள்;எந்த ஒரு பிரச்னைக்கும் நான்கு கேள்விகளை கேட்டு, அதனை கையாளுங்கள்..என்ன பிரச்னை?பிரச்னைக்கு காரணம் என்ன?பிரச்னையைத் தீர்க்க வழிகள் என்ன?எந்த வழி சிறந்த வழி?.உதாரணத்திற்கு, சுயத்தொழிலில் அதிக செலவு எனில், எதன் காரணமாக, அதிகச் செலவு என்று கண்டறிந்து, அதனைத் தீர்க்க வழிகளைப் பட்டியலிட்டு, சிறந்த வழியைத் தேர்ந்தெடுத்து, செயல்படுத்துங்கள்..கொட்டிய பாலை நினைத்து கவலைப்படாதீர்கள்;ஒரு முடிந்துபோன செயல் என்பது, கொட்டிய பாலைப் போன்றது. கொட்டிய பாலை மறுபடி பாத்திரத்தில் நிரப்ப முடியாது. எனவே, முடிந்து போன ஒரு விஷயத்தை எண்ணி, மறுபடி மறுபடி வருந்த வேண்டாம். நடந்து விஷயத்திலிருந்து என்ன பாடம் கற்றுக் கொண்டோம் என்று எண்ணி, மீண்டும் அந்தத் தவறைச் செய்யாதீர்கள்..தவிர்க்க முடியாத விஷயங்களை ஏற்றுக்கொண்டு ஒத்துழையுங்கள்; உறுப்பு இழப்பு, சொத்து இழப்பு போன்ற சில விஷயங்கள் தவிர்க்க முடியாதவை என்று அறிந்த பின்னர், அவற்றை ஏற்றுக்கொண்டு, அதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதையே நினைத்து வருந்துவதால், எந்தப் பயனும் இல்லை.தினசரி வாழ்க்கையில் உங்கள் வேலையில் மும்முரமாக இருக்கப் பழகுங்கள்:அப்படி இருக்கும்போது, கவலைப்படுவதற்கு நேரமிருக்காது. பல கவலைகளை கடக்க அது உதவும். ஆங்கிலத்தில், Time is the curing factor என்று கூறுவார்கள். அதாவது, காலம் கவலைக்கு மருந்து என்று கூறுவார்கள்..தாங்கக்கூடிய இழப்பு (stoploss) விதியைப் பின்பற்றுங்கள்;ஒரு நபருக்காக காத்திருக்கிறீர்கள். அவர் வரவில்லை. அதிகபட்சம் 15 நிமிடம் காத்திருந்துவிட்டு, அங்கிருந்து கிளம்பிவிடுவீர்கள். இதனைப் போலவே, கவலைகளுக்கு நேரத்தை ஒதுக்கிவிட்டு, அதற்குமேல் அந்தக் கவலைக்கு இடம் தராதீர்கள். அடுத்த வேலையைக் கவனிக்கப் பாருங்கள்..உதாரணமாக, திடீரென்று ஒரு தங்க மோதிரம் காணாமல் போய்விட்டால், அதனை நினைத்து ஒரு 1 மணி நேரம் காரணங்களை அலசுங்கள். அதிலிருந்து பாடத்தைக் கற்றுக்கொண்டு, அடுத்த நடவடிக்கையை நோக்கிச் செல்லுங்கள்..நீங்கள் நினைத்ததைப் போல், ஒரு விஷயம் நடக்காமல், நேரெதிராக நடந்தால், அதன் மூலம், நான் என்ன பயனடையலாம் என்று பாருங்கள். உங்களுக்கு நடந்த நிகழ்வினை, நேர்மறையாக எடுத்துக்கொள்ளுங்கள்..அற்ப விஷயங்களை எண்ணி கவலைப்படாதீர்கள்;அலுவலகத்தின் காபியின் சர்க்கரை அளவு குறைவாக இருப்பது, ஒரு நாள் வீட்டில் சாப்பாட்டில் உப்பு அதிகமாக இருப்பது, செய்தித்தாள் தாமதமாக வருவது போன்ற அற்ப விஷயங்களை, புற்று நோய், நாடுகளுக்கு இடையே போர் போன்ற வாழ்க்கையை அச்சுறுத்தும் பெரிய பிரச்னைகளுடன் ஒப்பிட்டு, அந்த அற்ப விஷயங்களைப் புறந்தள்ளுங்கள்..நீங்கள் கவலை ஒழித்து, மன நிம்மதி அடைய வாழ்த்துகள்.
– வெங்கடராமன் ராமசுப்ரமணியன்.நினைப்பிற்கும் நடப்பிற்கும் இடையே உள்ள வித்தியாசம் கவலையாக மலர்கிறது என்று வேதாத்திரி மகரிஷி கூறுகிறார். psychosomatic அதாவது மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பின் காரணமாக, மனதில் கவலை இருந்தால், அது உடம்பின் நோயாகவும் மாறுகிறது. இதனால், நரம்புத் தளர்ச்சி, இரத்த அழுத்தம், நாளமிலா சுரப்பிகள் குறைபாடு, இதய நோய் என்று பல்வேறு பிரச்னைகள் உருவாகலாம். கவலைப்படுவதை எவ்வாறு நிறுத்தி, வாழ்க்கையை வாழத் தொடங்குவது (How to stop worrying and start living) என்ற கவலை ஒழித்தல் புத்தகத்தில் கவலைகளை எவ்வாறு வெற்றிகொள்வது என்பதற்குப் பல்வேறு வழிமுறைகளை டேல் கார்னகி அவர்கள் பகிர்ந்துக் கொள்கிறார். அவற்றிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம்..பிரச்னையின் படுமோசமான விளைவுக்கு தயாராகிவிடுங்கள்: அதனைப் படிப்படியாக அணுகுங்கள்..பிரச்னையைக் கண்டு பயப்படாமல் அலசி ஆராய்ந்து, என்ன படுமோசமாக நடந்துவிடும் என்று கண்டுபிடியுங்கள்அந்தப் படுமோசமான நிகழ்ச்சி நடந்துவிட்டதாக பாவியுங்கள்மனதளவில் தயாராகிவிட்ட, அந்தப் படுமோசமான நிகழ்ச்சி நடந்தால், எவ்வாறு கையாளலாம் அல்லது பாதிப்பைக் குறைக்கலாம் என்று பாருங்கள்.உதாரணமாக, அலுவலகத்தில் ஆட்குறைப்பு என்ற கவலை இருந்தால், படுமோசமான விளைவான வேலை இழப்புக்கு மனதளவில் தயாராகி விடுங்கள். வேலை இழப்பு நிகழ்ந்தால், குடும்பத்தைச் சமாளிக்க, பணம் போதிய அளவு சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். புதிய நிறுவனங்களுக்கு நேர்முகத் தேர்வுக்கு, உங்களைத் தயார் செய்துக் கொள்ளுங்கள். உங்களது கவலை ஒழியும்..தரவு அடிப்படையில் பிரச்னைகளைக் கையாளுங்கள்;எந்த ஒரு பிரச்னைக்கும் உடனே கவலைப்படாமல், தரவுகள் சேகரித்து, அலசி, முடிவெடுங்கள்..உதாரணமாக, வீட்டு வரி பாக்கிகளை அரசாங்கம் வசூலிக்கிறது என்றால், உங்களுக்கு வரி பாக்கி இருக்கிறதா என்று தரவுகளைச் சேகரித்து, ஏதேனும் இருந்தால், அதை எடுத்து, வரியை அபராதத்தொகையுடன் கட்டிவிடுங்கள். வரி பாக்கி இல்லாவிட்டால், கவலைப்பட ஒன்றுமில்லை..பிரச்னையை திட்டத்துடன் அணுகும் முறை;பிரச்னையை நோக்கி பின்வரும் கேள்விகளை எழுப்பி, அதற்கு பதிலளித்து முறைப்படி கையாளுங்கள்..எதைப் பற்றி நான் கவலை கொண்டுள்ளேன்?அந்தக் கவலையை நான் எப்படி கையாள முடியும்?முடிவாக, அந்தக் கவலையை எப்படிக் கையாளப் போகிறேன்?அந்தக் கவலையைக் கையாள்வதை எப்போது தொடங்குவேன்?.உதாரணத்திற்கு, கடன்காரர் உங்களை நச்சரிக்கிறார் என்றால், எவ்வாறு கடனை அடைப்பது என்று எண்ணி, தங்கநகை அல்லது வேறு ஏதாவது சொத்தினை விற்று பணமாக மாற்றி, குறிப்பிட்டத் தேதியில் கடனை அடைப்பது என்று முடிவெடுங்கள்..பிரச்னைகளை 4 கேள்விகளின்படி கையாளுங்கள்;எந்த ஒரு பிரச்னைக்கும் நான்கு கேள்விகளை கேட்டு, அதனை கையாளுங்கள்..என்ன பிரச்னை?பிரச்னைக்கு காரணம் என்ன?பிரச்னையைத் தீர்க்க வழிகள் என்ன?எந்த வழி சிறந்த வழி?.உதாரணத்திற்கு, சுயத்தொழிலில் அதிக செலவு எனில், எதன் காரணமாக, அதிகச் செலவு என்று கண்டறிந்து, அதனைத் தீர்க்க வழிகளைப் பட்டியலிட்டு, சிறந்த வழியைத் தேர்ந்தெடுத்து, செயல்படுத்துங்கள்..கொட்டிய பாலை நினைத்து கவலைப்படாதீர்கள்;ஒரு முடிந்துபோன செயல் என்பது, கொட்டிய பாலைப் போன்றது. கொட்டிய பாலை மறுபடி பாத்திரத்தில் நிரப்ப முடியாது. எனவே, முடிந்து போன ஒரு விஷயத்தை எண்ணி, மறுபடி மறுபடி வருந்த வேண்டாம். நடந்து விஷயத்திலிருந்து என்ன பாடம் கற்றுக் கொண்டோம் என்று எண்ணி, மீண்டும் அந்தத் தவறைச் செய்யாதீர்கள்..தவிர்க்க முடியாத விஷயங்களை ஏற்றுக்கொண்டு ஒத்துழையுங்கள்; உறுப்பு இழப்பு, சொத்து இழப்பு போன்ற சில விஷயங்கள் தவிர்க்க முடியாதவை என்று அறிந்த பின்னர், அவற்றை ஏற்றுக்கொண்டு, அதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதையே நினைத்து வருந்துவதால், எந்தப் பயனும் இல்லை.தினசரி வாழ்க்கையில் உங்கள் வேலையில் மும்முரமாக இருக்கப் பழகுங்கள்:அப்படி இருக்கும்போது, கவலைப்படுவதற்கு நேரமிருக்காது. பல கவலைகளை கடக்க அது உதவும். ஆங்கிலத்தில், Time is the curing factor என்று கூறுவார்கள். அதாவது, காலம் கவலைக்கு மருந்து என்று கூறுவார்கள்..தாங்கக்கூடிய இழப்பு (stoploss) விதியைப் பின்பற்றுங்கள்;ஒரு நபருக்காக காத்திருக்கிறீர்கள். அவர் வரவில்லை. அதிகபட்சம் 15 நிமிடம் காத்திருந்துவிட்டு, அங்கிருந்து கிளம்பிவிடுவீர்கள். இதனைப் போலவே, கவலைகளுக்கு நேரத்தை ஒதுக்கிவிட்டு, அதற்குமேல் அந்தக் கவலைக்கு இடம் தராதீர்கள். அடுத்த வேலையைக் கவனிக்கப் பாருங்கள்..உதாரணமாக, திடீரென்று ஒரு தங்க மோதிரம் காணாமல் போய்விட்டால், அதனை நினைத்து ஒரு 1 மணி நேரம் காரணங்களை அலசுங்கள். அதிலிருந்து பாடத்தைக் கற்றுக்கொண்டு, அடுத்த நடவடிக்கையை நோக்கிச் செல்லுங்கள்..நீங்கள் நினைத்ததைப் போல், ஒரு விஷயம் நடக்காமல், நேரெதிராக நடந்தால், அதன் மூலம், நான் என்ன பயனடையலாம் என்று பாருங்கள். உங்களுக்கு நடந்த நிகழ்வினை, நேர்மறையாக எடுத்துக்கொள்ளுங்கள்..அற்ப விஷயங்களை எண்ணி கவலைப்படாதீர்கள்;அலுவலகத்தின் காபியின் சர்க்கரை அளவு குறைவாக இருப்பது, ஒரு நாள் வீட்டில் சாப்பாட்டில் உப்பு அதிகமாக இருப்பது, செய்தித்தாள் தாமதமாக வருவது போன்ற அற்ப விஷயங்களை, புற்று நோய், நாடுகளுக்கு இடையே போர் போன்ற வாழ்க்கையை அச்சுறுத்தும் பெரிய பிரச்னைகளுடன் ஒப்பிட்டு, அந்த அற்ப விஷயங்களைப் புறந்தள்ளுங்கள்..நீங்கள் கவலை ஒழித்து, மன நிம்மதி அடைய வாழ்த்துகள்.