வாசகர் ஜமாய்க்கிறாங்க!.சக்தி நிறைந்த காய்கறிகளை வேறு எந்தவிதத்தில் சமைத்தாலும் அவற்றில் பொதிந்துள்ள சத்துக்கள் கொஞ்சமாவது வீணாகிவிட வாய்ப்புண்டு. ஆனால், அதே காய்கறிகளைச் சூப்பாகத் தயாரிக்கும்போது அவற்றின் சத்துக்கள் கொஞ்சம் கூட வீணாவதில்லை. சூப் வகைகள் எளிதாக ஜீரணமாகக் கூடியதாக இருப்பதால், சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை சூப் வகைகளை அருந்தலாம். மருத்துவக்குணம் கொண்ட சூப் வகைகள் இதோ சில:.கீழாநெல்லி சூப்.நீரிழிவு, சிறுநீரக கோளாறுகள், மஞ்சள் காமாலை போன்ற பல நோய்களைக் குணமாக்கும் சக்தி படைத்த அற்புதமான மூலிகை இது. இதனை எப்படிப் பக்குவப்படுத்தி உட்கொண்டாலும் முழு பயனும் கிடைக்கும். இதனைச் சூப்பாகத் தயாரிக்கும் முறை குறித்து தெரிந்துக் கொள்வோம்..தேவை: ஆய்ந்து எடுத்த கீழாநெல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு, துவரம் பருப்பு – அரை கப் , பச்சை மிளகாய் – 3, தக்காளி – 5 , நெய் – அரை மேஜைக் கரண்டி, கடுகு – ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை – சிறிதளவு , உப்பு – தேவையான அளவு..செய்முறை: பருப்பைத் தண்ணீர் சேர்த்து மிருதுவாக பஞ்சு போல வேக வைத்துக் கொள்ளவேண்டும். வெந்த பருப்பை இறக்கி அதனுடன் 6 கப் தண்ணீர் சேர்த்து பருப்பை நன்றாக பிசைந்து கலக்கிவிட்டுக் கொள்ள வேண்டும். தக்காளியை அரிந்து, பருப்பு நீருடன் சேர்த்துக் கையால் பிசைந்து கீழாநெல்லி இலைகளைப் பொடிசாக நறுக்கிப் போட்டு பச்சை மிளகாயை நறுக்கிய இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதி வந்தவுடன் அரிந்த வெங்காயம் மற்றும் கடுகை, நெய்யில் தாளித்து, சூப்புடன் சேர்த்து 20 நிமிடங்கள் கொதிக்க செய்யவேண்டும். வாசனை வந்ததும் இறக்கிப் பரிமாறலாம்..முடக்கத்தான் சூப்.மூட்டு வலி, தசை வலி, பாரிசவாய்வு எல்லாவிதமான வாதக் கோளாறுகளையும் குணமாக்கும்..தேவை: ஆய்ந்த கீரை- ஒரு கப், துவரம் பருப்பு – இரண்டு தேக்கரண்டி, மிளகு – ஒரு தேக்கரண்டி, சீரகம் – இரண்டு தேக்கரண்டி, எண்ணெய் – ஒரு தேக்கரண்டி கடுகு – அரை தேக்கரண்டி, வற்றல் மிளகாய் – மூன்று , புளி – எலுமிச்சைப் பழம் அளவு, பெருங்காயம்- சிறிதளவு, பூண்டு- ஒன்று, உப்பு- தேவையான அளவு..செய்முறை: கீரையில் இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைத்துக்கொள்ளவும். துவரம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு இவற்றை நன்கு அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். நான்கு தம்ளர் தண்ணீர் எடுத்து உப்பு, புளியைக் கரைத்து கீரையில் விடவும். அரைத்து வைத்த விழுதையும் கீரையில் போட்டு நன்கு கொதிக்கவிடவும். இதை இறக்கிவிட்டு கடுகு, பெருங்காயம் இவற்றைத் தாளித்துச் சேர்க்கவும்..திப்பிலி சூப்.திப்பிலி சித்த மருத்துவ சிறப்புமிக்க ஒரு பொருள். வெப்ப ஆற்றல் மிகுந்த இது கபத்தையும், வாதத்தையும் போக்கும் இயல்புடையதாகும். ஜலதோஷம், இருமல், இரைப்பு, தொண்டை வலி, தலைவலி போன்ற பல பிணிகளைக் குணமாக்கும் ஆற்றல் மிக்கது..தேவை: அரைக்க: திப்பிலி – அம்பது கிராம், மிளகாய் வற்றல் – 3 , மிளகு – கால் தேக்கரண்டி, சீரகம்- அரைத் தேக்கரண்டி, தனியா- இரண்டு தேக்கரண்டி, துவரம் பருப்பு – இரண்டு தேக்கரண்டி..தாளிக்க: நெய் – ஒரு தேக்கரண்டி, கடுகு – சிறிதளவு, கடலைப்பருப்பு – சிறிதளவு, பெருங்காயம்- சிறிதளவு, கறிவேப்பிலை – ஓர் ஈர்க்கு..செய்முறை: அரைக்க சொன்ன சரக்குகளை எல்லாம் சிறிது நல்லெண்ணெய் விட்டு, வறுத்து, அம்மியில் வைத்து அரைத்துக்கொள்ளவும். எலுமிச்சங்காய் அளவு புளியை 100 மில்லி நீரில் கரைத்து, உப்பு இரண்டு தேக்கரண்டி போட்டு அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் அரைத்து வைத்திருக்கும் விழுதை 200 மில்லி நீரில் கரைத்துக் கொதிக்கும் புளி நீரில் விடவும். பிறகு தாளிப்புக்கு ஒரு கரண்டி வைத்து, ஒரு தேக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும், அரை தேக்கரண்டி கடுகு, பெருங்காயம், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை ஈர்க்கு ஒன்று ஆகியவற்றைப் போட்டு சூப்பில் கொட்டவும். ஒரு கொதி வந்ததும் இறக்கவும்..பார்லி சூப்.சரியாக செரிமானம் இல்லாமல் சங்கடப்படுபவர்கள், நீண்ட காலம்நோய்ப்படுக்கையில் இருந்து எழுந்தவர்கள், மிகவும் பலவீனமாக உள்ளவர்கள் போன்றவர்களுக்கு இந்தச் சூப் நல்ல பலனை அளிக்கும். இந்தச் சூப்பில் வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற சத்துப் பொருட்களும் இடம் பெறுவதால் உடல் தேற்றி மருந்தாகவும் உதவுகிறது..தேவை: பார்லி அரிசி – ஒரு கோப்பை, காய்கறி வேக வைத்து தண்ணீர்- 2 லிட்டர், எண்ணெய்- இரண்டு மேஜைக்கரண்டி, வில்லைகளாக நறுக்கிய வெங்காயம்- இரண்டு, பொடியாக நறுக்கிய கேரட்டுகள்- 2, பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு -2, மசாலா இலை – இரண்டு, உப்பு, மிளகுத் தூள் – போதுமான அளவு..செய்முறை: பார்லியை தண்ணீரில் எட்டு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்துவிட்டு, இரண்டு கோப்பை தண்ணீரைவிட்டு, பிரஷர் குக்கரில் அரிசி வேக வைப்பதுபோல வேகவைக்கவும். எண்ணெயைச் சூடாக்கி, வெங்காயத்தைப் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அதில் வேகவைத்த பார்லி, காய்கறி, தண்ணீர், நறுக்கிய காய்கறி வகைகள், மசாலா இலை ஆகியவற்றைச் சேர்க்கவும். பாத்திரத்தை மூடி மெல்லிய தீயில் 30 நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்..நெல்லிக்காய் சூப்.நெல்லிக்காய்ச் சாறு சத்து மிகுந்ததும் மருத்துவக் குணம் அதிகம் உள்ளதும் ஆகும். இதில் வைட்டமின் சி சத்து பெருமளவில் உள்ளது. இதில் தாதுப் பொருட்களும் கணிசமான அளவு சுண்ணாம்புச் சத்தும் உண்டு. வைட்டமின் சி சத்தினால் உடலுக்கு ஏற்படக்கூடிய பயன் குறித்து நாம் அறிந்ததே..தேவை: நெல்லிக்காய் வேக வைத்த தண்ணீர் – நான்கு கப், மைதா மாவு –ஒரு மேஜைக்கரண்டி, பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று,.வெண்ணெய்- இரண்டு மேஜைக்கரண்டி பால் ஏடு அல்லது கிரீம் – ரெண்டு மேஜைக்கரண்டி, உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு..செய்முறை: வெங்காயத்தை இரண்டு நிமிடங்கள் வெண்ணெயில் வதக்கவும். மாவையும் சேர்த்து வறுக்கவும். நெல்லிக்காய் வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். பிறகு பால் ஏடு அல்லது கிரீம் சேர்த்து பரிமாறவும்.
வாசகர் ஜமாய்க்கிறாங்க!.சக்தி நிறைந்த காய்கறிகளை வேறு எந்தவிதத்தில் சமைத்தாலும் அவற்றில் பொதிந்துள்ள சத்துக்கள் கொஞ்சமாவது வீணாகிவிட வாய்ப்புண்டு. ஆனால், அதே காய்கறிகளைச் சூப்பாகத் தயாரிக்கும்போது அவற்றின் சத்துக்கள் கொஞ்சம் கூட வீணாவதில்லை. சூப் வகைகள் எளிதாக ஜீரணமாகக் கூடியதாக இருப்பதால், சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை சூப் வகைகளை அருந்தலாம். மருத்துவக்குணம் கொண்ட சூப் வகைகள் இதோ சில:.கீழாநெல்லி சூப்.நீரிழிவு, சிறுநீரக கோளாறுகள், மஞ்சள் காமாலை போன்ற பல நோய்களைக் குணமாக்கும் சக்தி படைத்த அற்புதமான மூலிகை இது. இதனை எப்படிப் பக்குவப்படுத்தி உட்கொண்டாலும் முழு பயனும் கிடைக்கும். இதனைச் சூப்பாகத் தயாரிக்கும் முறை குறித்து தெரிந்துக் கொள்வோம்..தேவை: ஆய்ந்து எடுத்த கீழாநெல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு, துவரம் பருப்பு – அரை கப் , பச்சை மிளகாய் – 3, தக்காளி – 5 , நெய் – அரை மேஜைக் கரண்டி, கடுகு – ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை – சிறிதளவு , உப்பு – தேவையான அளவு..செய்முறை: பருப்பைத் தண்ணீர் சேர்த்து மிருதுவாக பஞ்சு போல வேக வைத்துக் கொள்ளவேண்டும். வெந்த பருப்பை இறக்கி அதனுடன் 6 கப் தண்ணீர் சேர்த்து பருப்பை நன்றாக பிசைந்து கலக்கிவிட்டுக் கொள்ள வேண்டும். தக்காளியை அரிந்து, பருப்பு நீருடன் சேர்த்துக் கையால் பிசைந்து கீழாநெல்லி இலைகளைப் பொடிசாக நறுக்கிப் போட்டு பச்சை மிளகாயை நறுக்கிய இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதி வந்தவுடன் அரிந்த வெங்காயம் மற்றும் கடுகை, நெய்யில் தாளித்து, சூப்புடன் சேர்த்து 20 நிமிடங்கள் கொதிக்க செய்யவேண்டும். வாசனை வந்ததும் இறக்கிப் பரிமாறலாம்..முடக்கத்தான் சூப்.மூட்டு வலி, தசை வலி, பாரிசவாய்வு எல்லாவிதமான வாதக் கோளாறுகளையும் குணமாக்கும்..தேவை: ஆய்ந்த கீரை- ஒரு கப், துவரம் பருப்பு – இரண்டு தேக்கரண்டி, மிளகு – ஒரு தேக்கரண்டி, சீரகம் – இரண்டு தேக்கரண்டி, எண்ணெய் – ஒரு தேக்கரண்டி கடுகு – அரை தேக்கரண்டி, வற்றல் மிளகாய் – மூன்று , புளி – எலுமிச்சைப் பழம் அளவு, பெருங்காயம்- சிறிதளவு, பூண்டு- ஒன்று, உப்பு- தேவையான அளவு..செய்முறை: கீரையில் இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைத்துக்கொள்ளவும். துவரம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு இவற்றை நன்கு அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். நான்கு தம்ளர் தண்ணீர் எடுத்து உப்பு, புளியைக் கரைத்து கீரையில் விடவும். அரைத்து வைத்த விழுதையும் கீரையில் போட்டு நன்கு கொதிக்கவிடவும். இதை இறக்கிவிட்டு கடுகு, பெருங்காயம் இவற்றைத் தாளித்துச் சேர்க்கவும்..திப்பிலி சூப்.திப்பிலி சித்த மருத்துவ சிறப்புமிக்க ஒரு பொருள். வெப்ப ஆற்றல் மிகுந்த இது கபத்தையும், வாதத்தையும் போக்கும் இயல்புடையதாகும். ஜலதோஷம், இருமல், இரைப்பு, தொண்டை வலி, தலைவலி போன்ற பல பிணிகளைக் குணமாக்கும் ஆற்றல் மிக்கது..தேவை: அரைக்க: திப்பிலி – அம்பது கிராம், மிளகாய் வற்றல் – 3 , மிளகு – கால் தேக்கரண்டி, சீரகம்- அரைத் தேக்கரண்டி, தனியா- இரண்டு தேக்கரண்டி, துவரம் பருப்பு – இரண்டு தேக்கரண்டி..தாளிக்க: நெய் – ஒரு தேக்கரண்டி, கடுகு – சிறிதளவு, கடலைப்பருப்பு – சிறிதளவு, பெருங்காயம்- சிறிதளவு, கறிவேப்பிலை – ஓர் ஈர்க்கு..செய்முறை: அரைக்க சொன்ன சரக்குகளை எல்லாம் சிறிது நல்லெண்ணெய் விட்டு, வறுத்து, அம்மியில் வைத்து அரைத்துக்கொள்ளவும். எலுமிச்சங்காய் அளவு புளியை 100 மில்லி நீரில் கரைத்து, உப்பு இரண்டு தேக்கரண்டி போட்டு அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் அரைத்து வைத்திருக்கும் விழுதை 200 மில்லி நீரில் கரைத்துக் கொதிக்கும் புளி நீரில் விடவும். பிறகு தாளிப்புக்கு ஒரு கரண்டி வைத்து, ஒரு தேக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும், அரை தேக்கரண்டி கடுகு, பெருங்காயம், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை ஈர்க்கு ஒன்று ஆகியவற்றைப் போட்டு சூப்பில் கொட்டவும். ஒரு கொதி வந்ததும் இறக்கவும்..பார்லி சூப்.சரியாக செரிமானம் இல்லாமல் சங்கடப்படுபவர்கள், நீண்ட காலம்நோய்ப்படுக்கையில் இருந்து எழுந்தவர்கள், மிகவும் பலவீனமாக உள்ளவர்கள் போன்றவர்களுக்கு இந்தச் சூப் நல்ல பலனை அளிக்கும். இந்தச் சூப்பில் வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற சத்துப் பொருட்களும் இடம் பெறுவதால் உடல் தேற்றி மருந்தாகவும் உதவுகிறது..தேவை: பார்லி அரிசி – ஒரு கோப்பை, காய்கறி வேக வைத்து தண்ணீர்- 2 லிட்டர், எண்ணெய்- இரண்டு மேஜைக்கரண்டி, வில்லைகளாக நறுக்கிய வெங்காயம்- இரண்டு, பொடியாக நறுக்கிய கேரட்டுகள்- 2, பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு -2, மசாலா இலை – இரண்டு, உப்பு, மிளகுத் தூள் – போதுமான அளவு..செய்முறை: பார்லியை தண்ணீரில் எட்டு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்துவிட்டு, இரண்டு கோப்பை தண்ணீரைவிட்டு, பிரஷர் குக்கரில் அரிசி வேக வைப்பதுபோல வேகவைக்கவும். எண்ணெயைச் சூடாக்கி, வெங்காயத்தைப் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அதில் வேகவைத்த பார்லி, காய்கறி, தண்ணீர், நறுக்கிய காய்கறி வகைகள், மசாலா இலை ஆகியவற்றைச் சேர்க்கவும். பாத்திரத்தை மூடி மெல்லிய தீயில் 30 நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்..நெல்லிக்காய் சூப்.நெல்லிக்காய்ச் சாறு சத்து மிகுந்ததும் மருத்துவக் குணம் அதிகம் உள்ளதும் ஆகும். இதில் வைட்டமின் சி சத்து பெருமளவில் உள்ளது. இதில் தாதுப் பொருட்களும் கணிசமான அளவு சுண்ணாம்புச் சத்தும் உண்டு. வைட்டமின் சி சத்தினால் உடலுக்கு ஏற்படக்கூடிய பயன் குறித்து நாம் அறிந்ததே..தேவை: நெல்லிக்காய் வேக வைத்த தண்ணீர் – நான்கு கப், மைதா மாவு –ஒரு மேஜைக்கரண்டி, பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று,.வெண்ணெய்- இரண்டு மேஜைக்கரண்டி பால் ஏடு அல்லது கிரீம் – ரெண்டு மேஜைக்கரண்டி, உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு..செய்முறை: வெங்காயத்தை இரண்டு நிமிடங்கள் வெண்ணெயில் வதக்கவும். மாவையும் சேர்த்து வறுக்கவும். நெல்லிக்காய் வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். பிறகு பால் ஏடு அல்லது கிரீம் சேர்த்து பரிமாறவும்.