– ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி..இந்தியாவில் புதிய வரலாறு .தந்தையும் மகளுமாக சேர்ந்து போர் விமானத்தில் பறந்து புதிய வரலாறு படைத்துள்ளார்கள். தந்தை ஏர் கமடோர் சஞ்சய் சர்மா. மகள் பிளையிங் அதிகாரி அனன்யா சர்மா. இருவரும் விமானப்படையில் அதிகாரிகள். இவர்கள் கர்நாடகத்தில் பிடாரில் உள்ள இந்திய விமானப்படை நிலையத்தில் வைத்து 'ஹாக் – 132 போர்' விமானத்தில் ஒன்றாக பறந்து புதிய வரலாறு படைத்துள்ளனார்..————– —————– ————-.ஓட்டப் பந்தயங்களில் பதக்கங்களைக் குவித்த ஹரியானா பாட்டி.105 வயதில் ஓட்டப் பந்தயங்களில்பங்கேற்று பதக்கங்களையும் குவித்துவருகிறார் ஹரியானாவைச் சேர்ந்த ராம்பாய்என்ற மூதாட்டி. நூறு மீட்டர் போட்டியில் பதக்கங்களை அள்ளுகிறார். ஏராளமான பதக்கங்களை தங்கம், வெள்ளி, வெண்கலம் என எல்லா ஓட்டப் போட்டியிலும் வென்று அள்ளிவருகிறார் ராம்பாய். இந்த வயதிலும்விறுவிறு நடை, குடுகுடு, ஓட்டம் எனஉற்சாகமாக இருக்கிறார்..————– —————– ————-.மூக்குத்தியின் கதை.ஆதிசங்கரர் இயற்றிய 'யமுனாசதகம்' என்ற நூலில் மூக்குத்தி பற்றி கூறியுள்ளார். ஆதிசங்கரர் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். எகிப்து, பாலஸ்தீன நாடுகளில் பழங்குடிப் பெண்கள் கி.மு. 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மூக்குத்தி அணிந்து வந்ததாக வரலாறு கூறுகிறது. எகிப்து பெண்கள் பித்தளையால் ஆன மூக்குத்தியை அணிந்ததால் அது உதடுகளை மூடியதால் உணவருந்தும்போது அதை ஒரு கையால் தூக்கிப் பிடித்துக்கொண்டு சாப்பிடுவார்களாம். சிந்துவெளி சமவெளியை அராபியர் கைப்பற்றியவுடன் அவர்களுடன் இந்த மூக்குத்தியும் இந்தியாவிற்கு வந்தது..பிரதாப் காட் கோட்டையிலுள்ள பவானிதேவி பேஸரி அணிந்ததாக வரலாறு கூறுகிறது. ராஜஸ்தானி ஓவியங்களில் விதவிதமான ஓவியங்கள், விதவிதமாக மூக்குத்திகள் வரையப்பட்டிருப்பதும், முகலாய ஓவியங்களில் காணப்படும் வேலைப்பாடுகள் பலவிதமான மூக்குத்திகளும் வரலாற்றில் இந்த அணிகலன் பெற்றுள்ள முக்கியத்துவத்தைத் தெரிவிக்கின்றன. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி ஆலய சிற்பங்களில் மூக்குத்தியணிந்த பெண்கள் உள்ளனர். பதினைந்தாம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியக் கப்பலொன்றுக்குக் கலங்கரை விளக்கென ஒளி காட்டியதென்று கன்னியாகுமரி அம்மனின் மூக்குத்தி எனக் கூறுகிறது. மதுரை மீனாட்சியின் மாணிக்க மூக்குத்திக்குத் தனிப் பெருமை உண்டு..————– —————– ————-.நன்மை அறிவோம்!.மாங்கொட்டையிலும் இவ்வளவு பயன்கள்!.மாங்கொட்டைகளில் செரிமானத்தை அதிகரிக்கும் பினோலிக் கலவைகள் நிறைந்துள்ளன.செரிமானக் கோளாறு அசிடிட்டி பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் மாங்கொட்டை பருப்பை வெயிலில் உலர்த்தி தூளாக்கி உட்கொள்ளலாம். அதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் செரிமானத் திறனை மேம்படுத்தக் கூடியவை. அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.உலர வைக்கப்பட்ட மாங்கொட்டை பருப்புத்தூளை உட்கொண்டு வந்தால், உடலில் கொழுப்பின் அளவு சீராக இருக்கும். இந்தத் தூள் மோசமான கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கக் கூடியது. உடலில் நல்ல கொழுப்பின் அளவை தானாகவே அதிகரிக்கவும் வைத்துவிடும்.ரத்த ஒட்டத்தை அதிகரிக்கவும், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் ஒழுங்குப்படுத்தவும் துணை புரிகிறது.இந்தத் தூளை ஒரு டீஸ்பூன் அளவு உட்கொண்டால் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் உள்ளிட்ட வயிறு தொடர்பான நோய்கள் கட்டுப்படும்.மாங்கொட்டை தூள் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் ஸ்கர்வி நோயைக் கட்டுப்படுத்தும்..————– —————– ————-.துளசி… துளிசி… துளசி.துளசியின் ஒன்பது வகைகள் இருக்கின்றன.1) கரியமால் துளசி, 2) கருந்துளசி, 3) கற்பூரத் துளசி, 4) செந்துளசி,5) காட்டுத் துளசி, 6) சிவ துளசி, 7) நீலத் துளசி 8) பெருந்துளசி,9) நாய்த்துளசி..துளசியின் வேறு பெயர்கள்.1) திருத்துழாய், 2) துளபம், 3) துளவம், 4) சுகந்தா, 5) பிருந்தா, 6) வைஷ்ணவி, 7) லட்சுமி, 8) கவுரி, 9) மாதவி, 10) ஹரிப்பிரயா, 11) அம்ருதா, 12) சுரபி..துளசி பாயாசம்.துளசி கொண்டும் பாயாசம் செய்ய முடியுமா என நினைக்காதீர்கள். சித்த மருத்துவ கடைகள் அல்லது துளசி இருக்கும் வீடுகளில் துளசி விதை இருக்கும். இதில் ஒரு பங்கு எடுத்துக்கொண்டு அதில் மூன்று மடங்கு பனங்கற்கண்டு சேர்த்து ஒரு மண் சட்டியில் போட்டு கால்பங்கு தண்ணீர் விட்டு ஒருநாள் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் பார்த்தால் பாயாசம் போல் இருக்கும். இதைச் சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு சரியாகும். மூலவியாதி குணமாகும். இதை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்..கருந்துளசி மகிமை.கருந்துளசி விசேஷ குணமுடையது. இதன் சாறை இரும்புக் கரண்டியில் சுட வைத்து, தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் கபக்கட்டு, காய்ச்சல் குணமாகும்..————– —————– ————-. சொய்ங்… சொய்ங்!.தோசை… தோசை.தோசை மாவில் தேங்காய்ப் பாலைச் சேர்த்து தோசை செய்தால், சுவையாக இருக்கும்.தோசை நன்றாக மெல்லியதாக வரவேண்டும் என்றால் சிறிதளவு ஜவ்வரிசியை சேர்த்து அரைத்தால் பளபளவென்று, சுவையான, மெல்லியதான தோசை ரெடியாகிவிடும்.ரவா தோசை செய்யும்போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்துச் செய்தால், தோசை நன்கு சிவந்து மொறு, மொறுவென இருக்கும்.கோதுமை மாவைக் கரைத்து தோசை வார்க்கும்முன் சிறிதளவு எண்ணெயில் உளுத்தம்பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்து, கோதுமை மாவில் கலக்கி, தோசை செய்தால் அருமையாக இருக்கும்.வெங்காயத் தோசைக்கு வெங்காயத்தை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்து, தோசை மாவுடன் கலந்து, தோசை வார்த்தால் தோசை சீராக வரும்.தோசைக்கல்லில் மாவு ஊற்றியதும் மேல் பகுதியில் உதிரியாக சிறிது தேங்காயத் துருவலைத் தூவினால் தோசை ருசியாகவும் பார்க்க சூப்பராக இருக்கும்.
– ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி..இந்தியாவில் புதிய வரலாறு .தந்தையும் மகளுமாக சேர்ந்து போர் விமானத்தில் பறந்து புதிய வரலாறு படைத்துள்ளார்கள். தந்தை ஏர் கமடோர் சஞ்சய் சர்மா. மகள் பிளையிங் அதிகாரி அனன்யா சர்மா. இருவரும் விமானப்படையில் அதிகாரிகள். இவர்கள் கர்நாடகத்தில் பிடாரில் உள்ள இந்திய விமானப்படை நிலையத்தில் வைத்து 'ஹாக் – 132 போர்' விமானத்தில் ஒன்றாக பறந்து புதிய வரலாறு படைத்துள்ளனார்..————– —————– ————-.ஓட்டப் பந்தயங்களில் பதக்கங்களைக் குவித்த ஹரியானா பாட்டி.105 வயதில் ஓட்டப் பந்தயங்களில்பங்கேற்று பதக்கங்களையும் குவித்துவருகிறார் ஹரியானாவைச் சேர்ந்த ராம்பாய்என்ற மூதாட்டி. நூறு மீட்டர் போட்டியில் பதக்கங்களை அள்ளுகிறார். ஏராளமான பதக்கங்களை தங்கம், வெள்ளி, வெண்கலம் என எல்லா ஓட்டப் போட்டியிலும் வென்று அள்ளிவருகிறார் ராம்பாய். இந்த வயதிலும்விறுவிறு நடை, குடுகுடு, ஓட்டம் எனஉற்சாகமாக இருக்கிறார்..————– —————– ————-.மூக்குத்தியின் கதை.ஆதிசங்கரர் இயற்றிய 'யமுனாசதகம்' என்ற நூலில் மூக்குத்தி பற்றி கூறியுள்ளார். ஆதிசங்கரர் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். எகிப்து, பாலஸ்தீன நாடுகளில் பழங்குடிப் பெண்கள் கி.மு. 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மூக்குத்தி அணிந்து வந்ததாக வரலாறு கூறுகிறது. எகிப்து பெண்கள் பித்தளையால் ஆன மூக்குத்தியை அணிந்ததால் அது உதடுகளை மூடியதால் உணவருந்தும்போது அதை ஒரு கையால் தூக்கிப் பிடித்துக்கொண்டு சாப்பிடுவார்களாம். சிந்துவெளி சமவெளியை அராபியர் கைப்பற்றியவுடன் அவர்களுடன் இந்த மூக்குத்தியும் இந்தியாவிற்கு வந்தது..பிரதாப் காட் கோட்டையிலுள்ள பவானிதேவி பேஸரி அணிந்ததாக வரலாறு கூறுகிறது. ராஜஸ்தானி ஓவியங்களில் விதவிதமான ஓவியங்கள், விதவிதமாக மூக்குத்திகள் வரையப்பட்டிருப்பதும், முகலாய ஓவியங்களில் காணப்படும் வேலைப்பாடுகள் பலவிதமான மூக்குத்திகளும் வரலாற்றில் இந்த அணிகலன் பெற்றுள்ள முக்கியத்துவத்தைத் தெரிவிக்கின்றன. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி ஆலய சிற்பங்களில் மூக்குத்தியணிந்த பெண்கள் உள்ளனர். பதினைந்தாம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியக் கப்பலொன்றுக்குக் கலங்கரை விளக்கென ஒளி காட்டியதென்று கன்னியாகுமரி அம்மனின் மூக்குத்தி எனக் கூறுகிறது. மதுரை மீனாட்சியின் மாணிக்க மூக்குத்திக்குத் தனிப் பெருமை உண்டு..————– —————– ————-.நன்மை அறிவோம்!.மாங்கொட்டையிலும் இவ்வளவு பயன்கள்!.மாங்கொட்டைகளில் செரிமானத்தை அதிகரிக்கும் பினோலிக் கலவைகள் நிறைந்துள்ளன.செரிமானக் கோளாறு அசிடிட்டி பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் மாங்கொட்டை பருப்பை வெயிலில் உலர்த்தி தூளாக்கி உட்கொள்ளலாம். அதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் செரிமானத் திறனை மேம்படுத்தக் கூடியவை. அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.உலர வைக்கப்பட்ட மாங்கொட்டை பருப்புத்தூளை உட்கொண்டு வந்தால், உடலில் கொழுப்பின் அளவு சீராக இருக்கும். இந்தத் தூள் மோசமான கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கக் கூடியது. உடலில் நல்ல கொழுப்பின் அளவை தானாகவே அதிகரிக்கவும் வைத்துவிடும்.ரத்த ஒட்டத்தை அதிகரிக்கவும், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் ஒழுங்குப்படுத்தவும் துணை புரிகிறது.இந்தத் தூளை ஒரு டீஸ்பூன் அளவு உட்கொண்டால் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் உள்ளிட்ட வயிறு தொடர்பான நோய்கள் கட்டுப்படும்.மாங்கொட்டை தூள் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் ஸ்கர்வி நோயைக் கட்டுப்படுத்தும்..————– —————– ————-.துளசி… துளிசி… துளசி.துளசியின் ஒன்பது வகைகள் இருக்கின்றன.1) கரியமால் துளசி, 2) கருந்துளசி, 3) கற்பூரத் துளசி, 4) செந்துளசி,5) காட்டுத் துளசி, 6) சிவ துளசி, 7) நீலத் துளசி 8) பெருந்துளசி,9) நாய்த்துளசி..துளசியின் வேறு பெயர்கள்.1) திருத்துழாய், 2) துளபம், 3) துளவம், 4) சுகந்தா, 5) பிருந்தா, 6) வைஷ்ணவி, 7) லட்சுமி, 8) கவுரி, 9) மாதவி, 10) ஹரிப்பிரயா, 11) அம்ருதா, 12) சுரபி..துளசி பாயாசம்.துளசி கொண்டும் பாயாசம் செய்ய முடியுமா என நினைக்காதீர்கள். சித்த மருத்துவ கடைகள் அல்லது துளசி இருக்கும் வீடுகளில் துளசி விதை இருக்கும். இதில் ஒரு பங்கு எடுத்துக்கொண்டு அதில் மூன்று மடங்கு பனங்கற்கண்டு சேர்த்து ஒரு மண் சட்டியில் போட்டு கால்பங்கு தண்ணீர் விட்டு ஒருநாள் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் பார்த்தால் பாயாசம் போல் இருக்கும். இதைச் சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு சரியாகும். மூலவியாதி குணமாகும். இதை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்..கருந்துளசி மகிமை.கருந்துளசி விசேஷ குணமுடையது. இதன் சாறை இரும்புக் கரண்டியில் சுட வைத்து, தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் கபக்கட்டு, காய்ச்சல் குணமாகும்..————– —————– ————-. சொய்ங்… சொய்ங்!.தோசை… தோசை.தோசை மாவில் தேங்காய்ப் பாலைச் சேர்த்து தோசை செய்தால், சுவையாக இருக்கும்.தோசை நன்றாக மெல்லியதாக வரவேண்டும் என்றால் சிறிதளவு ஜவ்வரிசியை சேர்த்து அரைத்தால் பளபளவென்று, சுவையான, மெல்லியதான தோசை ரெடியாகிவிடும்.ரவா தோசை செய்யும்போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்துச் செய்தால், தோசை நன்கு சிவந்து மொறு, மொறுவென இருக்கும்.கோதுமை மாவைக் கரைத்து தோசை வார்க்கும்முன் சிறிதளவு எண்ணெயில் உளுத்தம்பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்து, கோதுமை மாவில் கலக்கி, தோசை செய்தால் அருமையாக இருக்கும்.வெங்காயத் தோசைக்கு வெங்காயத்தை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்து, தோசை மாவுடன் கலந்து, தோசை வார்த்தால் தோசை சீராக வரும்.தோசைக்கல்லில் மாவு ஊற்றியதும் மேல் பகுதியில் உதிரியாக சிறிது தேங்காயத் துருவலைத் தூவினால் தோசை ருசியாகவும் பார்க்க சூப்பராக இருக்கும்.