பாகம் – 12.–சுசீலா மாணிக்கம்.ஓவியம்: பத்மவாசன்.திருக்குறளின் பனிரெண்டாம் அதிகாரம் "நடுவு நிலைமை". நடுவு நிலைமை என்பது ஓர் உயர்ந்த பண்பு. நீதியின் உயிர் சார்ந்த மாண்பு. நண்பர், பகைவர், அயலார் என எவரிடமும் விருப்பு வெறுப்பு பார்க்கப்படாமல் அறநெறி தவறாமல் கொடுக்கப்படும் தீர்ப்பு..தக்கார் தகவிலார் என்பது அவரவர்எச்சத்தாற் காணப் படும் .நடுநிலைமை உடையவர் நடுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்கு பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்..(நடுவுநிலைமையும் நேர்மையும் அக்காலத்தில் உயிரினும் மேலாக போற்றப்பட்டன. இவை தவறியதால் உயிர் தியாகம் செய்த மன்னர்களும் மக்களும் இம்மண்ணில் வாழ்ந்து சென்றிருக்கிறார்கள். பல உயிரோட்டமுள்ள பாத்திரங்களை தன்னுள் பதுக்கி வைத்துக் கொண்டிருக்கும் புதின பூமியாம் பொன்னியின் செல்வனிலும் கூட பல வரிகள் உண்டு. தன் தந்தை சுந்தர சோழருடன் உரையாடிக் கொண்டிருக்கும் இளைய பிராட்டியார் சோழராஜ்யத்தின் பெருமைகளை நடுநிலை கண்ட பெரியோர்களைப் பற்றி மிக அழகாக கூறுவார் )."புறாவுக்காகச் சதையை அளித்த சிபியும், கன்றுக்குட்டிக்காக மகனை அளித்த மனுநீதிச் சோழரும் நம் குலத்து முன்னோர்கள். கரிகால் வளவரும், பெருநற்கிள்ளியும் இந்த ராஜ்யத்தை ஆண்டவர்கள். திருமேனியில் தொண்ணூறும் ஆறும் புண் சுமந்த வீர விஜயாலய சோழர் இந்தச் சிம்மாசனத்தில் வீற்றிருந்தார். காவேரி நதி தீரத்தில் நூற்றெட்டு ஆலயங்கள் எடுப்பித்த ஆதித்த சோழரும். சிற்றம்பலத்துக்குப் பொன் வேய்ந்து, பொன்னம்பலமாக்கிய பராந்தகரும் இந்த ராஜ்யத்தை விஸ்தரித்தார்கள். அன்பே சிவம் எனக் கண்டு, அன்பும் சிவமும் தாமேயாக வீற்றிருந்த கண்டராதித்தர் அரசு புரிந்த தர்ம மகாராஜ்யம் இது…".(இப்படி விலங்குகளுக்கும் நீதி வழுவா தீர்ப்புக்கள் எழுதப்பட்ட மண் நம் தமிழ் மண். முடியாட்சியோ-குடியாட்சியோ; வில் அம்போ- துப்பாக்கியோ – ஏவுகணையோ காலங்களும் நடைமுறைகளும் மாறலாம். ஆனால் நடுவுநிலைமை எனும் அறம் மட்டும் மாறாதது.).தகுதி எனவொன்று நன்றே பகுதியால்பாற்பட்டு ஒழுகப் பெறின் .அந்தந்த பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப் பெற்றால் நடுவுநிலைமை என்று கூறப்படும் நன்மையாகும்..(இலங்கை போருக்குச் சென்ற அருள்மொழி வர்மர் இலங்கையில் சோழவீரர்களுக்கான உணவுப் பொருட்களை நம் நாட்டில் இருந்து அனுப்பச் செய்கிறார். மேலும் போர் தொடுக்கப்பட்ட நாட்டிலே பொதுமக்களுக்கு இடையூறின்றியும் அவர்களின் மத நம்பிக்கைகளை மதித்தும் நடுவு நிலைமையுடன் நடந்துகொள்ளும் மாண்பைக் காண்கிறோம் .)."ஏற்கெனவே சோழ நாட்டு வீரர்களுக்கெல்லாம் இளங்கோவின் பேரில் மிக்க அபிமானம் இருந்தது. சமீபத்தில் அந்த அபிமானம் பன்மடங்கு பெருகி யிருந்தது. தாய் நாட்டிலிருந்து தங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள் களைத் தருவிப்பதற்கு இளவரசர் பெரும் பிரயத்தனம் செய்ததை அவர்கள் அறிந்திருந்தார்கள். அத்துடன் சாதாரணப் போர் வீரர்களுடனே இளவரசர் சம நிலையில் கலந்து பழகி க்ஷேமம் விசாரித்து, அவர்களுக்கு உற்சாகத்தை அளித்து வந்தார். இந்தக் குணாதிசயம் இளவரசரை அவ்வீரர்கள் தங்கள் கண்ணுக்குக் கண்ணாகக் கருதுமாறு செய்திருந்தது.".(இலங்கையில் மரங்களால் மறைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய செய்குன்றத்தில் அடிவாரத்தில் அருள்மொழி வர்மர், வந்தியத்தேவன் மற்றும் ஆழ்வார்கடியான்).குதிரைகள் மீதிருந்து மூவரும் இறங்கி ஒரு கற்பாறை மீது உட்கார்ந்தார்கள்.."இவ்வளவு கூட்டமாக ஜனங்கள் போகிறார்களே? இன்றைக்கு இந்த நகரத்திலும் ஏதாவது உற்சவமோ?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.. "இந்த நாட்டில் நடக்கும் திருவிழாக்களுக்குள்ளே பெரிய திருவிழா இன்றைக்குத்தான்!" என்றார் இளவரசர்.. "ஈழ நாட்டில் ஏதோ யுத்தம் நடக்கிறது என்று கேள்விப்பட்டேன். இங்கே வந்து பார்த்தால் ஒரே உற்சவமாயிருக்கிறதே" என்றான் வந்தியத்தேவன்.. 'பழையாறையில் ஸ்ரீ ஜயந்தி உற்சவம் நடந்தது என்று நீர் சொல்லவில்லையா?". "ஆமாம், ஆனால் பழையாறை சோழ நாட்டில் இருக்கிறது….". "அநுராதபுரம் ஈழ நாட்டில் இருக்கிறது. அதனால் என்ன? சோழ நாட்டிலும் சுந்தர சோழ சக்கரவர்த்தியின் ஆட்சிதான்; ஈழநாட்டிலும் அவருடைய செங்கோல் ஆட்சிதான்…!"."ஆனால் இந்த நாட்டில் இன்னும் பகைவர்கள் இருக்கிறார்களாமே…?". "பகைவர்கள் எங்கேயோ இருக்கிறார்கள். அதற்கு இங்குள்ள ஜனங்கள் என்ன செய்வார்கள்? போர்க்களத்தில் போர் நடக்க வேண்டியதுதான்; ஊர்ப்புறத்தில் உற்சவமும் நடக்க வேண்டியதுதான்!…..திருமலை! நீ என்ன சொல்கிறாய்?" என்றார் இளவரசர்..(மன்னன் மட்டும்தான் நடுவுநிலை மாறாமல் இருக்கவேண்டும் என்பதில்லை. மன்னன் சார்ந்த மக்களும் மற்றோரும்தான். இதற்கு பொன்னியின் செல்வனில் பல உதாரணங்களைச் சொல்லலாம் இருப்பினும் ஒன்றே ஒன்று. பல்வேறு சிக்கல்களிலும் குழப்பங்களிலும் ஆபத்துக்களிலும் இருந்த பொன்னியின் செல்வரும் புத்த பிக்ஷுவும்….அன்றிரவு முழுவதும் நாகைப்பட்டினமும், அதன் சுற்றுப்புறங்களும் ஒரே அல்லோலகல்லோலமாக இருந்தன. எங்கு நோக்கினும் வெள்ளம்… பொன்னியின் செல்வன் வார்த்தைகள் பின்வருமாறு…)."மறக்கவில்லை. குருதேவரே! மறந்தாலும் என் உடம்பில்.ஓடும் இரத்தம் என்னை மறக்கவிடுவதில்லை. ஒரு பக்கத்தில் சிபிச் சக்கரவர்த்தியும், மனு நீதிச் சோழரும் என்னுடைய இரத்தத்திலேயும், சதையிலேயும், எலும்பிலேயும் கலந்திருந்து, 'பிறருக்கு உபகாரம் செய்; மற்றவர்களுக்காக உன்னுடைய நலன்களைத் தியாகம் செய்!' என்று வற்புறுத்திக் கொண்டே யிருக்கிறார்கள். மற்றொரு பக்கத்தில் கரிகால் வளவரும், விஜயாலய சோழரும், பராந்தகச் சக்கரவர்த்தியும் என்னுடைய இரத்தத்திலே சேர்ந்திருந்து 'கையில் கத்தியை எடு ! நால்வகைச் சைனியத்தைத் திரட்டு ! நாலு திசையிலும் படை எடுத்துப் போ! கடல் கடந்து போ ! சோழ சாம்ராஜ்யத்தை விஸ்தரித்து உலகம் காணாத மகோன்னதம் அடையச் செய்!' என்று இடித்துக் கூறுகிறார்கள். இன்னொரு புறத்தில் சிவனடியார் கோச்செங்கணாரும், தொண்டை மண்டலம் பரவிய ஆதித்த சோழரும், மகானாகிய கண்டராதித்தரும், என் உள்ளத்தில் குடி கொண்டு 'ஆலயத் திருப்பணி செய் ! பெரிய பெரிய சிவாலயங்களையும் எழுப்பு ! மேரு மலைபோல் வானளாவி நிற்கும் கோபுரங்களையுடைய கோயில்களை நிர்மாணி!" என்று உபதேசித்துக்கொண்டேயிருக்கிறார்கள். என் முன்னோர்கள் இவ்வளவு பேருக்கும் நடுவில் கிடந்து நான் திண்டாடுகிறேன். குருதேவரே! அவர்களுடைய தொந்தரவுகளைப் பொறுக்க முடியாமல் உண்மையாகவே சில சமயம் எனக்குப் புத்த சமயத்தை மேற்கொண்டு புத்த பிக்ஷுவாகி விடலாம் என்று கூடத் தோன்றுகிறது. கருணை கூர்ந்து எனக்குப் பௌத்த சமயத்தைப் பற்றிச் சொல்லுங்கள். புத்த பகவானைப் பற்றிச் சொல்லுங்கள்!" என்றார் பொன்னியின் செல்வர்..(மேலும் அவர் தொடர்கிறார்)."சுவாமி! பகவானுடைய போதனைகளைக் கேட்டிருக்கிறேன். அந்த போதனைகளைக் காட்டிலும் அவருடைய தியாகச் செயலிலேதான் அதிக போதனை நிறைந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. மன்னிக்கவேணும். அவருடைய செயலைப் பின்பற்ற விரும்புகிறேன். சற்று முன்னால், என் முந்தையரின் மூன்றுவிதக் குரல்கள் என் உள்ளத்தில் ஓயாமல் ஒலித்து, என்னை வேதனைப் படுத்துவதாகச் சொன்னேன் அல்லவா? அந்தத் தொல்லையிலிருந்து விடுதலை அடைய விரும்புகிறேன். என்னைத் தங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள்!" என்றார் இளவரசர்.."இளவரசே! தங்களை யொத்த சீடனைப் பெறுவதற்கு எவ்வளவோ பாக்கியம் செய்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு வேண்டிய தகுதியும் எனக்கில்லை; தைரியமும் இல்லை. இலங்கையில் புத்த மகா சங்கம் கூடும்போது தாங்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்."என்றார் பிக்ஷு..(நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தின் வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கூச்சலும் குழப்பமாக ஆவேசம் கொண்டவர்களாக நின்றிருந்தனர். பலர் கைகளில் வாள்,வேல், தடி முதலிய ஆயுதங்களை வைத்திருந்தார்கள். இன்னும் சிலர் கைகளில் கடப்பாறைகள் இருந்தன. எங்கே தங்கள் உயிருக்குயிரான மன்னனை தங்கள் பொன்னியின் செல்வனை புத்த பிக்ஷுவாக ஆக்கி விடுவார்களோ என்ற மன போராட்டத்தால் அளவில்லாத சீற்றத்துடன் கூட்டமாய் நின்றிருந்தார்கள். அந்த கூட்டத்தினரிடையே ஆச்சார்ய பிக்ஷுவின் உணர்ச்சி மிகுந்த வார்த்தைகளைக் கேளுங்கள்…)."சக்கரவர்த்தியின் திருக்குமாரரும் பொன்னியின் செல்வருமான இளவரசர் அருள்மொழிவர்மரைப் புத்த சமயத்தை மேற்கொள்ளும்படி நான் கோரமாட்டேன். அவரே முன்வந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். உலகை ஆளப்பிறந்தவரும், உங்கள் அன்பைக் கவர்ந்தவருமான கோமகனைத் தலையை மொட்டையடித்துக் காவித்துணி அளிக்கும் கைங்கரியத்தை நான் ஒரு நாளும் செய்ய மாட்டேன். அதற்கு உடந்தையாகவும் இருக்க மாட்டேன். இவ்வாறு புத்த பகவானுடைய பத்மசரணங்களின் மீது ஆணையாகச் சபதம் செய்கிறேன்! புத்தம் கச்சாமி! தர்மம் கச்சாமி! சங்கம் கச்சாமி!".இடி முழக்கம் போன்ற கம்பீரத்துடன் உணர்ச்சி ததும்பக் கூறிய இந்த மொழிகளைக் கேட்டதும் அங்கே கூடியிருந்த அத்தனை மக்களின் உள்ளங்களும் ஒரு பெரிய மாறுதலை அடைந்தன. பலர் கண்களில் கண்ணீர் ததும்பியது. சிறிது நேரம் நிசப்தம் நிலவியது..சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி .முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்..இதைவிட அழகாய் ஆழமாய் நாம் என்ன சொல்லிவிட முடியும்?!
பாகம் – 12.–சுசீலா மாணிக்கம்.ஓவியம்: பத்மவாசன்.திருக்குறளின் பனிரெண்டாம் அதிகாரம் "நடுவு நிலைமை". நடுவு நிலைமை என்பது ஓர் உயர்ந்த பண்பு. நீதியின் உயிர் சார்ந்த மாண்பு. நண்பர், பகைவர், அயலார் என எவரிடமும் விருப்பு வெறுப்பு பார்க்கப்படாமல் அறநெறி தவறாமல் கொடுக்கப்படும் தீர்ப்பு..தக்கார் தகவிலார் என்பது அவரவர்எச்சத்தாற் காணப் படும் .நடுநிலைமை உடையவர் நடுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்கு பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்..(நடுவுநிலைமையும் நேர்மையும் அக்காலத்தில் உயிரினும் மேலாக போற்றப்பட்டன. இவை தவறியதால் உயிர் தியாகம் செய்த மன்னர்களும் மக்களும் இம்மண்ணில் வாழ்ந்து சென்றிருக்கிறார்கள். பல உயிரோட்டமுள்ள பாத்திரங்களை தன்னுள் பதுக்கி வைத்துக் கொண்டிருக்கும் புதின பூமியாம் பொன்னியின் செல்வனிலும் கூட பல வரிகள் உண்டு. தன் தந்தை சுந்தர சோழருடன் உரையாடிக் கொண்டிருக்கும் இளைய பிராட்டியார் சோழராஜ்யத்தின் பெருமைகளை நடுநிலை கண்ட பெரியோர்களைப் பற்றி மிக அழகாக கூறுவார் )."புறாவுக்காகச் சதையை அளித்த சிபியும், கன்றுக்குட்டிக்காக மகனை அளித்த மனுநீதிச் சோழரும் நம் குலத்து முன்னோர்கள். கரிகால் வளவரும், பெருநற்கிள்ளியும் இந்த ராஜ்யத்தை ஆண்டவர்கள். திருமேனியில் தொண்ணூறும் ஆறும் புண் சுமந்த வீர விஜயாலய சோழர் இந்தச் சிம்மாசனத்தில் வீற்றிருந்தார். காவேரி நதி தீரத்தில் நூற்றெட்டு ஆலயங்கள் எடுப்பித்த ஆதித்த சோழரும். சிற்றம்பலத்துக்குப் பொன் வேய்ந்து, பொன்னம்பலமாக்கிய பராந்தகரும் இந்த ராஜ்யத்தை விஸ்தரித்தார்கள். அன்பே சிவம் எனக் கண்டு, அன்பும் சிவமும் தாமேயாக வீற்றிருந்த கண்டராதித்தர் அரசு புரிந்த தர்ம மகாராஜ்யம் இது…".(இப்படி விலங்குகளுக்கும் நீதி வழுவா தீர்ப்புக்கள் எழுதப்பட்ட மண் நம் தமிழ் மண். முடியாட்சியோ-குடியாட்சியோ; வில் அம்போ- துப்பாக்கியோ – ஏவுகணையோ காலங்களும் நடைமுறைகளும் மாறலாம். ஆனால் நடுவுநிலைமை எனும் அறம் மட்டும் மாறாதது.).தகுதி எனவொன்று நன்றே பகுதியால்பாற்பட்டு ஒழுகப் பெறின் .அந்தந்த பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப் பெற்றால் நடுவுநிலைமை என்று கூறப்படும் நன்மையாகும்..(இலங்கை போருக்குச் சென்ற அருள்மொழி வர்மர் இலங்கையில் சோழவீரர்களுக்கான உணவுப் பொருட்களை நம் நாட்டில் இருந்து அனுப்பச் செய்கிறார். மேலும் போர் தொடுக்கப்பட்ட நாட்டிலே பொதுமக்களுக்கு இடையூறின்றியும் அவர்களின் மத நம்பிக்கைகளை மதித்தும் நடுவு நிலைமையுடன் நடந்துகொள்ளும் மாண்பைக் காண்கிறோம் .)."ஏற்கெனவே சோழ நாட்டு வீரர்களுக்கெல்லாம் இளங்கோவின் பேரில் மிக்க அபிமானம் இருந்தது. சமீபத்தில் அந்த அபிமானம் பன்மடங்கு பெருகி யிருந்தது. தாய் நாட்டிலிருந்து தங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள் களைத் தருவிப்பதற்கு இளவரசர் பெரும் பிரயத்தனம் செய்ததை அவர்கள் அறிந்திருந்தார்கள். அத்துடன் சாதாரணப் போர் வீரர்களுடனே இளவரசர் சம நிலையில் கலந்து பழகி க்ஷேமம் விசாரித்து, அவர்களுக்கு உற்சாகத்தை அளித்து வந்தார். இந்தக் குணாதிசயம் இளவரசரை அவ்வீரர்கள் தங்கள் கண்ணுக்குக் கண்ணாகக் கருதுமாறு செய்திருந்தது.".(இலங்கையில் மரங்களால் மறைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய செய்குன்றத்தில் அடிவாரத்தில் அருள்மொழி வர்மர், வந்தியத்தேவன் மற்றும் ஆழ்வார்கடியான்).குதிரைகள் மீதிருந்து மூவரும் இறங்கி ஒரு கற்பாறை மீது உட்கார்ந்தார்கள்.."இவ்வளவு கூட்டமாக ஜனங்கள் போகிறார்களே? இன்றைக்கு இந்த நகரத்திலும் ஏதாவது உற்சவமோ?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.. "இந்த நாட்டில் நடக்கும் திருவிழாக்களுக்குள்ளே பெரிய திருவிழா இன்றைக்குத்தான்!" என்றார் இளவரசர்.. "ஈழ நாட்டில் ஏதோ யுத்தம் நடக்கிறது என்று கேள்விப்பட்டேன். இங்கே வந்து பார்த்தால் ஒரே உற்சவமாயிருக்கிறதே" என்றான் வந்தியத்தேவன்.. 'பழையாறையில் ஸ்ரீ ஜயந்தி உற்சவம் நடந்தது என்று நீர் சொல்லவில்லையா?". "ஆமாம், ஆனால் பழையாறை சோழ நாட்டில் இருக்கிறது….". "அநுராதபுரம் ஈழ நாட்டில் இருக்கிறது. அதனால் என்ன? சோழ நாட்டிலும் சுந்தர சோழ சக்கரவர்த்தியின் ஆட்சிதான்; ஈழநாட்டிலும் அவருடைய செங்கோல் ஆட்சிதான்…!"."ஆனால் இந்த நாட்டில் இன்னும் பகைவர்கள் இருக்கிறார்களாமே…?". "பகைவர்கள் எங்கேயோ இருக்கிறார்கள். அதற்கு இங்குள்ள ஜனங்கள் என்ன செய்வார்கள்? போர்க்களத்தில் போர் நடக்க வேண்டியதுதான்; ஊர்ப்புறத்தில் உற்சவமும் நடக்க வேண்டியதுதான்!…..திருமலை! நீ என்ன சொல்கிறாய்?" என்றார் இளவரசர்..(மன்னன் மட்டும்தான் நடுவுநிலை மாறாமல் இருக்கவேண்டும் என்பதில்லை. மன்னன் சார்ந்த மக்களும் மற்றோரும்தான். இதற்கு பொன்னியின் செல்வனில் பல உதாரணங்களைச் சொல்லலாம் இருப்பினும் ஒன்றே ஒன்று. பல்வேறு சிக்கல்களிலும் குழப்பங்களிலும் ஆபத்துக்களிலும் இருந்த பொன்னியின் செல்வரும் புத்த பிக்ஷுவும்….அன்றிரவு முழுவதும் நாகைப்பட்டினமும், அதன் சுற்றுப்புறங்களும் ஒரே அல்லோலகல்லோலமாக இருந்தன. எங்கு நோக்கினும் வெள்ளம்… பொன்னியின் செல்வன் வார்த்தைகள் பின்வருமாறு…)."மறக்கவில்லை. குருதேவரே! மறந்தாலும் என் உடம்பில்.ஓடும் இரத்தம் என்னை மறக்கவிடுவதில்லை. ஒரு பக்கத்தில் சிபிச் சக்கரவர்த்தியும், மனு நீதிச் சோழரும் என்னுடைய இரத்தத்திலேயும், சதையிலேயும், எலும்பிலேயும் கலந்திருந்து, 'பிறருக்கு உபகாரம் செய்; மற்றவர்களுக்காக உன்னுடைய நலன்களைத் தியாகம் செய்!' என்று வற்புறுத்திக் கொண்டே யிருக்கிறார்கள். மற்றொரு பக்கத்தில் கரிகால் வளவரும், விஜயாலய சோழரும், பராந்தகச் சக்கரவர்த்தியும் என்னுடைய இரத்தத்திலே சேர்ந்திருந்து 'கையில் கத்தியை எடு ! நால்வகைச் சைனியத்தைத் திரட்டு ! நாலு திசையிலும் படை எடுத்துப் போ! கடல் கடந்து போ ! சோழ சாம்ராஜ்யத்தை விஸ்தரித்து உலகம் காணாத மகோன்னதம் அடையச் செய்!' என்று இடித்துக் கூறுகிறார்கள். இன்னொரு புறத்தில் சிவனடியார் கோச்செங்கணாரும், தொண்டை மண்டலம் பரவிய ஆதித்த சோழரும், மகானாகிய கண்டராதித்தரும், என் உள்ளத்தில் குடி கொண்டு 'ஆலயத் திருப்பணி செய் ! பெரிய பெரிய சிவாலயங்களையும் எழுப்பு ! மேரு மலைபோல் வானளாவி நிற்கும் கோபுரங்களையுடைய கோயில்களை நிர்மாணி!" என்று உபதேசித்துக்கொண்டேயிருக்கிறார்கள். என் முன்னோர்கள் இவ்வளவு பேருக்கும் நடுவில் கிடந்து நான் திண்டாடுகிறேன். குருதேவரே! அவர்களுடைய தொந்தரவுகளைப் பொறுக்க முடியாமல் உண்மையாகவே சில சமயம் எனக்குப் புத்த சமயத்தை மேற்கொண்டு புத்த பிக்ஷுவாகி விடலாம் என்று கூடத் தோன்றுகிறது. கருணை கூர்ந்து எனக்குப் பௌத்த சமயத்தைப் பற்றிச் சொல்லுங்கள். புத்த பகவானைப் பற்றிச் சொல்லுங்கள்!" என்றார் பொன்னியின் செல்வர்..(மேலும் அவர் தொடர்கிறார்)."சுவாமி! பகவானுடைய போதனைகளைக் கேட்டிருக்கிறேன். அந்த போதனைகளைக் காட்டிலும் அவருடைய தியாகச் செயலிலேதான் அதிக போதனை நிறைந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. மன்னிக்கவேணும். அவருடைய செயலைப் பின்பற்ற விரும்புகிறேன். சற்று முன்னால், என் முந்தையரின் மூன்றுவிதக் குரல்கள் என் உள்ளத்தில் ஓயாமல் ஒலித்து, என்னை வேதனைப் படுத்துவதாகச் சொன்னேன் அல்லவா? அந்தத் தொல்லையிலிருந்து விடுதலை அடைய விரும்புகிறேன். என்னைத் தங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள்!" என்றார் இளவரசர்.."இளவரசே! தங்களை யொத்த சீடனைப் பெறுவதற்கு எவ்வளவோ பாக்கியம் செய்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு வேண்டிய தகுதியும் எனக்கில்லை; தைரியமும் இல்லை. இலங்கையில் புத்த மகா சங்கம் கூடும்போது தாங்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்."என்றார் பிக்ஷு..(நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தின் வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கூச்சலும் குழப்பமாக ஆவேசம் கொண்டவர்களாக நின்றிருந்தனர். பலர் கைகளில் வாள்,வேல், தடி முதலிய ஆயுதங்களை வைத்திருந்தார்கள். இன்னும் சிலர் கைகளில் கடப்பாறைகள் இருந்தன. எங்கே தங்கள் உயிருக்குயிரான மன்னனை தங்கள் பொன்னியின் செல்வனை புத்த பிக்ஷுவாக ஆக்கி விடுவார்களோ என்ற மன போராட்டத்தால் அளவில்லாத சீற்றத்துடன் கூட்டமாய் நின்றிருந்தார்கள். அந்த கூட்டத்தினரிடையே ஆச்சார்ய பிக்ஷுவின் உணர்ச்சி மிகுந்த வார்த்தைகளைக் கேளுங்கள்…)."சக்கரவர்த்தியின் திருக்குமாரரும் பொன்னியின் செல்வருமான இளவரசர் அருள்மொழிவர்மரைப் புத்த சமயத்தை மேற்கொள்ளும்படி நான் கோரமாட்டேன். அவரே முன்வந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். உலகை ஆளப்பிறந்தவரும், உங்கள் அன்பைக் கவர்ந்தவருமான கோமகனைத் தலையை மொட்டையடித்துக் காவித்துணி அளிக்கும் கைங்கரியத்தை நான் ஒரு நாளும் செய்ய மாட்டேன். அதற்கு உடந்தையாகவும் இருக்க மாட்டேன். இவ்வாறு புத்த பகவானுடைய பத்மசரணங்களின் மீது ஆணையாகச் சபதம் செய்கிறேன்! புத்தம் கச்சாமி! தர்மம் கச்சாமி! சங்கம் கச்சாமி!".இடி முழக்கம் போன்ற கம்பீரத்துடன் உணர்ச்சி ததும்பக் கூறிய இந்த மொழிகளைக் கேட்டதும் அங்கே கூடியிருந்த அத்தனை மக்களின் உள்ளங்களும் ஒரு பெரிய மாறுதலை அடைந்தன. பலர் கண்களில் கண்ணீர் ததும்பியது. சிறிது நேரம் நிசப்தம் நிலவியது..சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி .முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்..இதைவிட அழகாய் ஆழமாய் நாம் என்ன சொல்லிவிட முடியும்?!