
செம்பு என்ற உலோகம் பல நற்பண்புகளைக் கொண்டு மனித உடல் உறுப்புகளை திறம்பட செயல்பட உதவுகிறது.செம்பு பாத்திரத்தில் வைக்கும் நீரானது எலும்பை உறுதி செய்யும் தன்மை கொண்டது. ரத்தசோகை வராமல் தடுக்கிறது.செம்பு பாத்திரத்தில் வைக்கும் நீரைப் பருகி வர உடல் ஆரோக்கியம்,வலிமை மேம்படும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ஸ் உள்ளது. அதனால் புற்றுநோய் அணுக்கள்
வர விடாமல் பாதுகாக்கிறது.மேலும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், திட்டுக்களை சரி செய்கிறது. ரத்த ஓட்டத்தை சீராக்கி உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதுகாக்கிறது. உடலுக்கு குளிர்ச்சி தந்து தேகம் பலம் பெற உதவுகிறது. செம்பு பாத்திரத்தை உபயோகித்து ஆரோக்கியத்தை பாதுகாப்போம்.
-மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்
உலகின் தலை சிறந்த கம்ப்யூட்டர் – மனித மூளை
மிகப் பெரிய சொத்து – நம்பிக்கை
மிகவும் கூர்மையான ஆயுதம் – நாக்கு
உபயோகமில்லாத ஒர் உணர்ச்சி – சுய பச்சாதாபம்
மிகவும் அழகான ஆபரணம் – புன்னகை
தலை சிறந்த பொக்கிஷம் – நேர்மை
சீக்கிரம் பரவும் உணர்ச்சி – உற்சாகம்
மனதை அரித்துவிடும் உணர்ச்சி – கவலை
மன நிறைவு தரும் செயல் – ஈதல்
மிகப் பெரிய இழப்பு – சுயமரியாதை
மிகப் பெரிய ஊட்டச்சத்து – பாராட்டு
மிகச் சிறந்த தூக்க மருந்து – மன நிம்மதி
ஜெயிக்க வேண்டிய உணர்ச்சி – பயம்
கொடுக்க கொடுக்க குறையாதது – அன்பு
– பானு சந்திரன், சென்னை
வயதானவங்க தனியா சமைக்கிறீங்களா? அப்ப உங்க பாதுகாப்புக்காக இதை கடைப்பிடியுங்க…
மொத்தத்தில் வயதானவர்கள் எல்லாவிதத்திலும் சற்று கவனமாக சமையலறையில் இருப்பது அவர்களுக்கு நலம்.
-தி.வள்ளி, திருநெல்வேலி