
படங்கள்: பிள்ளை
"நேத்து என் மனைவி மயங்கி விழுந்ததும் என்னோட பல நாள் கனவை நிறைவேத்திட்டேன் !"
"அப்படி என்ன கனவு ?"
"பளார் பளார்னு அவ கன்னத்துல அடிக்கணுங்கிறதுதான்…"
– இரா. அருண்குமார், வாணரப்பேட்டை.
*************************************
"உங்க மனைவிக்கு உப்புமா பண்ணத் தெரியாதா?"
"எதற்காக கேட்கிறீங்க?"
"உங்க வீட்டுக்கு வந்த விருந்தாளி இன்னும் ஊருக்குப் போகாமல் இருக்காங்க!"
-எம்.இராஜேந்திரன், லால்குடி
*************************************
"தலைவரோட கட்சி ஆபீஸிலே எங்க பார்த்தாலும் பெருச்சாளி கூண்டு வெச்சிருக்காங்க ஏன்?"
"ஊழல் பெருச்சாளிகளை பிடிக்கத்தானாம்!"
-ஆர். மகாதேவன், திருநெல்வேலி
*************************************
"டாக்டர் ஆபரேஷனுக்கு முன்னால பேஷண்ட்டோட வயிற்றிலே என்ன எழுதறார்?"
"பிள்ளையார் சுழி போடறார். இந்த ஆபரேஷனாவது சக்சஸ் ஆகணும்னு"
-ஆர். மகாதேவன், திருநெல்வேலி
*************************************
"தளபதியாரே வாளை உடைச்சு கொண்டு வந்திருக்கிறீரே?"
" மன்னா நீங்கதானே உடைவாளை கொண்டு வரச் சொன்னீர்கள்."
-ஆர். மகாதேவன், திருநெல்வேலி
*************************************
"ஆராய்ச்சி மணியை வெச்சுக்கிட்டு இளவரசர் என்ன செய்யறார் அமைச்சரே?"
"ஆராய்ச்சி பண்றார். சப்தம் எப்படி வருதுன்னு மன்னா!"
-ஆர். மகாதேவன், திருநெல்வேலி
*************************************
"மாலா உன் வீட்ல ஏன்டி பீரோ முன்னால மாமியார் படத்த ஒட்டி வைச்சிருக்கே?"
"ஜோசியர் கண் திருஷ்டி படம் மாட்டச் சொன்னார்டி!
-ஆர். மகாதேவன், திருநெல்வேலி