காந்தியடிகளின் பொன்மொழிகள்!

காந்தியடிகளின் பொன்மொழிகள்!
Published on
-சுந்தரி காந்தி, பூந்தமல்லி

ஜனவரி 30, 1948 ஆம் ஆண்டு, நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்கள் இப்பூவுலகை விட்டு இன்னுயிர் நீத்தார். அவரை நினைவு கொள்ளும் வகையில், அவரது பொன்மொழிகள் இதோ நமக்காக…

  • மைதி மற்றும் சமாதானத்துக்காக சிந்திப்பதிலும் பேசுவதிலும், எதையேனும் செய்வதிலும் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.
    பாவத்தைதான் வெறுக்க வேண்டும். பாவம் செய்தவரிடம் அன்பையே செலுத்த வேண்டும்.
  • நான் வன்முறையை எதிர்க்கிறேன். வன்முறையால் விளைந்ததாகத் தெரியும் நன்மை தரற்காலிகமானது.
  • வலிமை என்பது உடல் உறுதியில் இல்லை. எந்தக் கட்டத்திலும் நிலைத்து நிற்கும் மன உறுதியில்தான் உள்ளது.
  • கோழை யாரையும் மன்னிப்பதில்லை. மன்னித்தல் என்பதே வீரத்தின் அடையாளம்.
  • உலகத்தை நீ எப்படியெல்லாம் மாற்ற நினைக்கிறாயோ, அந்த  மாற்றங்கள் எல்லாம் முதலில் உனக்குள் நிகழ வேண்டும்.
  • வன்முறையால் கிட்டும் வெற்றி சில நொடிகளே நிலைக்க கூடியது. எனவே அது தோல்விக்கு சமமானது.
  • கண்ணுக்கு கண் என்று பழி தீர்த்துக் கொண்டு போனால், உலகமே குருடாகி விடும்.
  • கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ, அவனே சரியான குருடன்.
  • எப்போதும் உண்மையை மறைக்காது சொல்லக்கூடிய மனத்திடம் வேண்டும்.
  • மகிழ்ச்சி என்பது பெறுவதில் இல்லை, பிறருக்குப் கொடுப்பதில்தான் இருக்கிறது.
  • எப்படி வேண்டுமானாலும் பணத்தை சம்பாதித்து விடலாம் ஆனால் அதை ஒரு அறிவாளியால்தான் காப்பாற்ற முடியும் .
  • செலவழிக்கும் பணத்துக்கு கணக்கு எழுதிவை, செலவழித்தது அவசியம்தானா என்று சிந்தித்துப்பார். சிக்கனம் தானாகவே வந்துவிடம் .
    ஒருவன் தனக்குத் தேவையற்றதை விலைக்கு வாங்கினால், அது அவன் பணத்தை அவனே திருடுவதற்கு சமமாகும் .
  • தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை .
Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com