– எம்.அசோக்ராஜா.சிறிய கிராமம் ஒன்றின் மத்தியில் அழகான ஒரு கிருஷ்ணர் கோயில் இருந்தது. அந்தக் கோயிலில் பணிபுரியும் அர்ச்சகரும், அவரிடம் வேலை பார்க்கும் சிறுவன் துளசிராமனும் அதிகாலை நான்கு மணிக்கே கோயிலுக்கு வந்து விடுவார்கள். கோயில் தோட்டத்து பூக்களையெல்லாம் பறித்து மாலையாகத் தொடுத்துத் தர வேண்டிய பணி துளசிராமனுக்கு. ஸ்ரீ கிருஷ்ண பகவானே கதி எனக் கிடக்கும் துளசிராமனுக்கு பூப்பறிக்கும் நேரத்திலும் ஸ்ரீ கிருஷ்ணனின் நினைப்புதான்! 'கிருஷ்ணார்ப்பணம்' என்று மனதுக்குள் சொல்லியபடியே பூக்களைப் பறித்துத் தொடுப்பான். பத்துப் பதினைந்து மாலைகள் கட்டி முடித்தவுடன், ஏதோ அவனே ஸ்ரீ கிருஷ்ணருக்கு சூட்டிவிடுவது போன்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு, அர்ச்சகரிடம் கொடுத்து விடுவான்..அர்ச்சகர் ஸ்ரீ கிருஷ்ணரின் சிலைக்கு மாலை சூட்டப்போனால், ஏற்கெனவே ஒரு புது மாலையுடன் கிருஷ்ணர் சிலை பொலிவு பெற்று இருக்கும். அதைப் பார்க்கும் அர்ச்சகருக்கு, 'இது துளசிராமனின் குறும்பாக இருக்குமோ' என்று சந்தேகம். ஒரு நாள் அவனைக் கூப்பிட்டு, "துளசிராமா! இதெல்லாம் அதிகப் பிரசங்கித்தனம்; நீ மாலை கட்டவேண்டுமே தவிர, சூட்டக்கூடாது!" என்று கண்டித்தார்.."ஸ்வாமி! நான் சூட்டவில்லை; கட்டிய மாலைகள் மொத்தம் பதினைந்து. அத்தனையும் உங்களிடம் கொடுத்து விட்டேன்!" என்ற அவனது சொற்கள் அர்ச்சகர் காதில் விழவேயில்லை. ஆனால், "நாளையிலிருந்து நீ பூ கட்ட வேண்டாம்! அண்டாக்களில் தண்ணீர் நிரப்பும் பணியைச் செய்!" என கட்டளை வந்தது..'இதுவும் இறைவன் செயல்' என்று நினைத்த துளசிராமன், நீரிறைக்கும்போதும், அதைத் தொட்டிகளில் ஊற்றும்போதும், 'கிருஷ்ணார்ப்பணம்' என்று மனம் நிறைய சொல்லிக்கொள்வான்!.இப்போதெல்லாம் கிருஷ்ணர் சிலைக்கு அபிஷேகம் செய்ய அர்ச்சகர் வரும் முன்பே, அபிஷேகம் நடந்து முடிந்து, கருவறை ஈரமாக இருக்கிறது. தண்ணீரில் நனைந்து, நீர் சொட்டச் சொட்ட ஸ்ரீ கிருஷ்ணர் சிலை சிரிக்கும்..அர்ச்சகருக்குக் கடும் கோபம், "துளசிராமா! நீ அபிஷேகம் செய்யுமளவுக்கு துணிந்து விட்டாயா? உன்னோடு பெரிய தொல்லையாகிவிட்டதே!" என்று திட்ட ஆரம்பித்தார்..துளசிராமன் கண்களில் கண்ணீர். "ஸ்வாமி! நான் அண்டாக்களை மட்டும்தான் நிரப்பினேன். உண்மையிலேயே கிருஷ்ணனுக்கு எப்படி அபிஷேகம் ஆனது என்று எனக்குத் தெரியாது!" என்றான்..அடுத்த நாள் துளசிராமனை மடைப்பள்ளி பணிக்கு மாற்றிவிட்டார் அர்ச்சகர். பிரஸாதம் தயாரிப்புப் பணிகளில் ஒரு சிற்றாளன் ஆனான். இங்கும் காய் நறுக்கும்போதும் அவன், 'கிருஷ்ணார்ப்பணம்' என்றே தன்னுடைய பணியை கடவுளுக்கே காணிக்கையாக்கினான். அன்று அர்ச்சகர் முன்னெச்சரிக்கையாக கருவறையைப் பூட்டி, சாவியை எடுத்துச் சென்று விட்டார்..மறுநாள் அதிகாலை சன்னிதி கதவைத் திறக்கும்போதே கண்ணன் வாயில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம்! 'மடைப்பள்ளியில் இப்போதுதான் தயாராகி, நெய்விட்டு இறக்கி வைக்கப்பட்டிருக்கிறது! அதற்குள் எப்படி இங்கு சர்க்கரைப் பொங்கல் வந்தது? நானும் கதவைப் பூட்டிவிட்டுதானே சென்றேன்! பூனை, எலி கொண்டு வந்திருக்குமோ? துளசிராமனுக்கு எந்த வேலை தந்தாலும் அந்தப் பொருள் எப்படியோ எனக்கு முன்பே இங்கு வந்துவிடுகிறதே! அவன் என்ன மந்திரவாதியா?' என்று குழம்பினார் அர்ச்சகர்..இன்று அவர் துளசிராமனை கண்டிக்கவில்லை. "துளசிராமா! நாளை முதல் நீ வாசலில் பக்தர்களின் செருப்பைப் பாதுகாக்கும் வேலையைச் செய்! நீ அதற்குத்தான் சரியானவன்!" என்று கூறினார்..'பூ, தண்ணீர், பிரஸாதம் இவை எல்லாம் நல்ல பொருட்கள். அதனால் சன்னிதிக்குள் வந்து விட்டன. இனி, என்ன நடக்கிறதென்று பார்ப்போம்' – இதுதான் அர்ச்சகரின் எண்ணம்..'செருப்பைப் பாதுகாக்கும் வேலையையும் கடவுள் விருப்பம்' என்றே ஏற்றுக்கொண்ட துளசிராமன், அன்றுமுதல் கோயில் வாசலில் நின்று இதுவும், 'கிருஷ்ணார்ப்பணம்' என்று அந்த வேலையையும் செய்துகொண்டு இருந்தான். இன்றும் அர்ச்சகர் கருவறையைப் பூட்டி, சாவியை தன்னுடன் கொண்டு சென்றார்..மறுநாள் காலை சன்னிதி கதவைத் திறந்ததும் அர்ச்சகர் கண்ட காட்சி, அவருக்கு உடல் நடுக்கத்தைக் கொடுத்தது. 'கிருஷ்ணா! இதென்ன உனது பாதங்களுக்கு அருகே ஒரு ஜோடி செருப்பு! பாதுகை பீடத்தில் சாதாரண தோல் செருப்பு எப்படி வந்தது? துளசிராமன் எப்படிப்பட்டவனானாலும், சன்னிதி பூட்டைத் திறந்து இப்படி செருப்பை வைக்க யாருக்குத்தான் மனம் வரும்?' ஆச்சரியம், அச்சம்… அர்ச்சகருக்கு வேர்த்துக் கொட்டியது..அப்போது, எங்கிருந்தோ ஒரு குரல்… "அர்ச்சகரே! பயப்பட வேண்டாம். அந்தத் துளசிராமனுக்கு நீ எந்த வேலை தந்தாலும் அதை அவன், 'கிருஷ்ணார்ப்பணம்' என்று எனக்குக் காணிக்கையாக்கி விடுகிறான்! அப்படி அன்போடு அவன் தரும் காணிக்கையை நானும் மனமுவந்து ஏற்றுக்கொண்டேன். நினைவெல்லாம் எங்கோ இருக்க செய்யும் பூஜையை விட, எதைச் செய்தாலும் எனக்குக் காணிக்கையாக்குபவனின் அன்பை நான் எப்படி மறுப்பது? துளசிராமன் ஒரு யோகி! அவன் அன்பு எனக்கு மிகவும் பிரியமானது!" என்றார் பகவான்..ஸ்ரீ கிருஷ்ண பகவானின் இந்தக் குரல் கேட்டு வாசல் பக்கம் ஓடி வந்து அந்த யோகி துளசிராமனின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார் அர்ச்சகர்!.ஆம்… எந்த வேலை செய்தாலும் நாம் அதை ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்தால் அதை அவர் மனமார ஏற்றுக்கொள்வார்!
– எம்.அசோக்ராஜா.சிறிய கிராமம் ஒன்றின் மத்தியில் அழகான ஒரு கிருஷ்ணர் கோயில் இருந்தது. அந்தக் கோயிலில் பணிபுரியும் அர்ச்சகரும், அவரிடம் வேலை பார்க்கும் சிறுவன் துளசிராமனும் அதிகாலை நான்கு மணிக்கே கோயிலுக்கு வந்து விடுவார்கள். கோயில் தோட்டத்து பூக்களையெல்லாம் பறித்து மாலையாகத் தொடுத்துத் தர வேண்டிய பணி துளசிராமனுக்கு. ஸ்ரீ கிருஷ்ண பகவானே கதி எனக் கிடக்கும் துளசிராமனுக்கு பூப்பறிக்கும் நேரத்திலும் ஸ்ரீ கிருஷ்ணனின் நினைப்புதான்! 'கிருஷ்ணார்ப்பணம்' என்று மனதுக்குள் சொல்லியபடியே பூக்களைப் பறித்துத் தொடுப்பான். பத்துப் பதினைந்து மாலைகள் கட்டி முடித்தவுடன், ஏதோ அவனே ஸ்ரீ கிருஷ்ணருக்கு சூட்டிவிடுவது போன்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு, அர்ச்சகரிடம் கொடுத்து விடுவான்..அர்ச்சகர் ஸ்ரீ கிருஷ்ணரின் சிலைக்கு மாலை சூட்டப்போனால், ஏற்கெனவே ஒரு புது மாலையுடன் கிருஷ்ணர் சிலை பொலிவு பெற்று இருக்கும். அதைப் பார்க்கும் அர்ச்சகருக்கு, 'இது துளசிராமனின் குறும்பாக இருக்குமோ' என்று சந்தேகம். ஒரு நாள் அவனைக் கூப்பிட்டு, "துளசிராமா! இதெல்லாம் அதிகப் பிரசங்கித்தனம்; நீ மாலை கட்டவேண்டுமே தவிர, சூட்டக்கூடாது!" என்று கண்டித்தார்.."ஸ்வாமி! நான் சூட்டவில்லை; கட்டிய மாலைகள் மொத்தம் பதினைந்து. அத்தனையும் உங்களிடம் கொடுத்து விட்டேன்!" என்ற அவனது சொற்கள் அர்ச்சகர் காதில் விழவேயில்லை. ஆனால், "நாளையிலிருந்து நீ பூ கட்ட வேண்டாம்! அண்டாக்களில் தண்ணீர் நிரப்பும் பணியைச் செய்!" என கட்டளை வந்தது..'இதுவும் இறைவன் செயல்' என்று நினைத்த துளசிராமன், நீரிறைக்கும்போதும், அதைத் தொட்டிகளில் ஊற்றும்போதும், 'கிருஷ்ணார்ப்பணம்' என்று மனம் நிறைய சொல்லிக்கொள்வான்!.இப்போதெல்லாம் கிருஷ்ணர் சிலைக்கு அபிஷேகம் செய்ய அர்ச்சகர் வரும் முன்பே, அபிஷேகம் நடந்து முடிந்து, கருவறை ஈரமாக இருக்கிறது. தண்ணீரில் நனைந்து, நீர் சொட்டச் சொட்ட ஸ்ரீ கிருஷ்ணர் சிலை சிரிக்கும்..அர்ச்சகருக்குக் கடும் கோபம், "துளசிராமா! நீ அபிஷேகம் செய்யுமளவுக்கு துணிந்து விட்டாயா? உன்னோடு பெரிய தொல்லையாகிவிட்டதே!" என்று திட்ட ஆரம்பித்தார்..துளசிராமன் கண்களில் கண்ணீர். "ஸ்வாமி! நான் அண்டாக்களை மட்டும்தான் நிரப்பினேன். உண்மையிலேயே கிருஷ்ணனுக்கு எப்படி அபிஷேகம் ஆனது என்று எனக்குத் தெரியாது!" என்றான்..அடுத்த நாள் துளசிராமனை மடைப்பள்ளி பணிக்கு மாற்றிவிட்டார் அர்ச்சகர். பிரஸாதம் தயாரிப்புப் பணிகளில் ஒரு சிற்றாளன் ஆனான். இங்கும் காய் நறுக்கும்போதும் அவன், 'கிருஷ்ணார்ப்பணம்' என்றே தன்னுடைய பணியை கடவுளுக்கே காணிக்கையாக்கினான். அன்று அர்ச்சகர் முன்னெச்சரிக்கையாக கருவறையைப் பூட்டி, சாவியை எடுத்துச் சென்று விட்டார்..மறுநாள் அதிகாலை சன்னிதி கதவைத் திறக்கும்போதே கண்ணன் வாயில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம்! 'மடைப்பள்ளியில் இப்போதுதான் தயாராகி, நெய்விட்டு இறக்கி வைக்கப்பட்டிருக்கிறது! அதற்குள் எப்படி இங்கு சர்க்கரைப் பொங்கல் வந்தது? நானும் கதவைப் பூட்டிவிட்டுதானே சென்றேன்! பூனை, எலி கொண்டு வந்திருக்குமோ? துளசிராமனுக்கு எந்த வேலை தந்தாலும் அந்தப் பொருள் எப்படியோ எனக்கு முன்பே இங்கு வந்துவிடுகிறதே! அவன் என்ன மந்திரவாதியா?' என்று குழம்பினார் அர்ச்சகர்..இன்று அவர் துளசிராமனை கண்டிக்கவில்லை. "துளசிராமா! நாளை முதல் நீ வாசலில் பக்தர்களின் செருப்பைப் பாதுகாக்கும் வேலையைச் செய்! நீ அதற்குத்தான் சரியானவன்!" என்று கூறினார்..'பூ, தண்ணீர், பிரஸாதம் இவை எல்லாம் நல்ல பொருட்கள். அதனால் சன்னிதிக்குள் வந்து விட்டன. இனி, என்ன நடக்கிறதென்று பார்ப்போம்' – இதுதான் அர்ச்சகரின் எண்ணம்..'செருப்பைப் பாதுகாக்கும் வேலையையும் கடவுள் விருப்பம்' என்றே ஏற்றுக்கொண்ட துளசிராமன், அன்றுமுதல் கோயில் வாசலில் நின்று இதுவும், 'கிருஷ்ணார்ப்பணம்' என்று அந்த வேலையையும் செய்துகொண்டு இருந்தான். இன்றும் அர்ச்சகர் கருவறையைப் பூட்டி, சாவியை தன்னுடன் கொண்டு சென்றார்..மறுநாள் காலை சன்னிதி கதவைத் திறந்ததும் அர்ச்சகர் கண்ட காட்சி, அவருக்கு உடல் நடுக்கத்தைக் கொடுத்தது. 'கிருஷ்ணா! இதென்ன உனது பாதங்களுக்கு அருகே ஒரு ஜோடி செருப்பு! பாதுகை பீடத்தில் சாதாரண தோல் செருப்பு எப்படி வந்தது? துளசிராமன் எப்படிப்பட்டவனானாலும், சன்னிதி பூட்டைத் திறந்து இப்படி செருப்பை வைக்க யாருக்குத்தான் மனம் வரும்?' ஆச்சரியம், அச்சம்… அர்ச்சகருக்கு வேர்த்துக் கொட்டியது..அப்போது, எங்கிருந்தோ ஒரு குரல்… "அர்ச்சகரே! பயப்பட வேண்டாம். அந்தத் துளசிராமனுக்கு நீ எந்த வேலை தந்தாலும் அதை அவன், 'கிருஷ்ணார்ப்பணம்' என்று எனக்குக் காணிக்கையாக்கி விடுகிறான்! அப்படி அன்போடு அவன் தரும் காணிக்கையை நானும் மனமுவந்து ஏற்றுக்கொண்டேன். நினைவெல்லாம் எங்கோ இருக்க செய்யும் பூஜையை விட, எதைச் செய்தாலும் எனக்குக் காணிக்கையாக்குபவனின் அன்பை நான் எப்படி மறுப்பது? துளசிராமன் ஒரு யோகி! அவன் அன்பு எனக்கு மிகவும் பிரியமானது!" என்றார் பகவான்..ஸ்ரீ கிருஷ்ண பகவானின் இந்தக் குரல் கேட்டு வாசல் பக்கம் ஓடி வந்து அந்த யோகி துளசிராமனின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார் அர்ச்சகர்!.ஆம்… எந்த வேலை செய்தாலும் நாம் அதை ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்தால் அதை அவர் மனமார ஏற்றுக்கொள்வார்!