– ச.தண்டபாணி.இந்து சமயத்தில் பிறந்த ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கையில் பிறந்ததிலிருந்து வாழ்நாள் முழுவதும் (நூறு வயது வரை வாழ்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால்) செய்துகொள்ள வேண்டிய சாந்தி கர்மாக்கள் என்னென்ன என்பதைக் குறித்துக் காண்போம்..பொதுவாக, நம் எல்லோருக்கும் தெரிந்த கர்மாக்கள் ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் போன்றவைதான். ஆனால், வாழ்வில் பிறந்ததில் இருந்து வாழ்நாள் முழுவதும் மொத்தம் பத்து சாந்தி கர்மாக்களை ஒவ்வொருவரும் செய்துகொள்ள வேண்டும். இனி, அந்த பத்து கர்மாக்கள் என்னென்ன என்பதைக் குறித்துக் காண்போம்..1. அப்தபூர்த்தி : பிறந்து ஒரு வயது ஆன உடனே செய்யும் கர்மாவிற்கு, 'அப்தபூர்த்தி' என்று பெயர். 'அப்த' என்றால் வருடம் என்றும், 'பூர்த்தி' என்றால் நிறைவு என்றும் பொருள். இந்த சடங்கு, 'ஆயுஷ்ஹோமம்' என்றும் சொல்லப்படுகிறது..2.பீம சாந்தி : ஒருவருடைய வாழ்வில் ஒன்றாம் வயதிற்குப் பின் அடுத்த சாந்தி கர்மா என்பது ஐம்பத்தைந்தாவது வயதில்தான் நடக்கும். ஐம்பத்தைந்து வயது துவக்கத்தில் செய்துகொள்ள வேண்டிய சாந்தி கர்மாவுக்கு, 'பீம சாந்தி' என்று பெயர்..3. உக்ர ரத சாந்தி : அறுபது வயது துவக்கத்தில் செய்துகொள்ள வேண்டிய கர்மாவுக்கு, 'உக்ர ரத சாந்தி' என்று பெயர்..4. சஷ்டியப்த பூர்த்தி : அறுபதாவது வயது முடிந்தவுடன் செய்துகொள்ள வேண்டிய சடங்கு, 'சஷ்டியப்த பூர்த்தி.' 'சஷ்டி' என்றால் அறுபது என்றும், 'அப்த' என்றால் வருடம் என்றும், 'பூர்த்தி' என்றால் நிறைவு என்றும் பொருள். இது அறுபதாம் கல்யாணம் என்றும் அழைக்கப்படுகிறது..5. பீமரத சாந்தி : ஒருவருடைய எழுபது வயதில் செய்ய வேண்டிய சாந்தி கர்மாவிற்கு, 'பீமரத சாந்தி' என்று பெயர். இதில் பலருக்கு குழப்பமும் சந்தேகமும் உண்டு. 'பீமரத சாந்தி எழுபது வயது துவக்கத்திலா அல்லது எழுபது வயது முடிந்தவுடன் செய்துகொள்ள வேண்டுமா' என்று! பீமரத சாந்தி எழுபது வயது தொடக்கத்தில்தான் செய்துகொள்ள வேண்டும்..6. ஏக சாந்தி : எழுபத்தியிரண்டாம் வயது துவக்கத்தில் ஒரு சாந்தி கர்மா செய்துகொள்ள வேண்டும். அதற்கு, 'ஏக சாந்தி' என்று பெயர்..7. விஜயரத சாந்தி : எழுபத்தியேழு வயது, ஏழு மாதங்கள், ஏழு நாட்கள் ஆனவுடன் செய்துகொள்ள வேண்டிய சாந்தி கர்மாவிற்கு, 'விஜயரத சாந்தி' என்று பெயர்..8. சதாபிஷேகம் : எண்பது வயது நிறைவடைந்தவுடன் செய்துகொள்ள வேண்டிய சாந்தி கர்மா, 'சதாபிஷேகம்.' எண்பதாம் கல்யாணம் என்று பொதுவாகச் சொல்லப்படும் சடங்கு. ஆனால், உண்மையில் எண்பது வயது முடிந்தவுடன் சதாபிஷேகம் செய்து கொள்ளக்கூடாது. எண்பது வயது, எட்டு மாதங்கள் முடிந்தவுடன்தான் சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். ஏனென்றால், அதற்கு ஒரு சம்பிரதாயம் உண்டு. ஒருவர் பிறந்ததிலிருந்து ஆயிரம் பிறைகளை அவர் பார்த்திருக்க வேண்டும் என்பதுதான் சம்பிரதாயம். பிறை என்றால் பௌர்ணமி என்று பொருள்..ஒருவர் பிறந்ததிலிருந்து எண்பது வயது வரை அவர் ஆயிரம் பிறைகளைப் பார்த்திருப்பாரா என்பதற்கு ஒரு சிறிய கணக்கை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..ஒரு மாதத்தில் ஒரு பௌர்ணமி என்றால் 12 மாதத்திற்கு 12 பௌர்ணமிகள். அப்படியானால் எண்பது வருடம் முடிந்தால் (12 x 80) 960 பௌர்ணமிகள். அதைத் தவிர, ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கு ஒருமுறை 2 பௌர்ணமிகள் கூடுதலாக வரும். அப்படியென்றால் எண்பது வருடத்தில் மொத்தம் 16 ஐந்து வருடங்கள். அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் (16×2) 32 பௌர்ணமிகள் அதிகமாக வரும். ஆக மொத்தம், ஒருவர் எண்பது வயதில் (960 + 32) 992 பௌர்ணமிகளைத்தான் பார்த்திருப்பார். அதனால் எண்பது வயதிற்குப் பின் 8 மாதத்தை கணக்கில் எடுத்துக்கொண்டால் 8 பௌர்ணமிகள் ஆயிற்று. எனவே,(992+8=1000) ஆயிரம் பௌர்ணமிகளை ஒருவர் பார்க்க வேண்டுமேயானால்80 வருடம், 8 மாதங்களாகி விடும். அதனால்தான் சதாபிஷேகத்தை எண்பது வயது, எட்டு மாதம் முடிந்தவுடன் வரக்கூடிய ஜன்ம நட்சத்திரத்தில் செய்துகொள்ள வேண்டும்..9. பூர்ணாபிஷேகம் : கடவுள் கடாட்சம் இருந்து ஒருவர் ஆரோக்கியத்தோடு தன்னுடைய நூறாவது வயதில் வாழ்ந்து கொண்டிருந்தால், அந்த நூறாவது வயதில் செய்துகொள்ள வேண்டிய சாந்தி கர்மாவிற்கு, 'பூர்ணாபிஷேகம்' என்று பெயர். இதற்கு, 'கனகாபிஷேகம்' என்று இன்னொரு பெயரும் உண்டு..10. பிரபௌத்த சாந்தி : இந்த சாந்தி கர்மாவை செய்துகொள்ள ஒருவருக்கு எண்பதிலிருந்து எண்பத்தைந்து வயதிலேயே கொடுப்பினை வரும். ஒருவருடைய மகன் வயிற்றுப் பேரனுக்கு ஆண் மகன் பிறந்தால், அதாவது நான்கு ஆண் தலைமுறைகள் வாழ்ந்து கொண்டிருந்தால் செய்து கொள்ளவேண்டிய கர்மாவிற்கு, 'பிரபௌத்த சாந்தி' என்று பெயர்..இந்த பத்து சாந்தி கர்மாக்களில், அப்தபூர்த்தியை மட்டும் ஒருவருக்கு பெற்றோர்கள் செய்து வைப்பர். அதன் பிறகு வரக்கூடிய மற்ற எல்லா சாந்தி கர்மாக்களையும் பிள்ளைகள்தான் ஒருவருக்கு செய்து வைப்பார்கள்..ஐம்பத்தைந்து வயதிலிருந்து செய்துகொள்ள வேண்டிய இந்த சாந்தி கர்மாக்களை எதற்காகச் செய்து கொள்கிறோம் என்றால், ஒருவருடைய வயோதிக காலத்தில் ஆரோக்கியமாக இருந்து, கடவுளுடைய அநுக்கிரகம் பெற்று இறைவனின் திருப்பாதத்தை சரணாகதி அடைய வேண்டியே இந்த சாந்தி கர்மாக்களைச் செய்து கொள்கிறோம்..எனவே, அனைவரும் கடவுளின் பரிபூரண அனுக்கிரகம் கிடைக்கப்பெற்று, அனைத்து சாந்தி கர்மாக்களையும் செய்துகொள்ள வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவோம்.
– ச.தண்டபாணி.இந்து சமயத்தில் பிறந்த ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கையில் பிறந்ததிலிருந்து வாழ்நாள் முழுவதும் (நூறு வயது வரை வாழ்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால்) செய்துகொள்ள வேண்டிய சாந்தி கர்மாக்கள் என்னென்ன என்பதைக் குறித்துக் காண்போம்..பொதுவாக, நம் எல்லோருக்கும் தெரிந்த கர்மாக்கள் ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் போன்றவைதான். ஆனால், வாழ்வில் பிறந்ததில் இருந்து வாழ்நாள் முழுவதும் மொத்தம் பத்து சாந்தி கர்மாக்களை ஒவ்வொருவரும் செய்துகொள்ள வேண்டும். இனி, அந்த பத்து கர்மாக்கள் என்னென்ன என்பதைக் குறித்துக் காண்போம்..1. அப்தபூர்த்தி : பிறந்து ஒரு வயது ஆன உடனே செய்யும் கர்மாவிற்கு, 'அப்தபூர்த்தி' என்று பெயர். 'அப்த' என்றால் வருடம் என்றும், 'பூர்த்தி' என்றால் நிறைவு என்றும் பொருள். இந்த சடங்கு, 'ஆயுஷ்ஹோமம்' என்றும் சொல்லப்படுகிறது..2.பீம சாந்தி : ஒருவருடைய வாழ்வில் ஒன்றாம் வயதிற்குப் பின் அடுத்த சாந்தி கர்மா என்பது ஐம்பத்தைந்தாவது வயதில்தான் நடக்கும். ஐம்பத்தைந்து வயது துவக்கத்தில் செய்துகொள்ள வேண்டிய சாந்தி கர்மாவுக்கு, 'பீம சாந்தி' என்று பெயர்..3. உக்ர ரத சாந்தி : அறுபது வயது துவக்கத்தில் செய்துகொள்ள வேண்டிய கர்மாவுக்கு, 'உக்ர ரத சாந்தி' என்று பெயர்..4. சஷ்டியப்த பூர்த்தி : அறுபதாவது வயது முடிந்தவுடன் செய்துகொள்ள வேண்டிய சடங்கு, 'சஷ்டியப்த பூர்த்தி.' 'சஷ்டி' என்றால் அறுபது என்றும், 'அப்த' என்றால் வருடம் என்றும், 'பூர்த்தி' என்றால் நிறைவு என்றும் பொருள். இது அறுபதாம் கல்யாணம் என்றும் அழைக்கப்படுகிறது..5. பீமரத சாந்தி : ஒருவருடைய எழுபது வயதில் செய்ய வேண்டிய சாந்தி கர்மாவிற்கு, 'பீமரத சாந்தி' என்று பெயர். இதில் பலருக்கு குழப்பமும் சந்தேகமும் உண்டு. 'பீமரத சாந்தி எழுபது வயது துவக்கத்திலா அல்லது எழுபது வயது முடிந்தவுடன் செய்துகொள்ள வேண்டுமா' என்று! பீமரத சாந்தி எழுபது வயது தொடக்கத்தில்தான் செய்துகொள்ள வேண்டும்..6. ஏக சாந்தி : எழுபத்தியிரண்டாம் வயது துவக்கத்தில் ஒரு சாந்தி கர்மா செய்துகொள்ள வேண்டும். அதற்கு, 'ஏக சாந்தி' என்று பெயர்..7. விஜயரத சாந்தி : எழுபத்தியேழு வயது, ஏழு மாதங்கள், ஏழு நாட்கள் ஆனவுடன் செய்துகொள்ள வேண்டிய சாந்தி கர்மாவிற்கு, 'விஜயரத சாந்தி' என்று பெயர்..8. சதாபிஷேகம் : எண்பது வயது நிறைவடைந்தவுடன் செய்துகொள்ள வேண்டிய சாந்தி கர்மா, 'சதாபிஷேகம்.' எண்பதாம் கல்யாணம் என்று பொதுவாகச் சொல்லப்படும் சடங்கு. ஆனால், உண்மையில் எண்பது வயது முடிந்தவுடன் சதாபிஷேகம் செய்து கொள்ளக்கூடாது. எண்பது வயது, எட்டு மாதங்கள் முடிந்தவுடன்தான் சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். ஏனென்றால், அதற்கு ஒரு சம்பிரதாயம் உண்டு. ஒருவர் பிறந்ததிலிருந்து ஆயிரம் பிறைகளை அவர் பார்த்திருக்க வேண்டும் என்பதுதான் சம்பிரதாயம். பிறை என்றால் பௌர்ணமி என்று பொருள்..ஒருவர் பிறந்ததிலிருந்து எண்பது வயது வரை அவர் ஆயிரம் பிறைகளைப் பார்த்திருப்பாரா என்பதற்கு ஒரு சிறிய கணக்கை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..ஒரு மாதத்தில் ஒரு பௌர்ணமி என்றால் 12 மாதத்திற்கு 12 பௌர்ணமிகள். அப்படியானால் எண்பது வருடம் முடிந்தால் (12 x 80) 960 பௌர்ணமிகள். அதைத் தவிர, ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கு ஒருமுறை 2 பௌர்ணமிகள் கூடுதலாக வரும். அப்படியென்றால் எண்பது வருடத்தில் மொத்தம் 16 ஐந்து வருடங்கள். அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் (16×2) 32 பௌர்ணமிகள் அதிகமாக வரும். ஆக மொத்தம், ஒருவர் எண்பது வயதில் (960 + 32) 992 பௌர்ணமிகளைத்தான் பார்த்திருப்பார். அதனால் எண்பது வயதிற்குப் பின் 8 மாதத்தை கணக்கில் எடுத்துக்கொண்டால் 8 பௌர்ணமிகள் ஆயிற்று. எனவே,(992+8=1000) ஆயிரம் பௌர்ணமிகளை ஒருவர் பார்க்க வேண்டுமேயானால்80 வருடம், 8 மாதங்களாகி விடும். அதனால்தான் சதாபிஷேகத்தை எண்பது வயது, எட்டு மாதம் முடிந்தவுடன் வரக்கூடிய ஜன்ம நட்சத்திரத்தில் செய்துகொள்ள வேண்டும்..9. பூர்ணாபிஷேகம் : கடவுள் கடாட்சம் இருந்து ஒருவர் ஆரோக்கியத்தோடு தன்னுடைய நூறாவது வயதில் வாழ்ந்து கொண்டிருந்தால், அந்த நூறாவது வயதில் செய்துகொள்ள வேண்டிய சாந்தி கர்மாவிற்கு, 'பூர்ணாபிஷேகம்' என்று பெயர். இதற்கு, 'கனகாபிஷேகம்' என்று இன்னொரு பெயரும் உண்டு..10. பிரபௌத்த சாந்தி : இந்த சாந்தி கர்மாவை செய்துகொள்ள ஒருவருக்கு எண்பதிலிருந்து எண்பத்தைந்து வயதிலேயே கொடுப்பினை வரும். ஒருவருடைய மகன் வயிற்றுப் பேரனுக்கு ஆண் மகன் பிறந்தால், அதாவது நான்கு ஆண் தலைமுறைகள் வாழ்ந்து கொண்டிருந்தால் செய்து கொள்ளவேண்டிய கர்மாவிற்கு, 'பிரபௌத்த சாந்தி' என்று பெயர்..இந்த பத்து சாந்தி கர்மாக்களில், அப்தபூர்த்தியை மட்டும் ஒருவருக்கு பெற்றோர்கள் செய்து வைப்பர். அதன் பிறகு வரக்கூடிய மற்ற எல்லா சாந்தி கர்மாக்களையும் பிள்ளைகள்தான் ஒருவருக்கு செய்து வைப்பார்கள்..ஐம்பத்தைந்து வயதிலிருந்து செய்துகொள்ள வேண்டிய இந்த சாந்தி கர்மாக்களை எதற்காகச் செய்து கொள்கிறோம் என்றால், ஒருவருடைய வயோதிக காலத்தில் ஆரோக்கியமாக இருந்து, கடவுளுடைய அநுக்கிரகம் பெற்று இறைவனின் திருப்பாதத்தை சரணாகதி அடைய வேண்டியே இந்த சாந்தி கர்மாக்களைச் செய்து கொள்கிறோம்..எனவே, அனைவரும் கடவுளின் பரிபூரண அனுக்கிரகம் கிடைக்கப்பெற்று, அனைத்து சாந்தி கர்மாக்களையும் செய்துகொள்ள வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவோம்.