– அபர்ணா சுப்ரமணியம்.நோய் நீக்கும் தாள்கறி நிவேதனம்!.கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் தண்ணீர்முக்கம் பஞ்சாயத்தில் அமைந்த மருத்தோர் வட்டம் என்ற ஊரில் சங்கு சக்ரதாரியாக அமிர்தகும்பம் கையிலேந்தியவாறு காட்சியளிக்கும் தன்வந்த்ரி மூர்த்தி கோயில் கொண்டுள்ளார். இங்கு, 'தாள்கறி' என அழைக்கப்படும் பிரசாதம் சமர்ப்பிக்கப்படும் ஓர் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இந்த வழிபாட்டுப் பிரசாதம் ரத்தம் சம்பந்தமான நோய்களை அகற்றும் வலிமை வாய்ந்ததென்று நம்பப்படுகிறது. சுவாதித் திருநாள் மகாராஜா தன் உடல் நோயைப் போக்க இந்த மருத்தோர் கோயிலில் வழங்கப்படும் தாள்கறி பிரசாதத்தை உட்கொண்டு நோய் நீங்கி நலம் பெற்றதாக செவிவழிச் செய்திகள் உண்டு..இந்தத் தாள்கறி நைவேத்தியம் கோயில் அமைந்த காலத்திலிருந்தே வழங்கப்பட்டு வருகிறதாம். மிகவும் சிறப்பான இந்த நைவேத்தியம் ஆடி மாதத்தில் வரும் அமாவாசையன்றுதான் படைக்கப்படுகிறது. கடுமையான அரிப்பைத் தரும் காட்டு சேப்பங்கிழங்கின் இலைத் துண்டுகளை சேகரித்து அவற்றை நறுக்கி, மேலும் சில பொருட்களையும் சேர்த்து இந்தக் கறி செய்யப்படுகிறது. வழிபாடு முடிந்ததும் பக்தர்களுக்குப் படையலுடன் தாள்கறி வழங்கப்படுகிறது. பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் இந்த தாள்கறி பிரசாதம் பெற்று நோய் நீங்கி நலம் பெற்றுச் செல்கின்றனர்..வாத நோய் தீர்க்கும் எண்ணெய்!.கேரளாவில், 'தகழி' என்ற ஊரிலுள்ள தருமசாஸ்தா கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் எண்ணெய் வாத நோயை அகற்றும் அருமருந்தாகக் கூறப்படுகிறது. ஒருசமயம் கோயிலின் நிலைமை மோசமாக இருந்தபொழுது, கோயில் சன்னிதியில் வாழ்ந்து வந்த சாஸ்தாவின் பரம பக்தராகிய சுணக்கேழத்து விலிவச்சன் என்பவர் ஆலயத்து நிலையை எண்ணி கண்ணீர் மல்க சாஸ்தாவை வணங்க, அவரது கனவில் சுவாமி ஐயப்பன் (சாஸ்தா) தோன்றி, வாத நோய்க்குரிய சித்த மருந்தான வலியெண்ணெயைக் காய்ச்சும் ரகசியத்தைத் தெரியப்படுத்தினாராம். அவரும்அம்மருந்திற்குத் தேவையான பச்சிலைகள், மூலிகை, ஏனையப் பொருட்களைச் சேகரித்து சரியாக 41 நாட்களில் எண்ணெய் காய்ச்சி வந்தார். ஆலய மணி முழக்கத்தை வைத்து மருந்து தயாராவதைப் புரிந்துகொண்டார். அன்றைய தினம் சுவாமிக்குப் படைக்கப்பட்ட சர்க்கரைப் பாயசத்தில் இந்த மூலிகை எண்ணெயின் நறுமணம் கமழக்கண்டார் என்று ஐதீகம் கூறுகின்றது..பழைய அதே பொருட்களின் பிரகாரம்தான், இப்பவும் அங்கே எண்ணெய் காய்ச்சப்படுகிறது. ஓதற மலைப் பகுதியிலுள்ள 84 வகை பச்சிலை மூலிகைகளும் மற்றும் கடைச் சரக்குகளும், நல்லெண்ணெய் தவிர அனைத்து வகை எண்ணெய்களும் இந்த மருந்தில் சேர்க்கப்பட்டு உருவாக்கப்படுகிறது. இந்த எண்ணெயை உபயோகிப்பதில் கடுமையான பத்தியம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த எண்ணெயை நாவிலும், பற்களிலும் படாமல் உட்கொள்ள வேண்டும். சங்கிலோ அல்லது வாழை மட்டையிலோ இதனை ஊற்றி உட்கொள்வது வழக்கம். ஏழு நாட்கள் கோயில் சன்னிதியில் தங்கி இந்த மருந்தை உட்கொள்ளுதலும், அதுசமயம் கோயிலில் வழங்கப்படும் சாதத்தை இந்துப்பு, மிளகுடன் சேர்த்து உண்ணுதலும் வேண்டும். தண்ணீர் குடிக்கக் கூடாது. தேநீரும் குடிக்கக் கூடாது..ஆனி, ஆடி மாதங்களில்தான் பொதுவாக இந்த எண்ணெயைத் தயாரிக்கின்றனர். இந்தக் காலம்தான் இதை உட்கொள்ளப் பொருத்தமானது என்பதே இதன் காரணம். சுவாமி ஐயப்பனின் மீது நிறைந்த பக்தியுடன் வந்து இந்த மருந்தை உட்கொண்டால், எத்தகைய வாத நோயாக இருந்தாலும் அது மறைந்துவிடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது..ஆடி அமாவாசை நீராடலும் பிதுர் தர்ப்பணமும்!.ஆடி அமாவாசை ஒரு சிறப்பான நாள். ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். கடகம் சந்திரனின் ஆட்சி பெற்ற வீடு. சூரியன் சிவ அம்சமாகும். சந்திரன் சக்தி அம்சமாகும். ஆடி அமாவாசையின்போது சிவாம்சமான சூரியனும், சக்தி அம்சமான சந்திரனும் ஒன்று சேர்வதால் சந்திரனின் ஆட்சி பலமடைகிறது. இதுவே ஆடி அமாவாசையின் சிறப்பம்சம்..ஆடி அமாவாசையன்று கடல் நீரில் மாற்றம் ஏற்படும். கீழ்ப் பகுதியிலுள்ள நீர், சூரிய, சந்திர சங்கமத்தால் புரட்டப்படுகிறது. அப்பொழுது கடலின் ஆழ்நிலையிலுள்ள சங்கு, பவளம், முத்துச் சிப்பிகளிலுள்ள ஜீவசத்துக்கள் கடலின் மேற்புறத்திற்கு வருகிறது. அந்தச் சிறப்பான நாள் ஆடி அமாவாசையன்று ஏற்படுகிறது. எனவே,அக்காலக்கட்டத்தில் சமுத்திரத்தில் புனித நீராடினால் தோஷங்கள் விலகுவதுடன் நோய் எதிர்ப்புச் சக்தியும் கூடும்..இந்நாளில் முன்னோர்களுக்கு சிராத்தம் செய்வது மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது. கடற்கரைத் திருத்தலங்களுக்குச் செல்ல முடியாதவர்கள், காவிரி கரையோர தலங்களிலோ, புனித நீர்நிலைகள் உள்ள இடங்களிலோ நீத்தார் கடன் செய்வது கடைபிடிக்கப்படுகிறது. இதனால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்குமென்று சாஸ்திரம் கூறுகிறது.
– அபர்ணா சுப்ரமணியம்.நோய் நீக்கும் தாள்கறி நிவேதனம்!.கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் தண்ணீர்முக்கம் பஞ்சாயத்தில் அமைந்த மருத்தோர் வட்டம் என்ற ஊரில் சங்கு சக்ரதாரியாக அமிர்தகும்பம் கையிலேந்தியவாறு காட்சியளிக்கும் தன்வந்த்ரி மூர்த்தி கோயில் கொண்டுள்ளார். இங்கு, 'தாள்கறி' என அழைக்கப்படும் பிரசாதம் சமர்ப்பிக்கப்படும் ஓர் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இந்த வழிபாட்டுப் பிரசாதம் ரத்தம் சம்பந்தமான நோய்களை அகற்றும் வலிமை வாய்ந்ததென்று நம்பப்படுகிறது. சுவாதித் திருநாள் மகாராஜா தன் உடல் நோயைப் போக்க இந்த மருத்தோர் கோயிலில் வழங்கப்படும் தாள்கறி பிரசாதத்தை உட்கொண்டு நோய் நீங்கி நலம் பெற்றதாக செவிவழிச் செய்திகள் உண்டு..இந்தத் தாள்கறி நைவேத்தியம் கோயில் அமைந்த காலத்திலிருந்தே வழங்கப்பட்டு வருகிறதாம். மிகவும் சிறப்பான இந்த நைவேத்தியம் ஆடி மாதத்தில் வரும் அமாவாசையன்றுதான் படைக்கப்படுகிறது. கடுமையான அரிப்பைத் தரும் காட்டு சேப்பங்கிழங்கின் இலைத் துண்டுகளை சேகரித்து அவற்றை நறுக்கி, மேலும் சில பொருட்களையும் சேர்த்து இந்தக் கறி செய்யப்படுகிறது. வழிபாடு முடிந்ததும் பக்தர்களுக்குப் படையலுடன் தாள்கறி வழங்கப்படுகிறது. பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் இந்த தாள்கறி பிரசாதம் பெற்று நோய் நீங்கி நலம் பெற்றுச் செல்கின்றனர்..வாத நோய் தீர்க்கும் எண்ணெய்!.கேரளாவில், 'தகழி' என்ற ஊரிலுள்ள தருமசாஸ்தா கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் எண்ணெய் வாத நோயை அகற்றும் அருமருந்தாகக் கூறப்படுகிறது. ஒருசமயம் கோயிலின் நிலைமை மோசமாக இருந்தபொழுது, கோயில் சன்னிதியில் வாழ்ந்து வந்த சாஸ்தாவின் பரம பக்தராகிய சுணக்கேழத்து விலிவச்சன் என்பவர் ஆலயத்து நிலையை எண்ணி கண்ணீர் மல்க சாஸ்தாவை வணங்க, அவரது கனவில் சுவாமி ஐயப்பன் (சாஸ்தா) தோன்றி, வாத நோய்க்குரிய சித்த மருந்தான வலியெண்ணெயைக் காய்ச்சும் ரகசியத்தைத் தெரியப்படுத்தினாராம். அவரும்அம்மருந்திற்குத் தேவையான பச்சிலைகள், மூலிகை, ஏனையப் பொருட்களைச் சேகரித்து சரியாக 41 நாட்களில் எண்ணெய் காய்ச்சி வந்தார். ஆலய மணி முழக்கத்தை வைத்து மருந்து தயாராவதைப் புரிந்துகொண்டார். அன்றைய தினம் சுவாமிக்குப் படைக்கப்பட்ட சர்க்கரைப் பாயசத்தில் இந்த மூலிகை எண்ணெயின் நறுமணம் கமழக்கண்டார் என்று ஐதீகம் கூறுகின்றது..பழைய அதே பொருட்களின் பிரகாரம்தான், இப்பவும் அங்கே எண்ணெய் காய்ச்சப்படுகிறது. ஓதற மலைப் பகுதியிலுள்ள 84 வகை பச்சிலை மூலிகைகளும் மற்றும் கடைச் சரக்குகளும், நல்லெண்ணெய் தவிர அனைத்து வகை எண்ணெய்களும் இந்த மருந்தில் சேர்க்கப்பட்டு உருவாக்கப்படுகிறது. இந்த எண்ணெயை உபயோகிப்பதில் கடுமையான பத்தியம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த எண்ணெயை நாவிலும், பற்களிலும் படாமல் உட்கொள்ள வேண்டும். சங்கிலோ அல்லது வாழை மட்டையிலோ இதனை ஊற்றி உட்கொள்வது வழக்கம். ஏழு நாட்கள் கோயில் சன்னிதியில் தங்கி இந்த மருந்தை உட்கொள்ளுதலும், அதுசமயம் கோயிலில் வழங்கப்படும் சாதத்தை இந்துப்பு, மிளகுடன் சேர்த்து உண்ணுதலும் வேண்டும். தண்ணீர் குடிக்கக் கூடாது. தேநீரும் குடிக்கக் கூடாது..ஆனி, ஆடி மாதங்களில்தான் பொதுவாக இந்த எண்ணெயைத் தயாரிக்கின்றனர். இந்தக் காலம்தான் இதை உட்கொள்ளப் பொருத்தமானது என்பதே இதன் காரணம். சுவாமி ஐயப்பனின் மீது நிறைந்த பக்தியுடன் வந்து இந்த மருந்தை உட்கொண்டால், எத்தகைய வாத நோயாக இருந்தாலும் அது மறைந்துவிடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது..ஆடி அமாவாசை நீராடலும் பிதுர் தர்ப்பணமும்!.ஆடி அமாவாசை ஒரு சிறப்பான நாள். ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். கடகம் சந்திரனின் ஆட்சி பெற்ற வீடு. சூரியன் சிவ அம்சமாகும். சந்திரன் சக்தி அம்சமாகும். ஆடி அமாவாசையின்போது சிவாம்சமான சூரியனும், சக்தி அம்சமான சந்திரனும் ஒன்று சேர்வதால் சந்திரனின் ஆட்சி பலமடைகிறது. இதுவே ஆடி அமாவாசையின் சிறப்பம்சம்..ஆடி அமாவாசையன்று கடல் நீரில் மாற்றம் ஏற்படும். கீழ்ப் பகுதியிலுள்ள நீர், சூரிய, சந்திர சங்கமத்தால் புரட்டப்படுகிறது. அப்பொழுது கடலின் ஆழ்நிலையிலுள்ள சங்கு, பவளம், முத்துச் சிப்பிகளிலுள்ள ஜீவசத்துக்கள் கடலின் மேற்புறத்திற்கு வருகிறது. அந்தச் சிறப்பான நாள் ஆடி அமாவாசையன்று ஏற்படுகிறது. எனவே,அக்காலக்கட்டத்தில் சமுத்திரத்தில் புனித நீராடினால் தோஷங்கள் விலகுவதுடன் நோய் எதிர்ப்புச் சக்தியும் கூடும்..இந்நாளில் முன்னோர்களுக்கு சிராத்தம் செய்வது மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது. கடற்கரைத் திருத்தலங்களுக்குச் செல்ல முடியாதவர்கள், காவிரி கரையோர தலங்களிலோ, புனித நீர்நிலைகள் உள்ள இடங்களிலோ நீத்தார் கடன் செய்வது கடைபிடிக்கப்படுகிறது. இதனால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்குமென்று சாஸ்திரம் கூறுகிறது.