அறியாமையை அகற்றும் ஆன்மிகப் பயணம் - திருவிசயமங்கைப் பிரானின் அருள்

ஆசைகளின் பின்னால் அலையும் மனம், பொய்யான மகிழ்ச்சியைத் தேடி அலைந்து, துன்பங்களை மட்டுமே சந்திக்கிறது.
thirunavukkarasar, sivaperuman
thirunavukkarasar, sivaperumanimg credit - exoticindiaart.com, incredibleindia.gov.in
Updated on

திருவிசயமங்கைப் பிரானின் அருள்:

இந்த மாய உலகில் மனிதர்கள் பல கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். புலன்களின் ஆசைகளாலும், உலகியல் பற்றுகளாலும் மனம் குழம்பி, அறியாமையில் ஆழ்ந்து, உண்மையான அமைதியை இழக்கின்றனர். ஆசைகளின் பின்னால் அலையும் மனம், பொய்யான மகிழ்ச்சியைத் தேடி அலைந்து, துன்பங்களை மட்டுமே சந்திக்கிறது. இதிலிருந்து விடுபட, சிவபெருமானின் அருளைப் பெற்றவர்கள் என்ன பாதையை வழிகாட்டுகின்றனர் என்று பார்ப்போமா?

திருநாவுக்கரசர் அருளிய தேவாரத்தில், 5-ஆம் திருமுறையில், 71-ஆவது பதிகத்தில், திருவிசயமங்கை தலத்தில் பாடப்பட்ட பாடல் ஒரு ஆழமான ஆன்மிக உணர்வை வெளிப்படுத்துகிறது.

திருச்சிற்றம்பலம்

பொள்ளல் ஆக்கை அகத்தில் ஐம்பூதங்கள்

கள்ளம் ஆக்கிக் கலக்கிய கார்இருள்

விள்ளல் ஆக்கி, விசயமங்கைப் பிரான்,

உள்ளல் நோக்கி, என் உள்ளுள் உறையுமே.

திருச்சிற்றம்பலம்

இப்பாடல், மனித உடலின் நிலையாமையையும், இறைவனை உள்ளத்தில் உறையச் செய்யும் பாதையையும் அழகாக விளக்குகிறது.

உடலும் அறியாமையும்

ஒன்பது துவாரங்களைக் கொண்ட இந்த உடல், ஐம்பூதங்களால் ஆனது. இந்த உடலினுள் உள்ள ஐம்புலன்கள் மனதைக் குழப்பி, பெரும் அறியாமையில் நம்மைச் சிக்க வைக்கின்றன. இந்த அறியாமை, உலகியல் மாயையால் நம்மைப் பிணைத்து, இறைவனை உணர முடியாதபடி தடுத்து நிற்கிறது. பாடலில் குறிப்பிடப்படும் ‘கார்இருள்’ என்பது, ஆன்மாவை மறைக்கும் (ஆணவம்) அறியாமையின் இருளைக் குறிக்கிறது. இந்த இருள், புலன்களால் உருவாகும் ஆசைகளாலும், உலகியல் பற்றுகளாலும் நம்மைப் புரியாமையில் ஆழ்த்துகிறது. ஆனால், இந்த இருளை அகற்றி, அறிவொளியைப் பரவச் செய்யும் ஆற்றல் இறைவனுக்கு மட்டுமே உண்டு.

இதையும் படியுங்கள்:
சிவபெருமான் அப்பருக்கு திருக்கைலாயக் காட்சி கொடுத்த கதை தெரியுமா?
thirunavukkarasar, sivaperuman

திருவிசயமங்கைப் பிரானின் அருள் :

திருவிசயமங்கையில் உறையும் சிவபெருமான், அந்த அறியாமையின் இருளை விளக்கி, நம்மை அருளொளியால் நிரப்புகிறார். ‘விசயமங்கைப் பிரான், உள்ளல் நோக்கி, என் உள்ளுள் உறையுமே’ என்ற பகுதியில், இறைவன் நம்மை உற்று நோக்கி, நம்மை அவரைத் தியானிக்கச் செய்கிறார். இறைவனை உள்ளத்தில் தியானிக்கும்போது, அறியாமையின் இருள் நீங்கி, இறைவனின் ஒளி நம்மை ஆட்கொள்கிறது. இறைவன் நம் உள்ளத்தில் நிரந்தரமாக உறைகிறார், நம்மை அவருடன் ஒன்றாக்குகிறார்.

திருநாவுக்கரசர் இங்கு, இறைவனின் அருளால் மட்டுமே மனதின் இருளை அகற்ற முடியும் என்பதை உணர்த்துகிறார்.

ஆன்மிகப் பயணம் :

இப்பாடல் நமக்கு ஒரு ஆழமான ஆன்மிக உண்மையை உணர்த்துகிறது. உடல் நிலையற்றது; புலன்களால் உருவாகும் மாயை நம்மை இறைவனிடமிருந்து விலக்குகிறது. ஆனால், இறைவனை உள்ளத்தில் தியானிக்கும்போது, அறியாமை நீங்கி, இறைவனின் ஒளி நம்மை நிரப்புகிறது. திருவிசயமங்கைப் பிரான் நம்மை அரவணைத்து, ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டுகிறார். இறைவனை உள்ளத்தில் உறையச் செய்வதே உண்மையான முக்தியின் பாதை. இதற்கு, புலன்களை அடக்கி, மனதை ஒருமுகப்படுத்தி, இறைவனைத் தியானிப்பது அவசியம். இதன் மூலம், மனதின் இருளை அகற்றி, இறைவனின் அருளால் ஆன்மாவை ஒளிரச் செய்ய முடியும்.

இதையும் படியுங்கள்:
சிவபெருமான் அப்பருக்கு திருக்கைலாயக் காட்சி கொடுத்த கதை தெரியுமா?
thirunavukkarasar, sivaperuman

இறைவனைத் தியானிப்பதன் மூலம், உலகியல் பற்றுகளைத் துறந்து, உண்மையான அமைதியையும் முக்தியையும் அடைய முடியும்.

அருளொளியால் நம்மை நிரப்பி, ஆன்மிக உயர்வை அடைவோம்!

logo
Kalki Online
kalkionline.com