சித்திரை விஷுக்கனி காணலும் கைநீட்டம் பெறுதலும்!

சித்திரை விஷுக்கனி காணலும் கைநீட்டம் பெறுதலும்!

சித்திரை முதல் நாள் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இது உத்தராயண கால சூரிய பயணத்தில் பன்னிரண்டு ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசியில் நுழையும் காலமாகும். இதனையே தமிழ் வருடப் பிறப்பாகக் கொண்டாடுகிறோம். இத்தினத்தில் தமிழகத்தில், ’சித்திரை கனி காணுதல்’ என்றும், கேரளத்தில், ’விஷு கனி காணுதல்’ என்கிற சடங்கும் அனைவரது வீடுகளிலும் நடைபெறுகிறது. சித்திரை முதல் நாள் கனிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படும். காரணம் மா, பலா, வாழை என்கின்ற முக்கனிகளும் இக்காலத்தில் தாராளமாகக் கிடைக்கும்.

பங்குனி மாத கடைசி நாள் இரவே பூஜை அறையில் மாகோலமிட்டு, ஒரு பெரிய தட்டில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளும் வைப்பர். அதனோடு தேங்காய், வெற்றிலை, பாக்கு வைத்து வாசனை மலர்களை கொண்டும், கொன்றை மலரினாலும் வீட்டை அலங்கரிப்பர். பணம் மற்றும் காசுகளை வைத்து அதனோடு ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியையும் அந்தத் தட்டில் வைப்பர். அதன் பிறகு உப்பு, சர்க்கரை, அரிசி, பருப்பு முதலானவற்றை தனித்தனி பாத்திரத்தில் நிரப்பி வைப்பர். அதற்கு பின் உறங்கச் சென்று விட்டு, காலையில் எழுந்தவுடன் முதலில் சென்று பூஜை அறையில் உள்ள இந்த மங்கலப் பொருட்களில் கண் விழிப்பர். இப்படிச் செய்வதால் வீட்டில் மங்கலம் பொங்கும். லட்சுமி கடாட்சம் நிறையும் என்றும், வருடம் முழுவதும் மகிழ்ச்சி நிறையும் என்பதும் நம்பிக்கை. இதுவே சித்திரை கனி மற்றும் விஷு கனி காணுதல் எனப்படுகிறது.

இதேபோல், தமிழ் வருடப் பிறப்பன்று சிறியவர்கள் பெரியவர்களிடம் ஆசி பெற்று நாணயம் பெறுவார்கள். இது, ’கைநீட்டம்’ என்று கூறப்படுகிறது. அன்றைய தினம் கோயில்களில் சுவாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு காசு மற்றும் காய், கனிகள் வழங்கப்படுகின்றன. செல்வந்தராக இருந்தாலும் பொறுமையாக வரிசையில் நின்று பிரசாதமாகக் கைநீட்டம் பெறுகிறார்கள். கோயிலில் கைநீட்டம் பெற்றால் ஆண்டு முழுவதும் பணம் குவியும்; செல்வச் செழிப்புடன் வாழலாம் என்பது நம்பிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com