- மகாலட்சுமி சுப்ரமணியன்ஜெயின் மதத்தில் தீபாவளிக்கு எட்டு தினங்களுக்கு முன்பே உண்ணாவிரதம் கடைப்பிடிப்பர். இதை, ‘பர்யூசன் மர்வா’ என்று அழைக்கின்றனர். இந்த விரதத்தின் போது ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து தியானம் செய்வர். அந்த நாட்கள் காய்கறி உணவைத் தவிர்த்து வெறும் சுடுதண்ணீர் மட்டும் அருந்துவர். இந்த எட்டு நாட்கள் ஜெயின் மதத்தில் உள்ள எல்லா வயதினரும் ஜெயின் கோயிலுக்குச் சென்று கல்ப சூத்ரா படிக்கச் சொல்லிக் கேட்பர்..மும்பை மகாலட்சுமியைப் போல கோலாலம்பூர் மகாலட்சுமியும் பிரசித்தி பெற்ற அம்மன். சிம்ம வாகனத்தில் பயணித்து கோலாசுரன் என்கிற அரக்கனை அம்மன்தனது கதாயுதத்தால் அழித்த இடம். இக்கோயிலின் மேற்கு வாசலில் கலைநயமிக்க தீபஸ்தம்பங்கள் உள்ளன. இதனை மகாதுவாரமென அழைக்கின்றனர். சக்தி பீடங்களில் ஒன்றாகிய இத்தலத்தில் அம்மன் ஒரு சதுர வடிவினாலான பீடத்தில் நின்று அருள்பாலிக்கிறாள். இந்த பீடம் கருப்பு ரத்னக்கல்லால் ஆனது. ஆதிசேஷன் குடைப்பிடிக்க, கைகளில் அமுதசுரபியை ஏந்தி நிற்கும் தேவி தனது வீரத்தினால் இத்தலத்தினை அழிவிலிருந்து காப்பாற்றியதால் ‘கரவீர’ தலமென்றும் கூறப்படுகிறது.1300ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பழைமையான இத்திருத்தலம் காசிக்கு சமமானதாகப் போற்றப்படுகிறது. தீபாவளி திருநாளின்போது தீப ஒளியில் அம்மனை வழிபட, வாழ்வில் எல்லா மேன்மைகளும் கிடைக்கும்..நெல்லை மாவட்டத்தில் ஓடும் தாமிரபரணியில் காவிரிக்கு ஆண்டுதோறும் திருமணம் செய்விக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் இங்கே காவிரிக்கு திருமணம் நடைபெறுகிறது. அன்றைய தினம் அங்குள்ள புது அம்மன் கோயில் முன்பு ஏழு சொம்புகளில் காவிரி அன்னையை ஆவாஹனம் செய்து அதில் இரண்டு சொம்பில் அன்னை முகம் அமைத்து வழிபடுகிறார்கள். அதற்கு எதிரே அகத்தியர் உருவம் அமைக்கப்படுகிறது. கன்னிப் பெண் ஒருவரை காவிரியாக பாவித்து அந்தப் பெண்ணுக்கு மணக்கோலம் தரித்து சடங்குகள் செய்து பின் மாங்கல்யம் அணிவிக்கிறார்கள். பிறகு சொம்புகளில் உள்ள தண்ணீரை தாமிரபரணியில் கலந்து விடுவார்கள். இப்படி வழிபட, மழை நன்கு பெய்யும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்..தீபாவளி அன்று விடியற்காலையில் எண்ணெய் தேய்த்து நீராடுவதை ‘அபயங்கனம்’ என்பர். இந்த நீரில் அன்று கங்கை வாசம் செய்வதாக ஐதீகம். ஒரு சிலர் தீபாவளிக்கு முதல் நாள் மாலை பெரிய தவளைப் பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் ஆல், அத்தி, புரசு, மாவிலங்கை போன்ற மருத்துவ குணம் கொண்ட மரப்பட்டைகளை ஊற வைத்து, அடுத்த நாள் காலை கொதிக்க வைத்து, நீராடும் நீரில் கலந்து குளிக்க எந்த நோயும் அண்டாது. நோய் எதிர்ப்புச் சக்தி கூடும். அதிகாலையில் குளிப்பதால் ஏற்படும் ஜலதோஷம், மூக்கடைப்பு, ஒவ்வாமை போன்ற எந்த உடல்நலக் கோளாறுகளும் ஏற்படாமல் காக்கும்..பீகாரில் நாலந்தா அருகே உள்ள பாபாபுரி நகரில் தாமரை மலர்கள் பூத்த ஏரியில் வெள்ளை சலவைக் கற்களால் கட்டப்பட்ட கோயிலுக்கு, 'ஜல்மந்திர்'என்று பெயர். இங்குதான் பகவான் மகாவீரர் மகாநிர்வாணம் அடைந்தார். இங்கு அவரது திருப்பாதங்கள் உள்ளன. இதன் மீது வெள்ளியால் செய்யப்பட்ட கெம்புக் கற்கள் பதிக்கப்பட்ட கவசம் உள்ளது. தீபாவளியன்று நள்ளிரவில் இந்த வெள்ளிக் கவசம் தங்க நிறமாக மாறுகிறது. சில நிமிடங்கள் மட்டுமே இது நிகழும். அப்போது 51 கிலோ எடையுள்ள பெரிய லட்டு படைக்கப்படுகிறது. அற்புதமான இந்நிகழ்வைக் காணக் கண் கோடி வேண்டும்..குத்துவிளக்கில் ஐந்து முகங்கள் உள்ளன. பெண்ணுக்குத் தேவையான ஐந்து குணங்களை இந்த விளக்கு குறிக்கிறது. அன்பு, மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத்தன்மை ஆகிய ஐந்து குணங்களும் சேர்ந்து அப்பெண் ஒளி வீச வேண்டும் என்பதாலேயே திருமணங்களில் குத்துவிளக்கு முதலிடம் வகிக்கிறது.லலிதா சகஸ்ரநாமத்தில், 'அக்ஞான த்வாந்த தீபிகா’ (அறியாமையை அகற்றும் தீபம்) எனப் போற்றப்படுகிறது. தீபங்களின் ஒளியில் இறைவியை காண்பதோடு பலவித தீபங்களின் பலனையும் பெறலாம்.நெய் தீபம் ஏற்றிட ஞானம் ஏற்படும். எள் தீபம் – யம பயம் நீக்கும், இலுப்பெண்ணெய் தீபம் - நோயை அகற்றும், ஆமணக்கு எண்ணெய் தீபம் - சகல சம்பத்தும் கிட்டும், வேப்பெண்ணெய் தீபம் - விரோதிகள் விலகுவர், நல்லெண்ணெய் தீபம் - நல்ல எண்ணங்களையும் வற்றாத செல்வத்தையும் தரும், மண் அகல் – வீரிய விருத்தியைத் தரும். இரும்பு அகல் - அவமித்ருயுவைப் போக்கும், வெண்கல விளக்கேற்ற - பாவம் போகும்.குத்துவிளக்கு மும்மூர்த்திகள் சொரூபமாக ஆகமத்தில் கூறப்படுகிறது. ஆசனமாகிய அடிப்பாகம் ஆத்ம தத்துவம் - பிரும்ம சொரூபம், தண்டாகிய மத்திய பாகம் வித்யா தத்துவம் - விஷ்ணு சொரூபம். தலைப்பாகம் சிவ தத்துவம – சிவ சொரூபம். தீபமேற்றி இறையருள் பெறுவோம்.நரகாசுரனுடைய பட்டத்து யானையின் பெயர் சுப்பிரதீபம்.தீபாவளியன்று சிவன் பார்வதியும் தாயக்கட்டம் ஆடியதாக ஆதித்ய புராணம் கூறுகிறது.ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலில் தீபாவளியன்று பெருமாளுடன் சேர்த்து, ஆழ்வார்களுக்கும் புதிய வஸ்திரம் அணிவிக்கப்படுகிறது.
- மகாலட்சுமி சுப்ரமணியன்ஜெயின் மதத்தில் தீபாவளிக்கு எட்டு தினங்களுக்கு முன்பே உண்ணாவிரதம் கடைப்பிடிப்பர். இதை, ‘பர்யூசன் மர்வா’ என்று அழைக்கின்றனர். இந்த விரதத்தின் போது ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து தியானம் செய்வர். அந்த நாட்கள் காய்கறி உணவைத் தவிர்த்து வெறும் சுடுதண்ணீர் மட்டும் அருந்துவர். இந்த எட்டு நாட்கள் ஜெயின் மதத்தில் உள்ள எல்லா வயதினரும் ஜெயின் கோயிலுக்குச் சென்று கல்ப சூத்ரா படிக்கச் சொல்லிக் கேட்பர்..மும்பை மகாலட்சுமியைப் போல கோலாலம்பூர் மகாலட்சுமியும் பிரசித்தி பெற்ற அம்மன். சிம்ம வாகனத்தில் பயணித்து கோலாசுரன் என்கிற அரக்கனை அம்மன்தனது கதாயுதத்தால் அழித்த இடம். இக்கோயிலின் மேற்கு வாசலில் கலைநயமிக்க தீபஸ்தம்பங்கள் உள்ளன. இதனை மகாதுவாரமென அழைக்கின்றனர். சக்தி பீடங்களில் ஒன்றாகிய இத்தலத்தில் அம்மன் ஒரு சதுர வடிவினாலான பீடத்தில் நின்று அருள்பாலிக்கிறாள். இந்த பீடம் கருப்பு ரத்னக்கல்லால் ஆனது. ஆதிசேஷன் குடைப்பிடிக்க, கைகளில் அமுதசுரபியை ஏந்தி நிற்கும் தேவி தனது வீரத்தினால் இத்தலத்தினை அழிவிலிருந்து காப்பாற்றியதால் ‘கரவீர’ தலமென்றும் கூறப்படுகிறது.1300ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பழைமையான இத்திருத்தலம் காசிக்கு சமமானதாகப் போற்றப்படுகிறது. தீபாவளி திருநாளின்போது தீப ஒளியில் அம்மனை வழிபட, வாழ்வில் எல்லா மேன்மைகளும் கிடைக்கும்..நெல்லை மாவட்டத்தில் ஓடும் தாமிரபரணியில் காவிரிக்கு ஆண்டுதோறும் திருமணம் செய்விக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் இங்கே காவிரிக்கு திருமணம் நடைபெறுகிறது. அன்றைய தினம் அங்குள்ள புது அம்மன் கோயில் முன்பு ஏழு சொம்புகளில் காவிரி அன்னையை ஆவாஹனம் செய்து அதில் இரண்டு சொம்பில் அன்னை முகம் அமைத்து வழிபடுகிறார்கள். அதற்கு எதிரே அகத்தியர் உருவம் அமைக்கப்படுகிறது. கன்னிப் பெண் ஒருவரை காவிரியாக பாவித்து அந்தப் பெண்ணுக்கு மணக்கோலம் தரித்து சடங்குகள் செய்து பின் மாங்கல்யம் அணிவிக்கிறார்கள். பிறகு சொம்புகளில் உள்ள தண்ணீரை தாமிரபரணியில் கலந்து விடுவார்கள். இப்படி வழிபட, மழை நன்கு பெய்யும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்..தீபாவளி அன்று விடியற்காலையில் எண்ணெய் தேய்த்து நீராடுவதை ‘அபயங்கனம்’ என்பர். இந்த நீரில் அன்று கங்கை வாசம் செய்வதாக ஐதீகம். ஒரு சிலர் தீபாவளிக்கு முதல் நாள் மாலை பெரிய தவளைப் பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் ஆல், அத்தி, புரசு, மாவிலங்கை போன்ற மருத்துவ குணம் கொண்ட மரப்பட்டைகளை ஊற வைத்து, அடுத்த நாள் காலை கொதிக்க வைத்து, நீராடும் நீரில் கலந்து குளிக்க எந்த நோயும் அண்டாது. நோய் எதிர்ப்புச் சக்தி கூடும். அதிகாலையில் குளிப்பதால் ஏற்படும் ஜலதோஷம், மூக்கடைப்பு, ஒவ்வாமை போன்ற எந்த உடல்நலக் கோளாறுகளும் ஏற்படாமல் காக்கும்..பீகாரில் நாலந்தா அருகே உள்ள பாபாபுரி நகரில் தாமரை மலர்கள் பூத்த ஏரியில் வெள்ளை சலவைக் கற்களால் கட்டப்பட்ட கோயிலுக்கு, 'ஜல்மந்திர்'என்று பெயர். இங்குதான் பகவான் மகாவீரர் மகாநிர்வாணம் அடைந்தார். இங்கு அவரது திருப்பாதங்கள் உள்ளன. இதன் மீது வெள்ளியால் செய்யப்பட்ட கெம்புக் கற்கள் பதிக்கப்பட்ட கவசம் உள்ளது. தீபாவளியன்று நள்ளிரவில் இந்த வெள்ளிக் கவசம் தங்க நிறமாக மாறுகிறது. சில நிமிடங்கள் மட்டுமே இது நிகழும். அப்போது 51 கிலோ எடையுள்ள பெரிய லட்டு படைக்கப்படுகிறது. அற்புதமான இந்நிகழ்வைக் காணக் கண் கோடி வேண்டும்..குத்துவிளக்கில் ஐந்து முகங்கள் உள்ளன. பெண்ணுக்குத் தேவையான ஐந்து குணங்களை இந்த விளக்கு குறிக்கிறது. அன்பு, மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத்தன்மை ஆகிய ஐந்து குணங்களும் சேர்ந்து அப்பெண் ஒளி வீச வேண்டும் என்பதாலேயே திருமணங்களில் குத்துவிளக்கு முதலிடம் வகிக்கிறது.லலிதா சகஸ்ரநாமத்தில், 'அக்ஞான த்வாந்த தீபிகா’ (அறியாமையை அகற்றும் தீபம்) எனப் போற்றப்படுகிறது. தீபங்களின் ஒளியில் இறைவியை காண்பதோடு பலவித தீபங்களின் பலனையும் பெறலாம்.நெய் தீபம் ஏற்றிட ஞானம் ஏற்படும். எள் தீபம் – யம பயம் நீக்கும், இலுப்பெண்ணெய் தீபம் - நோயை அகற்றும், ஆமணக்கு எண்ணெய் தீபம் - சகல சம்பத்தும் கிட்டும், வேப்பெண்ணெய் தீபம் - விரோதிகள் விலகுவர், நல்லெண்ணெய் தீபம் - நல்ல எண்ணங்களையும் வற்றாத செல்வத்தையும் தரும், மண் அகல் – வீரிய விருத்தியைத் தரும். இரும்பு அகல் - அவமித்ருயுவைப் போக்கும், வெண்கல விளக்கேற்ற - பாவம் போகும்.குத்துவிளக்கு மும்மூர்த்திகள் சொரூபமாக ஆகமத்தில் கூறப்படுகிறது. ஆசனமாகிய அடிப்பாகம் ஆத்ம தத்துவம் - பிரும்ம சொரூபம், தண்டாகிய மத்திய பாகம் வித்யா தத்துவம் - விஷ்ணு சொரூபம். தலைப்பாகம் சிவ தத்துவம – சிவ சொரூபம். தீபமேற்றி இறையருள் பெறுவோம்.நரகாசுரனுடைய பட்டத்து யானையின் பெயர் சுப்பிரதீபம்.தீபாவளியன்று சிவன் பார்வதியும் தாயக்கட்டம் ஆடியதாக ஆதித்ய புராணம் கூறுகிறது.ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலில் தீபாவளியன்று பெருமாளுடன் சேர்த்து, ஆழ்வார்களுக்கும் புதிய வஸ்திரம் அணிவிக்கப்படுகிறது.