திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே இப்படி என்பது தெரியுமா..!

வைகுந்த நாதர் கோயில்
வைகுந்த நாதர் கோயில்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது வைகுந்த நாதர் எனும் கள்ளபிரான்  பெருமாள் கோயில். இத்தல பெருமாள் பூமியில் புதையுண்டு போய் பசு ஒன்று தனது பாலை தானகவே இவர் மீது சுரந்து வெளி வந்தவர் என்பதால். அன்று முதல் இந்த பெருமாள் பாலாபிஷேகம் காண்கிறார். தினமும் பக்தர்களும் தங்களது பிரச்சினைகள் தீர பால்தந்து பாலாபிஷேகம் செய்கின்றனர். 108 திவ்ய தேசங்களில் தினமும் பாலாபிஷேகம் காணும் ஒரே பெருமாள் இவர் மட்டுமே.

திவ்ய தேசங்களில் ஒன்றான இங்கு சிவன் கோயில்களில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி தன் பொற் கரங்களால் வணங்கி செல்வது போல ஐப்பசி மாதம் ஆறாம் நாளில் சூரிய ஒளி கோபுரம் வழியாக நேராக பெருமாள் மீது விழுந்து சூரியன் பெருமாளை வணங்கிச்  செல்கிறார். இது வேறு எந்த திவ்ய தேசங்களிலும் நடக்காத ஒன்று.

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருவிடந்தையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோயில். இங்கே இவருக்கு ஆண்டில் 360 நாட்களும் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே இப்படி நடக்கின்றது. எனவே இத்தலபெருமாளை வேண்டிக்கொள்ளும் பெண்களுக்கு திருமணத் தடை விலகும் என்பது நம்பிக்கை.

நித்ய கல்யாண பெருமாள்
நித்ய கல்யாண பெருமாள்

திவ்ய தேசங்களில் ஒன்றான சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோவில், இங்கு மட்டுமே பெருமாள் குடும்ப சகிதமாக அருள்பாலிக்கும் காட்சியை காணலாம். கர்பபக்கிரகத்தில் பிரதான மூர்த்தியாக வேங்கட கிருஷ்ணன், வலது புறத்தில் ஸ்ரீ ருக்மணி தாயார், இடது புறத்தில் கிருஷ்ணரின் தம்பி சாத்பகியும், ருக்மணி தாயார் வலது புறத்தில் கிருஷ்ணரின் அண்ணன் பலராமர் வடதிசை நோக்கியும். கர்ப்ப கிரகத்தின் வடக்கு பக்கத்தில் கிருஷ்ணரின் புதல்வன் ப்ரத்யும்னனும், தென் திசை நோக்கி பேரன் அநிருத்தனும் அருள்பாலிக்கிறார்கள்.

மாமல்லபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தலசயனப்பெருமாள் பெருமாள் கோயில் . திவ்ய தேசங்களில் 63 வது தலம். இந்த கோயில் மூலஸ்தானத்தில் நான்கு திருக் கரங்களுடன் பூதேவி, ஸ்ரீ தேவி இல்லாமல் படுத்த நிலையில் வேறு எங்கும் இல்லாத படி எளிமையான கோலத்தில் தலசயனப்பெருமாள் காட்சியளிக்கிறார். ஆனால் உற்சவர் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் உள்ள காட்சி வேறு எங்கும் காண முடியாதது.

ருடாழ்வார் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு கரத்துடன்  "கோலவில்லி ராமனுக்கு எதிரில் வீற்றிருக்கும் ஒரே கோயில் கும்பகோணம் அருகே உள்ள திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர் பெருமாள் கோயிலில் தான்.108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே இப்படி. இவருக்கு துளசி மாலை அணிவித்து தீபமேற்றி வழிபட்டால் கிரக தோஷம், விஷபயம் நீங்கும்.

பெருமாள் சங்கு, சக்கரத்துடன் மட்டுமே காட்சி தருவார் ஆனால் கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் மட்டும். பெருமாள் சாரங்கம்  எனும் வில்லுடன் காட்சி தருகிறார். இங்கே மூலவர், உற்சவர் இருவருமே வில் வைத்திருப்பது விசேஷம். இங்கு பூஜையின் போது மூலவருக்கு செய்யும் அத்தனை அலங்காரங்களும் உற்சவருக்கும் செய்யப்படுவது வேறெங்கும் இல்லாதது. பொதுவாக பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்பு நடக்கும். ஆனால் இங்கு சொர்க்க வாசல் திறப்பு கிடையாது.

பொதுவாக சிவன்  கோயில்களின் சுற்று பிரகாரத்தில் தான் விஷ்ணு துர்க்கையை காணமுடியும், ஆனால் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான விழுப்புரத்தில் இருந்து 35 கிமீ தொலைவிலுள்ள உலகளந்த பெருமாள் கோயிலில் மட்டுமே பெருமாள் சன்னதி அருகிலேயே விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் இங்குள்ள பெருமாள் சிலையே மிக உயரமானது.

யனக்கோலத்தில் அருள்பாலிக்கும் பெருமாள் கோயிலில் உள்ள பெருமாள் நாபியிலிருந்து  தாமரை தோன்றும் அதில் பிரம்ம அமர்ந்திருப்பார்.ஆனால் திவ்ய தேசங்களில் ஒன்றான நாகர்கோவிலில் இருந்து 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் சயனக்கோலத்தில் உள்ள பெருமாள் நாபியிலிருந்து தாமரைப் பூ உருவாவதில்லை என்பது தனிச்சிறப்பு. 108 திவ்ய தேசங்களில் மிக நீளமான பெருமாள் இவர்தான்.

காஞ்சிபுரம் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இங்குள்ள பெருமாள் மட்டுமே வலமிருந்து இடமாக மேற்கு நோக்கி சயனித்திருப்பார். பொதுவாக கோயில்களில் பெருமாள் இடமிருந்து வலமாக சயனிப்பதே வழக்கம். ஆனால் இங்கு பெருமாள் திருமழிசை ஆழ்வாருடன்  புறப்பட்டு சென்று, மறுபடி வந்து படுத்ததால் இங்கு மட்டும் வலமிருந்து இடமாக மேற்கு நோக்கி சயனித்திருப்பார்.

ரெங்கநாதர் பெருமாள்
ரெங்கநாதர் பெருமாள்

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் பெருமாள் கோயிலில் ரெங்கநாதருக்கு அமாவாசை, ஏகாதசி மற்றும் மாதப்பிறப்பு  ஆகிய நாட்களில் வெந்நீரில் அபிஷேகம் நடக்கின்றது. இது போன்று வேறு எந்த திவ்ய தேசங்களிலும் செய்வதில்லை.

12 ஆயிரம் சாளக்கிராம கற்களை இணைத்து உருவாக்கப்பட்டது தான் திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி சிலை. இது உடல் முழுவதும் தங்கத் தகடுகளால் பொதியப்பட்டிருக்கிறது. திவ்ய தேசங்களில் பெருமாளுக்கு ராணுவ மரியாதை செய்யப்படும் ஒரே தலம் இது மார்கழி மாத பள்ளி வேட்டை வைபவத்தில் நடக்கும்.

பெருமாள் கோயில்களில் நவக்கிரகங்கள் இருப்பதில்லை. ஆனால் திவ்ய தேசங்களில் ஒன்றான மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் நவக்கிரகங்கள் இருப்பது தனிச்சிறப்பு.

பெருமாள் கோயிலில் கருங்கல்லால் ஆன பெருமாள்களைத்தான் பார்த்திருப்பீர்கள் . ஆனால் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமலரங்கநாதர் பெருமாள் கோயிலில் பச்சை மரகதக் கல்லால் ஆன பெருமாளை தரிசிக்கலாம்.

திருவஹீந்திரபுரம்
திருவஹீந்திரபுரம்

யக்ரீவருக்கு என்று தனிக்கோயில்கள் அதிகம் இல்லை. ஆனால், பெருமாளின் 108 திவ்ய தேசத் தலங்களுள் 41வது திவ்ய தேசமாக அமைந்துள்ள கடலூர் மாவட்டம், திருவஹீந்திரபுரம் தேவநாத பெருமாள் ஆலயத்தில் தென்னிந்தியாவில் ஹயக்ரீவருக்கு தனி கோயில் அமைந்துள்ளது.

108 வைணவ திவ்ய தேசத் தலங்களுள், தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள் கோயில், 9-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் இத்தலத்தில் மட்டும் திருமால் முதலை, யானை ஆகிய இரண்டு விலங்கினங்களுக்கு அருட்காட்சி அளித்துள்ளார்.

நாகபட்டினம் நன்னிலம் சாலை வழி திருப்புகலூரிலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள திருகண்ணபுரம் நீலமேகப்பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இங்கே பெரிய பிராட் டியர், பூதேவி, கிரீடம் தரித்த ஆண்டாள் நாச்சியார், பத்மாவதி தாயார் என நான்கு தாயார் களுடன் நின்று கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.

ஆண்டளக்கும்  அய்யன் கோயில்
ஆண்டளக்கும் அய்யன் கோயில்

சுவாமி மலையிலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ஆதனூர். இங்கு ஆண்டளக்கும்  அய்யன் என்ற பெயரில் பெருமாள் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த பெருமாளின் தலையின் கீழ் நெல் அளக்கும் மரக் காலும், இடது கையில் ஓலை எழுத்தாணி யுடன் காட்சியளிக்கிறார். திவ்ய தேசங்களில் இது போன்ற அமைப்பு வேறு எங்கும் இல்லை.

யிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ள திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயிலில். ஆதிசேஷன் மடியில் பால பெருமாளாக குழந்தை வடிவில் கிடந்த கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். பெருமாளின் திவ்ய தேசங்களில் இவ்வளவு சிறிய பெருமாளை கிடந்த கோலத்தில் தரிசிக்க முடியாது. இத்தலத்தில்தான் ஆதிசேஷன் பிரம்மாண்டமான வடிவில் தனி கோயில் கொண்டு விளங்குகிறார்.

சுவாமிமலை அருகிலுள்ள திருப்புள்ளம் பூதங்குடி  வல்வில் ராமர் பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 10 வது திவ்ய தேசம். பொதுவாக ராமர் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பார். ஆனால் இக்கோவிலில் ராமர் சயன கோலத்தில் காட்சி தருகிறார். புதனுக்குரிய பரிகார தலம். இங்கு, பித்ருக்களுக்கு பரிகாரம் செய்வது வழக்கத்தில் உள்ளது. ராமர், ஜடாயுவாகிய புள்ளிற்கு மோட்சம் கொடுத்து ஈமக்கிரியை செய்த தலமாதலால் இத்தலம் திருப்புள்ள பூதங்குடி ஆனது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com