ஜடாமுடியுடன் காட்சித்தரும் முருகன் கோவில் எங்கிருக்கிறது தெரியுமா?

Murugan temple, uthramerur...
Murugan temple
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

முருகப்பெருமான் இந்த கோவிலில் ஆறடி உயரத்தில் சுயம்புவாக ஜடாமுடியுடன் நின்றக் கோலத்தில் காட்சியளிக்கிறார். இந்தக் கோவிலில் முருகனுக்கு யானைதான் வாகனமாக உள்ளது. அதனால், இக்கோவில் திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே உருவாகியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட ஸ்தலம். இக்கோவிலில் முருகனுக்கு அருகில் வள்ளி, தெய்வானை இருவரும் ஒருசேர இணைந்து கஜவள்ளியாக காட்சித் தருகிறார்கள் என்பது மேலும் சிறப்பைக் கூட்டுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் என்னும் இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணியன் கோவில் தான் இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கோவிலாகும்.

ஒருசமயம் காசிப முனிவர் இவ்விடத்தில் தவம் செய்துக்கொண்டிருந்த பொழுது மலையன் மற்றும் மகரன் என்று இரண்டு அரக்கர்கள் வந்து அவர்களுக்கு தொல்லைக் கொடுத்தனர். இதனால் முனிவர்கள் சென்று சிவபெருமானிடம் முறையிட சிவபெருமான் முருகனை இந்த பிரச்னையை தீர்த்து வருமாறு அனுப்பி வைக்கிறார்.

முருகன் இங்கு வந்ததும் தன்னுடைய வேலை ஆசிரமத்தின் நுழைவாயிலில் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைத்துவிட்டு அசுரர்களிடம் போரிட்டு அவர்களை அழித்தார். மகரன் கொல்லப்பட்ட இடத்தை மாகரல் என்றும், மலையன் தலை விழுந்த இடம் மலையன் குளம் என்றும் இன்றைக்கும் அழைக்கப்படுகிறது. முருகர் அனுப்பிய வேல் இக்கோவிலில் இன்றைக்கும் வடமேற்கு பகுதியில் உள்ளது. இந்த வேலினுடைய ஆழம் எவ்வளவு தூரம் இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை.

இக்கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. ஏனெனில், இக்கோவிலில் முருகனுக்கு வாகனமாக மயிலுக்கு பதிலாக யானை இருக்கிறது. முருகப்பெருமானுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்தப்பொழுது இந்திரன் யானையை பரிசாக அளித்ததைக் குறிப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
தமிழ் மூதாட்டி 'ஔவையார் அம்மன்' கோயில் எங்கிருக்கிறது தெரியுமா?
Murugan temple, uthramerur...

முருகப்பெருமான் திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்தப் பிறகே அவருக்கு மயில் வாகனமாகவும், சேவல் கொடியும் வந்தது. எனவே, இக்கோவில் அதற்கு முன்பே உருவாகியிருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

இக்கோவிலில் ஐப்பசி அன்னாபிஷேகம், கந்தசஷ்டி விரதம், கார்த்திகை தீபம் போன்ற பண்டிகைகள் வெகுவிமர்சியாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் முருகப்பெருமானுக்கு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செய்கிறார்கள். எனவே, இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கோவிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது வந்து தரிசித்துவிட்டு செல்வது நன்மை பயக்கும்.

logo
Kalki Online
kalkionline.com