Vinayagar...
Vinayagar...Image credit - pixabay

பரிகாரம் செய்து பலன் கிடைக்கும் விநாயகர் தலங்கள்!

Published on

கும்பகோணம் அருகே உள்ள கொட்டையூர் கோடி விநாயகரை வழிபட்டு பின் மற்ற தெய்வங்களை வழிபட்டால் கோடி செல்வங்கள் சேரும் என்பது ஐதீகம்.

துரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள கீழ் ஆவணி மூல வீதி பைரவர் கோயிலுள்ள சோம சூரிய கணபதியை அமாவாசை நாளில் வேண்டிக் கொள்ள கிரக, நாக  தோஷங்கள் விலகும்.

காரைக்குடி அருகே உள்ள மாத்தூரில், சிவகங்கை மாவட்டம் பி.அழகாபுரியிலும் கலங்காத கண்ட விநாயகர் கோயில்கள் உள்ளன. கடன் பிரச்னையால் வாடுபவர்கள் இவர்களிடம் முறையிட கடன் பிரச்னை தீரும்.

சென்னை சவுகார்பேட்டையிலுள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் சகோதர விநாயகரை வணங்கிட பிரிந்திருக்கும் சகோதரர்கள் ஒன்று சேர்வார்கள்.

துரை மீனாட்சியம்மன் கோயிலில் ஒரு தூணில் விநாயக தாரணி எனப்படும் பெண் வடிவ விநாயகியை பார்க்கலாம். இவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து வணங்கிட திருமண தோஷம் விலகும்.

திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர்போல திருத்துறைப்பூண்டி அருகே இடும்பாவனம் சற்குணநாதர் கோயிலிலும் கடல் நுரையிலான வெள்ளை விநாயகர் அருள்கிறார்.இவருக்கு பால், பன்னீர் அபிஷேகங்கள் செய்து வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்கும்.

சுவாமிமலை கோயிலின் கொடிமரம் அருகே தெற்கு நோக்கி அமைந்துள்ள கண் கொடுத்த விநாயகரை வணங்கி வர கண் பார்வை கோளாறு குணமாகும்.

நிலக்கோட்டை அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள விநாயகரை புரோமோஷன் விநாயகர் என்பர். இவரை அறுகம்புல் சாற்றி வேண்டிய பணி உயர்வு கிடைக்கும்.

சென்னை மருந்தீஸ்வரர் கோயிலுள்ள மும்முடி விநாயகரை வேண்டிக்கொள்ள முன்னோர்கள் ஆன்மா சாந்தியடையும்.நினைத்த பேறுகளை அடையலாம்.

கோவை மாவட்டம் நெகமம் அருகில் தேவனாம் பாளையத்தில் உள்ள அமணீஸ்வரர் கோயிலுள்ள அம்பாள் பாதத்தின் கீழே உள்ள சதுர் விநாயகர்களை வணங்கிட தாய், பிள்ளைகளுக்கு இடையேயான மனக்கசப்பு தீரும்.

வேலூர் சேன்பாக்கம் செல்வ விநாயகர் கோவிலில் மூலஸ்தானத்தில் சுயம்பு மூர்த்தியாக 11விநாயகர்கள் தன் அருகிலேயே கொடிமரமும் கொண்டு அருள் பாலிக்கிறார்கள். இங்கு சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்து தீபம் ஏற்று வழிபட நல்ல பலன் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
“டார்க் டூரிசம்” என்றால் என்ன? வாங்க தெரிஞ்சுக்கலாம்!
Vinayagar...

சுருளிமலை அடிவாரத்தில் உள்ள பூத நாராயணன் பெருமாள் கோவிலில் தனி சந்நிதியில் கால்நடைகளை காக்கும் கணபதி உள்ளார். பால் சுரப்பதில் உள்ள குறைபாடு, வேறு உடல்நலக் குறைவு கால்நடைகளுக்கு ஏற்பட்டால் அதை குணமாக்கி காப்பதில் வல்லவர்.

விநாயக நர்த்தன கோலம் மிகவும் அபூர்வமான அமைப்பாகும். இப்படிப்பட்ட கோலத்தை திருப்பூர் அருகிலுள்ள ஊத்துக்குளி பெரியநாயகி அம்மன் கோவிலில் காணலாம். இவரைவழிபட்டு இனிப்பு நைவேத்தியம் படைக்க இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com