Siddhi Vinayak Temple, Siddhatek
Siddhi Vinayak Temple, SiddhatekImg Credit: Jaya_Upadhyaya and Wikipedia

பிரணவ மூர்த்தி 3 - திருமாலால் எழுப்பப்பட்ட திருக்கோயில்; என்றும் விழிப்பு நிலையில் இருக்கும் விநாயகர்!

சித்திடேக் கிராமம் அழகான பீமா நதிக்கரையில் உள்ளது. சித்திடேக்கில் ஒரு குன்றின்மேல் கிழக்கு நோக்கிக் காட்சி அளிக்கிறது கோயில். கருவறையில் சித்தி விநாயகர் கம்பீரமாக அமர்ந்து தரிசனம் அளிக்கிறார்.
Published on
deepam strip

-ஜபல்பூர் நாகராஜ சர்மா

மௌஞ்ஜீ க்ருஷ்ணாஜினதரம் நாக யஜ்ஞோபவீதினம்

பாலேந்துவிலஸன் மௌலிம் வந்தேஹம் கணநாயகம்

(முஞ்ஜப்புல், மான்தோல் இவற்றைத் தரித்திருப்பவரும், ஸர்பத்தை பூணூலாகக் கொண்டவரும், பாலச்சந்திரன் பிரகாசிக்கிற சிரஸை உடையவரும், பூத கணங்களுக்குத் தலைவருமான ஸ்ரீ மஹா கணபதியை நமஸ்கரிக்கிறேன்)

ஒருமுறை பகவான் நாராயணன் அனந்த சயனத்தில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தபோது, அவரது செவிகளிலிருந்து இரு அரக்கர்கள் தோன்றினர். மது, கைடபர் என்ற அவர்கள், வளைந்த கோரைப்பற்களுடன் பயங்கர தோற்றத்துடன் விளங்கினர். இவ்விருவரும் தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பல இன்னல்களைக் கொடுத்து வந்தனர். அச்சமுற்ற பிரம்மதேவன் உள்ளிட்ட இந்திராதி தேவர்கள் திருப்பாற்கடல் சென்று பரந்தாமனிடம் சரணடைந்தனர். ஆனால் அனந்தன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். அவர்களின் இன்னல்களை அறிந்த நித்ராதேவி, விஷ்ணுவின் கண் தழுவலை விட்டு விலகிச் சென்று விட்டாள்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com