பிரணவ மூர்த்தி 5 - ஏரியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட வரத விநாயகர்!

வரத விநாயகர் கோயில், மகாராஷ்டிர மாநிலம், ராய்கர்ஹ் மாவட்டத்தில் காலாப்பூர் தாலுக்காவில் உள்ள 'மகத்' எனும் கிராமத்தில் உள்ளது. சிறிய கோயிலாகத் தென்பட்டாலும் விமானத்தின் உச்சியில் தென்படும் தங்கக் கலசம் வெகு தூரத்திலிருந்தே பளீரெனத் தென்படுகிறது.
varad vinayak temple, Raigad
varad vinayak temple, RaigadImg Credit: Temple Connect Official and Trawell.in
Published on
deepam strip

- ஜபல்பூர் நாகராஜ சர்மா

சித்ரரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம்!

சித்ரரூபதரம் தேவம் வந்தேஹம் கணநாயகம்!!

(பலவித ரத்னங்களால் அழகிய அங்கங்களை உடையவரும், பலவித மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவரும், பலவித ரூபத்தைத் தரித்தவரும், தேவர் பூத கணங்களுக்குத் தலைவருமான ஸ்ரீமகா கணபதியை நான் நமஸ்கரிக்கின்றேன்.)

விதர்ப்ப தேசத்து அரசன் வீமராஜன். அவனது பட்டமகிஷியாக விளங்கியவள் சாருகாசினி. நல்லாட்சி, நன்மக்கள், அடி பணியும் அண்டை நாட்டு சிற்றரசர்கள் என்று இவ்வளவு வசதி பெற்றும், வம்சம் விருத்தியடைய வீமராஜன் தம்பதியருக்கு புத்ரபாக்கியம் கிட்டவில்லை. மகரிஷி விஸ்வாமித்திரர், அவர்களுக்கு விநாயகரின் ஏகாட்சர மந்திரோபதேசம் செய்து வைத்தார். மன்னன், முன்னோர்களால் தோற்றுவிக்கப்பட்ட பிள்ளையார் கோயிலுக்குச் சென்றான். அக்கோயில் வளாகத்திலேயே தன் ராணியுடன் தங்கி, ஏகாட்சர மந்திரத்தை ஜெபித்து வந்தான்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com