

சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடத்தில் கொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன் "கர்ணா, இனி இவர்களின் சொத்து அனைத்தும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீப வில்லை நீ எடுத்துக் கொள்," என்றான்.
ஆனால், கர்ணனோ காண்டீபத்தை வாங்க மறுத்து விட்டான். "நான் எனது திறமையிலும், வலிமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்கள் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை" என்று கர்ணன் சொன்னான்.
"ஆஹா, நீயல்லவோ சுத்த வீரன். அர்ஜுனன் காண்டீபத்தை நம்புகிறான். நீ உன் திறமையை நம்புகிறாய்," என்று கர்ணனை துரியோதனன் பாராட்டினான்.
அர்ஜூனன் வனவாச காலத்தில் வியாசரிடம் இதைச் சொல்லி வருத்தப்பட்டார். இதைக் கேட்டு சிரித்த வியாசர் "கர்ணன் காண்டீபத்தை மறுக்க வேறு காரணம் உள்ளது. அதை அவன் வெளிக்காட்டவில்லை" என்றார்.
"அது என்ன?" என்று ஆர்ஜுனன் கேட்க,