

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் - கும்பகோணம் சாலையில் ராஜேந்திரப் பட்டணத்தில் இருந்து இடதுபுறம் ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ஸ்ரீமுஷ்ணம் பூவராகன் திருக்கோவில்.
எத்தனையோ யுகங்களுக்கு முன்னால் மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் இந்த கலியுகத்திலும் மறுபடி அவரால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். அன்று ஹிரண்யாட்சகன் என்ற அரக்கனிடமிருந்து பூமியை அவர் காத்தார். இந்த யுகத்தில் ராஜபிளவை என்ற கொடுமையான ஒரு நோயிலிருந்து இஸ்லாமியர் ஒருவரை காத்திருக்கிறார்.
கூர்மாவதாரம் வித்தியாசமானது. பன்றி (வராகஹம்) அவதாரம் அதாவது மூக்கு நுனியில் கொம்பு உள்ள பன்றி. இந்த அவதாரத்துக்குக் காரணம் ஹிரண்யாட்சகன் என்னும் அசுரன் பூமியை மொத்தமாக பிரபஞ்சத்திலிருந்து பிடுங்கி, பெருங்கடலினுள் அமிழ்த்தி ஒளித்து சந்தோஷப்பட்டதும், அந்த ஆழ்கடலில் இருந்த பூமியை புது அவதாரம் எடுத்த பெருமாள் மூக்குக் கொம்பு அடைப்புக்குள் நிறுத்தி மேலே கொண்டு வந்து காத்ததும் தான் புராணக் கதை. அவர் இஸ்லாமியருக்கு எப்படி கனவின் மூலம் உதவினார் என்பதைக் கூறுவதே இக்கதை.