முத்தான 3 சிறுவர் கதைகள்: வாய்ப்பு வந்தா விடாதீங்க... அப்புறம் வருத்தப்படுவீங்க!

பொறுமையும், காலம் கடக்க காத்திருப்பதும், வாய்ப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் மூன்று அழகான உவமை கதைகள்
Egret, Tree, Bee
Egret, Tree, Bee
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on

1. கொக்கும் வண்டும்

ஒரு தடாகத்தோரத்தில் ஒரு கொக்கு நின்றுக்கொண்டு மீன் பிடிக்க காத்திருந்தது. சின்னஞ்சிறு மீன்கள் நீந்தி வந்தன. ஆனால் கொக்கு அவற்றை விழுங்காமல் காத்திருந்தது.

அருகே இருந்த வண்டு கேட்டது: “ஏன் இந்த சின்ன மீன்களை விட்டுவிட்டு வெறுமனே நிற்கிறாய்?”

அதற்கு கொக்கு பதிலளித்தது: “நான் ஒரு பெரிய, குண்டான உறு மீன் வரும் வரை காத்திருக்கிறேன். அதுதான் எனக்கு உண்மையான விருந்தாகும்.”

கடைசியில், பல மணி நேரம் காத்திருந்தும், உறு மீன் வராததால், அந்த கொக்கு வெறுமனே பசித்தபடி சோகத்துடன் பறந்து சென்றது.

சிந்தனை:

உறு மீன் வரும் வரை காத்திருந்த கொக்கு, சின்ன மீன்களையும் இழந்தது. சிறிய தொடக்கங்களை தவறவிடாதீர்கள்.

வாழ்க்கை தந்து வைக்கும் சிறிய வாய்ப்புகள், கடைசியில் நம்மை உற்று நோக்கிக் கேட்கும் – 'அப்போது எங்கே இருந்தாய்?' என்று.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com