ஆலமரம் எப்படி பல நூற்றாண்டுகள் வாழ்கிறது? தெரிந்துகொள்வோமா குட்டீஸ்..!

ஆலமரத்தின் நீண்ட ஆயுளுக்குப் பின்னால் இருக்கும் மர்மமான அறிவியல் காரணங்கள்.
ஆலமரம் | Banyan tree
ஆலமரம் | Banyan treeImage credit: AI Image
Updated on

ஆலமரம் பல ஆண்டுகள் வாழ்தற்குக் காரணங்கள் உண்டு. தனது பிரம்மாண்டத்தால் மனதைக் கவரும் இந்த மரங்கள் மனிதனின் சராசரி ஆயுட்காலத்தை விட அதிகமாக வாழ்கின்றன. அதற்கான காரணங்களை நாம் தெரிந்து கொள்வோம்.

ஆலமரம் மிகவும் பரவலாக பரவுவதற்கு முக்கிய காரணம் அதன் வான்வழி வேர்களாகும். இந்த தனித்துவமான வேர்கள் கிளைகளிலிருந்து வளர்ந்து, தங்கள் சுழல் கைகளை தரையில் நீட்டி, இறுதியில் அவை வேரூன்றி, இரண்டாம் நிலை கிளைகளாக நடந்து, பரந்து விரிந்து நிதானத்தை வலுப்படுத்துகின்றன.

வான்வழி வேர்கள் தரையில் உறுதியாக பதிக்கப்பட்டிருப்பதால் மரம் திடமாக நங்கூரமிடப்பட்டிருக்கிறது. மேலும் இது பலத்த காற்று மற்றும் பிற சுற்றுச் சூழல் சவால்களை எதிர்த்து நிற்கிறது.

ஆலமரம் மிக நெகிழக் கூடிய இனமாகும். ஈரப்பதமான வெப்ப மண்டலங்கள் முதல் வறண்ட இடங்கள் வரை பரந்த அளவிலான மண் வகைகள் மற்றும் காலநிலை சூழ்நிலைகளில் மரம் வளருகிறது. ஆழமான வேரூன்றிய வலையமைப்பு பூமிக்கு அடியில் உள்ள ஆழத்திலிருந்து தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை இழுக்க முடியும் என்பதால், பெரிய சிக்கலான வேர் அமைப்பு, மிகக்கடுமையான வறட்சியிலும் தன்னை வளர்த்துக் கொள்கிறது‌.

ஆலமரம் | Banyan tree
ஆலமரம் | Banyan treeImage credit: AI Image

மேலும் மகரந்தச் சேர்க்கைக்கு அவசியமான குறிப்பிட்ட வகை அத்திக் குளவிகளுடன் ஆலமரம் பரஸ்பர தொடர்பைக் கொண்டுள்ளது‌. இந்த பரஸ்பர உறவு மரத்தின் இனப்பெருக்க வெற்றி மற்றும் உயிரினங்களின் வாழ்வை உறுதி செய்கிறது.

ஆலமரத்தின் பட்டை மற்றும் இலைகளும் அதன் ஆயுளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பட்டை அடர்த்தியானது. பூச்சிகளில் இருந்து மரத்தை காக்கிறது. இலைகள் பெரியதாகவும் மெலிதாகவும் இருப்பதால் டிரான்ஸ்பிரேஷன் மூலம் நீர் இழப்பை குறைத்து மரத்தின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கின்றன. இந்த குணங்கள் மூலமாக ஆலமரம் கடுமையான சுற்றுச்சூழல் நிலைமைகளை தாங்கி பல நூற்றாண்டுகளாக வாழ்கிறது.

இதையும் படியுங்கள்:
குட்டீஸ்களா.. கோடையில் கருப்பு நிறம் ஆபத்து! ஏன் தெரியுமா?
ஆலமரம் | Banyan tree

நம் கலாசாரத்தில் ஆலமரம் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது, காக்கும் கடவுள் விஷ்ணுவின் தொடர்புடையதாக இருக்கிறது‌. பகவத் கீதையில் இந்த மரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நித்திய அடையாளமாக திகழ்திறது‌. புத்த மதத்தில் ஆலமரம் புத்தர் ஞானம் பெற்ற இடமாகக் கருதப்படுகிறது.

கல்கத்தாவில் ஹௌராவில் உள்ள ஆசார்யா ஜெகதீஷ் சந்திர போஸ் தாவரவியல் பூங்காவில் அமைந்துள்ள ஆலமரம் நாட்டின் பழமையான ஆலமரமாகும். இது 400 முதல் 500 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com