
நடு இரவு. குடிசை கதவை தட்டினார்கள்.
"அடே கோவிந்தா கதவை திற."
கோவிந்தன் அரண்மனையில் இராஜ மாதாவிடம் தனி ஆளாக உதவிகள் செய்து வேலை பார்ப்பவன்.
என்னமோ ஏதோ என்று அஞ்சியபடி கதவை திறந்தான்.
வந்தவர்கள் அரண்மனை வீரர்கள்.
உடன் அவன் கையில் விலங்கு மாட்டினார்கள்.
"அய்யோ, ஏன் விலங்கு போடுகிறீர்கள். நான் என்ன தவறு செய்தேன்" என்றான் கோவிந்தான் அதிர்ச்சியுடன்.
"இது மன்னர் உத்தரவு. ஏதாக இருந்தாலும் மன்னரிடம் கேளு," என்றான் ஒரு வீரன்.
உடன் அவன் மனைவியும் மக்களும் ஓவென அழ, கோவிந்தனை அழைத்துக்கொண்டு நடு இரவில் அரண்மனை சென்றனர்.
மன்னர் முன் நிறுத்தினர்.
"மன்னா நான் என்ன தவறு செய்தேன்?" என்று அழுதபடி கேட்டான் கோவிந்தன்.
"ம். அதை இராஜ மாதாவே கூறுவார்கள்," என்றார் மன்னர்.
கோவிந்தன் கைகட்டி வாய் பொத்தி இராஜமாதாவை பார்த்தான்.