கவிதை - வீறு கொள் தோழா!

kavithai image
kavithai imageimage credit - pixabay.com
செ. கலைவாணி

செ.கலைவாணி ஓய்வுபெற்ற தமிழாசிரியை 'சிதறிய பரல்கள் கவிதை நூல்' அடர்வன மின்மினி துளிப்பா நூல் கலையும்கைவண்ணமும் கைவினை நூல் இம்மூன்று நூல்களை வெளியிட்டுள்ளேன் என் கவிதைகள் தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன முன்னணி பெண்கள் மாத வார மின்னிதழ்களில் முன்னணி செய்தித்தாள்களில் எனது கைவேலைகள் குறித்து செய்திகள் வந்துள்ளன. துளிப்பா பேரிகை விருது கவிப்பறவை விருது சதகக்கவிஞர் விருது கவித்தென்றல் விருது போன்று பலவிருதுகள் வாங்கியுள்ளேன். என் மூச்சுக் காற்றே தமிழன்னை தான் வாழ்நாள் முழுவதும் தமிழன்னைக்குக் கவிதையாரம் சூட்டுவதே என்பணி.

Updated on

ளைஞனே வீறு கொள்

இன்முகத்தோடு  இருந்திடு.

வன்முறையை எதிர்த்து

வலிந்தே குரலெழுப்பு.

தமிழர் என்றோர்

தனித்துவம் பெற்றோர்.

தன்மானம் நிறைத்தே

தளரினும் வாழ்வர்.

பெண்ணடிமை செய்யாதே

பேதலித்து அலையாதே

பிறர் உழைப்பில்

பகட்டாய் வாழாதே!

இல்லாமை அகன்றிட

இனிதே உழைத்திடு.

இருப்பதைப் பகிர்ந்தே

இயன்றவரை உதவிடு.

பெரியோரைப் போற்றிடு

பொறுப்பாய் இருந்திடு.

நச்சுசொல் பேசாது

நாவினைக் காத்திடு.

சுருங்கச் சொல்லிடு

சுறுசுறுப்பாய்  இருந்திடு.

எளிமையாய் வாழ்ந்தே

ஏற்றம் பெற்றிடு.

ஏற்றத்தாழ்வை அகற்றிடு

ஏழ்மையை விரட்டிடு.

மனதை அடக்கியே

மகிழ்வாய் வாழ்ந்திடு.

உணவை வீணாக்காதே

உயரெண்ணம் கொண்டிடு.

நாட்டை உயர்த்த

நாளும் முயன்றிடு.

ஒழுக்கம் பேணிடு

ஒற்றுமையை விரும்பிடு.

தோழா!தோழமையோடு

தொண்டுகள் செய்திடு.

நாளைய தலைவன்

நீயென்றே உணர்ந்திடு.

வீறு கொள் தோழா

விரயமாக்காதே காலத்தை.

அன்றன்று வாழ்ந்திடு

அன்போடு பேசிடு.

logo
Kalki Online
kalkionline.com