விரல்களின் நுனியைப் பாதுகாப்பதோடு, முள் குத்தினால் அகற்ற, சுரண்ட, கிள்ளிவைக்க, ஆபத்துக் காலங்களில் பிறாண்ட, விரலுக்கு பலம் தந்து உதவ, டிபன்பாக்ஸைத் திறக்க, டூத் பேஸ்ட் பிதுக்க, பேப்பர் களைக் கிழிக்க, கிழிக்கும் முன் சரியாக மடிக்க, அரிப்பு எடுத்தால் சொறிந்துகொள்ள, மருதாணி, நெயில்பாலீஷ் போட்டுக் கையை மிக அழகாகக் காட்ட என நகத்தாலே பல பயன்கள் உண்டு குட்டீஸ்! நகங்கள் கரட்டீன் என்ற கடினமான பொருளால் ஆனது.
நகம் அழகு சேர்ப்பதுடன் அழுக்கும் சேர்க்கும். உணவு உண்ணும்போது அந்த அழுக்கு, வயிற்றுக்குள் போகும்; வியாதிகளைத் தரும்.
நகங்கள் தட்டையாகவோ, உட்புறம் குழிந்தோ இருந்தால் ரத்தசோகை எனவும், கிளிமூக்கு போல வளைந்திருந்தாலோ அல்லது நீல நிறத்தில் காணப்பட் டாலோ இதயம், மற்றும் நுரையீரல் நோய்கள் எனவும் மருத்துவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். நகம் தட்டை யாகவே ஸ்பூன் போல உட்குழிந்து காணப்பட்டால் அது இரும்புச் சத்துக் குறைபாட்டின் அறிகுறி.
நகத்தை வாயில் வைத்துக் கடிப்பது நல்ல பழக்கம் அல்ல. அதனால் வாய்ப்புண், வயிற்று உபாதைகள், நகசுத்தி போன்ற வியாதிகள் வர வாய்ப்பு அதிகம். நெயில் பாலீஷ் வாய்க்குள் போய்விடும் வாய்ப்பும் உண்டு.
நகச்சுத்தி வந்தால் எலுமிச்சம்பழம் போன்றவற்றை நகத்தில் செருகிவைக்காமல், டாக்டரிடம் காண்பித்து, மருந்து சாப்பிட்டுக் குணப்படுத்த வேண்டும்.
கை நகத்தை வாரம் ஒரு முறையும் கால் நகத்தை மாதம் இரு முறையும் வெட் டுவது அவசியம். நகவெட்டி பயன்படுத்தி எளிதில் வெட்டிப் பழகவேண்டும். எந்தக் காரணம் கொண்டும் பிளேடு, கத்தி, கத்த ரிக்கோல் கொண்டு வெட்டக்கூடாது, நக வெட்டியால் வெட்டிய பிறகு, கூரான முனைகளை நக வெட்டியில் உள்ள அரம் கொண்டு தேய்த்துவிட வேண்டும்.
நீளமாக நகம் வளர்ப்பது அழகு என்றாலும், அதில் ஆபத்து மிக அதிகம். நம்மை அறியாமலே குத்திக்கொள்ளும் வாய்ப்பு உண்டு.
மிகவும் இறுக்கமான காலணிகளை அணியும்போதும் சரியாகக் கால் நகங் களை வெட்டாதபோதும் நம் நகம் நம் கால் விரலையே குத்திக் காயம் உண்டாக்கலாம்.
எதிர்பாராத விதமாக சுத்தியால் அடிக் கும்போதோ, கதவு இடுக்கில் விரல் மாட்டிக் கொண்டாலோ நகக்கண்ணுக்குக் கீழே ரத்தம் தேங்கிக் கருப்பாக மாறி, அதிக வலியை ஏற்படுத்தும். பயப்படவேண்டாம். நகத்தின் வழியே சிறு துளைபோட்டு, ரத் தத்தை வெளியே எடுத்து, வலி மற்றும் நகம் கீழே விழுவதை தடுப்பார்கள் மருத்துவர்கள்.
நன்றாக நகம் வளர பால், பயறு, காய்கறி போன் றவை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும். தினசரி பேரீச்சம்பழம், கடலை, பச்சைக் காய்கறி, கீரை கள் உண்பதும் அவசியம்.
நாள்பட்ட அல்லது மலிவான நகச்சாயம் கலந்த உடனடி மருதாணி ஆபத்தைத் தரக்கூடும். தவிர்த்து விடுங்கள். மருதாணி இலைகளை அரைத்து நகங்களை அழகுபடுத்தலாமே!
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல,
நகத்தின் அழகு தூய்மையைத் தெரிவிக்கும்!