சிறுவர் கதை: அள்ள அள்ளக் குறையாத செல்வம்!

Short story - Grandma with grandchildren
Grandma with grandchildren
கமலா முரளி

ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை ,கமலா முரளியின் தினசரி, மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், மங்கையர்மலர், கோகுலம் இந்து தமிழ்திசையின் மாயாபஜார், சிறுவர் வனம், சொல்வனம் போன்ற பல்வேறு தளங்களில் வெளிவந்துள்ளன. இவரது “மங்கை எனும் மந்திர தீபம்” எனும் மொழிபெயர்ப்பு நூலும் “இந்துமதி கல்யாணம் எப்போ ?” என்ற சிறுகதைத் தொகுப்பு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

Updated on

அருணனும் வருணனும் நல்லூரில் வாழ்ந்து வந்தார்கள். பெற்றோர்கள் இல்லாத அவர்களை சீத்தாப்பாட்டி தான் வளர்த்து வந்தாள். சகோதரர்கள் இருவரும் பிரம்மபுரியில் உள்ள குருகுலத்தில் சேர்ந்து படிக்க விரும்பினர்.

“சரிதான் பேரப்பசங்களா ! நானும் எவ்வளவு நாள் தான் உங்களைப் பார்த்துக் கொள்ள முடியும் ? நீங்கள் பிரம்மபுரிக்குச் சென்று கல்வியும் தொழிலும் கற்று வாழ்க்கையில் முன்னேறுங்கள்” எனச் சீத்தாப்பாட்டியும் அவர்கள் பயணத்துக்கு ஏற்பாடு செய்தாள்.

அருணனும் வருணனும் புறப்படும் முன் பாட்டியின் காலில் விழுந்து வணங்கினார்கள். கட்டி அணைத்த பாட்டி, “இந்தாங்க, இதைப் பத்திரமா வச்சுக்கோங்க “ என்று சொல்லி ஒரு சுருக்குப் பையையும் ஒரு சிறு மூட்டையையும் கொடுத்தாள்.

”என்ன பாட்டி இது ?” என்றான் அருணன்.

குரலைத் தாழ்த்தி கிசுகிசுப்பாகப் பேசினாள் பாட்டி.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com