பாசக்கார அக்கா

நிழல் தந்தவளின் சோகம்
பள்ளிப் பாதை கொய்யா மரம்
Published on

அவள் ஒரு கொடை வள்ளல் கொய்யா மரம்

பார்ப்பேன் அவளை பள்ளிக்கு போகையில் அனுதினம்

பத்து கிளை கைகளோடு நிற்பாள் நிழல் தந்து

பழம் ஒண்ணொண்ணும் வெளிர் பச்சை பந்து

தின்ன வரும் கிளி கூட்டம் பழங்களை கொத்தி

சொல்லவேண்டாம் அணில்களின் அட்டகாசம் பத்தி

மரத்திலேறி பறிக்கும் பள்ளிக்கூட பசங்கள்

தோன்றிக்கொண்டே இருக்கும் கிளைகளில் பழங்கள்

பாரக்கவில்லை இவளை வெறும் மரமாய்

பாவித்தோம் பூமா தேவியின் கரமாய்

ஒரு நாள் அவள் வீட்டின் அதிபன்

அழைத்து வந்தான் ஒரு மர அறப்பன்

வெட்ட துவங்கினான் அவள் கரங்களை

மறந்து அவள் தந்த அளவற்ற பழங்களை

பறவைகள் கதறி பறந்தன நாலா புறமும்

பார்த்திட, கரையும் கல் போன்ற மனமும்

இதையும் படியுங்கள்:
சமூக ஊடகங்கள்: ஜாலியா விளையாடலாம்; ஆனா ஜாக்கிரதையா இருக்கணும் பசங்களா!
நிழல் தந்தவளின் சோகம்

உதிர்ந்த இலைகள் முறிபட்ட கிளைகள்

மிதிபட்ட பிஞ்சு காய்கள் பழங்கள்

மரம் நின்ற இடம் மாறிற்று போர் களமாய்

குழந்தைகள் கண்கள் ஆயிற்று குளமாய்

மறுநாள் வந்த போது அந்த பக்கம்

இல்லை கிளிகள் அணில்கள் சத்தம்

அப்படி ஒரு நிசப்தம் நெஞ்சை அழுத்தும்

இப்போது நினைத்தாலும் எனக்கு இதயம் கனக்கும்

இதையும் படியுங்கள்:
கதைப் பாடல்: குட்டி குட்டி சுண்டெலி!
நிழல் தந்தவளின் சோகம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com