சிறுவர் சிறுகதை: முத்தான 2 முல்லா கதைகள்

Mulla in Royal court
Intelligent Mulla stories
ஆர்.வி.பதி

கடந்த 35 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் அனைத்து முன்னணி இதழ்களில் சிறுகதை, கவிதை, நாவல், சிறுவர் இலக்கியம், பக்தி இலக்கியம், அறிவியல் என 500 க்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்தவர். இவர் எழுதி இதுவரை 125 புத்தகங்கள் வெளியாகியுள்ளன. தற்போது பதிபக்தி (PathyBakthi) என்ற யுடியூப் சேனலில் கோவில்கள் பற்றிய விரிவான தகவல்களை பதிவு செய்து வருகிறார். தனது படைப்புகளுக்காக கலைமகள் கா.ஸ்ரீ.ஸ்ரீ. விருது உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

Updated on

கதை 1:

பாதுஷாவிடம் முல்லாவிற்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. முக்கியமான விஷயங்களில் முல்லாவிடம் ஆலோசனையும் கேட்பது வழக்கம். இதனால் பாதுஷாவின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த சிலர் கூட முல்லாவின் மீது கோபத்தில் இருந்தனர். சமயம் கிடைக்கும் போது முல்லாவை பழி வாங்க வேண்டும் என்று காத்திருந்தார்கள்.

ஒரு முறை பாதுஷா முல்லாவிற்கு விருது ஒன்றை வழங்கத் தீர்மானித்து, அரசவையைக் கூட்டி அமைச்சர்களிடம் கருத்து கேட்டார்.

முல்லாவின் மீது வெறுப்பில் இருந்த சிலர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தினர்.

“நீங்கள் நினைக்கும் அளவிற்கு முல்லா ஒன்றும் பெரிய திறமைசாலி அல்ல. அவர் சாதாரண மனிதர்களைப் போலவே பேசுகிறார். சாதாரண மனிதர்கள் செய்யக் கூடிய செயல்களையே செய்து வருகிறார். அவரிடம் மனித இயல்பிற்கு மீறிய எந்த ஒரு விசேஷ திறமையும் இல்லை. எனவே, அவர் விருதுக்குத் தகுதியானவர் இல்லை” என்றார்கள்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com