வாசகர் ஜோக்ஸ் ஓவியம் : ரஜினி."எதைச் சொல்லி கடன் கேக்கறதுன்னு ஒரு வரைமுறையே இல்லாமல் போயிடுச்சே?"."என்ன சார் விஷயம்?"."குடும்பத் தலைவி உரிமைத்தொகை வந்ததும் குடுத்துடறேன், ஒருஆயிரம் கை மாத்தா குடுங்கன்னு கேக்கறான்யா…!".– வி. ரேவதி, தஞ்சை."ராணியைப் பார்த்தாத்தான் ரொம்ப பயமா இருக்குதா? என்ன சொல்றீங்க மன்னா?"."எதிரி மன்னனைப் பார்த்தா கால் ஓட ஆரம்பிச்சிடுது…ராணியப் பார்த்தா காலும் கையும் ஓட மாட்டேங்குது அமைச்சரே!".– பி.ஜி.பி.இசக்கி, சென்னை."நம்ப ஆட்சிய கலைக்க ரூபாய் 2000 கோடி வரைக்கும் செலவு பண்ணஎதிர்க்கட்சிகாரங்க ரெடி ஆயிட்டாங்க தலைவா!"."அந்தத் தொகையை நம்பகிட்டகொடுத்தா நாமளே பதவிவிலகிடுவோமேய்யா!".– வி. ரேவதி, தஞ்சை. "காபியில சர்க்கரை போட மறந்துட்டாங்கன்னு நினைக்கிறேன்!". "நீங்கதானே சார் வெறுங்காபி போதும்னு சொன்னீங்க!".– வி. ரேவதி, தஞ்சை."பில்லைப் பார்த்தாலே 'ஷாக்' அடிக்குதுன்னு சொல்றாங்க டாக்டர்."."அப்போ 'ஷாக் ட்ரீட்மென்ட்' சார்ஜையும் பில்லில் சேர்த்துவிட வேண்டியது தான்!".– ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்."அழகான இளம் பெண் ஒருத்தியை 'இவள் என் மனைவி' என்று இரு வாலிபர்கள் சொந்தம் கொண்டாடுகிறார்கள் மன்னா, என்ன செய்யலாம்?"."அவளை 'இரண்டாக வெட்டி ஆளுக்கொரு பாதி தரவா' என்று கேளுங்கள்… 'சரி' என்று சொல்பவன்தான் உண்மையான கணவன்!".– வி.ரேவதி, தஞ்சை
வாசகர் ஜோக்ஸ் ஓவியம் : ரஜினி."எதைச் சொல்லி கடன் கேக்கறதுன்னு ஒரு வரைமுறையே இல்லாமல் போயிடுச்சே?"."என்ன சார் விஷயம்?"."குடும்பத் தலைவி உரிமைத்தொகை வந்ததும் குடுத்துடறேன், ஒருஆயிரம் கை மாத்தா குடுங்கன்னு கேக்கறான்யா…!".– வி. ரேவதி, தஞ்சை."ராணியைப் பார்த்தாத்தான் ரொம்ப பயமா இருக்குதா? என்ன சொல்றீங்க மன்னா?"."எதிரி மன்னனைப் பார்த்தா கால் ஓட ஆரம்பிச்சிடுது…ராணியப் பார்த்தா காலும் கையும் ஓட மாட்டேங்குது அமைச்சரே!".– பி.ஜி.பி.இசக்கி, சென்னை."நம்ப ஆட்சிய கலைக்க ரூபாய் 2000 கோடி வரைக்கும் செலவு பண்ணஎதிர்க்கட்சிகாரங்க ரெடி ஆயிட்டாங்க தலைவா!"."அந்தத் தொகையை நம்பகிட்டகொடுத்தா நாமளே பதவிவிலகிடுவோமேய்யா!".– வி. ரேவதி, தஞ்சை. "காபியில சர்க்கரை போட மறந்துட்டாங்கன்னு நினைக்கிறேன்!". "நீங்கதானே சார் வெறுங்காபி போதும்னு சொன்னீங்க!".– வி. ரேவதி, தஞ்சை."பில்லைப் பார்த்தாலே 'ஷாக்' அடிக்குதுன்னு சொல்றாங்க டாக்டர்."."அப்போ 'ஷாக் ட்ரீட்மென்ட்' சார்ஜையும் பில்லில் சேர்த்துவிட வேண்டியது தான்!".– ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்."அழகான இளம் பெண் ஒருத்தியை 'இவள் என் மனைவி' என்று இரு வாலிபர்கள் சொந்தம் கொண்டாடுகிறார்கள் மன்னா, என்ன செய்யலாம்?"."அவளை 'இரண்டாக வெட்டி ஆளுக்கொரு பாதி தரவா' என்று கேளுங்கள்… 'சரி' என்று சொல்பவன்தான் உண்மையான கணவன்!".– வி.ரேவதி, தஞ்சை