நேர்காணல் : ராகவ் குமார்.இயக்குனர் சீனு ராமசாமி." 'மாமனிதன்' படத்தின் ஸ்கிரிப்டை சிவாஜி சாரின் வீட்டின் வாசலில் உள்ள பிள்ளையார் கோவிலில் வைத்து, பிள்ளையாரப்பா இப்படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி நடிப்பில் சிவாஜி சாரை போல நடிப்பில் பாதி அளவாவது புகழ்பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்" என்று உணர்ச்சி பூர்வமாக பேசுகிறார் டைரக்டர் சீனு ராமசாமி. இவரின் இயக்கத்தில், இளையராஜா – யுவன் இசை கூட்டணியில் விஜய்சேதுபதி நடித்திருக்கும் மாமனிதன் வெளியாகி வெற்றிப் பெற்றிருக்கிறது. அதன் டைரக்டரிடம் சில கேள்விகள்….உங்கள் மாமனிதன் யார்? ."இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்" என்ற எண்ணத்துடன் செயல்படும் உங்களைப் போன்ற மீடியாக்களும் இந்த சூழ்நிலையில் மாமனிதர்கள்தான். "மற்றவர்களின் கண்ணீரை துடைக்கவேண்டும் இந்த தேசத்திற்கு பாடுபட வேண்டும் என்று எண்ணி செயல்படும் மகாத்மாக்களும் மாமனிதர்கள்தான்.".இந்த கதையின் மாமனிதன் நீங்கள் சந்தித்த மனிதர்களா? .நம் வீட்டில் துளசி இருக்கும். வீட்டின் அருகில் அருகம்புல் இருக்கும். ஆனால், நாம் இதன் பலன்களை தெரிந்துகொண்டு கண்டுகொள்ளாமல் இருப்போம். துளசி, அருகம்புல் போல என் வாழ்க்கையில் பார்த்த மனிதர்களை இந்த படத்தில் சொல்லிருக்கிறேன். இந்த படத்தை பார்க்கும்போது உங்கள் வீட்டில் நீங்கள் பார்க்கும் மனிதர்களின் நினைவு வரலாம்..உங்களை ஆசானாக ஏற்றுகொண்ட உங்கள் மாணவர் விஜய் சேதுபதி இந்த கதையில் வந்தது எப்படி? .என் மீதும், என் கதையின் மீதும் நம்பிக்கை வைத்து விஜய்சேதுபதி இந்த கதைக்கு ஒத்துக்கொண்டார். மக்களால் விரும்பப்படும் நாயகன் "இந்த கதையை தவற விடக்கூடாது" என்று முடிவு எடுத்து விட்டார்.விஜய்சேதுபதிக்கு இந்தப் படத்தின் நடிப்பிறக்காக பல விருதுகள் கிடைப்பது உறுதி..விஜய்சேதுபதியின் ஆரம்ப நாட்களின் கதாநாயகியான காயத்ரி மீண்டும் திரையில் ஜோடி சேர்த்தது ஏன்? திரை கெமிஸ்ட்ரிக்காகவா?.நான் சிபாரிசுகளையும், வேதியல்களையும் நம்புவது இல்லை. இந்த படத்தின் கதாநாயகிக்கு இருபதைந்து, முப்பத்தைந்து, நாற்பத்தைந்து என மூன்று வயதுகளின் காலகட்டத்தில் காண்பிக்கிறேன். இந்த வேடங்களுக்கு சில ஹீரோயின்கள் நடிக்க முன்வரவில்லை. குறிப்பாக குழந்தைக்கு தாயாக நடிக்க பல ஹீரோயின்கள் தயங்கினார்கள். எனக்கு கதாபாத்திரம் தான் முக்கியம் என்று உறுதியாக நம்பி நடிக்க வந்தவர் காயத்ரி. டூயட் என்றாலும் சரி அம்மா என்றாலும் சரி என ஒத்துகொண்டார் காயத்ரி. இப்படத்திற்குப் பிறகு வேறொரு காயத்ரியின் முகத்தை திரையில் பார்க்கலாம்..இளையராஜா -யுவன் சங்கர் ராஜா இணைப்பு உங்கள் படத்தில் நடந்தது எப்படி? .ஒவ்வொரு டைரக்டருக்கும் இளையராஜாவுடன் இணைந்து படம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது யுவன் சங்கர் ராஜாவால்தான். படத்தின் தயாரிப்பாளர் யுவன். அவர் என்னிடம் "நானும் அப்பாவும் சேர்ந்து இந்தப் படத்திற்கு மியூசிக் பண்றோம். நீங்க படம் டைரக்ட் பண்ணுங்க" என்று சொன்னார். படத்திற்கு இதைவிட பெரிய பலம் என்ன வேண்டும்? இப்படத்தின் பாதிக்கும் மேற்பட்ட காட்சிகள் இளையராஜா வாழ்ந்த பண்ணைபுரம் நிலத்தில் எடுத்திருக்கிறேன். படப்பிட்டிப்பின்போது இளையராஜா சார் இங்கே எல்லாம் நடந்து இருப்பார் என எண்ணி எண்ணி மகிழ்ந்தேன்..ஒளிப்பதிவாளர் சுகுமார் என்ன ஸ்பெஷல்? .சுகுமாரிடம் 'மைனா' போல பிரம்மாண்டமாக படம் எடுக்கச் சொன்னாலும் எடுப்பார். 'மாமனிதன்' போல யதார்த்தமாக உணர்வுபூர்வ கதையிலும் ஒளிப்பதிவு செய்வார். எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் பல விருதுகள் பெற்றவர். எடிட்டிங்கில் கதைக்கு இன்னும் வலிமை சேர்ப்பது போன்று எடிட் செய்திருக்கிறார்..இன்றைய சூழ்நிலையில் மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் படங்கள் வெற்றி பெறுகின்றன. உங்களின் யதார்த்தமான படங்களுக்கு வரவேற்பு இருக்குமா?.கண்டிப்பாக இருக்கும். தமிழ் மக்கள் என்றும் புதிய படைப்புகளை, வித்தியாசமான கதை களங்களை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். இதற்கு கடந்தகால உதாரணங்களே சாட்சி. வாழ்வியலோடு கதை சொன்ன சினிமாக்கள் ஜெயித்தது கடந்தகால வரலாறு..இவ்வளவு படங்கள் தந்தும் பெரிய ஹீரோக்களை வைத்து ஏன் படம் செய்யவில்லை. நீங்கள் அணுகவில்லையா அல்லது ஹீரோக்கள் உங்களைத் தேடி வரவில்லையா?.ஹீரோக்களை தேடி நான் போயிருக்கிறேன். ஆனால், சில காரணங்களால் என் இயக்கத்தில் நடிக்க முன்வரவில்லை. அதற்கான காலங்கள் வரும்போது பெரிய ஹீரோக்களை வைத்து இயக்குவேன்.
நேர்காணல் : ராகவ் குமார்.இயக்குனர் சீனு ராமசாமி." 'மாமனிதன்' படத்தின் ஸ்கிரிப்டை சிவாஜி சாரின் வீட்டின் வாசலில் உள்ள பிள்ளையார் கோவிலில் வைத்து, பிள்ளையாரப்பா இப்படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி நடிப்பில் சிவாஜி சாரை போல நடிப்பில் பாதி அளவாவது புகழ்பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்" என்று உணர்ச்சி பூர்வமாக பேசுகிறார் டைரக்டர் சீனு ராமசாமி. இவரின் இயக்கத்தில், இளையராஜா – யுவன் இசை கூட்டணியில் விஜய்சேதுபதி நடித்திருக்கும் மாமனிதன் வெளியாகி வெற்றிப் பெற்றிருக்கிறது. அதன் டைரக்டரிடம் சில கேள்விகள்….உங்கள் மாமனிதன் யார்? ."இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்" என்ற எண்ணத்துடன் செயல்படும் உங்களைப் போன்ற மீடியாக்களும் இந்த சூழ்நிலையில் மாமனிதர்கள்தான். "மற்றவர்களின் கண்ணீரை துடைக்கவேண்டும் இந்த தேசத்திற்கு பாடுபட வேண்டும் என்று எண்ணி செயல்படும் மகாத்மாக்களும் மாமனிதர்கள்தான்.".இந்த கதையின் மாமனிதன் நீங்கள் சந்தித்த மனிதர்களா? .நம் வீட்டில் துளசி இருக்கும். வீட்டின் அருகில் அருகம்புல் இருக்கும். ஆனால், நாம் இதன் பலன்களை தெரிந்துகொண்டு கண்டுகொள்ளாமல் இருப்போம். துளசி, அருகம்புல் போல என் வாழ்க்கையில் பார்த்த மனிதர்களை இந்த படத்தில் சொல்லிருக்கிறேன். இந்த படத்தை பார்க்கும்போது உங்கள் வீட்டில் நீங்கள் பார்க்கும் மனிதர்களின் நினைவு வரலாம்..உங்களை ஆசானாக ஏற்றுகொண்ட உங்கள் மாணவர் விஜய் சேதுபதி இந்த கதையில் வந்தது எப்படி? .என் மீதும், என் கதையின் மீதும் நம்பிக்கை வைத்து விஜய்சேதுபதி இந்த கதைக்கு ஒத்துக்கொண்டார். மக்களால் விரும்பப்படும் நாயகன் "இந்த கதையை தவற விடக்கூடாது" என்று முடிவு எடுத்து விட்டார்.விஜய்சேதுபதிக்கு இந்தப் படத்தின் நடிப்பிறக்காக பல விருதுகள் கிடைப்பது உறுதி..விஜய்சேதுபதியின் ஆரம்ப நாட்களின் கதாநாயகியான காயத்ரி மீண்டும் திரையில் ஜோடி சேர்த்தது ஏன்? திரை கெமிஸ்ட்ரிக்காகவா?.நான் சிபாரிசுகளையும், வேதியல்களையும் நம்புவது இல்லை. இந்த படத்தின் கதாநாயகிக்கு இருபதைந்து, முப்பத்தைந்து, நாற்பத்தைந்து என மூன்று வயதுகளின் காலகட்டத்தில் காண்பிக்கிறேன். இந்த வேடங்களுக்கு சில ஹீரோயின்கள் நடிக்க முன்வரவில்லை. குறிப்பாக குழந்தைக்கு தாயாக நடிக்க பல ஹீரோயின்கள் தயங்கினார்கள். எனக்கு கதாபாத்திரம் தான் முக்கியம் என்று உறுதியாக நம்பி நடிக்க வந்தவர் காயத்ரி. டூயட் என்றாலும் சரி அம்மா என்றாலும் சரி என ஒத்துகொண்டார் காயத்ரி. இப்படத்திற்குப் பிறகு வேறொரு காயத்ரியின் முகத்தை திரையில் பார்க்கலாம்..இளையராஜா -யுவன் சங்கர் ராஜா இணைப்பு உங்கள் படத்தில் நடந்தது எப்படி? .ஒவ்வொரு டைரக்டருக்கும் இளையராஜாவுடன் இணைந்து படம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது யுவன் சங்கர் ராஜாவால்தான். படத்தின் தயாரிப்பாளர் யுவன். அவர் என்னிடம் "நானும் அப்பாவும் சேர்ந்து இந்தப் படத்திற்கு மியூசிக் பண்றோம். நீங்க படம் டைரக்ட் பண்ணுங்க" என்று சொன்னார். படத்திற்கு இதைவிட பெரிய பலம் என்ன வேண்டும்? இப்படத்தின் பாதிக்கும் மேற்பட்ட காட்சிகள் இளையராஜா வாழ்ந்த பண்ணைபுரம் நிலத்தில் எடுத்திருக்கிறேன். படப்பிட்டிப்பின்போது இளையராஜா சார் இங்கே எல்லாம் நடந்து இருப்பார் என எண்ணி எண்ணி மகிழ்ந்தேன்..ஒளிப்பதிவாளர் சுகுமார் என்ன ஸ்பெஷல்? .சுகுமாரிடம் 'மைனா' போல பிரம்மாண்டமாக படம் எடுக்கச் சொன்னாலும் எடுப்பார். 'மாமனிதன்' போல யதார்த்தமாக உணர்வுபூர்வ கதையிலும் ஒளிப்பதிவு செய்வார். எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் பல விருதுகள் பெற்றவர். எடிட்டிங்கில் கதைக்கு இன்னும் வலிமை சேர்ப்பது போன்று எடிட் செய்திருக்கிறார்..இன்றைய சூழ்நிலையில் மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் படங்கள் வெற்றி பெறுகின்றன. உங்களின் யதார்த்தமான படங்களுக்கு வரவேற்பு இருக்குமா?.கண்டிப்பாக இருக்கும். தமிழ் மக்கள் என்றும் புதிய படைப்புகளை, வித்தியாசமான கதை களங்களை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். இதற்கு கடந்தகால உதாரணங்களே சாட்சி. வாழ்வியலோடு கதை சொன்ன சினிமாக்கள் ஜெயித்தது கடந்தகால வரலாறு..இவ்வளவு படங்கள் தந்தும் பெரிய ஹீரோக்களை வைத்து ஏன் படம் செய்யவில்லை. நீங்கள் அணுகவில்லையா அல்லது ஹீரோக்கள் உங்களைத் தேடி வரவில்லையா?.ஹீரோக்களை தேடி நான் போயிருக்கிறேன். ஆனால், சில காரணங்களால் என் இயக்கத்தில் நடிக்க முன்வரவில்லை. அதற்கான காலங்கள் வரும்போது பெரிய ஹீரோக்களை வைத்து இயக்குவேன்.