தலையங்கம்.2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்திய பட்ஜெட் என்பது கடவுளைப் போன்றது. உருவமற்ற அந்த பிரும்மத்தைப்போல. யாருக்கு அதை எப்படிப் பார்க்க விருப்பமோ அப்படிப் பார்த்துக்கொள்ளலாம். கட்சி சார்புள்ளவர்களுக்கு அவர்கள் விருப்பப்படி பாராட்டிக்கொள்ளலாம். கட்சி சார்பில்லாதவர்களும் பாராட்டவோ விமர்சிக்கவோ செய்யலாம். ஆனால் உற்று நோக்கினால் "எந்த ஒரு சிறப்பம்சமும் இல்லை" என்பது தான் இந்த பட்ஜெட்டின் சிறப்பம்சம்..தனிநபர் வருமானவரிச் சலுகைகளை எதிர்பார்த்து இருந்த பெரும்பாலானோருக்கு இந்த பட்ஜெட் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 2014ல் இருந்து இன்று வரை வருமான உச்ச வரம்பு உயர்த்தப்படவில்லை. இவர்களில் பெரும் பகுதியினர் ஒழுங்காக வருமான வரி செலுத்துவோர். மற்றொரு பகுதியினர், அரசின் திட்டங்கள் மூலம் நிதியுதவி, உணவுப் பொருள் அல்லது வேலை பெற்று வருபவர்கள்..ஜனவரி 31 அன்று நிதியமைச்சரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2021-22 நிதியாண்டு குறித்த பொருளாதார ஆய்வறிக்கையில் பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் பொருளாதாரத்தின் மீட்சிக்குச் சிறப்புக் கவனம் கொடுக்கப்பட்டிருந்தது. பணவீக்கம், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட சர்வதேச அளவிலான சவால்களை ஆராய்ந்துள்ள இந்த அறிக்கை, அவை மாற்றமின்றித் தொடரும் பட்சத்தில், அடுத்துவரும் 2022-23-ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 முதல் 8.5 சதவீதத்தை எட்டும் என்ற எதிர்பார்ப்பை முன்வைத்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த பட்ஜெட் அமையும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சுகிறது..இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பேசப்பட்டிருக்கும் எண்களின் சுருக்கம் இது:.பட்ஜெட்டின் அளவு : ரூ.39.44 லட்சம் கோடி.மொத்த கடன் அளவு :.31.3.2022இல் ரூ.135 லட்சம் கோடி.31.3.2023இல் ரூ.152 லட்சம் கோடி.வட்டி செலவு : ரூ,9.40 லட்சம் கோடி.நிதிப் பற்றாக்குறை : ரூ.16.61 லட்சம் கோடி (இது கடன் வாங்கி ஈடுகட்டப்படும்).ராணுவத் துறைக்கு : ரூ.5.25 லட்சம் கோடி மொத்த ஆண்டு வருவாயில் 35 சதவீதம் கடன்கள் மூலம் திரட்டப்படுகிறது.ஆண்டு செலவுகளில் 20 சதவீதம் கடன்களுக்கான வட்டிக்குச் செல்கிறது..அதாவது கடந்த ஐந்து ஆண்டுகளிலிருந்த அதே நிலைதான் நீடிக்கிறது..பல கோடி மக்கள் வேலையிழந்த நிலையில் உடனடியாக வேலை வாய்ப்பைப் பெருக்க, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க, எந்த குறிப்பிட்ட திட்டமும் இந்த பட்ஜெட்டில் இல்லை. அலங்கார வார்த்தைகள் நிறைந்த மற்றொரு நிதிநிலை அறிக்கையாகவே இந்த 2022-23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையும் அமைந்திருக்கிறது..தனிநபர் வருமான வரி விகிதத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை, மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த உழவர்களுக்கு நலத்திட்டங்கள் இல்லை, பல மாநிலங்கள் ஒன்றிய அரசிடம் கோரிய திட்டங்களுக்கு நிதியுதவிக்கான திட்டமோ அறிவிப்போ இல்லை. குறிப்பாக, தமிழ்நாட்டிற்கான புதிய ரயில் திட்டங்களும் இல்லை, மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கு மாநிலங்கள் கோரிய நிவாரண நிதி ஒதுக்கீடும் இல்லை..மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தினை பேரூராட்சிப் பகுதிகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என்று மாநிலங்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீட்டினை 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் குறைத்திருப்பது, அதிர்ச்சியளிக்கிறது.2014 ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தில் மிக முக்கிய வாக்குறுதியாக இருந்தது ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பதுதான். இன்று அது அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 60 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என்று அறிவிப்பாகச் சுருங்கி உள்ளது..ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்ட சூழலில், தேர்தலுக்காக என்று விமர்சிக்கக்கூடிய அளவில் எந்தப் பெரிய அறிவிப்பும் இல்லை. இது அரசின் துணிச்சலைக் காட்டலாம். ஆனால் இந்த நேரத்தில் வளர்ச்சியை விரைவுபடுத்த, ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையே பணப் புழக்கத்தை அதிகரித்து, அதன் மூலம் செலவு செய்யும் சக்தியளித்துச் சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க இந்த பட்ஜெட் துணியவில்லை என்பது தான் உண்மை ..சுதந்திரத்தின் எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவில், அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் பேசப்பட்டிருக்கின்றன. உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் மூலம் நாட்டின் பொருளாதார கட்டமைப்பை மாற்றப்போகும் வரைபடத்தை காட்டப்பட்டிருக்கிறது. அரசு நீண்டகால அடிப்படையில் சிந்திப்பது சிறப்பான அம்சம்..ஆனால், பெரும்பான்மையான மக்களின் இன்றைய நிலையை அரசு நினைவில் கொள்ள வேண்டும். இன்று அவர்களுக்குத் தேவைப்படும் சோறும் நீரையும் இன்றே கொடுக்க வேண்டும். அதைவிடுத்து எதிர்காலத்தில் அமிர்தம் அளிக்கப்படும் போன்ற கனவுகளை காட்சியாக காட்டுவது அவர்களுக்குப் பயனளிக்காது.
தலையங்கம்.2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்திய பட்ஜெட் என்பது கடவுளைப் போன்றது. உருவமற்ற அந்த பிரும்மத்தைப்போல. யாருக்கு அதை எப்படிப் பார்க்க விருப்பமோ அப்படிப் பார்த்துக்கொள்ளலாம். கட்சி சார்புள்ளவர்களுக்கு அவர்கள் விருப்பப்படி பாராட்டிக்கொள்ளலாம். கட்சி சார்பில்லாதவர்களும் பாராட்டவோ விமர்சிக்கவோ செய்யலாம். ஆனால் உற்று நோக்கினால் "எந்த ஒரு சிறப்பம்சமும் இல்லை" என்பது தான் இந்த பட்ஜெட்டின் சிறப்பம்சம்..தனிநபர் வருமானவரிச் சலுகைகளை எதிர்பார்த்து இருந்த பெரும்பாலானோருக்கு இந்த பட்ஜெட் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 2014ல் இருந்து இன்று வரை வருமான உச்ச வரம்பு உயர்த்தப்படவில்லை. இவர்களில் பெரும் பகுதியினர் ஒழுங்காக வருமான வரி செலுத்துவோர். மற்றொரு பகுதியினர், அரசின் திட்டங்கள் மூலம் நிதியுதவி, உணவுப் பொருள் அல்லது வேலை பெற்று வருபவர்கள்..ஜனவரி 31 அன்று நிதியமைச்சரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2021-22 நிதியாண்டு குறித்த பொருளாதார ஆய்வறிக்கையில் பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் பொருளாதாரத்தின் மீட்சிக்குச் சிறப்புக் கவனம் கொடுக்கப்பட்டிருந்தது. பணவீக்கம், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட சர்வதேச அளவிலான சவால்களை ஆராய்ந்துள்ள இந்த அறிக்கை, அவை மாற்றமின்றித் தொடரும் பட்சத்தில், அடுத்துவரும் 2022-23-ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 முதல் 8.5 சதவீதத்தை எட்டும் என்ற எதிர்பார்ப்பை முன்வைத்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த பட்ஜெட் அமையும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சுகிறது..இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பேசப்பட்டிருக்கும் எண்களின் சுருக்கம் இது:.பட்ஜெட்டின் அளவு : ரூ.39.44 லட்சம் கோடி.மொத்த கடன் அளவு :.31.3.2022இல் ரூ.135 லட்சம் கோடி.31.3.2023இல் ரூ.152 லட்சம் கோடி.வட்டி செலவு : ரூ,9.40 லட்சம் கோடி.நிதிப் பற்றாக்குறை : ரூ.16.61 லட்சம் கோடி (இது கடன் வாங்கி ஈடுகட்டப்படும்).ராணுவத் துறைக்கு : ரூ.5.25 லட்சம் கோடி மொத்த ஆண்டு வருவாயில் 35 சதவீதம் கடன்கள் மூலம் திரட்டப்படுகிறது.ஆண்டு செலவுகளில் 20 சதவீதம் கடன்களுக்கான வட்டிக்குச் செல்கிறது..அதாவது கடந்த ஐந்து ஆண்டுகளிலிருந்த அதே நிலைதான் நீடிக்கிறது..பல கோடி மக்கள் வேலையிழந்த நிலையில் உடனடியாக வேலை வாய்ப்பைப் பெருக்க, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க, எந்த குறிப்பிட்ட திட்டமும் இந்த பட்ஜெட்டில் இல்லை. அலங்கார வார்த்தைகள் நிறைந்த மற்றொரு நிதிநிலை அறிக்கையாகவே இந்த 2022-23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையும் அமைந்திருக்கிறது..தனிநபர் வருமான வரி விகிதத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை, மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த உழவர்களுக்கு நலத்திட்டங்கள் இல்லை, பல மாநிலங்கள் ஒன்றிய அரசிடம் கோரிய திட்டங்களுக்கு நிதியுதவிக்கான திட்டமோ அறிவிப்போ இல்லை. குறிப்பாக, தமிழ்நாட்டிற்கான புதிய ரயில் திட்டங்களும் இல்லை, மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கு மாநிலங்கள் கோரிய நிவாரண நிதி ஒதுக்கீடும் இல்லை..மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தினை பேரூராட்சிப் பகுதிகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என்று மாநிலங்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீட்டினை 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் குறைத்திருப்பது, அதிர்ச்சியளிக்கிறது.2014 ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தில் மிக முக்கிய வாக்குறுதியாக இருந்தது ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பதுதான். இன்று அது அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 60 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என்று அறிவிப்பாகச் சுருங்கி உள்ளது..ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்ட சூழலில், தேர்தலுக்காக என்று விமர்சிக்கக்கூடிய அளவில் எந்தப் பெரிய அறிவிப்பும் இல்லை. இது அரசின் துணிச்சலைக் காட்டலாம். ஆனால் இந்த நேரத்தில் வளர்ச்சியை விரைவுபடுத்த, ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையே பணப் புழக்கத்தை அதிகரித்து, அதன் மூலம் செலவு செய்யும் சக்தியளித்துச் சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க இந்த பட்ஜெட் துணியவில்லை என்பது தான் உண்மை ..சுதந்திரத்தின் எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவில், அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் பேசப்பட்டிருக்கின்றன. உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் மூலம் நாட்டின் பொருளாதார கட்டமைப்பை மாற்றப்போகும் வரைபடத்தை காட்டப்பட்டிருக்கிறது. அரசு நீண்டகால அடிப்படையில் சிந்திப்பது சிறப்பான அம்சம்..ஆனால், பெரும்பான்மையான மக்களின் இன்றைய நிலையை அரசு நினைவில் கொள்ள வேண்டும். இன்று அவர்களுக்குத் தேவைப்படும் சோறும் நீரையும் இன்றே கொடுக்க வேண்டும். அதைவிடுத்து எதிர்காலத்தில் அமிர்தம் அளிக்கப்படும் போன்ற கனவுகளை காட்சியாக காட்டுவது அவர்களுக்குப் பயனளிக்காது.