நூல் அறிமுகம்.ஞா. கலையரசி.(வாசிப்போம் – தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழு).என்றாவது ஒரு நாள் (ஹென்றி லாசன் சிறுகதைகள்).ஹென்றி லாசன் (1867-1922) ஆஸ்திரேலியாவின் சிறந்த சிறுகதையாசிரியர் என்று போற்றப்படுபவர். இவர் சிறந்த கவிஞரும் கூட. ஒன்பது வயதில் இவருக்கு ஏற்பட்ட நோய்த் தொற்றால், 14 வயதில் முற்றிலுமாகச் செவித் திறனை இழந்தவர். போதுமான வருமானமின்றிக் கடனாளியாகவும், குடிகாரராகவும் இருந்த இவருடைய குடும்ப வாழ்க்கை துயரமும், சோகமும் நிறைந்தது..இவரது படைப்புகள் பல ஆஸ்திரேலிய பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இவருடைய பெரும்பாலான படைப்புகள் ஆஸ்திரேலிய புதர்க்காடுறை மக்களை மையப்படுத்தியே அமைந்தன. புதர்க்காடுறை மக்கள் என்பவர்கள், ஆஸ்திரேலியாவில் குடியேறிய ஐரோப்பிய வந்தேறிகளே ஆவர்..இங்கிலாந்து சிறைகளில் போதுமான இடமில்லாத காரணத்தால் கைதிகளை நாடுகடத்த திட்டமிட்ட இங்கிலாந்து அரசு, தேர்ந்தெடுத்த தீவுக்கண்டம் தான் ஆஸ்திரேலியா. இங்கிலாந்திலிருந்து 1500 தண்டனைக் கைதிகளுடன் முதல் கப்பல் 1788ல் சிட்னி துறைமுகம் வந்து சேர்ந்தது. அதன்பின் தொடர்ச்சியாக கைதிகள் இங்கு அனுப்பப்பட்டனர்..தண்டனைக் காலம் முடிந்த பின்னர் இக்கைதிகள், காடுகளில் குடியேறினர், வயிற்றுப் பாட்டுக்கு ஆட்டு ரோமம் கத்தரித்தல், மந்தையோட்டுதல் ஆடுமாடு மேய்த்தல், குதிரைகளைப் பழக்குதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டனர்..இக்கைதிகளும், அடிமட்டத் தொழிலாளர்களும், சுரங்கங்களில் தங்கம் தேடி வந்த குடியேறிகளும் தாம், ஹென்றி லாசனின் கதை மாந்தர்கள். இவர் வாழ்ந்த சூழலும் இதுவே என்பதாலும், அம்மண்ணின் வாழ்வியல் பிரச்னைகளின் ஆழத்தைத் தொட்டு, அவற்றுடன் தம் சொந்த அனுபவத்தையும் தோய்த்துக் கொடுப்பதாலும், நம்மை மறந்து அக்கால ஆஸ்திரேலியாவிற்குப் பயணிக்கத் துவங்குகிறோம்!.கீதா மதிவாணன் தமிழாக்கம் செய்திருக்கும் இந்தச் சிறுகதைத் தொகுதியில் மொத்தம் 30 சிறுகதைகள் உள்ளன. ஏற்கெனவே அகநாழிகை பதிப்பகம் வெளியிட்ட நூலில், புதிதாக எட்டுக்கதைகள் சேர்த்துத் திருத்தப்பட்ட பதிப்பாகத் திருச்சி கோதை பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது..திருச்சியில் பிறந்த கீதா மதிவாணன், தற்போது ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் வசிக்கிறார். இவரது வலைப்பூ கீதமஞ்சரி. 'என் அம்மாச்சியும் மகிழம்பூக்களும்' என்ற தலைப்பில், ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளார். தற்போது 'சுட்டி உலகம்' வலைத்தளத்தில், ஆசிரியர் குழுவில் உள்ளார். 'கனலி இணைய இலக்கிய சிறப்பிதழ்களில், இவரது மொழிபெயர்ப்புகள் தொடர்ந்து வெளியாகின்றன..எங்கும் புதர் சூழ்ந்த குறுங்காடு, அச்சமூட்டும் தனிமையில் வாழும் மனிதர்கள், எலும்புக்கூடுகளாய்ப் பசுக்கள், வயிறு ஒட்டிய கன்றுகள், 'குதிரை என்றால் கேட்பவர் அதிர்ச்சியடையும் வகையில் ஒரு விலங்கு,' கோவான்னா, போஸம் போன்ற புதிய உயிரினங்கள், எப்போதுமே புழுதி படிந்த அழுக்கு உடை, 'தங்கம் கிடைக்காதா' என்ற ஏக்கத்துடன் பெரும்பாலும் தங்கச் சுரங்கங்களைப் பற்றியே உரையாடும் அடிமட்டச் சுரங்கத் தொழிலாளர்கள், என நமக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத, புதுமையான களத்தை அறிமுகம் செய்திருக்கிறார் ஆசிரியர்..முதலாவது கதையான 'மந்தையோட்டியின் மனைவி' யில் கணவன் மந்தையோட்டியாக போக வேண்டிய சூழ்நிலை ஏற்படவே, மனைவி, காட்டில் ஆண்துணையின்றி தனிமையில் வாழ்கிறாள்..அவ்வப்போது வழிப்போக்கர் மூலம் தன் பெண்மைக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை அசாத்திய துணிவாலும், நாயின் துணையாலும் முறியடிக்கிறாள். வெள்ளப்பெருக்கு, காட்டுத்தீ போன்ற இயற்கை சீற்றங்களையும் மனத்திண்மையுடன் எதிர்கொள்கிறாள்..ஒரு நாள் இரவு, அவள் வீட்டு விறகுக் குவியலுக்குள் பாம்பொன்று புகுந்து விடுகிறது. அடுக்களை மேசைமீது குழந்தைகளைத் தூங்க வைத்து, அருகில் அமர்ந்தபடி எந்நேரத்திலும் வெளிப்படும் பாம்புக்காக விடிய விடிய கண் அயராது விழிப்புடன் காத்திருக்கும் சமயத்தில், அவள் வாழ்வின் கடந்த கால நிகழ்வுகள், மனவோட்டமாக வெளிப்படுகின்றன. ஒரு வழியாக மறு நாள் காலை, தன் நாயின் துணையுடன் பாம்பைப் போராடிக் கொன்று, தீயில் எறியும் சமயம், அவள் கண்ணிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்தோடுகிறது..'பாம்பிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டோம்' என்ற தாய்மையின் ஆனந்தக் கண்ணீரா அது? 'கணவன் துணையின்றி இதுபோல் இன்னும் எத்தகைய போராட்டங்களைத் தனியாளாகத் தான் சந்திக்க வேண்டுமோ' என்ற சுய பச்சாதாபம் கண்ணீரை வரவழைத்ததா? என்று என்னால் யூகிக்க முடியவில்லையென்றாலும், அவள் அழுகையைப் பார்த்து மூத்த மகன் அம்மாவுக்குச் சொல்லும் ஆறுதல் வார்த்தைகள், என் கண்களிலும் நீரை வரவழைத்தது உண்மை..'ஆர்வியின் கடிகாரம்' என்ற கதையும் என்னை மிகவும் பாதித்தது. மழைநாள் ஒன்றில் நேரம் தெரியாமல், காலை ஆறு மணிக்கு வேலைக்குப் போக வேண்டிய பதினொன்று வயதே ஆன சிறுவன், விடிகாலை நாலு மணிக்கெல்லாம் கிளம்பிப் போய், அலுவலகப் படிக்கட்டில் படுத்துறங்கிய செய்தி, கல் மனதையும் கரையச் செய்யும். முதலாளி மனமிரங்கி அவனுக்கு ஒரு கடிகாரத்தை இலவசமாகக் கொடுத்து, அதற்கு விளம்பரமும் தேடிக் கொள்கிறார்..உடல்நிலை மிகவும் சரியில்லாத போதும், அலாரம் வைத்து எழ நினைக்கும் மகனைத் தாய் மறுநாள் வேலைக்குப் போகக்கூடாது எனக் கண்டிக்கிறாள். "வேலைக்குப் போகாவிட்டால், வேறு யாரையாவது வேலைக்கு வைத்து விடுவார்கள்; நம்மால் பட்டினி கிடக்க முடியாது அம்மா' அதனால் போயே தீருவேன்" என்று மகன் சொல்லுமிடத்தில், அப்பிஞ்சின் பசிக்கொடுமை நம்மை வாட்டுகிறது. இக்கதையின் சோக முடிவு ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மீள நெடுநேரமானது..இந்நூலின் தலைப்பான 'என்றாவது ஒரு நாள்' என்பதும் வாசிப்பவர் மனதை நெகிழ வைக்கும் கதை..எல்லைப்பகுதியில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்துக் கிளம்பும் சமயம் அழுது கொண்டே கைகளை இறுக்கமாகப் பிடித்து வழியனுப்பிய காதலியின் நினைவுகளை நண்பனிடம் பகிர்ந்து கொள்கிறான் மிச்செல்.."என்றாவது ஒரு நாள், நீ போய் அவளைத் திருமணம் செய்து கொள்வாயல்லவா?" என்ற நண்பனின் கேள்விக்கு, மிச்செல் சொல்லும் பதில் மனதை நெகிழச் செய்கிறது. "கொடிது கொடிது வறுமை கொடிது, இளமையில் வறுமை, அதை விடக் கொடிது," என்ற உண்மையைப் பறைசாற்றும் இக்கதை, மனதை மிகவும் தைத்தது..இத்தொகுதியில் இரண்டு திகிலூட்டும் கதைகள் உள்ளன. கொலைகார ஓடை, செத்தவனின் சந்து எனப்படும் மலையிடைவெளி, ஆளரவமற்ற சமவெளி. தனிமையும் திகிலுமூட்டும் சீனாக்காரனின் கல்லறை, பட்டை உரிக்கப்பட்டு வெண்மை நிறத்தில் நிர்வாணமாக நின்று நிலவொளியில் பூதாகரமாகக் காட்சியளிக்கும் யூகலிப்டஸ் காடுகள், நடக்க நடக்க யாரோ விட்டு விட்டுத் தொடர்வது போன்ற ஓசை, சீனனின் ஆவி துரத்தும் என்ற வதந்தி என காட்டு வழியே பயணிக்கும் ஒருவனின் பய உணர்வை வெளிப்படுத்தும் 'சீனத்தவனின் ஆவி' என்ற கதை, வாசிக்கும் நம்மையும் நன்றாகவே திகிலூட்டுகின்றது. திகில் கதைக்கு இன்னொரு உதாரணம்:- "பிரம்மி என்றொரு நண்பன்".இத்தொகுதியில் கிண்டல், கேலி நகைச்சுவை ஆகியவற்றுக்கும் பஞ்சமில்லை. 'புதர்க்காடுறை பூனைகள்' என்ற கதையில் வருகின்ற 'ஜேக்' என்றொரு பூனை இரவு முழுதும் வேலை செய்து ஏராள முயல்களைக் கொன்று வீட்டுக்கு இழுத்து வந்து முதலாளிக்குக் கொடுக்கும்.."எந்த இரவிலாவது கூடுதலாக வேலை செய்து விட்டோம்" என்று அதற்குத் தோன்றினால், அடுத்த நாளிரவு தானே விடுப்பெடுத்துக் கொண்டு மூன்று மைல்களுக்கு அப்பால் இருக்கும் காதலியைக் காணச் சென்றுவிடுமாம்!.'ஒற்றை சக்கர வண்டி' என்பது, ஆர்ப்பாட்டமும் அட்டகாசமும் செய்யும் மனைவியைச் சமாளித்து, வேலைக்கும் போய்க்கொண்டு உடல்நலமில்லாத மகனையும் பரிவுடன் கவனித்து ஒற்றை சக்கரமாக ஓயாமல் சுழலும் ஒரு அப்பாவின் கதை..'காடுறை கதாநாயகன்' என்ற கதையில் எவ்வளவு விலை கொடுத்தாலும் இழக்க விரும்பாத தன் குதிரையை, ஜாப் ஏன் சுட்டுக்கொன்றான்? என்பது நல்ல சஸ்பென்ஸ்..இதில் வரும் காடுறை கதாநாயகரான வைத்தியர் டெட் டிங்கோ, கடைசி வரை மர்ம மனிதராகவே காட்சி தருகிறார். கதையின் முடிவில், தம் பாசத்துக்குரிய இரண்டு கால் மிருகத்தைச் சுட்டுக் கொன்றதைப் பற்றி, போகிற போக்கில் அவர் சொல்லிச் செல்வது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது..'மலாக்கி' என்னைக் கவர்ந்த இன்னொரு கதை. தன் உணவு மற்றும் இருப்பிடத்துக்காக வாரம் ஒரு பவுண்டு மட்டுமே செலவழித்துச் சிக்கனமாக இருக்கும் மலாக்கியைக் கிண்டலும் கேலியும் செய்து வெறுப்பேற்றுகிறார்கள் நண்பர்கள்..அவனை ஒரு கோமாளியாகவே எண்ணி, அவன் துன்பத்தில் இன்பம் காண்கிறார்கள். ஆனால் இறுதியில் மலாக்கியின் தியாகம் காரணமாக அவனுக்கு ஏற்படும் முடிவு நம்மை கலங்கச் செய்கிறது. அவனுக்கு வேதனை ஏற்படுத்தியவர்கள், ஒவ்வொருவரும் குற்றவுணர்வுடன் அவரவர் பங்கை அழிக்க விரும்பும் போது, காலங்கடந்துவிடுகிறது..'அவன் மனைவிக்குத் தெரிந்து விடக்கூடாது' என்பதும், மிக நல்ல கதை. மிதமிஞ்சிய குடியால் செத்துப் போன தன் நண்பனின் சாவு பற்றி அவன் மனைவியிடம் பொய் சொல்கிறான் ஆண்டி. அவள் வருத்தப்படக் கூடாது என்பதற்காகவும், செத்துப் போன நண்பனுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பதற்காகவும் காய்ச்சலால் அவன் இறந்தான் என்றும் குடியால் இறக்கவில்லையென்றும், ஆண்டி அவளிடம் அடுக்கடுக்காகப் பொய் சொல்லத் தவிக்கும் இடம் மிக அருமை!.'பழைய நண்பர்கள்' மிகவும் நெகிழ்ச்சியான கதை. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, தம் சிறு வயது நண்பர்களைத் தேடி ஒரு புதியவர் ஊருக்கு வருகின்றார். அங்குக் கடை வைத்திருக்கும் ஒருவரிடம் அவர்களைப் பற்றி விசாரிக்கின்றார். ஆனால் அவர் தேடி வந்த யாரும் அங்கு இல்லை. பலர் இறந்துவிட்டிருக்கின்றனர். பலர் ஊரை விட்டு வேறெங்கோ சென்றுவிட்டனர்.."எல்லாமே மாறிவிட்டது. பழைய வீடுகள் மட்டும் அப்படியே இருக்கின்றன. பெயர்ப் பலகைகளும், வழிகாட்டுப் பலகைகளும் எழுத்துகள் மங்கி, பெயிண்ட் உதிர்ந்து போய் இருக்கின்றன. இருபது வருடங்களுக்கு முன் நான், பென்ஹேக், ஜிம்மி நோலெட் என நாங்கள் எல்லாரும் சேர்ந்து போட்ட கம்பிவேலி, இன்னமும் நின்று கொண்டிருக்கிறது. எல்லாம் மாறிவிட்டது. மக்களும் கூட. சரி. நான் போயாக வேண்டும். என்னைப் பிடித்து நிறுத்த இங்கு எதுவுமே இல்லை…." (பக் 191).'பிரைட்டனின் மைத்துனி' மருத்துவர்கள் யாருமில்லாத ஆளரவமற்ற காட்டுப்பாதையில் தந்தையும் மகனும் பயணிக்கும் போது, திடீரென குழந்தையின் உடல்நிலை மோசமாகிவிடுகிறது. குழந்தையை எப்படியாவது மரணத்திலிருந்து மீட்க வேண்டுமே என்ற ஒரு தந்தையின் பதற்றமும், கலக்கமும் கதை முடியும் வரை, நம்மையும் தொற்றிக் கொள்கிறது..'இரட்டை இருக்கை கோச்சு வண்டி' வாங்க ஆசைப்படும் மனைவிக்குத் தம் சக்தியை மீறிச் செலவழித்து, அவள் எதிர்பாராதபோது அதை வாங்கி அவளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் கதை!.திரி பற்றிக் கொண்ட நிலையில் பாறையைத் தகர்க்கும் வெடிமருந்து நிரம்பிய டின்னை, வாயில் கவ்விக்கொண்டு வளர்ப்பு நாய் பின்னாடியே ஓடி வர, அதனிடமிருந்து தப்பித்தால் போதும் என்ற பதற்றத்துடன், அதனை வளர்ப்பவர்கள் தலை தெறிக்க ஓடியொளியும் காட்சியை விவரிக்கும் 'வெடிகுண்டு நாய்' கதை விறுவிறுப்பும், பதற்றமும் நிறைந்தது..நாய், பூனை, சேவல் ஆகியவற்றை நன்கு அவதானித்து, அவற்றைப் பற்றித் தனித்தனிக் கதை எழுதியிருக்கிறார் ஆசிரியர். செவித்திறனை மிக இளம் வயதிலேயே இழந்த ஆசிரியர், பலவித மரங்கள் காற்றில் எழுப்பும் விதவிதமான ஓசை குறித்து எழுதியிருக்கும் பகுதி, வியக்க வைக்கின்றது.."காற்றில் யூகலிப்டஸ் மரங்கள் எழுப்பும் ஓசை குலவைச் சலசலப்பு போலவோ, ஊஷ்…ஊஷ் என்னும் ஓலம் போலவோ அல்லாது சொய்ங்..சொய்ங்… சொய்ங் என்று எப்போதும் மெல்லிய ஒலியெழுப்பியபடி இருக்கும். காற்றை நீங்கள் உணராத பொழுதுகளிலும் கூட அவற்றின் சொய்ங் ஒலியை நீங்கள் கேட்க முடியும். ஒருவகையில் தந்திக் கம்பத்தைப் போலத்தான். …ஆனால் இந்த ஓக் மரங்கள்….. சற்று மிகையாகவோ குறைவாகவோ காற்றின் வேகத்துக்கேற்ப சொய்ங் சத்தத்தை எழுப்புகின்றன. ஒருபோதும் நிர்ணயிக்கப்பட்டதொரு அலைவரிசையைத் தாண்டிப் போனதேயில்லை, யாழின் மொத்தத் தந்திகளையும் மீட்டினாலும் எழும் உச்சபட்ச இசை போல!……" (பக் 211).மொழியாக்கம் என்று தெரியாத கீதா மதிவாணனின் தமிழ்நடை, நம் பயணத்தை எளிதாகவும், சுவை மிக்கதாகவும் ஆக்குகிறது. களமும் கருவும் தமிழுக்கு முற்றிலும் புதிது என்பதால், வாசிக்கச் சுவாரசியமான கதைத்தொகுப்பு..தமிழாக்கம் : கீதா மதிவாணன்கோதை பதிப்பகம்,திருச்சி. (+91 9080870936)விலை : ₹ 250/-
நூல் அறிமுகம்.ஞா. கலையரசி.(வாசிப்போம் – தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழு).என்றாவது ஒரு நாள் (ஹென்றி லாசன் சிறுகதைகள்).ஹென்றி லாசன் (1867-1922) ஆஸ்திரேலியாவின் சிறந்த சிறுகதையாசிரியர் என்று போற்றப்படுபவர். இவர் சிறந்த கவிஞரும் கூட. ஒன்பது வயதில் இவருக்கு ஏற்பட்ட நோய்த் தொற்றால், 14 வயதில் முற்றிலுமாகச் செவித் திறனை இழந்தவர். போதுமான வருமானமின்றிக் கடனாளியாகவும், குடிகாரராகவும் இருந்த இவருடைய குடும்ப வாழ்க்கை துயரமும், சோகமும் நிறைந்தது..இவரது படைப்புகள் பல ஆஸ்திரேலிய பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இவருடைய பெரும்பாலான படைப்புகள் ஆஸ்திரேலிய புதர்க்காடுறை மக்களை மையப்படுத்தியே அமைந்தன. புதர்க்காடுறை மக்கள் என்பவர்கள், ஆஸ்திரேலியாவில் குடியேறிய ஐரோப்பிய வந்தேறிகளே ஆவர்..இங்கிலாந்து சிறைகளில் போதுமான இடமில்லாத காரணத்தால் கைதிகளை நாடுகடத்த திட்டமிட்ட இங்கிலாந்து அரசு, தேர்ந்தெடுத்த தீவுக்கண்டம் தான் ஆஸ்திரேலியா. இங்கிலாந்திலிருந்து 1500 தண்டனைக் கைதிகளுடன் முதல் கப்பல் 1788ல் சிட்னி துறைமுகம் வந்து சேர்ந்தது. அதன்பின் தொடர்ச்சியாக கைதிகள் இங்கு அனுப்பப்பட்டனர்..தண்டனைக் காலம் முடிந்த பின்னர் இக்கைதிகள், காடுகளில் குடியேறினர், வயிற்றுப் பாட்டுக்கு ஆட்டு ரோமம் கத்தரித்தல், மந்தையோட்டுதல் ஆடுமாடு மேய்த்தல், குதிரைகளைப் பழக்குதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டனர்..இக்கைதிகளும், அடிமட்டத் தொழிலாளர்களும், சுரங்கங்களில் தங்கம் தேடி வந்த குடியேறிகளும் தாம், ஹென்றி லாசனின் கதை மாந்தர்கள். இவர் வாழ்ந்த சூழலும் இதுவே என்பதாலும், அம்மண்ணின் வாழ்வியல் பிரச்னைகளின் ஆழத்தைத் தொட்டு, அவற்றுடன் தம் சொந்த அனுபவத்தையும் தோய்த்துக் கொடுப்பதாலும், நம்மை மறந்து அக்கால ஆஸ்திரேலியாவிற்குப் பயணிக்கத் துவங்குகிறோம்!.கீதா மதிவாணன் தமிழாக்கம் செய்திருக்கும் இந்தச் சிறுகதைத் தொகுதியில் மொத்தம் 30 சிறுகதைகள் உள்ளன. ஏற்கெனவே அகநாழிகை பதிப்பகம் வெளியிட்ட நூலில், புதிதாக எட்டுக்கதைகள் சேர்த்துத் திருத்தப்பட்ட பதிப்பாகத் திருச்சி கோதை பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது..திருச்சியில் பிறந்த கீதா மதிவாணன், தற்போது ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் வசிக்கிறார். இவரது வலைப்பூ கீதமஞ்சரி. 'என் அம்மாச்சியும் மகிழம்பூக்களும்' என்ற தலைப்பில், ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளார். தற்போது 'சுட்டி உலகம்' வலைத்தளத்தில், ஆசிரியர் குழுவில் உள்ளார். 'கனலி இணைய இலக்கிய சிறப்பிதழ்களில், இவரது மொழிபெயர்ப்புகள் தொடர்ந்து வெளியாகின்றன..எங்கும் புதர் சூழ்ந்த குறுங்காடு, அச்சமூட்டும் தனிமையில் வாழும் மனிதர்கள், எலும்புக்கூடுகளாய்ப் பசுக்கள், வயிறு ஒட்டிய கன்றுகள், 'குதிரை என்றால் கேட்பவர் அதிர்ச்சியடையும் வகையில் ஒரு விலங்கு,' கோவான்னா, போஸம் போன்ற புதிய உயிரினங்கள், எப்போதுமே புழுதி படிந்த அழுக்கு உடை, 'தங்கம் கிடைக்காதா' என்ற ஏக்கத்துடன் பெரும்பாலும் தங்கச் சுரங்கங்களைப் பற்றியே உரையாடும் அடிமட்டச் சுரங்கத் தொழிலாளர்கள், என நமக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத, புதுமையான களத்தை அறிமுகம் செய்திருக்கிறார் ஆசிரியர்..முதலாவது கதையான 'மந்தையோட்டியின் மனைவி' யில் கணவன் மந்தையோட்டியாக போக வேண்டிய சூழ்நிலை ஏற்படவே, மனைவி, காட்டில் ஆண்துணையின்றி தனிமையில் வாழ்கிறாள்..அவ்வப்போது வழிப்போக்கர் மூலம் தன் பெண்மைக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை அசாத்திய துணிவாலும், நாயின் துணையாலும் முறியடிக்கிறாள். வெள்ளப்பெருக்கு, காட்டுத்தீ போன்ற இயற்கை சீற்றங்களையும் மனத்திண்மையுடன் எதிர்கொள்கிறாள்..ஒரு நாள் இரவு, அவள் வீட்டு விறகுக் குவியலுக்குள் பாம்பொன்று புகுந்து விடுகிறது. அடுக்களை மேசைமீது குழந்தைகளைத் தூங்க வைத்து, அருகில் அமர்ந்தபடி எந்நேரத்திலும் வெளிப்படும் பாம்புக்காக விடிய விடிய கண் அயராது விழிப்புடன் காத்திருக்கும் சமயத்தில், அவள் வாழ்வின் கடந்த கால நிகழ்வுகள், மனவோட்டமாக வெளிப்படுகின்றன. ஒரு வழியாக மறு நாள் காலை, தன் நாயின் துணையுடன் பாம்பைப் போராடிக் கொன்று, தீயில் எறியும் சமயம், அவள் கண்ணிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்தோடுகிறது..'பாம்பிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டோம்' என்ற தாய்மையின் ஆனந்தக் கண்ணீரா அது? 'கணவன் துணையின்றி இதுபோல் இன்னும் எத்தகைய போராட்டங்களைத் தனியாளாகத் தான் சந்திக்க வேண்டுமோ' என்ற சுய பச்சாதாபம் கண்ணீரை வரவழைத்ததா? என்று என்னால் யூகிக்க முடியவில்லையென்றாலும், அவள் அழுகையைப் பார்த்து மூத்த மகன் அம்மாவுக்குச் சொல்லும் ஆறுதல் வார்த்தைகள், என் கண்களிலும் நீரை வரவழைத்தது உண்மை..'ஆர்வியின் கடிகாரம்' என்ற கதையும் என்னை மிகவும் பாதித்தது. மழைநாள் ஒன்றில் நேரம் தெரியாமல், காலை ஆறு மணிக்கு வேலைக்குப் போக வேண்டிய பதினொன்று வயதே ஆன சிறுவன், விடிகாலை நாலு மணிக்கெல்லாம் கிளம்பிப் போய், அலுவலகப் படிக்கட்டில் படுத்துறங்கிய செய்தி, கல் மனதையும் கரையச் செய்யும். முதலாளி மனமிரங்கி அவனுக்கு ஒரு கடிகாரத்தை இலவசமாகக் கொடுத்து, அதற்கு விளம்பரமும் தேடிக் கொள்கிறார்..உடல்நிலை மிகவும் சரியில்லாத போதும், அலாரம் வைத்து எழ நினைக்கும் மகனைத் தாய் மறுநாள் வேலைக்குப் போகக்கூடாது எனக் கண்டிக்கிறாள். "வேலைக்குப் போகாவிட்டால், வேறு யாரையாவது வேலைக்கு வைத்து விடுவார்கள்; நம்மால் பட்டினி கிடக்க முடியாது அம்மா' அதனால் போயே தீருவேன்" என்று மகன் சொல்லுமிடத்தில், அப்பிஞ்சின் பசிக்கொடுமை நம்மை வாட்டுகிறது. இக்கதையின் சோக முடிவு ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மீள நெடுநேரமானது..இந்நூலின் தலைப்பான 'என்றாவது ஒரு நாள்' என்பதும் வாசிப்பவர் மனதை நெகிழ வைக்கும் கதை..எல்லைப்பகுதியில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்துக் கிளம்பும் சமயம் அழுது கொண்டே கைகளை இறுக்கமாகப் பிடித்து வழியனுப்பிய காதலியின் நினைவுகளை நண்பனிடம் பகிர்ந்து கொள்கிறான் மிச்செல்.."என்றாவது ஒரு நாள், நீ போய் அவளைத் திருமணம் செய்து கொள்வாயல்லவா?" என்ற நண்பனின் கேள்விக்கு, மிச்செல் சொல்லும் பதில் மனதை நெகிழச் செய்கிறது. "கொடிது கொடிது வறுமை கொடிது, இளமையில் வறுமை, அதை விடக் கொடிது," என்ற உண்மையைப் பறைசாற்றும் இக்கதை, மனதை மிகவும் தைத்தது..இத்தொகுதியில் இரண்டு திகிலூட்டும் கதைகள் உள்ளன. கொலைகார ஓடை, செத்தவனின் சந்து எனப்படும் மலையிடைவெளி, ஆளரவமற்ற சமவெளி. தனிமையும் திகிலுமூட்டும் சீனாக்காரனின் கல்லறை, பட்டை உரிக்கப்பட்டு வெண்மை நிறத்தில் நிர்வாணமாக நின்று நிலவொளியில் பூதாகரமாகக் காட்சியளிக்கும் யூகலிப்டஸ் காடுகள், நடக்க நடக்க யாரோ விட்டு விட்டுத் தொடர்வது போன்ற ஓசை, சீனனின் ஆவி துரத்தும் என்ற வதந்தி என காட்டு வழியே பயணிக்கும் ஒருவனின் பய உணர்வை வெளிப்படுத்தும் 'சீனத்தவனின் ஆவி' என்ற கதை, வாசிக்கும் நம்மையும் நன்றாகவே திகிலூட்டுகின்றது. திகில் கதைக்கு இன்னொரு உதாரணம்:- "பிரம்மி என்றொரு நண்பன்".இத்தொகுதியில் கிண்டல், கேலி நகைச்சுவை ஆகியவற்றுக்கும் பஞ்சமில்லை. 'புதர்க்காடுறை பூனைகள்' என்ற கதையில் வருகின்ற 'ஜேக்' என்றொரு பூனை இரவு முழுதும் வேலை செய்து ஏராள முயல்களைக் கொன்று வீட்டுக்கு இழுத்து வந்து முதலாளிக்குக் கொடுக்கும்.."எந்த இரவிலாவது கூடுதலாக வேலை செய்து விட்டோம்" என்று அதற்குத் தோன்றினால், அடுத்த நாளிரவு தானே விடுப்பெடுத்துக் கொண்டு மூன்று மைல்களுக்கு அப்பால் இருக்கும் காதலியைக் காணச் சென்றுவிடுமாம்!.'ஒற்றை சக்கர வண்டி' என்பது, ஆர்ப்பாட்டமும் அட்டகாசமும் செய்யும் மனைவியைச் சமாளித்து, வேலைக்கும் போய்க்கொண்டு உடல்நலமில்லாத மகனையும் பரிவுடன் கவனித்து ஒற்றை சக்கரமாக ஓயாமல் சுழலும் ஒரு அப்பாவின் கதை..'காடுறை கதாநாயகன்' என்ற கதையில் எவ்வளவு விலை கொடுத்தாலும் இழக்க விரும்பாத தன் குதிரையை, ஜாப் ஏன் சுட்டுக்கொன்றான்? என்பது நல்ல சஸ்பென்ஸ்..இதில் வரும் காடுறை கதாநாயகரான வைத்தியர் டெட் டிங்கோ, கடைசி வரை மர்ம மனிதராகவே காட்சி தருகிறார். கதையின் முடிவில், தம் பாசத்துக்குரிய இரண்டு கால் மிருகத்தைச் சுட்டுக் கொன்றதைப் பற்றி, போகிற போக்கில் அவர் சொல்லிச் செல்வது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது..'மலாக்கி' என்னைக் கவர்ந்த இன்னொரு கதை. தன் உணவு மற்றும் இருப்பிடத்துக்காக வாரம் ஒரு பவுண்டு மட்டுமே செலவழித்துச் சிக்கனமாக இருக்கும் மலாக்கியைக் கிண்டலும் கேலியும் செய்து வெறுப்பேற்றுகிறார்கள் நண்பர்கள்..அவனை ஒரு கோமாளியாகவே எண்ணி, அவன் துன்பத்தில் இன்பம் காண்கிறார்கள். ஆனால் இறுதியில் மலாக்கியின் தியாகம் காரணமாக அவனுக்கு ஏற்படும் முடிவு நம்மை கலங்கச் செய்கிறது. அவனுக்கு வேதனை ஏற்படுத்தியவர்கள், ஒவ்வொருவரும் குற்றவுணர்வுடன் அவரவர் பங்கை அழிக்க விரும்பும் போது, காலங்கடந்துவிடுகிறது..'அவன் மனைவிக்குத் தெரிந்து விடக்கூடாது' என்பதும், மிக நல்ல கதை. மிதமிஞ்சிய குடியால் செத்துப் போன தன் நண்பனின் சாவு பற்றி அவன் மனைவியிடம் பொய் சொல்கிறான் ஆண்டி. அவள் வருத்தப்படக் கூடாது என்பதற்காகவும், செத்துப் போன நண்பனுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பதற்காகவும் காய்ச்சலால் அவன் இறந்தான் என்றும் குடியால் இறக்கவில்லையென்றும், ஆண்டி அவளிடம் அடுக்கடுக்காகப் பொய் சொல்லத் தவிக்கும் இடம் மிக அருமை!.'பழைய நண்பர்கள்' மிகவும் நெகிழ்ச்சியான கதை. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, தம் சிறு வயது நண்பர்களைத் தேடி ஒரு புதியவர் ஊருக்கு வருகின்றார். அங்குக் கடை வைத்திருக்கும் ஒருவரிடம் அவர்களைப் பற்றி விசாரிக்கின்றார். ஆனால் அவர் தேடி வந்த யாரும் அங்கு இல்லை. பலர் இறந்துவிட்டிருக்கின்றனர். பலர் ஊரை விட்டு வேறெங்கோ சென்றுவிட்டனர்.."எல்லாமே மாறிவிட்டது. பழைய வீடுகள் மட்டும் அப்படியே இருக்கின்றன. பெயர்ப் பலகைகளும், வழிகாட்டுப் பலகைகளும் எழுத்துகள் மங்கி, பெயிண்ட் உதிர்ந்து போய் இருக்கின்றன. இருபது வருடங்களுக்கு முன் நான், பென்ஹேக், ஜிம்மி நோலெட் என நாங்கள் எல்லாரும் சேர்ந்து போட்ட கம்பிவேலி, இன்னமும் நின்று கொண்டிருக்கிறது. எல்லாம் மாறிவிட்டது. மக்களும் கூட. சரி. நான் போயாக வேண்டும். என்னைப் பிடித்து நிறுத்த இங்கு எதுவுமே இல்லை…." (பக் 191).'பிரைட்டனின் மைத்துனி' மருத்துவர்கள் யாருமில்லாத ஆளரவமற்ற காட்டுப்பாதையில் தந்தையும் மகனும் பயணிக்கும் போது, திடீரென குழந்தையின் உடல்நிலை மோசமாகிவிடுகிறது. குழந்தையை எப்படியாவது மரணத்திலிருந்து மீட்க வேண்டுமே என்ற ஒரு தந்தையின் பதற்றமும், கலக்கமும் கதை முடியும் வரை, நம்மையும் தொற்றிக் கொள்கிறது..'இரட்டை இருக்கை கோச்சு வண்டி' வாங்க ஆசைப்படும் மனைவிக்குத் தம் சக்தியை மீறிச் செலவழித்து, அவள் எதிர்பாராதபோது அதை வாங்கி அவளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் கதை!.திரி பற்றிக் கொண்ட நிலையில் பாறையைத் தகர்க்கும் வெடிமருந்து நிரம்பிய டின்னை, வாயில் கவ்விக்கொண்டு வளர்ப்பு நாய் பின்னாடியே ஓடி வர, அதனிடமிருந்து தப்பித்தால் போதும் என்ற பதற்றத்துடன், அதனை வளர்ப்பவர்கள் தலை தெறிக்க ஓடியொளியும் காட்சியை விவரிக்கும் 'வெடிகுண்டு நாய்' கதை விறுவிறுப்பும், பதற்றமும் நிறைந்தது..நாய், பூனை, சேவல் ஆகியவற்றை நன்கு அவதானித்து, அவற்றைப் பற்றித் தனித்தனிக் கதை எழுதியிருக்கிறார் ஆசிரியர். செவித்திறனை மிக இளம் வயதிலேயே இழந்த ஆசிரியர், பலவித மரங்கள் காற்றில் எழுப்பும் விதவிதமான ஓசை குறித்து எழுதியிருக்கும் பகுதி, வியக்க வைக்கின்றது.."காற்றில் யூகலிப்டஸ் மரங்கள் எழுப்பும் ஓசை குலவைச் சலசலப்பு போலவோ, ஊஷ்…ஊஷ் என்னும் ஓலம் போலவோ அல்லாது சொய்ங்..சொய்ங்… சொய்ங் என்று எப்போதும் மெல்லிய ஒலியெழுப்பியபடி இருக்கும். காற்றை நீங்கள் உணராத பொழுதுகளிலும் கூட அவற்றின் சொய்ங் ஒலியை நீங்கள் கேட்க முடியும். ஒருவகையில் தந்திக் கம்பத்தைப் போலத்தான். …ஆனால் இந்த ஓக் மரங்கள்….. சற்று மிகையாகவோ குறைவாகவோ காற்றின் வேகத்துக்கேற்ப சொய்ங் சத்தத்தை எழுப்புகின்றன. ஒருபோதும் நிர்ணயிக்கப்பட்டதொரு அலைவரிசையைத் தாண்டிப் போனதேயில்லை, யாழின் மொத்தத் தந்திகளையும் மீட்டினாலும் எழும் உச்சபட்ச இசை போல!……" (பக் 211).மொழியாக்கம் என்று தெரியாத கீதா மதிவாணனின் தமிழ்நடை, நம் பயணத்தை எளிதாகவும், சுவை மிக்கதாகவும் ஆக்குகிறது. களமும் கருவும் தமிழுக்கு முற்றிலும் புதிது என்பதால், வாசிக்கச் சுவாரசியமான கதைத்தொகுப்பு..தமிழாக்கம் : கீதா மதிவாணன்கோதை பதிப்பகம்,திருச்சி. (+91 9080870936)விலை : ₹ 250/-