உலகக் குடிமகன் – 6 .– நா.கண்ணன்.மதுரை அமெரிக்கன் கல்லூரி பலருக்கு ஊக்கமளித்து வாழ்வில் முன்னேறத் தடம் போட்ட கல்லூரி. நிறைய உதாரணங்கள் இருக்கும். "ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம்" என்பதுபோல் நாம் நடிகர் விவேக்கைச் சொல்லலாம். அவரும் அங்குப் படித்தவர்தான். அதுவொரு கிறிஸ்தவக் கல்லூரி என்றாலும் மிகவும் சுதந்திரமான சூழலைக் கொண்டிருக்கும் கல்லூரி. அமெரிக்க அலை அடிக்கடி வீசும் கல்லூரி. அமெரிக்கன் கல்லூரிக்கும், அருகிலிருக்கும் டோக் பெருமாட்டி பெண்கள் கல்லூரிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. எங்கள் ஆங்கில ஆசிரியர் வசந்தன் உருவாக்கும் ஆங்கில நாடகத்தில் நடிப்பதற்கு அக்கல்லூரிப் பெண்கள் பங்கேற்பதுண்டு. இதுவெல்லாம் மாணவர்களை கிளுகிளுப்பூட்டும் செயற்பாடுகள். அக்கல்லூரிப் பெண்கள் இங்கு வருவதும் போவதும் ஏதோ வசந்த அலை அடிப்பது போல் மாணவர்கள் உணர்வர்..1970களில்தான் புதுக்கவிதை இயக்கம் உச்சத்தில் இருக்கிறது. நா.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா போன்றோர் எடுத்துச் சென்ற ஓர் வழித்தடம். அந்த இலக்கியத்தடம் எனக்குப் பின்னால்தான் அறிமுகமாகிறது. மீரா, இன்குலாப், அப்துல் ரகுமான், நா.காமராசு, மேத்தா போன்றோர் இயங்கிய வானம்பாடி இயக்கம் அருகில் இருந்தது. மீராவின் "கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்" நூல் மாணவர்களிடையே ஒரு சுக வீணை போல் ஒலித்தது. ஆண்கள் கல்லூரி, ஆனால் பெண்களின் போக்குவரத்து, பதின்ம வயதின் ஹார்மோன் விளையாட்டு எல்லாம் சேர்ந்து என்னையும், பலரையும் ஓர் இன்பமான பதட்ட நிலையில் வைத்திருந்தன. நானும் புதுக்கவிதை எழுதத் துணிந்தேன். பெரும்பாலும் அறிவியல் மாணவர்கள் மொழிப் பாடங்களைக் கண்டு கொள்வதில்லை. ஏதோ மார்க்கு வாங்குவதற்காகப் படிப்பர். ஆனால் எனக்கோ பள்ளி நாட்களிலேயே மொழிப்போர் தொடங்கி ஓர் தமிழ் உணர்ச்சியைக் கொடுத்திருந்தது. எனவே புதுக் கவிதைக்குள் புகுவது இயல்பாக இருந்தது..புதுமுக வகுப்பில் சாலமன் பாப்பையா பாடமெடுப்பார். திருவாசகம் எடுக்கும் போது நெஞ்சை உருக்குவார். "ஒரு கிறிஸ்தவ ஆசிரியர் இப்படி சைவப்பனுவலில் தோய்ந்து எழுகிறாரே" என்றிருக்கும். ஆனால் தமிழாசிரியரான அவர் புதுக் கவிதையை எனக்கு அறிமுகப்படுத்தவில்லை. அதைச் செய்தது ஆங்கில ஆசிரியரான நெடுமாறன் அவர்கள். கவிதை என்பது மொழி தாண்டிய ஓர் உணர்வு. மொழி அதைக் கட்டமைக்கிறது. எனவே அவரது பாடத்தில் ஆங்கிலக் கவிதையும் இணையான தமிழ்க் கவிதையும் இணைந்து புறப்பட்டு எங்களை என்னென்னவோ செய்யும்..அதிலும் எனக்கோர் அதிர்ஷ்டமிருந்தது. புதுக்கவிதை நூல்கள் பட்டாம்பூச்சிகளாய் பறந்த வண்ணமிருந்தன. அப்போதெல்லாம் என்னைப் போன்ற மாணவர்களிடம் காசு புழங்குவதில்லை. நூல் வாங்கி வாசிக்கும் அளவிற்கு வசதி இல்லை. ஆனால், ஆசிரியர் நெடுமாறன் வாங்கும் அத்தனை புத்தகங்களும் எனக்கு வாசிக்கக் கிடைத்துவிடும் அவர் அறியாமலே! எவ்வாறெனில் அவரின் மைத்துனர் தாமரைச் செல்வன் எங்களோடுதான் படித்துக் கொண்டிருந்தார். பொருளாதாரம். எப்படி நண்பரானோம் எனத் தெரியவில்லை. மிக நெருக்கம். அவர் எனக்கு புதுக் கவிதையில் இருக்கும் ஆர்வம் கண்டு மாமாவின் நூலகத்திலிருந்து யாருமறியாமல் எனக்கு வாசிக்க நூல் வழங்கிக் கொண்டிருந்தார். தாமரையின் உரைவீச்சும் அற்புதமாய் இருக்கும். ஆனால், அவர் கவிதை எழுதாமல் எனக்குக் கடிதம் எழுதுவார். அதே காலக்கட்டத்தில் கி.ராஜநாராயணன் தமிழின் போக்கை வேறொரு திசைக்கு இட்டுச் சென்றிருந்தார். அதில் ஊஞ்சல் இலக்கியம் என்பதோர் வகை. அது கடுதாசி இலக்கியம், அவர் பாணியில். ஆனால் இதையெல்லாம் அறியாமல் நானும் தாமரையும் ஊஞ்சல் இலக்கியம் படைத்துக் கொண்டிருந்தோம். ஆக அறிவியல் கற்றுக் கொண்டிருந்த அதே சமயம் தமிழ் என்னை வலுவாய் பிடித்துக் கொண்டது..எனக்கு அறிவியல் பாடம் சொல்லிக் கொடுத்த பலர் அமெரிக்காவிற்கு மேற்கல்வி கற்கச் சென்று அங்கேயே செட்டிலாகியிருக்கின்றனர். அமெரிக்கா செல்ல வேண்டும் என என்னுள் ஆசை கிளம்ப அதுவுமொரு காரணம். அப்போதுதான் மெதுவாக ஆய்வுக் கல்வி என்பது அறிமுகமாகிறது. அதிர்ஷ்டவசமாக நான் படித்த காலத்தில் மதுரைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று அமெரிக்கன் கல்லூரியைத் தேர்வு செய்து எங்களுக்குப் பாடம் சொல்லித்தர வந்திருந்தார் முனைவர் துவாரகநாத். ரொம்ப சாத்வீகமான மனிதர். அதட்டிப்பேசமாட்டார். எதற்கெடுத்தாலும் ஓர் புன்னகை அல்லது சிரிப்பு. எனக்கு அவரை மிகவும் பிடித்துப் போனது. புத்தகம், புத்தகமாக நாங்கள் படிக்கும் பல்வேறு துறை சார் நூல்கள் அனைத்தும் அடிப்படையாக பரிசோதனைச் சாலையில், இயற்கை வெளியில் பரிசோதனை செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகள் என்று வெகுகாலம் எனக்குத் தெரியவில்லை. பள்ளிக் காலங்களில் பாடத்தை நெட்டுருப்போட்டு பரிட்சையில் எழுத வேண்டும் என்று மட்டும் தெரிந்திருந்தது. புதுமுக வகுப்பு என்பது ஏறக்குறைய பள்ளிப்படிப்பு போலத்தான் இருந்தது. ஆனால், இளங்கலை அறிவியல் எனும் பாடத்திட்டம் முதன் முறையாக ஆய்வு நூல்களை எனக்கு அறிமுகப்படுத்தியது. அது ஆய்வு நூல் என எப்படித் தெரியுமென்றால், ஒவ்வொரு அத்தியாயத்தின் கீழும் உசாத்துணை பட்டியல் இருக்கும். அதாவது அந்த நூலை எழுதும் ஆசிரியர் தனது ஆய்வின் அடிப்படையிலும், சக விஞ்ஞானிகளின் ஆய்வின் அடிப்படையிலும் கருத்துக்களை அமைத்து வழங்குவார். ஒரு நூல் பத்து ஆண்டுகள் படிப்பிக்கப்பட்டுவிட்டால் கட்டாயம் அடுத்த படி (எடிசன்) வெளியாக வேண்டும். இல்லையெனில், அறிவியலின் புதிய வழித்தடம் அறியாமல் பின் தங்கிவிடுவோம். அவ்வகையில் அமெரிக்கன் கல்லூரியின் டேனியல் புவர் நூலகம் மிகவும் பின் தங்கி விடாமல் புதிய நூல்களை வாங்கிய வண்ணமிருந்தது. அந்த நூலகம் எனக்கு மிகவும் பிடிக்கும். அங்கிருந்துதான் நான் என் சூழலியல் நூல்களைப் பெற்றுக் கொள்வேன்..வளரும் பிற நாடுகளை நோக்கும்போது இந்தியா தன் எதிர்காலத்தைக் கல்வியில் வித்திட்டது நாம் பெற்ற பாக்கியம். இந்தியா சுதந்திர மடைந்ததும் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு கல்வியகங்களே இந்தியாவின் கோயில்கள். "மூளைக் கழிவு" என்பது தவிர்க்கவியலாதது எனினும் நாம் கல்வியில்தான் முதலீடு செய்ய வேண்டும் எனப் பிடிவாதமாக இருந்தார். அதனால் பயனுற்ற இலட்சக்கணக்கான இந்தியர்களுள் நானும் ஒருவன் மூளைக்கழிவு என்பது இந்தியாவில் கல்வி கற்று வெளிநாட்டில் சௌகரியமாக வாழ்வது. அது தவிர்க்கவியலாதது என்பதை நேரு அறிந்திருந்தார். இதைக் காண்பிக்கும் ஓர் நிகழ்வுண்டு. 60-70 களில் ஜெர்மனி தலையெடுக்கத் தொடங்கிய நேரம். பெரும்பாலான ஆண்களைப் போரில் இழந்து மனித வளமற்ற ஓர் நிலை. நாட்டின் முன்னேற்றத்திற்கு நிறைய மனிதர்கள் தேவைப்பட்டனர். எனவே ஜெர்மன் அரசு, நேருவிடம் இந்தியர்களை ஜெர்மனிக்கு அனுப்பி உதவ முடியுமா? எனக்கேட்டிருக்கிறது. அப்போதெல்லாம் இந்திய நாணயத்தின் மதிப்பு ஜெர்மன் மார்க்கு (நாணயம்) ஒப்பாக இருந்திருக்கிறது. நேரு சொன்ன பதில் எவ்வளவு மனிதநேயமிக்கது எனப் புரிந்துகொள்ள வேண்டும். நேரு சொல்லியிருக்கிறார், நாங்கள் மனிதர்களைத் தருகிறோம். வந்து சேரும் மக்கள் உழைத்து பிள்ளை குட்டிகளோடு ஜெர்மனியில் வாழவே ஆசைப்படுவர். எனவே, அவர்களுக்கு நீங்கள் குடியுரிமை வழங்க வேண்டுமெனக் கேட்டிருக்கிறார். இவரது தொலைநோக்கை அறியாத ஜெர்மனி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. வெறும் ஒப்பந்தக் கூலிகளாகவே இந்தியர்களைப் பாவிக்க நினைத்திருக்கிறது. எனவே ஒரு உடன்படிக்கை உருவாகவில்லை. ஆனால், இந்தியர்களுக்குப் பதில் துருக்கியரை இறக்கியது ஜெர்மனி. நேரு சொன்ன மாதிரியே இன்று இலட்சக்கணக்கான துருக்கியர் ஜெர்மனியில் தங்கிவிட்டனர். வேறு வழியில்லாமல் ஜெர்மனி அவர்களுக்குக் குடியுரிமை வழங்கிவிட்டது. இதைத்தான் நேரு முன்னமே சொன்னார்!.(தொடரும்)
உலகக் குடிமகன் – 6 .– நா.கண்ணன்.மதுரை அமெரிக்கன் கல்லூரி பலருக்கு ஊக்கமளித்து வாழ்வில் முன்னேறத் தடம் போட்ட கல்லூரி. நிறைய உதாரணங்கள் இருக்கும். "ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம்" என்பதுபோல் நாம் நடிகர் விவேக்கைச் சொல்லலாம். அவரும் அங்குப் படித்தவர்தான். அதுவொரு கிறிஸ்தவக் கல்லூரி என்றாலும் மிகவும் சுதந்திரமான சூழலைக் கொண்டிருக்கும் கல்லூரி. அமெரிக்க அலை அடிக்கடி வீசும் கல்லூரி. அமெரிக்கன் கல்லூரிக்கும், அருகிலிருக்கும் டோக் பெருமாட்டி பெண்கள் கல்லூரிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. எங்கள் ஆங்கில ஆசிரியர் வசந்தன் உருவாக்கும் ஆங்கில நாடகத்தில் நடிப்பதற்கு அக்கல்லூரிப் பெண்கள் பங்கேற்பதுண்டு. இதுவெல்லாம் மாணவர்களை கிளுகிளுப்பூட்டும் செயற்பாடுகள். அக்கல்லூரிப் பெண்கள் இங்கு வருவதும் போவதும் ஏதோ வசந்த அலை அடிப்பது போல் மாணவர்கள் உணர்வர்..1970களில்தான் புதுக்கவிதை இயக்கம் உச்சத்தில் இருக்கிறது. நா.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா போன்றோர் எடுத்துச் சென்ற ஓர் வழித்தடம். அந்த இலக்கியத்தடம் எனக்குப் பின்னால்தான் அறிமுகமாகிறது. மீரா, இன்குலாப், அப்துல் ரகுமான், நா.காமராசு, மேத்தா போன்றோர் இயங்கிய வானம்பாடி இயக்கம் அருகில் இருந்தது. மீராவின் "கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்" நூல் மாணவர்களிடையே ஒரு சுக வீணை போல் ஒலித்தது. ஆண்கள் கல்லூரி, ஆனால் பெண்களின் போக்குவரத்து, பதின்ம வயதின் ஹார்மோன் விளையாட்டு எல்லாம் சேர்ந்து என்னையும், பலரையும் ஓர் இன்பமான பதட்ட நிலையில் வைத்திருந்தன. நானும் புதுக்கவிதை எழுதத் துணிந்தேன். பெரும்பாலும் அறிவியல் மாணவர்கள் மொழிப் பாடங்களைக் கண்டு கொள்வதில்லை. ஏதோ மார்க்கு வாங்குவதற்காகப் படிப்பர். ஆனால் எனக்கோ பள்ளி நாட்களிலேயே மொழிப்போர் தொடங்கி ஓர் தமிழ் உணர்ச்சியைக் கொடுத்திருந்தது. எனவே புதுக் கவிதைக்குள் புகுவது இயல்பாக இருந்தது..புதுமுக வகுப்பில் சாலமன் பாப்பையா பாடமெடுப்பார். திருவாசகம் எடுக்கும் போது நெஞ்சை உருக்குவார். "ஒரு கிறிஸ்தவ ஆசிரியர் இப்படி சைவப்பனுவலில் தோய்ந்து எழுகிறாரே" என்றிருக்கும். ஆனால் தமிழாசிரியரான அவர் புதுக் கவிதையை எனக்கு அறிமுகப்படுத்தவில்லை. அதைச் செய்தது ஆங்கில ஆசிரியரான நெடுமாறன் அவர்கள். கவிதை என்பது மொழி தாண்டிய ஓர் உணர்வு. மொழி அதைக் கட்டமைக்கிறது. எனவே அவரது பாடத்தில் ஆங்கிலக் கவிதையும் இணையான தமிழ்க் கவிதையும் இணைந்து புறப்பட்டு எங்களை என்னென்னவோ செய்யும்..அதிலும் எனக்கோர் அதிர்ஷ்டமிருந்தது. புதுக்கவிதை நூல்கள் பட்டாம்பூச்சிகளாய் பறந்த வண்ணமிருந்தன. அப்போதெல்லாம் என்னைப் போன்ற மாணவர்களிடம் காசு புழங்குவதில்லை. நூல் வாங்கி வாசிக்கும் அளவிற்கு வசதி இல்லை. ஆனால், ஆசிரியர் நெடுமாறன் வாங்கும் அத்தனை புத்தகங்களும் எனக்கு வாசிக்கக் கிடைத்துவிடும் அவர் அறியாமலே! எவ்வாறெனில் அவரின் மைத்துனர் தாமரைச் செல்வன் எங்களோடுதான் படித்துக் கொண்டிருந்தார். பொருளாதாரம். எப்படி நண்பரானோம் எனத் தெரியவில்லை. மிக நெருக்கம். அவர் எனக்கு புதுக் கவிதையில் இருக்கும் ஆர்வம் கண்டு மாமாவின் நூலகத்திலிருந்து யாருமறியாமல் எனக்கு வாசிக்க நூல் வழங்கிக் கொண்டிருந்தார். தாமரையின் உரைவீச்சும் அற்புதமாய் இருக்கும். ஆனால், அவர் கவிதை எழுதாமல் எனக்குக் கடிதம் எழுதுவார். அதே காலக்கட்டத்தில் கி.ராஜநாராயணன் தமிழின் போக்கை வேறொரு திசைக்கு இட்டுச் சென்றிருந்தார். அதில் ஊஞ்சல் இலக்கியம் என்பதோர் வகை. அது கடுதாசி இலக்கியம், அவர் பாணியில். ஆனால் இதையெல்லாம் அறியாமல் நானும் தாமரையும் ஊஞ்சல் இலக்கியம் படைத்துக் கொண்டிருந்தோம். ஆக அறிவியல் கற்றுக் கொண்டிருந்த அதே சமயம் தமிழ் என்னை வலுவாய் பிடித்துக் கொண்டது..எனக்கு அறிவியல் பாடம் சொல்லிக் கொடுத்த பலர் அமெரிக்காவிற்கு மேற்கல்வி கற்கச் சென்று அங்கேயே செட்டிலாகியிருக்கின்றனர். அமெரிக்கா செல்ல வேண்டும் என என்னுள் ஆசை கிளம்ப அதுவுமொரு காரணம். அப்போதுதான் மெதுவாக ஆய்வுக் கல்வி என்பது அறிமுகமாகிறது. அதிர்ஷ்டவசமாக நான் படித்த காலத்தில் மதுரைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று அமெரிக்கன் கல்லூரியைத் தேர்வு செய்து எங்களுக்குப் பாடம் சொல்லித்தர வந்திருந்தார் முனைவர் துவாரகநாத். ரொம்ப சாத்வீகமான மனிதர். அதட்டிப்பேசமாட்டார். எதற்கெடுத்தாலும் ஓர் புன்னகை அல்லது சிரிப்பு. எனக்கு அவரை மிகவும் பிடித்துப் போனது. புத்தகம், புத்தகமாக நாங்கள் படிக்கும் பல்வேறு துறை சார் நூல்கள் அனைத்தும் அடிப்படையாக பரிசோதனைச் சாலையில், இயற்கை வெளியில் பரிசோதனை செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகள் என்று வெகுகாலம் எனக்குத் தெரியவில்லை. பள்ளிக் காலங்களில் பாடத்தை நெட்டுருப்போட்டு பரிட்சையில் எழுத வேண்டும் என்று மட்டும் தெரிந்திருந்தது. புதுமுக வகுப்பு என்பது ஏறக்குறைய பள்ளிப்படிப்பு போலத்தான் இருந்தது. ஆனால், இளங்கலை அறிவியல் எனும் பாடத்திட்டம் முதன் முறையாக ஆய்வு நூல்களை எனக்கு அறிமுகப்படுத்தியது. அது ஆய்வு நூல் என எப்படித் தெரியுமென்றால், ஒவ்வொரு அத்தியாயத்தின் கீழும் உசாத்துணை பட்டியல் இருக்கும். அதாவது அந்த நூலை எழுதும் ஆசிரியர் தனது ஆய்வின் அடிப்படையிலும், சக விஞ்ஞானிகளின் ஆய்வின் அடிப்படையிலும் கருத்துக்களை அமைத்து வழங்குவார். ஒரு நூல் பத்து ஆண்டுகள் படிப்பிக்கப்பட்டுவிட்டால் கட்டாயம் அடுத்த படி (எடிசன்) வெளியாக வேண்டும். இல்லையெனில், அறிவியலின் புதிய வழித்தடம் அறியாமல் பின் தங்கிவிடுவோம். அவ்வகையில் அமெரிக்கன் கல்லூரியின் டேனியல் புவர் நூலகம் மிகவும் பின் தங்கி விடாமல் புதிய நூல்களை வாங்கிய வண்ணமிருந்தது. அந்த நூலகம் எனக்கு மிகவும் பிடிக்கும். அங்கிருந்துதான் நான் என் சூழலியல் நூல்களைப் பெற்றுக் கொள்வேன்..வளரும் பிற நாடுகளை நோக்கும்போது இந்தியா தன் எதிர்காலத்தைக் கல்வியில் வித்திட்டது நாம் பெற்ற பாக்கியம். இந்தியா சுதந்திர மடைந்ததும் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு கல்வியகங்களே இந்தியாவின் கோயில்கள். "மூளைக் கழிவு" என்பது தவிர்க்கவியலாதது எனினும் நாம் கல்வியில்தான் முதலீடு செய்ய வேண்டும் எனப் பிடிவாதமாக இருந்தார். அதனால் பயனுற்ற இலட்சக்கணக்கான இந்தியர்களுள் நானும் ஒருவன் மூளைக்கழிவு என்பது இந்தியாவில் கல்வி கற்று வெளிநாட்டில் சௌகரியமாக வாழ்வது. அது தவிர்க்கவியலாதது என்பதை நேரு அறிந்திருந்தார். இதைக் காண்பிக்கும் ஓர் நிகழ்வுண்டு. 60-70 களில் ஜெர்மனி தலையெடுக்கத் தொடங்கிய நேரம். பெரும்பாலான ஆண்களைப் போரில் இழந்து மனித வளமற்ற ஓர் நிலை. நாட்டின் முன்னேற்றத்திற்கு நிறைய மனிதர்கள் தேவைப்பட்டனர். எனவே ஜெர்மன் அரசு, நேருவிடம் இந்தியர்களை ஜெர்மனிக்கு அனுப்பி உதவ முடியுமா? எனக்கேட்டிருக்கிறது. அப்போதெல்லாம் இந்திய நாணயத்தின் மதிப்பு ஜெர்மன் மார்க்கு (நாணயம்) ஒப்பாக இருந்திருக்கிறது. நேரு சொன்ன பதில் எவ்வளவு மனிதநேயமிக்கது எனப் புரிந்துகொள்ள வேண்டும். நேரு சொல்லியிருக்கிறார், நாங்கள் மனிதர்களைத் தருகிறோம். வந்து சேரும் மக்கள் உழைத்து பிள்ளை குட்டிகளோடு ஜெர்மனியில் வாழவே ஆசைப்படுவர். எனவே, அவர்களுக்கு நீங்கள் குடியுரிமை வழங்க வேண்டுமெனக் கேட்டிருக்கிறார். இவரது தொலைநோக்கை அறியாத ஜெர்மனி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. வெறும் ஒப்பந்தக் கூலிகளாகவே இந்தியர்களைப் பாவிக்க நினைத்திருக்கிறது. எனவே ஒரு உடன்படிக்கை உருவாகவில்லை. ஆனால், இந்தியர்களுக்குப் பதில் துருக்கியரை இறக்கியது ஜெர்மனி. நேரு சொன்ன மாதிரியே இன்று இலட்சக்கணக்கான துருக்கியர் ஜெர்மனியில் தங்கிவிட்டனர். வேறு வழியில்லாமல் ஜெர்மனி அவர்களுக்குக் குடியுரிமை வழங்கிவிட்டது. இதைத்தான் நேரு முன்னமே சொன்னார்!.(தொடரும்)