கவர் ஸ்டோரி.– ஆதித்யா."ஆஸ்கார் விருது" என்பது உலகெங்கும் இருக்கும் திரைத்துறையினரின் கனவு. அந்த விருதுக்கு தேர்வுக்காக பரிந்துரை செய்யப்படுவதே ஒரு கெளவரம் என்றளவுக்கு பெருமைபெற்ற இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் குழுவில் உறுப்பினராக பணியாற்ற அழைக்கப்பட்டிருக்கிறார் நடிகர் சூர்யா. இது அவருக்கு மட்டுமில்லை,100 ஆண்டுகால வரலாறு கொண்ட தமிழ் திரையுலகுக்கே பெருமை..நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், சினிமா செய்தி தொடர்பாளர்கள், ஒலி வடிவமைப்பாளர்கள், கலை இயக்குநர்கள், கதாசிரியர்கள், விஷுவல் எபெஃக்ட் கலைஞர்கள், குறும்படம் மற்றும் ஆவணப்பட இயக்குநர்கள், கௌரவ உறுப்பினர்கள் என உலகெங்கும் உள்ள 397 திரைத் துறையினர் 2022ஆம் ஆண்டுக்கான உறுப்பினர்களாக சேர அகாடமியால் அழைக்கப்பட்டுள்ளனர். அதில் இந்தியாவிலிருந்து அழைக்கபட்ட ஐவரில் சூர்யாவும் ஒருவர். நடிகை கஜோல், இயக்குநர் ரீமா காக்தி, ஆவணப்பட இயக்குநர்கள் சுஷ்மித் கோஷ், ரிண்டூ தாமஸ் ஆகியோர் மற்றவர்கள். இந்த ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் 44% பெண்கள், 50% பேர் அமெரிக்காவுக்கு வெளியே உள்ள 53 நாடுகள் மற்றும் பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.யார் இந்த ஆஸ்கார்?.இந்த ஆஸ்கார் விருதை வழங்குவது "அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ்" என்ற அமைப்பு. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட திரைத் துறையினரை உள்ளடக்கிய ஓர் அமைப்பு. உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி திரைத்துறையினர் இதில் உறுப்பினர்களாக இருப்பார்கள்..சிறந்த திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுகள் வழங்குவதுடன், திரைத்துறையின் வளர்ச்சிக்கும் இந்த அமைப்பு உதவி வருகிறது. பலர் எண்ணிக் கொண்டிருப்பதுபோல இந்த ஆஸ்கார் விருது, இந்த அமைப்பின் நிறுவனர் பெயரில் வழங்கப்படவில்லை. 1929 முதல் வழங்கப்படும் இந்த பரிசு, முதலில் 'அகாடமி அவார்ட்ஸ்' என்றுதான் அழைக்கப்பட்டது. விருதாக ஒரு தங்கமுலாம் பூசப்பட்ட வெண்கலத்தில் வடிவமைக்கப்பட்ட ஒரு மனிதன் சிலை வழங்கப்படும். விருதுகள் வழங்கத் தொடங்கிய 4 வது ஆண்டில் அகாடமியின் தலைவராக இருந்த மார்கெர்ட் இந்த சிலையைப் பார்த்து, "அட இது என் மாமாவைப் போலிருக்கிறதே" என்று சொன்னார். அந்த ஆண்டு முதல் இந்த விருது "ஆஸ்கார் விருது" என்று அழைக்கப்படுகிறது. உலகமறிந்த பெயர் ஆஸ்கார். ஆனால், அதற்கு காரணமாகயிருந்த அந்த மாமா யாரென்று தெரியவில்லை..இந்த உறுப்பினர்களை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள்?.திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களில் பணியாற்றுபவர்கள் மட்டுமே இதில் உறுப்பினராக முடியும்..கதாசிரியர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என வெவ்வேறு துறையினருக்கும் தனித்தனியாக இதில் மொத்தம் 17 கிளைகள் உள்ளன. இதில் திரை துறையைச் சார்ந்த எந்த ஒருவரும் விண்ணப்பிப்பதன் மூலம் உறுப்பினராகிவிட முடியாது. ஏற்கெனவே உறுப்பினராக இருக்கும் இரண்டு பேர் முன்மொழிவதன் மூலம் மட்டுமே இதில் உறுப்பினராக முடியும். ஆண்டுதோறும் இவ்வாறு முன்மொழியப்படும் பெயர்கள் அனைத்தும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அவர்களில் தகுதியானவர்கள் என்று கருதப்படுபவர்களுக்கு மட்டுமே உறுப்பினராக சேர்வதற்கான அழைப்பு அனுப்பப்படும். அவ்வாறே 2022ஆம் ஆண்டுக்கான அழைப்பு உலகெங்கும் 397 பேருக்கு இந்த ஆண்டு அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் இடம்பெற்ற இந்திய நடிகர்கள் நம்ம சூரியாவும், கஜோலும். இவர்களை முன்மொழிந்தவர்கள் யார் என்பது ரகசியம்..அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் உறுப்பினர்கள் என்ன செய்வார்கள்?.அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ்-இல் உறுப்பினர்களாக இருப்பவர்கள் சிறந்த படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் படங்களில் "எவற்றுக்கு அந்த விருதை வழங்கலாம்" என்று வாக்களிக்கலாம். ஒவ்வொரு துறையிலும் அதிக உறுப்பினர்களின் வாக்குகளைப் பெரும் படங்கள் அந்தந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகும்..இந்த ஆஸ்கார் விவகாரத்தில் சில விதிகள் இருக்கின்றன. ஒரு துறையைச் சார்ந்த அகாடமி மெம்பர்கள்தான் அந்தத்துறையில் நாமினேட் செய்யமுடியும். டைரக்டர்கள் – டைரக்டர்களை, நடிகர்கள் – நடிகர்களை , என்று இப்படி! நாமினேஷன் படிவங்கள் வந்ததும் அதன் மீது அகாடமி மெம்பர்களிடம் வாக்கெடுப்பு நடத்துகிறார்கள். 'நாமினேஷன்', 'வாக்கெடுப்பு' என்ற இந்த இரண்டு நிலைகளிலும் ஒரு பெரிய ஆடிட்டர் நிறுவனம் மிக ரகசியமாகச் செயல்படுகிறது. இந்த ஆடிட்டர் நிறுவனம் வாக்குகளை மிகவும் ரகசியமாகப் பரிசீலனை செய்து முடிவை கவரில் சீல் வைத்து அகாடமியிடம் அளித்துவிடுகிறது..ஏன் இந்த ஆஸ்கார் விருது பெரிதும் மதிக்கப்படுகிறது?.உலகளவில் திரைப்படங்களுக்கு அந்தந்த துறையைச் சார்ந்தவர்களே விருதுக்குத் தகுதி பெறுபவர்களை நாமினேஷன் செய்வதாலும் அதில் ஒருவர் பெறுவதாலும் இந்த விருதுகள் சிறப்பைப் பெறுகின்றன. மேலும் இந்த விருது தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுவதால் உலகம் முழுவதிலும் இருக்கும் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது..அத்தகைய ஒரு விருதுக்கு திரைப்படங்களைப் பரிந்துரைக்கும் உலகளாவிய உறுப்பினர் குழுவில் இடம் பெறும் தமிழ் திறைத்துறை கலைஞர் சூர்யா பாராட்டுக்குரியவர்.
கவர் ஸ்டோரி.– ஆதித்யா."ஆஸ்கார் விருது" என்பது உலகெங்கும் இருக்கும் திரைத்துறையினரின் கனவு. அந்த விருதுக்கு தேர்வுக்காக பரிந்துரை செய்யப்படுவதே ஒரு கெளவரம் என்றளவுக்கு பெருமைபெற்ற இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் குழுவில் உறுப்பினராக பணியாற்ற அழைக்கப்பட்டிருக்கிறார் நடிகர் சூர்யா. இது அவருக்கு மட்டுமில்லை,100 ஆண்டுகால வரலாறு கொண்ட தமிழ் திரையுலகுக்கே பெருமை..நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், சினிமா செய்தி தொடர்பாளர்கள், ஒலி வடிவமைப்பாளர்கள், கலை இயக்குநர்கள், கதாசிரியர்கள், விஷுவல் எபெஃக்ட் கலைஞர்கள், குறும்படம் மற்றும் ஆவணப்பட இயக்குநர்கள், கௌரவ உறுப்பினர்கள் என உலகெங்கும் உள்ள 397 திரைத் துறையினர் 2022ஆம் ஆண்டுக்கான உறுப்பினர்களாக சேர அகாடமியால் அழைக்கப்பட்டுள்ளனர். அதில் இந்தியாவிலிருந்து அழைக்கபட்ட ஐவரில் சூர்யாவும் ஒருவர். நடிகை கஜோல், இயக்குநர் ரீமா காக்தி, ஆவணப்பட இயக்குநர்கள் சுஷ்மித் கோஷ், ரிண்டூ தாமஸ் ஆகியோர் மற்றவர்கள். இந்த ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் 44% பெண்கள், 50% பேர் அமெரிக்காவுக்கு வெளியே உள்ள 53 நாடுகள் மற்றும் பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.யார் இந்த ஆஸ்கார்?.இந்த ஆஸ்கார் விருதை வழங்குவது "அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ்" என்ற அமைப்பு. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட திரைத் துறையினரை உள்ளடக்கிய ஓர் அமைப்பு. உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி திரைத்துறையினர் இதில் உறுப்பினர்களாக இருப்பார்கள்..சிறந்த திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுகள் வழங்குவதுடன், திரைத்துறையின் வளர்ச்சிக்கும் இந்த அமைப்பு உதவி வருகிறது. பலர் எண்ணிக் கொண்டிருப்பதுபோல இந்த ஆஸ்கார் விருது, இந்த அமைப்பின் நிறுவனர் பெயரில் வழங்கப்படவில்லை. 1929 முதல் வழங்கப்படும் இந்த பரிசு, முதலில் 'அகாடமி அவார்ட்ஸ்' என்றுதான் அழைக்கப்பட்டது. விருதாக ஒரு தங்கமுலாம் பூசப்பட்ட வெண்கலத்தில் வடிவமைக்கப்பட்ட ஒரு மனிதன் சிலை வழங்கப்படும். விருதுகள் வழங்கத் தொடங்கிய 4 வது ஆண்டில் அகாடமியின் தலைவராக இருந்த மார்கெர்ட் இந்த சிலையைப் பார்த்து, "அட இது என் மாமாவைப் போலிருக்கிறதே" என்று சொன்னார். அந்த ஆண்டு முதல் இந்த விருது "ஆஸ்கார் விருது" என்று அழைக்கப்படுகிறது. உலகமறிந்த பெயர் ஆஸ்கார். ஆனால், அதற்கு காரணமாகயிருந்த அந்த மாமா யாரென்று தெரியவில்லை..இந்த உறுப்பினர்களை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள்?.திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களில் பணியாற்றுபவர்கள் மட்டுமே இதில் உறுப்பினராக முடியும்..கதாசிரியர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என வெவ்வேறு துறையினருக்கும் தனித்தனியாக இதில் மொத்தம் 17 கிளைகள் உள்ளன. இதில் திரை துறையைச் சார்ந்த எந்த ஒருவரும் விண்ணப்பிப்பதன் மூலம் உறுப்பினராகிவிட முடியாது. ஏற்கெனவே உறுப்பினராக இருக்கும் இரண்டு பேர் முன்மொழிவதன் மூலம் மட்டுமே இதில் உறுப்பினராக முடியும். ஆண்டுதோறும் இவ்வாறு முன்மொழியப்படும் பெயர்கள் அனைத்தும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அவர்களில் தகுதியானவர்கள் என்று கருதப்படுபவர்களுக்கு மட்டுமே உறுப்பினராக சேர்வதற்கான அழைப்பு அனுப்பப்படும். அவ்வாறே 2022ஆம் ஆண்டுக்கான அழைப்பு உலகெங்கும் 397 பேருக்கு இந்த ஆண்டு அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் இடம்பெற்ற இந்திய நடிகர்கள் நம்ம சூரியாவும், கஜோலும். இவர்களை முன்மொழிந்தவர்கள் யார் என்பது ரகசியம்..அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் உறுப்பினர்கள் என்ன செய்வார்கள்?.அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ்-இல் உறுப்பினர்களாக இருப்பவர்கள் சிறந்த படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் படங்களில் "எவற்றுக்கு அந்த விருதை வழங்கலாம்" என்று வாக்களிக்கலாம். ஒவ்வொரு துறையிலும் அதிக உறுப்பினர்களின் வாக்குகளைப் பெரும் படங்கள் அந்தந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகும்..இந்த ஆஸ்கார் விவகாரத்தில் சில விதிகள் இருக்கின்றன. ஒரு துறையைச் சார்ந்த அகாடமி மெம்பர்கள்தான் அந்தத்துறையில் நாமினேட் செய்யமுடியும். டைரக்டர்கள் – டைரக்டர்களை, நடிகர்கள் – நடிகர்களை , என்று இப்படி! நாமினேஷன் படிவங்கள் வந்ததும் அதன் மீது அகாடமி மெம்பர்களிடம் வாக்கெடுப்பு நடத்துகிறார்கள். 'நாமினேஷன்', 'வாக்கெடுப்பு' என்ற இந்த இரண்டு நிலைகளிலும் ஒரு பெரிய ஆடிட்டர் நிறுவனம் மிக ரகசியமாகச் செயல்படுகிறது. இந்த ஆடிட்டர் நிறுவனம் வாக்குகளை மிகவும் ரகசியமாகப் பரிசீலனை செய்து முடிவை கவரில் சீல் வைத்து அகாடமியிடம் அளித்துவிடுகிறது..ஏன் இந்த ஆஸ்கார் விருது பெரிதும் மதிக்கப்படுகிறது?.உலகளவில் திரைப்படங்களுக்கு அந்தந்த துறையைச் சார்ந்தவர்களே விருதுக்குத் தகுதி பெறுபவர்களை நாமினேஷன் செய்வதாலும் அதில் ஒருவர் பெறுவதாலும் இந்த விருதுகள் சிறப்பைப் பெறுகின்றன. மேலும் இந்த விருது தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுவதால் உலகம் முழுவதிலும் இருக்கும் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது..அத்தகைய ஒரு விருதுக்கு திரைப்படங்களைப் பரிந்துரைக்கும் உலகளாவிய உறுப்பினர் குழுவில் இடம் பெறும் தமிழ் திறைத்துறை கலைஞர் சூர்யா பாராட்டுக்குரியவர்.