ஓவியம்: ரஜினி."எந்த வேலையா இருந்தாலும் என் மனைவி உடனுக்குடன் செய்துடணும்னு நினைப்பா!"."அவங்க ரொம்ப சுறுசுறுப்புன்னு சொல்லுங்க..?"."சுறுசுறுப்பா… நான் செய்யணும்னு நினைப்பா…".– வி.ரேவதி, தஞ்சை."கம்பி வாங்க கடைக்கு வர்றியா கபாலி?"."நான் எதுக்கு வரணும்?"."உன் அனுபவத்தில் ஸ்ட்ராங் கம்பியைப் பார்த்து எடுத்துக்கொடு…".– ஏ.நாகராஜன், பம்மல்."எதுக்கு சார் என் பையனை அடிச்சீங்க.?"."ஒரு புஷ்பத்தைப் பற்றி கட்டுரை எழுதிக்கொண்டு வான்னு சொன்னேன். இவன் 'புஷ்பா' பட விமர்சனக் கட்டுரை எழுதிக்கொண்டு வந்துருக்கான்!".– கே.இந்து குமரப்பன், விழுப்புரம்..நடிகை : "பேட்டி எடுத்த நிருபர், நான் சொன்னதை அப்படியே தலைகீழா மாத்திப் போட்டுட்டாரு மம்மி…?".அம்மா: "என்ன போட்டாரு?".நடிகை : " 'சம்பளம் பிடிச்சிருந்தா கதையே இல்லாட்டிகூட நடிப்பேன்'னு நான் சொன்னதை, 'கதை பிடிச்சிருந்தா சம்பளம் இல்லாமலே நடிப்பேன்'னு எழுதிட்டாரு மம்மி.".– வி.ரேவதி, தஞ்சை." உக்ரைன் சண்டையைப் பற்றிப் பேசலாம்னு அவரோட வீட்டுக்குப் போனேன்…"."சரி, என்ன ஆச்சு?"."அந்த வீட்டில் அவருக்கும் அவர் மனைவிக்கும் 'உக்ரமான' சண்டை நடந்துட்டிருந்தது…".– ஏ.நாகராஜன், பம்மல்."எங்க தலைவர் தப்பு பண்றவங்க முகத்துலயே முழிக்க மாட்டாரு!"."அப்ப உங்க தலைவர் கண்ணாடியையே பார்க்க மாட்டாருன்னு சொல்லு!".– சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா
ஓவியம்: ரஜினி."எந்த வேலையா இருந்தாலும் என் மனைவி உடனுக்குடன் செய்துடணும்னு நினைப்பா!"."அவங்க ரொம்ப சுறுசுறுப்புன்னு சொல்லுங்க..?"."சுறுசுறுப்பா… நான் செய்யணும்னு நினைப்பா…".– வி.ரேவதி, தஞ்சை."கம்பி வாங்க கடைக்கு வர்றியா கபாலி?"."நான் எதுக்கு வரணும்?"."உன் அனுபவத்தில் ஸ்ட்ராங் கம்பியைப் பார்த்து எடுத்துக்கொடு…".– ஏ.நாகராஜன், பம்மல்."எதுக்கு சார் என் பையனை அடிச்சீங்க.?"."ஒரு புஷ்பத்தைப் பற்றி கட்டுரை எழுதிக்கொண்டு வான்னு சொன்னேன். இவன் 'புஷ்பா' பட விமர்சனக் கட்டுரை எழுதிக்கொண்டு வந்துருக்கான்!".– கே.இந்து குமரப்பன், விழுப்புரம்..நடிகை : "பேட்டி எடுத்த நிருபர், நான் சொன்னதை அப்படியே தலைகீழா மாத்திப் போட்டுட்டாரு மம்மி…?".அம்மா: "என்ன போட்டாரு?".நடிகை : " 'சம்பளம் பிடிச்சிருந்தா கதையே இல்லாட்டிகூட நடிப்பேன்'னு நான் சொன்னதை, 'கதை பிடிச்சிருந்தா சம்பளம் இல்லாமலே நடிப்பேன்'னு எழுதிட்டாரு மம்மி.".– வி.ரேவதி, தஞ்சை." உக்ரைன் சண்டையைப் பற்றிப் பேசலாம்னு அவரோட வீட்டுக்குப் போனேன்…"."சரி, என்ன ஆச்சு?"."அந்த வீட்டில் அவருக்கும் அவர் மனைவிக்கும் 'உக்ரமான' சண்டை நடந்துட்டிருந்தது…".– ஏ.நாகராஜன், பம்மல்."எங்க தலைவர் தப்பு பண்றவங்க முகத்துலயே முழிக்க மாட்டாரு!"."அப்ப உங்க தலைவர் கண்ணாடியையே பார்க்க மாட்டாருன்னு சொல்லு!".– சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா