கடைசிப் பக்கம். சுஜாதா தேசிகன்.'ஆலியா பட்' நடித்த 'டார்லிங்ஸ்' என்ற திரைப்படத்தை சில நாட்கள் முன் 'ஓடிடி'யில் பார்த்தேன். ஹிந்தி தெரியாத காரணத்தால் என் விருப்பத்தேர்வாக ஆங்கிலத்தில் அதைப் பார்த்துக்கொண்டு இருக்க, ஒரு காட்சியில் ஆலியா பட் சமைத்துக்கொண்டு இருக்க, அவளுடைய சந்தேகக் கணவன் அவளைப் பார்த்து '"What's cooking?" என்பான்..ஆலியா பட்டை நிராகரித்து வசனம் எழுதியது யார் ? என்று தேட ஆரம்பித்தேன். அரைக்கால் டவுசர் போட்ட காலத்தில் 'ஜுனூன் தமிழ்'லிருந்து முன்னேறி இன்று பெரும்பாலும் ஓடிடியில் பார்க்கும் டப்பிங் படங்களின் மொழிபெயர்ப்பு தரமானதாகவே இருக்கிறது..மொழிபெயர்ப்பு செய்வதற்கு தாய்மொழியில் மொழிபெயர்ப்பாளருக்கு இனிய நடையும், எதையும் சரளமாக எடுத்துக் கூறும் ஆற்றலும் வேண்டும். இதை நான் சுஜாதாவிடம் பார்த்திருக்கிறேன்..ஒவ்வொரு சனிக்கிழமையும் அவரை நான் சந்திக்கும் போது 'ஈசாப் நீதிக் கதைகள்' (Aesop Fables) ஆங்கிலக் கதை ஒன்றை சில நிமிடங்கள் படித்துவிட்டு அதிலிருந்து ஒன்றைத் தமிழில் பத்து நிமிடத்தில் எழுதி முடிப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன். இதேபோல் ரா.கி.ரங்கராஜனின் 'பட்டாம்பூச்சி' என்ற அவருடைய படைப்பே இதற்குச் சான்று..கதையை உள்வாங்கி பிறகு அதைத் தமிழில் எழுதினால்தான் இது சாத்தியம். சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துக் கதைகளைப் பலர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விரும்பி சுஜாதாவிற்குக் கடிதம் எழுதுவார்கள். அவர்களிடம் சுஜாதா ஒரு கதையை மொழிபெயர்த்து அனுப்புங்கள் என்பார். அவர்களும் ஆர்வத்துடன் அனுப்ப, அதைப் படித்துவிட்டு நிராகரித்துவிடுவதைப் பார்த்திருக்கிறேன். அதற்கு அவர் சொல்லும் காரணம் 'கதையின் ஜீவனை அவர்கள் பிடிக்கவில்லை' என்பதுதான். அவர் இருக்கும் வரை அதை மொழிபெயர்க்க அனுமதிக்கவில்லை!.மொழிபெயர்க்கும் போது மூல ஆசிரியருக்குத் துரோகம் செய்யக் கூடாது என்பது அடிப்படை விதி. வால்மீகி வடமொழியில் இயற்றிய ராமாயணத்தைத் தமிழாக்கம் செய்த கம்பர் மூல நூலுக்கு எந்த கெடுதலும் செய்யாமல் காவிய நயம் குறையாமல் இயற்றியதால் தமிழுக்கு அருமையான நூல் ஒன்று கிடைத்து இன்றும் போற்றப்படுகிறது..திரு ரா. வீழிநாதன் – 'யாருப்பா இது ?' என்று கேட்பவர்களுக்குச் சிறு குறிப்பு – 15-5-1921-ல் தஞ்சையில் பிறந்தவரான இவர் ஹிந்தி, உருது, குஜராத்தி ஆகிய மொழிகளை நன்கு பயின்றவர். கல்கியின் 'பார்த்திபன் கனவு', 'சோலைமலை இளவரசி, ராஜாஜியின் 'பஜகோவிந்தம்' போன்ற நூல்களையும், தமிழகத்தின் பல சிறந்த சிறுகதைகளையும் ஹிந்தியில் மொழிபெயர்த்திருப்பதோடு தமிழிலக்கியம் பற்றிய பல கட்டுரைகளையும் ஹிந்தியில் எழுதியவர். கல்கி ஆசிரியர் குழுவில் இருந்தவர். இவருடைய ஒரு கட்டுரையில் இப்படிக் கூறுகிறார்."நான் பயின்ற ஹிந்தி மொழியில் ஒரே பொருள் தருவது போலத் தோன்றும் சொற்கள் பல உள்ளன. ஆனால், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சாயல் உண்டு. அந்தச் சாயலை மனத்தளவு உணரமுடியுமே ஒழிய அதற்கான தமிழ்ச் சொல்லுக்குத் தவம் கிடக்க வேண்டியதுதான்..அத்தகைய தமிழ்ச்சொல்லைக் கண்டுபிடிப்பதற்காக நான் ஒரு தந்திரம் செய்வேன். பலரிடம் பேச்சுக் கொடுக்கும் பொழுது, என் மனத்தில் உள்ள ஹிந்திச் சொல்லின் பொருளுக்கேற்பச் சூழ்நிலையைச் சிருஷ்டித்துப் பேசுவேன், சரியான சொல் கிடைத்துவிடாதா என்ற நம்பிக்கையில். சில சமயம் பலன் கிட்டும், சில சமயம் கிட்டாது" என்கிறார்..ஆஸ்ட்ரிக்ஸ் ( Asterix ) காமிக் புத்தகம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பல வயதினருக்கும் ஏற்றதாக எழுதப்பட்டுள்ளதுதான் அதன் வெற்றிக்கு காரணம். நான் சிறு வயதில் படித்த போது ஒரு folk tale போல் இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது அதில் உள்ள பல நகைச்சுவைகள் புரிந்தது. தற்போது படிக்கும்போது அதில் உள்ளச் சிலேடை(pun) உத்திகள், கிண்டல், போன்றவை புரிகிறது. போன மாதம் படிக்கும்போது மேலும் சில விஷயங்கள் வியப்பில் ஆழ்த்தியது..ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழியாக்கம் செய்யும் போது அதில் உள்ளச் சிலேடையைக் கொண்டுவருவது மிகவும் கஷ்டமான காரியம்..ஆஸ்ட்ரிக்ஸை ஃபிரெஞ்ச்சிலிருந்து ஆங்கிலத்தில் அந்தியா பெல்(Anthea Bell) மற்றும் டெரெக் ஹாக்ரிட்ஜ் (Derek Hockridge). மிகவும் அற்புதமாக மொழிபெயர்த்துள்ளார்கள். சிலசமயம் மூலத்தைவிட அழகாக!..உதாரணத்திற்கு சில கதாபாத்திரங்களின் பெயர்களைப் பாருங்கள்..ஃபிரெஞ்ச்சில் Ordralfabétix (அழுகின மீனை விற்பவர் என்று பொருள்) என்பது ஆங்கிலத்தில் "Unhygie-nix" என்று சுவையாக மொழிபெயர்த்துள்ளார்;."Assurancetourix" என்ற பாடகன் "Cacofonix" ஆகிறான் (கரடுமுரடாக கேவலமான ஒலியைக் குறிக்கும்)..இன்னும் புத்திசாலித்தனமான மொழியாக்கம் "Idéfix" என்ற நாய்க்கு (Fixed Idea – கொள்கை பிடிவாதம் ) Dogmatix ( Dogma – Fixed Idea) என்று மொழிபெயர்த்து 'Dog' என்ற பொருள் வரும்படியும் செய்தது புத்திசாலித்தனம்!.அன்றாடம் உபயோகிக்கும் 'வாட்ஸ்-ஆப்' என்று வழக்கத்தில் உள்ளச் சொல்லை, தமிழில் 'பகிரி' 'புலனம்' 'கட்செவி அஞ்சல்' என்று பிடிவாதமாக சிலர் மொழி 'பெயர்த்து' உபயோக்கிறார்கள். காலத்திற்கு ஏற்ப புதிதாகத் தோன்றி வழக்கிற்கு வரும் சொற்களை நீக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை நான் சொல்லவில்லை 'கடிசொல் இல்லைக் காலத்துப் படினே' என்கிறார் தொல்காப்பியர்.
கடைசிப் பக்கம். சுஜாதா தேசிகன்.'ஆலியா பட்' நடித்த 'டார்லிங்ஸ்' என்ற திரைப்படத்தை சில நாட்கள் முன் 'ஓடிடி'யில் பார்த்தேன். ஹிந்தி தெரியாத காரணத்தால் என் விருப்பத்தேர்வாக ஆங்கிலத்தில் அதைப் பார்த்துக்கொண்டு இருக்க, ஒரு காட்சியில் ஆலியா பட் சமைத்துக்கொண்டு இருக்க, அவளுடைய சந்தேகக் கணவன் அவளைப் பார்த்து '"What's cooking?" என்பான்..ஆலியா பட்டை நிராகரித்து வசனம் எழுதியது யார் ? என்று தேட ஆரம்பித்தேன். அரைக்கால் டவுசர் போட்ட காலத்தில் 'ஜுனூன் தமிழ்'லிருந்து முன்னேறி இன்று பெரும்பாலும் ஓடிடியில் பார்க்கும் டப்பிங் படங்களின் மொழிபெயர்ப்பு தரமானதாகவே இருக்கிறது..மொழிபெயர்ப்பு செய்வதற்கு தாய்மொழியில் மொழிபெயர்ப்பாளருக்கு இனிய நடையும், எதையும் சரளமாக எடுத்துக் கூறும் ஆற்றலும் வேண்டும். இதை நான் சுஜாதாவிடம் பார்த்திருக்கிறேன்..ஒவ்வொரு சனிக்கிழமையும் அவரை நான் சந்திக்கும் போது 'ஈசாப் நீதிக் கதைகள்' (Aesop Fables) ஆங்கிலக் கதை ஒன்றை சில நிமிடங்கள் படித்துவிட்டு அதிலிருந்து ஒன்றைத் தமிழில் பத்து நிமிடத்தில் எழுதி முடிப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன். இதேபோல் ரா.கி.ரங்கராஜனின் 'பட்டாம்பூச்சி' என்ற அவருடைய படைப்பே இதற்குச் சான்று..கதையை உள்வாங்கி பிறகு அதைத் தமிழில் எழுதினால்தான் இது சாத்தியம். சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துக் கதைகளைப் பலர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விரும்பி சுஜாதாவிற்குக் கடிதம் எழுதுவார்கள். அவர்களிடம் சுஜாதா ஒரு கதையை மொழிபெயர்த்து அனுப்புங்கள் என்பார். அவர்களும் ஆர்வத்துடன் அனுப்ப, அதைப் படித்துவிட்டு நிராகரித்துவிடுவதைப் பார்த்திருக்கிறேன். அதற்கு அவர் சொல்லும் காரணம் 'கதையின் ஜீவனை அவர்கள் பிடிக்கவில்லை' என்பதுதான். அவர் இருக்கும் வரை அதை மொழிபெயர்க்க அனுமதிக்கவில்லை!.மொழிபெயர்க்கும் போது மூல ஆசிரியருக்குத் துரோகம் செய்யக் கூடாது என்பது அடிப்படை விதி. வால்மீகி வடமொழியில் இயற்றிய ராமாயணத்தைத் தமிழாக்கம் செய்த கம்பர் மூல நூலுக்கு எந்த கெடுதலும் செய்யாமல் காவிய நயம் குறையாமல் இயற்றியதால் தமிழுக்கு அருமையான நூல் ஒன்று கிடைத்து இன்றும் போற்றப்படுகிறது..திரு ரா. வீழிநாதன் – 'யாருப்பா இது ?' என்று கேட்பவர்களுக்குச் சிறு குறிப்பு – 15-5-1921-ல் தஞ்சையில் பிறந்தவரான இவர் ஹிந்தி, உருது, குஜராத்தி ஆகிய மொழிகளை நன்கு பயின்றவர். கல்கியின் 'பார்த்திபன் கனவு', 'சோலைமலை இளவரசி, ராஜாஜியின் 'பஜகோவிந்தம்' போன்ற நூல்களையும், தமிழகத்தின் பல சிறந்த சிறுகதைகளையும் ஹிந்தியில் மொழிபெயர்த்திருப்பதோடு தமிழிலக்கியம் பற்றிய பல கட்டுரைகளையும் ஹிந்தியில் எழுதியவர். கல்கி ஆசிரியர் குழுவில் இருந்தவர். இவருடைய ஒரு கட்டுரையில் இப்படிக் கூறுகிறார்."நான் பயின்ற ஹிந்தி மொழியில் ஒரே பொருள் தருவது போலத் தோன்றும் சொற்கள் பல உள்ளன. ஆனால், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சாயல் உண்டு. அந்தச் சாயலை மனத்தளவு உணரமுடியுமே ஒழிய அதற்கான தமிழ்ச் சொல்லுக்குத் தவம் கிடக்க வேண்டியதுதான்..அத்தகைய தமிழ்ச்சொல்லைக் கண்டுபிடிப்பதற்காக நான் ஒரு தந்திரம் செய்வேன். பலரிடம் பேச்சுக் கொடுக்கும் பொழுது, என் மனத்தில் உள்ள ஹிந்திச் சொல்லின் பொருளுக்கேற்பச் சூழ்நிலையைச் சிருஷ்டித்துப் பேசுவேன், சரியான சொல் கிடைத்துவிடாதா என்ற நம்பிக்கையில். சில சமயம் பலன் கிட்டும், சில சமயம் கிட்டாது" என்கிறார்..ஆஸ்ட்ரிக்ஸ் ( Asterix ) காமிக் புத்தகம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பல வயதினருக்கும் ஏற்றதாக எழுதப்பட்டுள்ளதுதான் அதன் வெற்றிக்கு காரணம். நான் சிறு வயதில் படித்த போது ஒரு folk tale போல் இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது அதில் உள்ள பல நகைச்சுவைகள் புரிந்தது. தற்போது படிக்கும்போது அதில் உள்ளச் சிலேடை(pun) உத்திகள், கிண்டல், போன்றவை புரிகிறது. போன மாதம் படிக்கும்போது மேலும் சில விஷயங்கள் வியப்பில் ஆழ்த்தியது..ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழியாக்கம் செய்யும் போது அதில் உள்ளச் சிலேடையைக் கொண்டுவருவது மிகவும் கஷ்டமான காரியம்..ஆஸ்ட்ரிக்ஸை ஃபிரெஞ்ச்சிலிருந்து ஆங்கிலத்தில் அந்தியா பெல்(Anthea Bell) மற்றும் டெரெக் ஹாக்ரிட்ஜ் (Derek Hockridge). மிகவும் அற்புதமாக மொழிபெயர்த்துள்ளார்கள். சிலசமயம் மூலத்தைவிட அழகாக!..உதாரணத்திற்கு சில கதாபாத்திரங்களின் பெயர்களைப் பாருங்கள்..ஃபிரெஞ்ச்சில் Ordralfabétix (அழுகின மீனை விற்பவர் என்று பொருள்) என்பது ஆங்கிலத்தில் "Unhygie-nix" என்று சுவையாக மொழிபெயர்த்துள்ளார்;."Assurancetourix" என்ற பாடகன் "Cacofonix" ஆகிறான் (கரடுமுரடாக கேவலமான ஒலியைக் குறிக்கும்)..இன்னும் புத்திசாலித்தனமான மொழியாக்கம் "Idéfix" என்ற நாய்க்கு (Fixed Idea – கொள்கை பிடிவாதம் ) Dogmatix ( Dogma – Fixed Idea) என்று மொழிபெயர்த்து 'Dog' என்ற பொருள் வரும்படியும் செய்தது புத்திசாலித்தனம்!.அன்றாடம் உபயோகிக்கும் 'வாட்ஸ்-ஆப்' என்று வழக்கத்தில் உள்ளச் சொல்லை, தமிழில் 'பகிரி' 'புலனம்' 'கட்செவி அஞ்சல்' என்று பிடிவாதமாக சிலர் மொழி 'பெயர்த்து' உபயோக்கிறார்கள். காலத்திற்கு ஏற்ப புதிதாகத் தோன்றி வழக்கிற்கு வரும் சொற்களை நீக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை நான் சொல்லவில்லை 'கடிசொல் இல்லைக் காலத்துப் படினே' என்கிறார் தொல்காப்பியர்.