கவர் ஸ்டோரி.ஆதித்யா."இரட்டைத் தலைமை வேண்டாம், ஒற்றைத் தலைமைதான் தேவை" என்ற கோஷத்தில் ஆரம்பித்து இரண்டு தனித்தனி தலைமையில் இயங்க ஆரம்பித்திருக்கிறது அ.தி.மு.க. அறிக்கைப் போராக ஆரம்பித்து அடிதடியில் தொடர்ந்து கட்சியின் தலைமை அலுவலகம் சீல் செய்யப்பட்டு இரு தரப்பும் நீதிமன்றம் மற்றும், தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்காகப் போராட்டங்களை கையில் எடுத்திருக்கின்றன..அடுத்தது அ.தி.மு.க.வில் என்ன நடக்கும்?.ஓர் அரசியல் கட்சியாக அ.இ.அ.தி.மு.க. இனி ஒட்ட முடியாதபடி சிதைகிறது. அதன் அழிவை நோக்கிச் செல்கிறது. தலைமை பொதுக்குழுவில் பெரும்பான்மை என்பதால் "கட்சி எங்களிடம் என்று எடப்பாடி குழு பேசிக்கொண்டிருப்பது அ.இ.அ.தி.மு.க. வரலாற்றின் முடிவுரையை காலம் எழுதத் துவங்கிவிட்டது" என்றெல்லாம் விமர்சிக்கப்படுகிறது. ஆனால், இந்தக் கருத்தை ஏற்பதற்கில்லை..அண்ணா தி.மு.க.வில் பிளவு என்பது புதிதல்ல. எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே பிளவும் பிரிவும் இணைப்பும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. "தாய் கழகத்திற்கு திரும்புகிறேன், காலத்தின் கட்டாயம்" போன்ற வாசகங்களோடு இணைந்தவர்கள் இந்தக் கட்சியில்தான் அதிகம்..மேலும், இன்று தமிழக அரசியலின் நிலை வேறு. ஆட்சி அதிகாரம் போய்விட்டால் எல்லாமே போய்விட்டதாக இருந்த அரசியல், இப்போது பண அரசியலாக மாறிவிட்டது. இன்று அ.தி.மு.க.வின் ஆட்சி அதிகாரம் போய்விட்டதே தவிர, கட்சியில் காசுக்குக் குறைவில்லை. ஒவ்வொருவரும் பல நூறு கோடிகளைச் சேர்த்து வைத்திருக்கிறார்கள். தேவைப்பட்டால் அள்ளி விடுவார்கள். அன்று பெரிதாக இல்லாத சாதியவாத ஆதரவு இன்று இருக்கிறது. அடுத்து வரும் அரசியல் நகர்வுகளில் பணம்தான் பெரிய வேலைகளைச் செய்யும்..பொதுக் குழுவின் முடிவின்படி கட்சியிலிருந்து பன்னீர் செல்வம் நீக்கப்பட்ட நிலையில் அவர், 'தான் இன்னமும் ஒருங்கிணைப்பாளராக தொடர்வதாக சொல்லி கட்சியிலிருந்து எடப்பாடியையும், அவர் ஆதரவாளர்களையும் நீக்கியிருக்கிறார்'. இந்த இரண்டு கோஷ்டிகளில் எது சரி, எது தவறு என்று நீதிமன்றம் சொல்ல நீண்ட நாட்களாகும். அதற்குள் நிகழும் விஷயங்கள்தான் அ.தி.மு.க.வின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகிறது..அ.தி.மு.க.வினரின் மூன்று பிரிவினரும் (எடப்பாடி, பன்னீர் செல்வம் சசிகலா )ஆகிய தங்கள் தலைமையைத் தக்க வைத்துக்கொள்ள தொண்டர்களை வளைப்பார்கள். இந்த மூவரிடமும் ஒருவரை ஒருவர் விஞ்சும் பலமும் பணமும் இருக்கிறது. கட்சியின் அடிமட்டத் தொண்டர்களைக் கவர கவனம் செலுத்தத் தொடங்குவர். இன்னொருபுறம் சின்னம், பொதுச் செயலாளர் நியமனம், பொதுக்குழு முடிவுகள் இன்ன பிற விஷயங்களுக்காக நீதிமன்றம், தேர்தல் ஆணையம் இவற்றில் சட்டப் போர்கள் நிகழ்த்துவர். இதன் விளைவு அ.தி.மு.க.வில் ஓர் அணி பலம் பெறப்போகிறதோ இல்லையோ அவர்களின் பிரதான எதிரியான தி.மு.க. பலம் பெற்றுவிடும். எதிர்கட்சிகளாக இந்த மூன்று அணிகளுமே இயங்காத நிலையில் தி.மு.க. மக்களிடம் தன் செல்வாக்கை உயர்த்திக்கொள்ளும்..அ.தி.மு.க.வில் எழுந்திருக்கும் உட்கட்சிப் பூசலினால் தமிழக அரசியல் ஜாதிய அரசியலாக மாறும் ஆபத்திருக்கிறது. பன்னீர் செல்வம், சசிகலாவின் நேரடியான அல்லது மறைமுக ஆதரவுடன் தனது ஜாதி வாக்குகளை திரட்டுவார். அதனை எதிர்கொள்ளும் வகையில் பழனிசாமி அந்த வாக்குகளைப் பிளக்க முயல்வார். தன் நிலையை வலுப்படுத்தவும் பழனிசாமி தன் ஜாதியினரின் வாக்கு வங்கியை வலுப்படுத்த முயல்வார். ஏற்கெனவே அவர் தன் மண்டலத்தில் செல்வாக்கு மிகுந்த ஜாதியினரில் பெரும்பான்மையோரைத் தன்பக்கத்தில் வைத்திருக்கிறார்..இப்படி ஜாதி அடையாளங்களுடன் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்று இயங்க ஆரம்பித்தால் மற்றொன்றும் அதே ஆயுதத்தைக் கையில் எடுக்கும், அதன் விளைவு தமிழக பா.ஜ.க.வில் எதிரொலிக்கும். ஜாதி அடையாளங்கள் அதிகம் பேசப்பட்டால் பா.ஜ.க.வின் அடிநாதமான இந்து மத அடையாளம் மதிப்பிழக்கும். பா.ஜ.க.வும் ஜாதி அரசியலைக் கையிலெடுக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், அதற்கு திராவிட சக்திகள் அனுமதிக்காது. பா.ஜ.க.விற்குப் பின்னடைவை ஏற்படுத்தும் இந்த சூழலை தி.மு.க. மேலும் வலுவாக்கும். தமிழக ஓட்டரசியலில் தற்போது ஓரளவு ஆதிக்கம் செலுத்தும் ஜாதி அரசியல் மேலும் வலுவாகும்.."அ.தி.மு.க. கட்சி தி.மு.க.விற்கு எதிர்ப்பு" என்ற அலையில் எழுந்தது. இன்னும் சொல்லப்போனால் அந்தக் கட்சியின் அஸ்திவாரமே தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள்தான். ஜாதிப் பிரிவுகளினால் அது பிளவுப்பட்டு பலவீனமானால் கணிசமாக உள்ள தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள் தி.மு.க.வை எதிர்க்கட்சியான பா.ஜ.க.விற்குச் செல்லாது. அங்கே குறுக்கிடுவது 'திராவிடம்' என்ற சித்தாந்தம்..இதன் விளைவாக அ.தி.மு.க. தன்னுடைய நிலையைத் தக்க வைத்துக்கொள்ள பா.ஜ.க.வுடன் மோதவேண்டிய நிலை எழும். அந்த நிலை முற்றிலும் தி.மு.க.விற்குச் சாதகமாகவே அமையும்..அம்மாவால் விசுவாசியாக அடையாளம் காட்டப்பட்டபன்னீர் செல்வம் நீதிமன்றக் கதவுகளை தட்டி ஓய்ந்த பின்னர் சசிகலாவுடன் இணையும் வாய்ப்புத்தான் அதிகம்.
கவர் ஸ்டோரி.ஆதித்யா."இரட்டைத் தலைமை வேண்டாம், ஒற்றைத் தலைமைதான் தேவை" என்ற கோஷத்தில் ஆரம்பித்து இரண்டு தனித்தனி தலைமையில் இயங்க ஆரம்பித்திருக்கிறது அ.தி.மு.க. அறிக்கைப் போராக ஆரம்பித்து அடிதடியில் தொடர்ந்து கட்சியின் தலைமை அலுவலகம் சீல் செய்யப்பட்டு இரு தரப்பும் நீதிமன்றம் மற்றும், தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்காகப் போராட்டங்களை கையில் எடுத்திருக்கின்றன..அடுத்தது அ.தி.மு.க.வில் என்ன நடக்கும்?.ஓர் அரசியல் கட்சியாக அ.இ.அ.தி.மு.க. இனி ஒட்ட முடியாதபடி சிதைகிறது. அதன் அழிவை நோக்கிச் செல்கிறது. தலைமை பொதுக்குழுவில் பெரும்பான்மை என்பதால் "கட்சி எங்களிடம் என்று எடப்பாடி குழு பேசிக்கொண்டிருப்பது அ.இ.அ.தி.மு.க. வரலாற்றின் முடிவுரையை காலம் எழுதத் துவங்கிவிட்டது" என்றெல்லாம் விமர்சிக்கப்படுகிறது. ஆனால், இந்தக் கருத்தை ஏற்பதற்கில்லை..அண்ணா தி.மு.க.வில் பிளவு என்பது புதிதல்ல. எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே பிளவும் பிரிவும் இணைப்பும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. "தாய் கழகத்திற்கு திரும்புகிறேன், காலத்தின் கட்டாயம்" போன்ற வாசகங்களோடு இணைந்தவர்கள் இந்தக் கட்சியில்தான் அதிகம்..மேலும், இன்று தமிழக அரசியலின் நிலை வேறு. ஆட்சி அதிகாரம் போய்விட்டால் எல்லாமே போய்விட்டதாக இருந்த அரசியல், இப்போது பண அரசியலாக மாறிவிட்டது. இன்று அ.தி.மு.க.வின் ஆட்சி அதிகாரம் போய்விட்டதே தவிர, கட்சியில் காசுக்குக் குறைவில்லை. ஒவ்வொருவரும் பல நூறு கோடிகளைச் சேர்த்து வைத்திருக்கிறார்கள். தேவைப்பட்டால் அள்ளி விடுவார்கள். அன்று பெரிதாக இல்லாத சாதியவாத ஆதரவு இன்று இருக்கிறது. அடுத்து வரும் அரசியல் நகர்வுகளில் பணம்தான் பெரிய வேலைகளைச் செய்யும்..பொதுக் குழுவின் முடிவின்படி கட்சியிலிருந்து பன்னீர் செல்வம் நீக்கப்பட்ட நிலையில் அவர், 'தான் இன்னமும் ஒருங்கிணைப்பாளராக தொடர்வதாக சொல்லி கட்சியிலிருந்து எடப்பாடியையும், அவர் ஆதரவாளர்களையும் நீக்கியிருக்கிறார்'. இந்த இரண்டு கோஷ்டிகளில் எது சரி, எது தவறு என்று நீதிமன்றம் சொல்ல நீண்ட நாட்களாகும். அதற்குள் நிகழும் விஷயங்கள்தான் அ.தி.மு.க.வின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகிறது..அ.தி.மு.க.வினரின் மூன்று பிரிவினரும் (எடப்பாடி, பன்னீர் செல்வம் சசிகலா )ஆகிய தங்கள் தலைமையைத் தக்க வைத்துக்கொள்ள தொண்டர்களை வளைப்பார்கள். இந்த மூவரிடமும் ஒருவரை ஒருவர் விஞ்சும் பலமும் பணமும் இருக்கிறது. கட்சியின் அடிமட்டத் தொண்டர்களைக் கவர கவனம் செலுத்தத் தொடங்குவர். இன்னொருபுறம் சின்னம், பொதுச் செயலாளர் நியமனம், பொதுக்குழு முடிவுகள் இன்ன பிற விஷயங்களுக்காக நீதிமன்றம், தேர்தல் ஆணையம் இவற்றில் சட்டப் போர்கள் நிகழ்த்துவர். இதன் விளைவு அ.தி.மு.க.வில் ஓர் அணி பலம் பெறப்போகிறதோ இல்லையோ அவர்களின் பிரதான எதிரியான தி.மு.க. பலம் பெற்றுவிடும். எதிர்கட்சிகளாக இந்த மூன்று அணிகளுமே இயங்காத நிலையில் தி.மு.க. மக்களிடம் தன் செல்வாக்கை உயர்த்திக்கொள்ளும்..அ.தி.மு.க.வில் எழுந்திருக்கும் உட்கட்சிப் பூசலினால் தமிழக அரசியல் ஜாதிய அரசியலாக மாறும் ஆபத்திருக்கிறது. பன்னீர் செல்வம், சசிகலாவின் நேரடியான அல்லது மறைமுக ஆதரவுடன் தனது ஜாதி வாக்குகளை திரட்டுவார். அதனை எதிர்கொள்ளும் வகையில் பழனிசாமி அந்த வாக்குகளைப் பிளக்க முயல்வார். தன் நிலையை வலுப்படுத்தவும் பழனிசாமி தன் ஜாதியினரின் வாக்கு வங்கியை வலுப்படுத்த முயல்வார். ஏற்கெனவே அவர் தன் மண்டலத்தில் செல்வாக்கு மிகுந்த ஜாதியினரில் பெரும்பான்மையோரைத் தன்பக்கத்தில் வைத்திருக்கிறார்..இப்படி ஜாதி அடையாளங்களுடன் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்று இயங்க ஆரம்பித்தால் மற்றொன்றும் அதே ஆயுதத்தைக் கையில் எடுக்கும், அதன் விளைவு தமிழக பா.ஜ.க.வில் எதிரொலிக்கும். ஜாதி அடையாளங்கள் அதிகம் பேசப்பட்டால் பா.ஜ.க.வின் அடிநாதமான இந்து மத அடையாளம் மதிப்பிழக்கும். பா.ஜ.க.வும் ஜாதி அரசியலைக் கையிலெடுக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், அதற்கு திராவிட சக்திகள் அனுமதிக்காது. பா.ஜ.க.விற்குப் பின்னடைவை ஏற்படுத்தும் இந்த சூழலை தி.மு.க. மேலும் வலுவாக்கும். தமிழக ஓட்டரசியலில் தற்போது ஓரளவு ஆதிக்கம் செலுத்தும் ஜாதி அரசியல் மேலும் வலுவாகும்.."அ.தி.மு.க. கட்சி தி.மு.க.விற்கு எதிர்ப்பு" என்ற அலையில் எழுந்தது. இன்னும் சொல்லப்போனால் அந்தக் கட்சியின் அஸ்திவாரமே தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள்தான். ஜாதிப் பிரிவுகளினால் அது பிளவுப்பட்டு பலவீனமானால் கணிசமாக உள்ள தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள் தி.மு.க.வை எதிர்க்கட்சியான பா.ஜ.க.விற்குச் செல்லாது. அங்கே குறுக்கிடுவது 'திராவிடம்' என்ற சித்தாந்தம்..இதன் விளைவாக அ.தி.மு.க. தன்னுடைய நிலையைத் தக்க வைத்துக்கொள்ள பா.ஜ.க.வுடன் மோதவேண்டிய நிலை எழும். அந்த நிலை முற்றிலும் தி.மு.க.விற்குச் சாதகமாகவே அமையும்..அம்மாவால் விசுவாசியாக அடையாளம் காட்டப்பட்டபன்னீர் செல்வம் நீதிமன்றக் கதவுகளை தட்டி ஓய்ந்த பின்னர் சசிகலாவுடன் இணையும் வாய்ப்புத்தான் அதிகம்.