சிந்துஜாவை அமெரிக்காவில் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை..அரவிந்தனுக்கு வெறுப்பில் நாக்கு உலர்ந்தது..வார்த்தை தவறிவிட்டாய் சிந்துஜா..நியூயார்க் ஜான் எஃப் கென்னடி ஏர்போர்ட் சுற்றிலும் இயங்கிக்கொண்டுதான் இருந்தது. இவனுக்குத்தான் சகலமும் நின்றுபோயிருந்தது..பிங்க் பனியன் அணிந்திருந்தாள். ஷாம்பூவால் கூந்தல் பறந்தது. எப்போதும்போல் மேக் அப் இல்லாத முகம். புருஷன் பெயர் என்ன? ஆகாஷா? உடன் வரவில்லைபோலும்..இவன் லண்டனுக்குப் பறக்க வேண்டும். ஆபீசில் அனுப்புகிறார்கள். ஒரு வாரம் லண்டனில் தங்கி திரும்பவும் நியூயார்க்.. மான்ஹாட்டன்…..இவன் வேலை பார்க்கும் கிளினிக்கல் உபகரண கம்பெனி, அமெரிக்காவின் ஐம்பது ஸ்டேட்களிலும் நூறு கிளைகள் பரப்பி மற்ற நாடுகளிலும் ஜமாய்த்துக்கொண்டிருக்கிறது. அதன் லண்டன் கிளைக்குப் போகிறான்..முழு ஈடுபாட்டுடன் வேலை பார்ப்பவன். ஈடுபாட்டுக்குக் காரணம் 'எதிலாவது மனசைச் செலுத்தி உன்னை டைவர்ட் செய்துகொள்… மற … அவளை மற' என்று இவனின் அடிபட்ட மனசு அடித்துக்கொண்டதுதான்.."யார் லண்டன் செல்லத் தயார்?" என்று இவர்களின் வி.பி. கேட்டபோது கைதூக்கி சம்மதித்துவிட்டான்..கடந்த மூன்று வருடங்களாக இப்படித்தான் இருக்கிறான்..சிந்துஜா….கல்லூரி நாட்களில் அத்தனை நண்பர்களும் காதலில் விழுந்து பிதற்றியபோதெல்லாம் இவன் மைக்ரோபிராஸஸ் சிஸ்டம் டிசைனிலிருந்து தலை நிமிர்த்தவில்லை.."இஞ்ஜினீயரிங் வேணாம்டா.. சிம்ப்பிளாய் ஏதாவது படி,. உன் அப்பா பி.ஏ., படிச்சு ரயில்வேயில் சேர்ந்தார்…" என்று ஆரம்பித்த அம்மாவுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று குழம்பியது நினைவுக்கு வருகிறது..அப்பா – அம்மா – இவன் என்று மூவர் அடங்கிய குழுவில் இவன் மட்டுமே எதிர்க்கட்சி..அவர்களின் ஒரே பயம் 'ஏகப்பட்ட செலவாகுமே?'.பிளஸ் டூ'வில் பெருமிதம் தரும் மார்க் எடுத்திருந்தான். சொல்லச் சொல்லக் கேட்காமல் அப்ளை செய்தான். இவன் நினைத்த கல்லூரில் கேட்ட கோர்ஸ் கிடைத்தது. அரசாங்கக் கல்லூரியின் ஃபீஸ் அப்பாவுக்கு நிம்மதியளித்தது..டிரஸ்ட் ஒன்றின் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. பேப்பர் பிரசன்டேஷன்கள் கை கொடுத்தன. உள் நாட்டிலேயே எம்.எஸ். செய்தபோது சிந்துஜா சக மாணவியாக வாய்த்தாள்..ரிஷ்யஸ்ரிங்கரைப் போல் பல காலம் தன்னைச் சுற்றிப் பெண்கள் இயங்குகிறார்கள் என்பதையே கவனிக்காத அவனிடம் அவசியமில்லாமல் அருகில் வந்து பேசினாள். கலகலத்துச் சிரித்தாள்..புதியதோர் ஈர்ப்பு வந்தது. நெருங்கினாள். நெருங்கினான்.."வீட்டுக்கு வாயேன்…" என்று அழைத்தது தான்தானா என்று வியந்தான்..சகஜமாய் வீட்டுக்கு வந்து அம்மாவுடன் தரையில் அமர்ந்து அரட்டை அடித்தாள்..இன்ஸ்டன் காபியைக்கூட சூப்பர் என்று குடித்தாள்.."அர்விந்த். இப்போ உன் டர்ன். அடுத்த வாரம் என் வீட்டுக்கு வர்ற.. ஓகேயா?" என்றாள்..சனிக்கிழமை அண்ணா நகர் அரண்மனைக்குப் போனபோது சட்டென்று அந்தஸ்த்து பேதம் புரிந்தது..சஸ்பென்ஸ் வைத்து அழைத்திருக்கிறாள். பிறந்தநாள் பார்ட்டியாம்..வெட்கம் இவனைத் தின்றது. கையில் ஒரு கிஃப்ட்கூட வாங்கி வரவில்லை. புதன் கிழமையே கடந்துவிட்ட பிறந்தநாளுக்கு சனிக்கிழமை பார்ட்டி வைப்பாள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை..சாதாரண ஷர்ட்டில் போயிருந்தான். சட்டென்று தாழ்வுமனப்பான்மை தலைதூக்கியபோது அதை அனுமதிக்காத வகையில் நடந்தகொண்டாள்.."வா அர்விந்த். நீ வந்த பிறகுதான் கேக் கட் பண்ணணும்னு காத்திருந்தேன்." என்றாள். வியந்த கண்கள் பல இவன் பக்கம் திரும்பின..அவளே பிளேட்டை நிரப்பி இவன் கையில் கொடுத்து "சாப்பிடு" என்றபோது கூச்சம் கொஞ்சம் குறைந்தது..எனினும் மனசுக்குள் மணி அடித்தது. இது ரொம்ப உசரமான இடம். விலகு..மறுநாள் கேக்ஸ் ஸ்வீட் என்று அள்ளிக்கொண்டு வந்து அம்மாவை நமஸ்கரித்தபோது திகைப்பு கூடியது..அம்மா நெகிழ்ந்தாள். நேற்றைக்கு அரவிந்தன் அவளின் அந்தஸ்த்து பற்றிச் சொல்லியிருந்ததால் –."எவ்வளவு உயரத்தில் இருக்கற பொண்ணு என்னமாய் இறங்கி வந்து பேசறா…" என்ற வியப்பு கூடிப்போனது.."ரஞ்சனாவின் நிச்சயதார்த்தத்துக்கு உன்னோடயே வந்துடறேனே… அர்விந்த்… " என்று கொஞ்சலாய்க் கேட்டாள் சிந்துஜா..ரஞ்சனா இவர்களின் வகுப்புத் தோழி. இவன் போகிற ஐடியாவிலேயே இல்லை. ஆனால் மறுக்க மனசு வரவில்லை..நிச்சயதார்த்தம் முடிந்து ராத்திரி திரும்பி வருகையில் பழங்கால சினிமாக் காட்சி மாதிரி பைக் வழியில் நின்று போனதும்… அறிவிப்பின்றி மழை துவங்கியதும், கற்பனைக் கதைகளில்தான் வரும் என்று நினைத்திருந்தான். இல்லை. நிஜ வாழ்விலும் வந்து தொலைக்கும். ஆளரவம் அதிகம் இல்லாத புற நகரின் நடுத்தெரு. டென்ஷனும் பொறுப்புணர்வும் அதிகமாயிற்று.."இரு டாக்ஸி புக் பண்ணித் தரேன்…" என்றபோது மறுத்தாள்.."மெக்கானிக் கடை தேடி… வண்டியை விட்டுட்டுட்டு வா. ரெண்டு பேருமே போவோம்…" என்றாள். மொபைலில் பெற்றோரைக் கூப்பிட்டுத் தகவல் சொன்னபோது எந்த விவரத்தையும் கூட்டவும் குறைக்கவும் இல்லை..ராத்திரி அவள் வீட்டு வாசலில் இறக்கிவிட்டு, பெல் அடித்து, பெற்றோரிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்..நிறைய நன்றி சொன்னார் அப்பா.."பொறந்த நாள் பார்ட்டிக்கு வந்த இல்ல தம்பி? கொண்டு விட்டதுக்கு ரொம்ப தாங்க்ஸ்பா" என்று புன்னகைத்த அம்மா இவன் கிளம்புகிறானா என்று பார்த்து, கேட் தாண்டிய பிறகே கதவைச் சாத்தி வெளி லைட்டை அணைத்த பண்பாடு நிம்மதி தந்தது.."நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்று வாய் வார்த்தையாக ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளவில்லைதான். ஆனாலும் மனசுக்குப் புரியாதா என்ன?.மாஸ்டர் டிகிரி முடித்தவுடனேயே அவர்கள் வீட்டில் வரன் பார்க்க ஆரம்பித்தார்கள்.."அர்விந்த்… அப்பா அம்மாகிட்ட சொல்லிடவா?" என்று திடுதிப்பென்று கேட்டாள்.."எ… என்ன சொல்லப்போற?"."வாட் எல்ஸ்? உன்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு…".முதல் முறையாக நேரடியாக… அப்பட்டமாக அறிவிக்கிறாள்.."இன்னும் வேலை கிடைக்கலை சிந்து…"."அதெல்லாம் எங்கப்பா ஈஸியா வாங்கிக்குடுப்பாரு…" என்றாள்..அவள் அப்பா மூலமாகவா? அவனுக்கு அதில் விருப்பம் இல்லை.."இப்ப சொல்லாட்டி அப்புறம் கை மீறிடும்பா…" கண் லேசாய்க் கலங்கியது..தவிப்பாய் இருந்தது. மறுக்க மனசு வரவில்லை..அவளே தொடர்ந்து, "வா… உன் வீட்டுக்கு வரேன். நான் உன் அம்மா அப்பா கிட்ட பேசறேன். அவங்களை வந்து பெண் கேட்கச் சொல்றேன்.".சொன்னபடி செய்தாள். இவனின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அதிக அதிர்ச்சி இல்லை. அம்மா இவனிடம் "லவ்வாடா?" என்று கேட்டதும் இவன் "தெரியலையே?" என்று நெளிந்ததும் சில பல முறை நடந்ததுண்டு. அவர்களுக்கு சந்தோஷம்தான்..நல்ல நாள் பார்த்து கருநீல நிறப் பட்டுப்புடவையும், தட்டு நிறையப் பழமும், பூவும், மஞ்சளும், ஸ்வீட்களுமாய் மூவரும் போனார்கள்.."எங்க வேலை பார்க்கற? எத்தனை ரூபாய் சம்பளம்?" என்று அவளுடைய அப்பா கேட்டார்.."சொந்தவீடு எந்த ஏரியாவில்? அண்ணா நகர்? அஷோக் நகர்? தி.நகர்?".அதில் தொனித்த குத்தல் புரியாமல் "சொந்த வீடுதாங்க.. கோவிலம்பாக்கம்…" என்று அம்மா குழந்தைத்தனமாக ஆரம்பித்தாள்..அவனுக்கு மிகத் தெளிவாய் ரிசல்ட் தெரிந்தது. அவர் பித்தளைத் தாம்பாளத்தைப் புறங்கையால் தட்டவில்லைதான். மென்மையாய் வாங்கி டீப்பாயின் மீது வைத்து, அரை மணி நேரம் மாற்றி மாற்றி அனைவரும் பேசி முடித்தவுடன், அதே மென்மையுடன் தட்டை எடுத்து இவர்களிடமே திருப்பிக் கொடுத்தார்..டிஸ்கஷனின் சுருக்கம் இதுதான். அடுத்த வருடம் அதே நாளில் சந்திக்க வேண்டும். (அது வரை சந்திக்க வேண்டாம்!) அதற்குள் வேலை தேடிக் கொள்ள வேண்டும். டேபிள் துடைக்கிற வேலை… பட்டர் நான்… பன்னீர் பட்டர் மசாலா சர்வ் செய்கிற வேலை என்கிற மாதிரி இருக்கக்கூடாது. (அவருடைய சொற்பிரயோகம்!). கௌரவமாகச் சொல்லிக்கொள்கிற உத்யோகமாக இருக்க வேண்டும். அப்படி வந்தால் என் பெண் உனக்குத்தான். அது வரை காத்திருப்போம்..தன் படிப்புக்கும், மார்க்குக்கும் அது சுலபம் என்றுதான் நினைத்திருந்தான்..ஆனால், நிஜம் வேறு மாதிரி மிரட்டியது..கவுன்ட் டவுனாக மாதங்கள் குறைந்து ஜூன் பதினைந்து நெருங்க நெருங்க… டென்ஷன் அதிகமாகியது..அமெரிக்கக் கம்பெனிகளுக்கு மனுப்போட்டான். இன்டர்வியூ ரவுண்ட் ரவுண்டாக நடந்தது..அவளின் அப்பாவுக்கு மெசேஜ்கள் போட முயன்ற போது இவனை பிளாக் செய்திருப்பது புரிந்தது. சிந்துஜாவின் மொபைல் சகல நாட்களும் 'நாட் ரீச்சபிள்..'' என்றது..அப்பா 'சிம்' மைக் கழற்றி வாங்கி வைத்திருப்பாரோ?.ஏழே நாளில் கெடு தீரும் நிலையில் அந்த ஆஃபர் லெட்டர் கண்ணில் தேன் வார்த்தது!.'வி ஆர் பிளீஸ்ட் டு ஆஃபர் யூ த பொஸிஷன் அஃப்…' மேற்கொண்டு படிக்க முடியாமல் சந்தோஷம் கண்ணை நிறைத்தது.."அம்மா.. அப்பா.." என்று கத்தினான். குடும்பம் குதூகலித்தது..ராத்திரி பத்தேகாலுக்கு அவர்களின் அண்ணா நகர் பங்களாவுக்குப் பறந்தான்.."யாரும் இல்லைங்க.. கோயமுத்தூர் போயிருக்காங்க.." இவன் யாரென்று தெரியாத கூர்க்கா சொன்னான்.."எப்ப வருவாங்க?" என்று கேட்டபோது "தெரியலைங்க அவங்க மக சிந்துஜாவுக்குக் கல்யாணம்… நாளைக்கு…" என்றான்..யாராவது வந்தால் காட்டுவதற்காக வைத்திருந்த இன்விடேஷனை நீட்டினான். சந்தேகத்துக்கு இடமின்றி சௌபாக்யவதி சிந்துஜாவுக்கும் யாரோ ஒரு ஆகாஷுக்கும்….தலை சுழன்றது..இதற்கப்புறம் யோசிக்கக்கூட எதுவும் இல்லை..அடுத்த வாரம் எடிஹாட் விமானத்தில் அமெரிக்கா கிளம்பிவிட்டான்..மூன்று வருடங்களுக்குப் பிறகு இதோ… விதி அவளைக் கொண்டு அவன் முன் நிறுத்தி…."கேம் ஸ்டார்ட்" யாரோ இரண்டு சிறுவர்கள் மொபைலில் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.."அர்விந்த்த்த்த்த்…" துள்ளி நெருங்கினாள்..முகத்தைத் திருப்பிக்கொண்டான்.."என்ன அர்விந்த் சொல்லிக்காம போயிட்ட… உன் வீட்டுக்கு வந்து பார்த்தேன்… காலி பண்ணிட்டீங்கன்னாங்க… அட… அமெரிக்காலயா இருக்க? `ப்ரெண்ட்ஸூக்கும் தகவல் தெரியலை…எத்தனை வாட்டி போன் செய்து பார்த்தேன்" என்றாள்..முகம் முழுக்க வழிந்த காதல் பயம் தந்தது.."உங்க புருஷன் வரலையா மிஸஸ் ஆகாஷ்…"."ஓ.. ஆகாஷூக்கும் எனக்கும் கல்யாணம் நிச்சயமானது உனக்குத் தெரியுமா?".கேள்வி கசந்தது.."நிச்சயமானது தெரிஞ்சிருக்கு. நிந்து போனது தெரியலை போல..".சரேலென்று திரும்பினான்.."அப்பாவிடம் சண்டை போட்டேன். ஜூன் பதினைஞ்சு வரை வெயிட் பண்ணச் சொன்னேன். ஆறுமாசமாய்க் கல்யாண ஏற்பாடு பண்ணினார். இத்தனை நாள் கிடைக்காத வேலை இந்த ஒரு வாரத்தில் கிடைச்சுடுமான்னு கடைசியில் கேட்டார். உன் வீட்டுக்கு ரெண்டு வாட்டி வந்தேன். பூட்டியிருந்தது"."அய்யோ… எங்கயாவது வெளியில்…"."கல்யாணத்துக்கு முதல் நாள் மாப்பிள்ளை வீட்டு கும்பல் மொத்தத்தையும் வெச்சுக்கிட்டு எல்லாத்தையும் விவரிச்சுட்டேன். கல்யாணம் நடந்தால் லைஃப் முழுக்க நரகமாயிடும்னு பயமுறுத்தினேன். வேற வழியில்லாமல் கேன்ஸல் செய்தாங்க. பேரன்ட்ஸ் கடுப்பாயிட்டாங்க. வெறுப்பில் அமெரிக்காவுக்கு வேலை தேடிக்கிட்டு வந்துட்டேன்." என்று கையை நீட்டினாள்..கூச்சமின்றி அழுதவாறு அணைத்தாள்.."என் லண்டன் ட்ரிப் ரத்து" என்றான்.."என் ஹவாய் ட்ரிப் ரத்து" என்று சிரித்தாள்.
சிந்துஜாவை அமெரிக்காவில் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை..அரவிந்தனுக்கு வெறுப்பில் நாக்கு உலர்ந்தது..வார்த்தை தவறிவிட்டாய் சிந்துஜா..நியூயார்க் ஜான் எஃப் கென்னடி ஏர்போர்ட் சுற்றிலும் இயங்கிக்கொண்டுதான் இருந்தது. இவனுக்குத்தான் சகலமும் நின்றுபோயிருந்தது..பிங்க் பனியன் அணிந்திருந்தாள். ஷாம்பூவால் கூந்தல் பறந்தது. எப்போதும்போல் மேக் அப் இல்லாத முகம். புருஷன் பெயர் என்ன? ஆகாஷா? உடன் வரவில்லைபோலும்..இவன் லண்டனுக்குப் பறக்க வேண்டும். ஆபீசில் அனுப்புகிறார்கள். ஒரு வாரம் லண்டனில் தங்கி திரும்பவும் நியூயார்க்.. மான்ஹாட்டன்…..இவன் வேலை பார்க்கும் கிளினிக்கல் உபகரண கம்பெனி, அமெரிக்காவின் ஐம்பது ஸ்டேட்களிலும் நூறு கிளைகள் பரப்பி மற்ற நாடுகளிலும் ஜமாய்த்துக்கொண்டிருக்கிறது. அதன் லண்டன் கிளைக்குப் போகிறான்..முழு ஈடுபாட்டுடன் வேலை பார்ப்பவன். ஈடுபாட்டுக்குக் காரணம் 'எதிலாவது மனசைச் செலுத்தி உன்னை டைவர்ட் செய்துகொள்… மற … அவளை மற' என்று இவனின் அடிபட்ட மனசு அடித்துக்கொண்டதுதான்.."யார் லண்டன் செல்லத் தயார்?" என்று இவர்களின் வி.பி. கேட்டபோது கைதூக்கி சம்மதித்துவிட்டான்..கடந்த மூன்று வருடங்களாக இப்படித்தான் இருக்கிறான்..சிந்துஜா….கல்லூரி நாட்களில் அத்தனை நண்பர்களும் காதலில் விழுந்து பிதற்றியபோதெல்லாம் இவன் மைக்ரோபிராஸஸ் சிஸ்டம் டிசைனிலிருந்து தலை நிமிர்த்தவில்லை.."இஞ்ஜினீயரிங் வேணாம்டா.. சிம்ப்பிளாய் ஏதாவது படி,. உன் அப்பா பி.ஏ., படிச்சு ரயில்வேயில் சேர்ந்தார்…" என்று ஆரம்பித்த அம்மாவுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று குழம்பியது நினைவுக்கு வருகிறது..அப்பா – அம்மா – இவன் என்று மூவர் அடங்கிய குழுவில் இவன் மட்டுமே எதிர்க்கட்சி..அவர்களின் ஒரே பயம் 'ஏகப்பட்ட செலவாகுமே?'.பிளஸ் டூ'வில் பெருமிதம் தரும் மார்க் எடுத்திருந்தான். சொல்லச் சொல்லக் கேட்காமல் அப்ளை செய்தான். இவன் நினைத்த கல்லூரில் கேட்ட கோர்ஸ் கிடைத்தது. அரசாங்கக் கல்லூரியின் ஃபீஸ் அப்பாவுக்கு நிம்மதியளித்தது..டிரஸ்ட் ஒன்றின் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. பேப்பர் பிரசன்டேஷன்கள் கை கொடுத்தன. உள் நாட்டிலேயே எம்.எஸ். செய்தபோது சிந்துஜா சக மாணவியாக வாய்த்தாள்..ரிஷ்யஸ்ரிங்கரைப் போல் பல காலம் தன்னைச் சுற்றிப் பெண்கள் இயங்குகிறார்கள் என்பதையே கவனிக்காத அவனிடம் அவசியமில்லாமல் அருகில் வந்து பேசினாள். கலகலத்துச் சிரித்தாள்..புதியதோர் ஈர்ப்பு வந்தது. நெருங்கினாள். நெருங்கினான்.."வீட்டுக்கு வாயேன்…" என்று அழைத்தது தான்தானா என்று வியந்தான்..சகஜமாய் வீட்டுக்கு வந்து அம்மாவுடன் தரையில் அமர்ந்து அரட்டை அடித்தாள்..இன்ஸ்டன் காபியைக்கூட சூப்பர் என்று குடித்தாள்.."அர்விந்த். இப்போ உன் டர்ன். அடுத்த வாரம் என் வீட்டுக்கு வர்ற.. ஓகேயா?" என்றாள்..சனிக்கிழமை அண்ணா நகர் அரண்மனைக்குப் போனபோது சட்டென்று அந்தஸ்த்து பேதம் புரிந்தது..சஸ்பென்ஸ் வைத்து அழைத்திருக்கிறாள். பிறந்தநாள் பார்ட்டியாம்..வெட்கம் இவனைத் தின்றது. கையில் ஒரு கிஃப்ட்கூட வாங்கி வரவில்லை. புதன் கிழமையே கடந்துவிட்ட பிறந்தநாளுக்கு சனிக்கிழமை பார்ட்டி வைப்பாள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை..சாதாரண ஷர்ட்டில் போயிருந்தான். சட்டென்று தாழ்வுமனப்பான்மை தலைதூக்கியபோது அதை அனுமதிக்காத வகையில் நடந்தகொண்டாள்.."வா அர்விந்த். நீ வந்த பிறகுதான் கேக் கட் பண்ணணும்னு காத்திருந்தேன்." என்றாள். வியந்த கண்கள் பல இவன் பக்கம் திரும்பின..அவளே பிளேட்டை நிரப்பி இவன் கையில் கொடுத்து "சாப்பிடு" என்றபோது கூச்சம் கொஞ்சம் குறைந்தது..எனினும் மனசுக்குள் மணி அடித்தது. இது ரொம்ப உசரமான இடம். விலகு..மறுநாள் கேக்ஸ் ஸ்வீட் என்று அள்ளிக்கொண்டு வந்து அம்மாவை நமஸ்கரித்தபோது திகைப்பு கூடியது..அம்மா நெகிழ்ந்தாள். நேற்றைக்கு அரவிந்தன் அவளின் அந்தஸ்த்து பற்றிச் சொல்லியிருந்ததால் –."எவ்வளவு உயரத்தில் இருக்கற பொண்ணு என்னமாய் இறங்கி வந்து பேசறா…" என்ற வியப்பு கூடிப்போனது.."ரஞ்சனாவின் நிச்சயதார்த்தத்துக்கு உன்னோடயே வந்துடறேனே… அர்விந்த்… " என்று கொஞ்சலாய்க் கேட்டாள் சிந்துஜா..ரஞ்சனா இவர்களின் வகுப்புத் தோழி. இவன் போகிற ஐடியாவிலேயே இல்லை. ஆனால் மறுக்க மனசு வரவில்லை..நிச்சயதார்த்தம் முடிந்து ராத்திரி திரும்பி வருகையில் பழங்கால சினிமாக் காட்சி மாதிரி பைக் வழியில் நின்று போனதும்… அறிவிப்பின்றி மழை துவங்கியதும், கற்பனைக் கதைகளில்தான் வரும் என்று நினைத்திருந்தான். இல்லை. நிஜ வாழ்விலும் வந்து தொலைக்கும். ஆளரவம் அதிகம் இல்லாத புற நகரின் நடுத்தெரு. டென்ஷனும் பொறுப்புணர்வும் அதிகமாயிற்று.."இரு டாக்ஸி புக் பண்ணித் தரேன்…" என்றபோது மறுத்தாள்.."மெக்கானிக் கடை தேடி… வண்டியை விட்டுட்டுட்டு வா. ரெண்டு பேருமே போவோம்…" என்றாள். மொபைலில் பெற்றோரைக் கூப்பிட்டுத் தகவல் சொன்னபோது எந்த விவரத்தையும் கூட்டவும் குறைக்கவும் இல்லை..ராத்திரி அவள் வீட்டு வாசலில் இறக்கிவிட்டு, பெல் அடித்து, பெற்றோரிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்..நிறைய நன்றி சொன்னார் அப்பா.."பொறந்த நாள் பார்ட்டிக்கு வந்த இல்ல தம்பி? கொண்டு விட்டதுக்கு ரொம்ப தாங்க்ஸ்பா" என்று புன்னகைத்த அம்மா இவன் கிளம்புகிறானா என்று பார்த்து, கேட் தாண்டிய பிறகே கதவைச் சாத்தி வெளி லைட்டை அணைத்த பண்பாடு நிம்மதி தந்தது.."நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்று வாய் வார்த்தையாக ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளவில்லைதான். ஆனாலும் மனசுக்குப் புரியாதா என்ன?.மாஸ்டர் டிகிரி முடித்தவுடனேயே அவர்கள் வீட்டில் வரன் பார்க்க ஆரம்பித்தார்கள்.."அர்விந்த்… அப்பா அம்மாகிட்ட சொல்லிடவா?" என்று திடுதிப்பென்று கேட்டாள்.."எ… என்ன சொல்லப்போற?"."வாட் எல்ஸ்? உன்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு…".முதல் முறையாக நேரடியாக… அப்பட்டமாக அறிவிக்கிறாள்.."இன்னும் வேலை கிடைக்கலை சிந்து…"."அதெல்லாம் எங்கப்பா ஈஸியா வாங்கிக்குடுப்பாரு…" என்றாள்..அவள் அப்பா மூலமாகவா? அவனுக்கு அதில் விருப்பம் இல்லை.."இப்ப சொல்லாட்டி அப்புறம் கை மீறிடும்பா…" கண் லேசாய்க் கலங்கியது..தவிப்பாய் இருந்தது. மறுக்க மனசு வரவில்லை..அவளே தொடர்ந்து, "வா… உன் வீட்டுக்கு வரேன். நான் உன் அம்மா அப்பா கிட்ட பேசறேன். அவங்களை வந்து பெண் கேட்கச் சொல்றேன்.".சொன்னபடி செய்தாள். இவனின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அதிக அதிர்ச்சி இல்லை. அம்மா இவனிடம் "லவ்வாடா?" என்று கேட்டதும் இவன் "தெரியலையே?" என்று நெளிந்ததும் சில பல முறை நடந்ததுண்டு. அவர்களுக்கு சந்தோஷம்தான்..நல்ல நாள் பார்த்து கருநீல நிறப் பட்டுப்புடவையும், தட்டு நிறையப் பழமும், பூவும், மஞ்சளும், ஸ்வீட்களுமாய் மூவரும் போனார்கள்.."எங்க வேலை பார்க்கற? எத்தனை ரூபாய் சம்பளம்?" என்று அவளுடைய அப்பா கேட்டார்.."சொந்தவீடு எந்த ஏரியாவில்? அண்ணா நகர்? அஷோக் நகர்? தி.நகர்?".அதில் தொனித்த குத்தல் புரியாமல் "சொந்த வீடுதாங்க.. கோவிலம்பாக்கம்…" என்று அம்மா குழந்தைத்தனமாக ஆரம்பித்தாள்..அவனுக்கு மிகத் தெளிவாய் ரிசல்ட் தெரிந்தது. அவர் பித்தளைத் தாம்பாளத்தைப் புறங்கையால் தட்டவில்லைதான். மென்மையாய் வாங்கி டீப்பாயின் மீது வைத்து, அரை மணி நேரம் மாற்றி மாற்றி அனைவரும் பேசி முடித்தவுடன், அதே மென்மையுடன் தட்டை எடுத்து இவர்களிடமே திருப்பிக் கொடுத்தார்..டிஸ்கஷனின் சுருக்கம் இதுதான். அடுத்த வருடம் அதே நாளில் சந்திக்க வேண்டும். (அது வரை சந்திக்க வேண்டாம்!) அதற்குள் வேலை தேடிக் கொள்ள வேண்டும். டேபிள் துடைக்கிற வேலை… பட்டர் நான்… பன்னீர் பட்டர் மசாலா சர்வ் செய்கிற வேலை என்கிற மாதிரி இருக்கக்கூடாது. (அவருடைய சொற்பிரயோகம்!). கௌரவமாகச் சொல்லிக்கொள்கிற உத்யோகமாக இருக்க வேண்டும். அப்படி வந்தால் என் பெண் உனக்குத்தான். அது வரை காத்திருப்போம்..தன் படிப்புக்கும், மார்க்குக்கும் அது சுலபம் என்றுதான் நினைத்திருந்தான்..ஆனால், நிஜம் வேறு மாதிரி மிரட்டியது..கவுன்ட் டவுனாக மாதங்கள் குறைந்து ஜூன் பதினைந்து நெருங்க நெருங்க… டென்ஷன் அதிகமாகியது..அமெரிக்கக் கம்பெனிகளுக்கு மனுப்போட்டான். இன்டர்வியூ ரவுண்ட் ரவுண்டாக நடந்தது..அவளின் அப்பாவுக்கு மெசேஜ்கள் போட முயன்ற போது இவனை பிளாக் செய்திருப்பது புரிந்தது. சிந்துஜாவின் மொபைல் சகல நாட்களும் 'நாட் ரீச்சபிள்..'' என்றது..அப்பா 'சிம்' மைக் கழற்றி வாங்கி வைத்திருப்பாரோ?.ஏழே நாளில் கெடு தீரும் நிலையில் அந்த ஆஃபர் லெட்டர் கண்ணில் தேன் வார்த்தது!.'வி ஆர் பிளீஸ்ட் டு ஆஃபர் யூ த பொஸிஷன் அஃப்…' மேற்கொண்டு படிக்க முடியாமல் சந்தோஷம் கண்ணை நிறைத்தது.."அம்மா.. அப்பா.." என்று கத்தினான். குடும்பம் குதூகலித்தது..ராத்திரி பத்தேகாலுக்கு அவர்களின் அண்ணா நகர் பங்களாவுக்குப் பறந்தான்.."யாரும் இல்லைங்க.. கோயமுத்தூர் போயிருக்காங்க.." இவன் யாரென்று தெரியாத கூர்க்கா சொன்னான்.."எப்ப வருவாங்க?" என்று கேட்டபோது "தெரியலைங்க அவங்க மக சிந்துஜாவுக்குக் கல்யாணம்… நாளைக்கு…" என்றான்..யாராவது வந்தால் காட்டுவதற்காக வைத்திருந்த இன்விடேஷனை நீட்டினான். சந்தேகத்துக்கு இடமின்றி சௌபாக்யவதி சிந்துஜாவுக்கும் யாரோ ஒரு ஆகாஷுக்கும்….தலை சுழன்றது..இதற்கப்புறம் யோசிக்கக்கூட எதுவும் இல்லை..அடுத்த வாரம் எடிஹாட் விமானத்தில் அமெரிக்கா கிளம்பிவிட்டான்..மூன்று வருடங்களுக்குப் பிறகு இதோ… விதி அவளைக் கொண்டு அவன் முன் நிறுத்தி…."கேம் ஸ்டார்ட்" யாரோ இரண்டு சிறுவர்கள் மொபைலில் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.."அர்விந்த்த்த்த்த்…" துள்ளி நெருங்கினாள்..முகத்தைத் திருப்பிக்கொண்டான்.."என்ன அர்விந்த் சொல்லிக்காம போயிட்ட… உன் வீட்டுக்கு வந்து பார்த்தேன்… காலி பண்ணிட்டீங்கன்னாங்க… அட… அமெரிக்காலயா இருக்க? `ப்ரெண்ட்ஸூக்கும் தகவல் தெரியலை…எத்தனை வாட்டி போன் செய்து பார்த்தேன்" என்றாள்..முகம் முழுக்க வழிந்த காதல் பயம் தந்தது.."உங்க புருஷன் வரலையா மிஸஸ் ஆகாஷ்…"."ஓ.. ஆகாஷூக்கும் எனக்கும் கல்யாணம் நிச்சயமானது உனக்குத் தெரியுமா?".கேள்வி கசந்தது.."நிச்சயமானது தெரிஞ்சிருக்கு. நிந்து போனது தெரியலை போல..".சரேலென்று திரும்பினான்.."அப்பாவிடம் சண்டை போட்டேன். ஜூன் பதினைஞ்சு வரை வெயிட் பண்ணச் சொன்னேன். ஆறுமாசமாய்க் கல்யாண ஏற்பாடு பண்ணினார். இத்தனை நாள் கிடைக்காத வேலை இந்த ஒரு வாரத்தில் கிடைச்சுடுமான்னு கடைசியில் கேட்டார். உன் வீட்டுக்கு ரெண்டு வாட்டி வந்தேன். பூட்டியிருந்தது"."அய்யோ… எங்கயாவது வெளியில்…"."கல்யாணத்துக்கு முதல் நாள் மாப்பிள்ளை வீட்டு கும்பல் மொத்தத்தையும் வெச்சுக்கிட்டு எல்லாத்தையும் விவரிச்சுட்டேன். கல்யாணம் நடந்தால் லைஃப் முழுக்க நரகமாயிடும்னு பயமுறுத்தினேன். வேற வழியில்லாமல் கேன்ஸல் செய்தாங்க. பேரன்ட்ஸ் கடுப்பாயிட்டாங்க. வெறுப்பில் அமெரிக்காவுக்கு வேலை தேடிக்கிட்டு வந்துட்டேன்." என்று கையை நீட்டினாள்..கூச்சமின்றி அழுதவாறு அணைத்தாள்.."என் லண்டன் ட்ரிப் ரத்து" என்றான்.."என் ஹவாய் ட்ரிப் ரத்து" என்று சிரித்தாள்.