ஒரு கலைஞனின் வாழ்க்கையில் -5.மம்முட்டி . தமிழில் கே.வி.ஷைலஜா.அந்தத் தயாரிப்பாளரை நானும் என் குடும்பமும் பார்த்துவிட்டு திரும்பி வந்ததை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. பல வருடங்களுக்குப் பிறகும் அந்தச் சம்பவம் எனக்குக் கற்றுத்தந்த வாழ்வியல் தரிசனத் தோடுதான் எல்லாவற்றையும் பார்க்கிறேன்..என்ன காரணம் என்றே தெரியாது. ஆனால் நான் சினிமாவிற்கு வந்த சில நாட்களிலேயே என்னை எல்லா இடங்களிலும் முன்னிலைப்படுத்தினார். சிறிய வேடமாக இருந்தாலும் ஏ.சி. அறை, கார், போஸ்டரில் பெரிய முகம் என சினிமாவின் ஆரம்ப காலத்தில் ஒரு நடிகன் ஆசைப்படும் எல்லாவற்றையும் செய்தார். பலரிடமும் என்னைப் பற்றி மரியாதையாகப் பேசுவார். ஒருபோதும் அவருடைய படத்தில் நடிக்க நான் சம்பளம் பேசியதில்லை. கணக்குப் பார்த்தால் நான் வாங்கவேண்டிய பாக்கி நிறைய இருந்தது. ஆனால் நான் அதைப் பற்றி யோசித்ததேயில்லை. ஏனென்றால் அது வங்கியில் செலுத்திய பணம்போல நிலையாக இருக்குமென்றே நினைத்திருந்தேன். எங்கள் மன ஆழத்தில் இழையோடிய நட்பு சினிமாவில் எல்லோருக்கும் தெரிந்திருந்தது..இடையில் சில காலம் என் படங்கள் நான் நினைத்தது போல வெற்றியடையவில்லை. சினிமாவிலிருந்து நான் வெளியேறிவிடுவேன் என்று பலரும் நினைத்தது போலவே எனக்குள்ளும் சினிமாவை வைத்துக்கொண்டு வாழமுடியாது என்ற அச்சம் கலங்கடித்த நாட்கள் அவை..நிலைமை இப்படியாகுமென்று யூகிக்கமுடியாத நான் வீடுகட்ட ஆரம்பித்திருந்தேன். பணத்தின் தேவை அதிகமானது. என்னுடையது என்று திடமாய் நம்பிய தயாரிப்பாளரைத் தேடிப்போனேன். என்னை வரவேற்ற அவரின் முகத்தின்கருமை வார்த்தைகளில் தெரிந்தது. எனக்குத் தரவேண்டிய பணத்தில் கொஞ்சம் கேட்டேன்.."உனக்குப் பணம் தரவேண்டியிருக்கலாம். ஆனால் இப்போது என்னிடம் பணம் இல்லை."."முழுக்க வேண்டாம். கொஞ்சம் கிடைத்தால்கூட வீட்டுப் பிரச்சனையை முடிச்சிடுவேன். இல்லன்னா நான் ரொம்ப கஷ்டத்தில மாட்டிப்பேன்."."இருந்தால்தானே தரமுடியும். அதான் மொதல்லயே பணம் இல்லன்னு சொல்லிட்டேனே.".நான் அவமானத்தில் துவண்டுபோனேன். பணம் இல்லையென்பது ஒரு பக்கம் இருந்தாலும் நான் மிகவும் நம்பிய, நேசித்த மனிதர் இப்படிப் பேசிவிட்டாரே என்ற வேதனை மறுபக்கமாக என்னை அழுத்தியது. என் சினிமா வாழ்க்கை அஸ்மதித்துவிட்டது என்று அவர் நினைத்திருக்கலாம். இனி ஒருபோதும் நான் மீண்டெழ முடியாது என்றும் நினைத்திருக்கலாம். பின் எதற்கு பணம் கொடுக்க வேண்டும்?.கொச்சிக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில் யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத மன வேதனைக்கு ஆளானேன்..உலக உருண்டையைப்போலக் காலம் மேலும், கீழும் சுழன்றதில் என் படங்கள் மீண்டும் ஓடத்தொடங்கின. வசந்தகாலத் துளிர்களாய் நம்பிக்கை துளிர்த்து, பச்சையம் கூடி, திடமான கிளைகளாக மாறி மரத்தை அலங்கரிப்பது போல நிலைமை மாறித் தயாரிப்பாளர்கள் என்னைத் தேடிவர ஆரம்பித்தார்கள். அப்படி வந்தவர்களில் அந்தப் பழைய தயாரிப்பாளரும் இருந்தார்.."மம்முட்டி, நமக்கொரு கணக்கு பாக்கியிருக்கே. அதைத் தீர்க்கவேண்டாமா? எவ்வளவு தரணும் சொல்லுங்க?"."எந்தக் கணக்கு?"."சில படங்களோட சம்பளம் பாக்கியிருக்கே. அந்தக் கணக்குத்தான்…"."அந்தக் கணக்கை நான் எப்போதோ மனக்கணக்காய் எழுதித் தீர்த்துவிட்டேன். அதை இனி திரும்பிப் பார்க்க வேண்டாம். எழுதி முடித்த கணக்கிற்குப் பாக்கியில்லை. அது முடிந்துவிட்டது.".பொறுமையாகச் சொல்லிமுடித்தேன். இன்றுவரை நான் அவரிடம் பணம் வாங்கிக்கொள்ளவில்லை. அதை வாங்காமலிருந்தது மீண்டும் திரைத்துறையில் காலூன்ற முடிந்த அகம்பாவத்தால் அல்ல. என்னை யாருக்கும் அறிமுகமில்லாத காலகட்டத்தில் முதல் வரிசையில் இடம் கொடுத்தும், முக்கியக் கதாபாத்திரம் கொடுத்தும், போஸ்டரில் முக்கியத்துவம் கொடுத்தும், நல்ல படங்களை அறிமுகப்படுத்தியும் வாய்ப்பு தந்தது அவர்தான். அன்று அவர் அதற்காக எதையும் என்னிடம் எதிர்பார்க்கவில்லை. அன்றைய அவருடைய பிரியத்திற்குத் திருப்பிக்கொடுக்க எதுவும் என்னிடம் இல்லை. ஆனால் எனக்குண்டானதைக் கூட வாங்காமல் நான் அந்தக் கடனைத் திருப்பி அடைத்தேன்..கூலிகூட வாங்காமல் வேலை பார்த்தேன். அன்றும், இன்றும் எனக்கு அது பெரிய தொகைதான். இன்றைக்கு ஆரம்பத்தில் சினிமாவில் புதியவரொருவர் வாங்கும் சம்பளத்தைப் பார்க்கும்போது அந்தப் பணம் மிகவும் சொற்பம்தான்..பல நேரங்களிலும் நம் கடமைகளைத் தீர்த்துக்கொள்ள கடவுள் இப்படியான சந்தர்ப்பங்களை ஒழுங்கு செய்வதை வாழ்வில் நாம் தரிசிக்கிறோம். என்னைக் காலம் சினிமாவிற்குத் திருப்பிக்கொண்டு வந்ததே அந்தப் பணத்தை வேண்டாமென்று சொல்லவும் அதன்வழி பழைய கடனை அடைக்கவுமான வழிதானென்று நான் நினைக்கிறேன். சினிமாவிலிருந்து வெளியே போயிருந்தேனேயானால் அந்த நல்ல மனிதரிடம் நான் பட்ட கடன் அப்படியே இருந்திருக்கும்..இப்போது ஒருபோதும் திருப்பித் தரமுடியாத கடனுமாக அவர் என்னோடு பிணைக்கப்பட்டிருக்கிறார். இப்போதும் அவரைப் பார்க்கும்போது மனதில் கொஞ்சம்கூட வைராக்கியமில்லாமல் சிரிக்கவும், பேசவும் முடிகிறதே என்பதுதான் என் சந்தோஷமே. அது என் வளர்ச்சியில் அவருடைய பங்கு மிக அதிகம் என்று நினைப்பதாலும் நம்புவதாலுமே சாத்தியமாகிறது..பலரும் செய்யும் உதவிகளின் அடர்த்தி அவர்களுக்குப் புரிவதில்லை. நம்முடைய வெற்றிக்குச் சுவடிட்டு அவர்கள் காத்திருப்பதை ஒருபோதும் நாம் உணருவதேயில்லை..பிறகு அவர்கள் சத்ருக்களைப் போல நடந்து கொண்டாலும் அந்தப் படிகளை மறக்கக் கூடாதென நான் நினைக்கிறேன். அப்படியான படிகள் குறித்த நினைவுகள்தான் பலருக்கும் நம்மை உதவ வைக்கிறது. என்னால் முடிந்தவரை யாருக்கெல்லாம் முடியுமோ அவர்களுக்கெல்லாம் உதவ வேண்டும் என்பதே என் விருப்பம். அதுவே என் பிரார்த்தனையும்கூட..(தொடரும்)
ஒரு கலைஞனின் வாழ்க்கையில் -5.மம்முட்டி . தமிழில் கே.வி.ஷைலஜா.அந்தத் தயாரிப்பாளரை நானும் என் குடும்பமும் பார்த்துவிட்டு திரும்பி வந்ததை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. பல வருடங்களுக்குப் பிறகும் அந்தச் சம்பவம் எனக்குக் கற்றுத்தந்த வாழ்வியல் தரிசனத் தோடுதான் எல்லாவற்றையும் பார்க்கிறேன்..என்ன காரணம் என்றே தெரியாது. ஆனால் நான் சினிமாவிற்கு வந்த சில நாட்களிலேயே என்னை எல்லா இடங்களிலும் முன்னிலைப்படுத்தினார். சிறிய வேடமாக இருந்தாலும் ஏ.சி. அறை, கார், போஸ்டரில் பெரிய முகம் என சினிமாவின் ஆரம்ப காலத்தில் ஒரு நடிகன் ஆசைப்படும் எல்லாவற்றையும் செய்தார். பலரிடமும் என்னைப் பற்றி மரியாதையாகப் பேசுவார். ஒருபோதும் அவருடைய படத்தில் நடிக்க நான் சம்பளம் பேசியதில்லை. கணக்குப் பார்த்தால் நான் வாங்கவேண்டிய பாக்கி நிறைய இருந்தது. ஆனால் நான் அதைப் பற்றி யோசித்ததேயில்லை. ஏனென்றால் அது வங்கியில் செலுத்திய பணம்போல நிலையாக இருக்குமென்றே நினைத்திருந்தேன். எங்கள் மன ஆழத்தில் இழையோடிய நட்பு சினிமாவில் எல்லோருக்கும் தெரிந்திருந்தது..இடையில் சில காலம் என் படங்கள் நான் நினைத்தது போல வெற்றியடையவில்லை. சினிமாவிலிருந்து நான் வெளியேறிவிடுவேன் என்று பலரும் நினைத்தது போலவே எனக்குள்ளும் சினிமாவை வைத்துக்கொண்டு வாழமுடியாது என்ற அச்சம் கலங்கடித்த நாட்கள் அவை..நிலைமை இப்படியாகுமென்று யூகிக்கமுடியாத நான் வீடுகட்ட ஆரம்பித்திருந்தேன். பணத்தின் தேவை அதிகமானது. என்னுடையது என்று திடமாய் நம்பிய தயாரிப்பாளரைத் தேடிப்போனேன். என்னை வரவேற்ற அவரின் முகத்தின்கருமை வார்த்தைகளில் தெரிந்தது. எனக்குத் தரவேண்டிய பணத்தில் கொஞ்சம் கேட்டேன்.."உனக்குப் பணம் தரவேண்டியிருக்கலாம். ஆனால் இப்போது என்னிடம் பணம் இல்லை."."முழுக்க வேண்டாம். கொஞ்சம் கிடைத்தால்கூட வீட்டுப் பிரச்சனையை முடிச்சிடுவேன். இல்லன்னா நான் ரொம்ப கஷ்டத்தில மாட்டிப்பேன்."."இருந்தால்தானே தரமுடியும். அதான் மொதல்லயே பணம் இல்லன்னு சொல்லிட்டேனே.".நான் அவமானத்தில் துவண்டுபோனேன். பணம் இல்லையென்பது ஒரு பக்கம் இருந்தாலும் நான் மிகவும் நம்பிய, நேசித்த மனிதர் இப்படிப் பேசிவிட்டாரே என்ற வேதனை மறுபக்கமாக என்னை அழுத்தியது. என் சினிமா வாழ்க்கை அஸ்மதித்துவிட்டது என்று அவர் நினைத்திருக்கலாம். இனி ஒருபோதும் நான் மீண்டெழ முடியாது என்றும் நினைத்திருக்கலாம். பின் எதற்கு பணம் கொடுக்க வேண்டும்?.கொச்சிக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில் யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத மன வேதனைக்கு ஆளானேன்..உலக உருண்டையைப்போலக் காலம் மேலும், கீழும் சுழன்றதில் என் படங்கள் மீண்டும் ஓடத்தொடங்கின. வசந்தகாலத் துளிர்களாய் நம்பிக்கை துளிர்த்து, பச்சையம் கூடி, திடமான கிளைகளாக மாறி மரத்தை அலங்கரிப்பது போல நிலைமை மாறித் தயாரிப்பாளர்கள் என்னைத் தேடிவர ஆரம்பித்தார்கள். அப்படி வந்தவர்களில் அந்தப் பழைய தயாரிப்பாளரும் இருந்தார்.."மம்முட்டி, நமக்கொரு கணக்கு பாக்கியிருக்கே. அதைத் தீர்க்கவேண்டாமா? எவ்வளவு தரணும் சொல்லுங்க?"."எந்தக் கணக்கு?"."சில படங்களோட சம்பளம் பாக்கியிருக்கே. அந்தக் கணக்குத்தான்…"."அந்தக் கணக்கை நான் எப்போதோ மனக்கணக்காய் எழுதித் தீர்த்துவிட்டேன். அதை இனி திரும்பிப் பார்க்க வேண்டாம். எழுதி முடித்த கணக்கிற்குப் பாக்கியில்லை. அது முடிந்துவிட்டது.".பொறுமையாகச் சொல்லிமுடித்தேன். இன்றுவரை நான் அவரிடம் பணம் வாங்கிக்கொள்ளவில்லை. அதை வாங்காமலிருந்தது மீண்டும் திரைத்துறையில் காலூன்ற முடிந்த அகம்பாவத்தால் அல்ல. என்னை யாருக்கும் அறிமுகமில்லாத காலகட்டத்தில் முதல் வரிசையில் இடம் கொடுத்தும், முக்கியக் கதாபாத்திரம் கொடுத்தும், போஸ்டரில் முக்கியத்துவம் கொடுத்தும், நல்ல படங்களை அறிமுகப்படுத்தியும் வாய்ப்பு தந்தது அவர்தான். அன்று அவர் அதற்காக எதையும் என்னிடம் எதிர்பார்க்கவில்லை. அன்றைய அவருடைய பிரியத்திற்குத் திருப்பிக்கொடுக்க எதுவும் என்னிடம் இல்லை. ஆனால் எனக்குண்டானதைக் கூட வாங்காமல் நான் அந்தக் கடனைத் திருப்பி அடைத்தேன்..கூலிகூட வாங்காமல் வேலை பார்த்தேன். அன்றும், இன்றும் எனக்கு அது பெரிய தொகைதான். இன்றைக்கு ஆரம்பத்தில் சினிமாவில் புதியவரொருவர் வாங்கும் சம்பளத்தைப் பார்க்கும்போது அந்தப் பணம் மிகவும் சொற்பம்தான்..பல நேரங்களிலும் நம் கடமைகளைத் தீர்த்துக்கொள்ள கடவுள் இப்படியான சந்தர்ப்பங்களை ஒழுங்கு செய்வதை வாழ்வில் நாம் தரிசிக்கிறோம். என்னைக் காலம் சினிமாவிற்குத் திருப்பிக்கொண்டு வந்ததே அந்தப் பணத்தை வேண்டாமென்று சொல்லவும் அதன்வழி பழைய கடனை அடைக்கவுமான வழிதானென்று நான் நினைக்கிறேன். சினிமாவிலிருந்து வெளியே போயிருந்தேனேயானால் அந்த நல்ல மனிதரிடம் நான் பட்ட கடன் அப்படியே இருந்திருக்கும்..இப்போது ஒருபோதும் திருப்பித் தரமுடியாத கடனுமாக அவர் என்னோடு பிணைக்கப்பட்டிருக்கிறார். இப்போதும் அவரைப் பார்க்கும்போது மனதில் கொஞ்சம்கூட வைராக்கியமில்லாமல் சிரிக்கவும், பேசவும் முடிகிறதே என்பதுதான் என் சந்தோஷமே. அது என் வளர்ச்சியில் அவருடைய பங்கு மிக அதிகம் என்று நினைப்பதாலும் நம்புவதாலுமே சாத்தியமாகிறது..பலரும் செய்யும் உதவிகளின் அடர்த்தி அவர்களுக்குப் புரிவதில்லை. நம்முடைய வெற்றிக்குச் சுவடிட்டு அவர்கள் காத்திருப்பதை ஒருபோதும் நாம் உணருவதேயில்லை..பிறகு அவர்கள் சத்ருக்களைப் போல நடந்து கொண்டாலும் அந்தப் படிகளை மறக்கக் கூடாதென நான் நினைக்கிறேன். அப்படியான படிகள் குறித்த நினைவுகள்தான் பலருக்கும் நம்மை உதவ வைக்கிறது. என்னால் முடிந்தவரை யாருக்கெல்லாம் முடியுமோ அவர்களுக்கெல்லாம் உதவ வேண்டும் என்பதே என் விருப்பம். அதுவே என் பிரார்த்தனையும்கூட..(தொடரும்)