வினோத்.சிலை கடத்தல் மன்னன் என்ற அடைமொழியுடன் சில ஆண்டுகளுக்கு முன் தலைப்பு செய்தியாகயிருந்தவன். மிகப்பெரிய அளவில் இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழக கோயில்களிலிருந்து தெய்வச் சிலைகளைத் திருடி, அதற்கு அவை பழைமையான சிலைகள் இல்லை என்றும், அதன் "மாதிரிகள்" தான் என்றும் சான்றிதழ்கள் பெற்று அமெரிக்காவிற்கு கொண்டு சென்று நியூயார்க்கிலிருக்கும் தன் கடை மூலமாக சிலை சேகரிப்பவர்களுக்கும் மியூசியம்களுக்கும் விற்று பெரும் கோடிஸ்ரவரானவன். சில ஆண்டுகளுக்கு முன் பிடிபட்டு இப்போது சென்னை புழல் சிறையில் இருக்கிறான். இன்னும் சில வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன..இப்போது இவர் பெயர் மீண்டும் செய்தியாகியிருக்கிறது..தஞ்சாவூர் அரண்மனை பகுதியில், சரஸ்வதி மஹால் நூலகம் உள்ளது. அங்கு, பழங்கால ஓலைச் சுவடிகள், மன்னர் கால கலைப் பொக்கிஷங்கள் என, ஏராளமான பொருட்கள் உள்ளன. கலைப் பொக்கிஷங்களுடன் சரஸ்வதி மஹாலில், தஞ்சையை ஆண்ட மன்னர் சரபோஜி, அவரது மகனுடன் இருக்கும் அழகிய ஓவியம் வைக்கப்பட்டு இருந்தது. அந்த ஓவியத்தில் இருவரின் உருவமும் அச்சடித்தது போல இருக்கும். தங்க நிறத்தில் மின்னும்.'வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஓவியத்தை 2011 முதல் காணவில்லை. 'இந்த ஓவியம் 1822 -27க்கு இடையே வரையப்பட்டது..'வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு இருக்கலாம்' என, 2017ல், ராஜேந்திரன் என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்; ஆனால், 'கண்டுபிடிக்க முடியவில்லை' என்ற அறிக்கையுடன் அந்த கோப்பு மறக்கபட்டுவிட்டது..இந்நிலையில், கண்டுபிடிக்க முடியாத கலைப் பொக்கிஷங்கள் குறித்த வழக்கு விபரங்களை, சமீபத்தில், மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., ஜெயந்த் முரளி, ஐ.ஜி., தினகரன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்..அப்போது அவர்கள் கண்டுபிடித்த விஷயம்:.இந்த ஓவியத்தை, அமெரிக்காவில் உள்ள, 'பெம்' எனப்படும் அருங்காட்சியகம் சுபாஷ் கபூரிடமிருந்து வாங்கியிருப்பது தெரியவந்தது..அதுமட்டுமில்லை, இந்தியாவின் வேண்டுகோளுக்கிணங்க இந்த ஓவியத்தை அபகரிக்கப்பட்ட கலைப்பொருளாக கைப்பற்றி அமெரிக்காவின் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி இன்வெஸ்டிகேஷன் அதிகாரிகளிடம் ஒப்படைத்து இருக்கும் செய்தியும், அவர்களிடமிருந்து வந்திருக்கும் அந்தக் கடிதம் கோப்புகளில் தூங்கிக்கொண்டிருந்ததையும் அறிந்தார்கள்..தஞ்சையை ஆண்ட மன்னர் சரபோஜி, அவரது மகனுடன் இருக்கும் பழங்கால ஓவியம் அமெரிக்காவில் இருப்பதை உறுதி செய்து கொண்டபின்னர் மூடப்பட்ட கேஸை தோண்டி துருவியதில் "இதுவும் சுபாஷ் கபூரின் கைவரிசை" என்பதையும் கண்டுபிடித்தனர்..சரஸ்வதி மஹால் ஓவியம் அவர்களிடம் இருப்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் அதை மீட்டெடுக்கம் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அமெரிக்க உள்துறை போலீசிடமிருந்து வந்த தகவல் ஓவியத் திருட்டைவிட அதிர்ச்சியளித்தது..'இந்த ஓவியத்தை 2015ல் இந்தியாவிடம் ஒப்படைக்க முயற்சி செய்தோம். அதை பெற்றுக்கொள்ள இந்தியத் தரப்பில் யாரும் முயற்சி செய்யவில்லை' என்பதுதான் அது..மீண்டும் இந்த ஓவியத்தை சரஸ்வதி மஹாலுக்கு எடுத்து வரும் முயற்சிகளை, இந்திய வெளியுறவுத்துறையுடன் இணைந்து இப்போது தொடங்கியிருக்கிறார்கள் தமிழக போலிஸின் சிலைத் தடுப்பு பிரிவினர்..ராஜா மகனுடன் தன் அரண்மனைக்குத் திரும்பும் வரை கோப்புகள் தூங்காமல் அதிகாரிகள் இடம் மாறாமலிருக்க வேண்டும்.
வினோத்.சிலை கடத்தல் மன்னன் என்ற அடைமொழியுடன் சில ஆண்டுகளுக்கு முன் தலைப்பு செய்தியாகயிருந்தவன். மிகப்பெரிய அளவில் இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழக கோயில்களிலிருந்து தெய்வச் சிலைகளைத் திருடி, அதற்கு அவை பழைமையான சிலைகள் இல்லை என்றும், அதன் "மாதிரிகள்" தான் என்றும் சான்றிதழ்கள் பெற்று அமெரிக்காவிற்கு கொண்டு சென்று நியூயார்க்கிலிருக்கும் தன் கடை மூலமாக சிலை சேகரிப்பவர்களுக்கும் மியூசியம்களுக்கும் விற்று பெரும் கோடிஸ்ரவரானவன். சில ஆண்டுகளுக்கு முன் பிடிபட்டு இப்போது சென்னை புழல் சிறையில் இருக்கிறான். இன்னும் சில வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன..இப்போது இவர் பெயர் மீண்டும் செய்தியாகியிருக்கிறது..தஞ்சாவூர் அரண்மனை பகுதியில், சரஸ்வதி மஹால் நூலகம் உள்ளது. அங்கு, பழங்கால ஓலைச் சுவடிகள், மன்னர் கால கலைப் பொக்கிஷங்கள் என, ஏராளமான பொருட்கள் உள்ளன. கலைப் பொக்கிஷங்களுடன் சரஸ்வதி மஹாலில், தஞ்சையை ஆண்ட மன்னர் சரபோஜி, அவரது மகனுடன் இருக்கும் அழகிய ஓவியம் வைக்கப்பட்டு இருந்தது. அந்த ஓவியத்தில் இருவரின் உருவமும் அச்சடித்தது போல இருக்கும். தங்க நிறத்தில் மின்னும்.'வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஓவியத்தை 2011 முதல் காணவில்லை. 'இந்த ஓவியம் 1822 -27க்கு இடையே வரையப்பட்டது..'வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு இருக்கலாம்' என, 2017ல், ராஜேந்திரன் என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்; ஆனால், 'கண்டுபிடிக்க முடியவில்லை' என்ற அறிக்கையுடன் அந்த கோப்பு மறக்கபட்டுவிட்டது..இந்நிலையில், கண்டுபிடிக்க முடியாத கலைப் பொக்கிஷங்கள் குறித்த வழக்கு விபரங்களை, சமீபத்தில், மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., ஜெயந்த் முரளி, ஐ.ஜி., தினகரன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்..அப்போது அவர்கள் கண்டுபிடித்த விஷயம்:.இந்த ஓவியத்தை, அமெரிக்காவில் உள்ள, 'பெம்' எனப்படும் அருங்காட்சியகம் சுபாஷ் கபூரிடமிருந்து வாங்கியிருப்பது தெரியவந்தது..அதுமட்டுமில்லை, இந்தியாவின் வேண்டுகோளுக்கிணங்க இந்த ஓவியத்தை அபகரிக்கப்பட்ட கலைப்பொருளாக கைப்பற்றி அமெரிக்காவின் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி இன்வெஸ்டிகேஷன் அதிகாரிகளிடம் ஒப்படைத்து இருக்கும் செய்தியும், அவர்களிடமிருந்து வந்திருக்கும் அந்தக் கடிதம் கோப்புகளில் தூங்கிக்கொண்டிருந்ததையும் அறிந்தார்கள்..தஞ்சையை ஆண்ட மன்னர் சரபோஜி, அவரது மகனுடன் இருக்கும் பழங்கால ஓவியம் அமெரிக்காவில் இருப்பதை உறுதி செய்து கொண்டபின்னர் மூடப்பட்ட கேஸை தோண்டி துருவியதில் "இதுவும் சுபாஷ் கபூரின் கைவரிசை" என்பதையும் கண்டுபிடித்தனர்..சரஸ்வதி மஹால் ஓவியம் அவர்களிடம் இருப்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் அதை மீட்டெடுக்கம் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அமெரிக்க உள்துறை போலீசிடமிருந்து வந்த தகவல் ஓவியத் திருட்டைவிட அதிர்ச்சியளித்தது..'இந்த ஓவியத்தை 2015ல் இந்தியாவிடம் ஒப்படைக்க முயற்சி செய்தோம். அதை பெற்றுக்கொள்ள இந்தியத் தரப்பில் யாரும் முயற்சி செய்யவில்லை' என்பதுதான் அது..மீண்டும் இந்த ஓவியத்தை சரஸ்வதி மஹாலுக்கு எடுத்து வரும் முயற்சிகளை, இந்திய வெளியுறவுத்துறையுடன் இணைந்து இப்போது தொடங்கியிருக்கிறார்கள் தமிழக போலிஸின் சிலைத் தடுப்பு பிரிவினர்..ராஜா மகனுடன் தன் அரண்மனைக்குத் திரும்பும் வரை கோப்புகள் தூங்காமல் அதிகாரிகள் இடம் மாறாமலிருக்க வேண்டும்.