வித்யா சுப்ரமணியம்.சமையலறைக்குள் அவள் நுழைந்தபோது பெரியண்ணி மட்டுமே கணவருக்காக லெமன் டீ தயாரித்துக் கொண்டிருக்க, சமையல் செய்யும் பெண்மணி காய் நறுக்கிக் கொண்டிருந்தார். அண்ணி அவள் முகத்தை உற்றுப்பார்த்தாள்."அழுதியா?".கேட்கும்போதே கண்கள் பளபளக்கத் துவங்கியது.."அவர் ஏதோ பைத்தியக்காரத்தனமா பேசறார். அதைப்போய் பெரிசா எடுத்துக்கிட்டு…. ".கவலைப்படாதே. எங்க வீட்டுப் பையனைப்பத்தி எங்களுக்குத் தெரியாதா? ஆனா எங்க கவலையெல்லாம் என்னைக்காவது நம்ம விரலே நம்ம கண்ணைக் குத்திடுமோன்னுதான். நம்ம குழந்தைன்னாலும் அடிச்சா வலிக்கும்தானே? ஒருமுறை ரெண்டுமுறை வேணா கண்டுக்காம விட்டுரலாம். தொடர்ந்து அடிச்சு ரொம்ப வலிச்சா…? நம்ம கைல எதுவுமில்ல மைதிலி. கஷ்டம் நஷ்டம் எல்லாத்துக்கும் நம்மை எப்பவும் தயாராதான் வெச்சுக்கணும்.".அண்ணி நிறுத்த சரி என்பது போல மைதிலி பெருமூச்சு விட்டாள்.."டிபன் ரெடி ஆகிடுச்சும்மா டேபிளில் எடுத்து வைக்கவா?" சமையல்காரம்மா கேட்டாள். காலையில் நடந்த விஷயத்தினாலோ என்னவோ யாருமே டேபிளுக்கு வரவில்லை. மைதிலி தானே ஒவ்வொருவர் அறையாகச் சென்று அழைத்தாள்.."என்னமோ பசியில்லம்மா நீ சாப்பிடு" சொல்லி வைத்தாற்போல் ஒவ்வொருவரும் சொன்னார்கள்..அவளுக்கும் வேண்டியிருக்கவில்லை. வயிற்று சிசுவுக்காக ஒரு கிளாஸ் பால் மட்டும் குடிக்கலாமென்று அடுப்படிக்கு சென்று பாலை சுடவைத்தபோது நடு அண்ணி வந்தாள்.."வா மைதிலி எனக்கு பசிக்குது நாம சாப்பிடலாம்."."அண்ணி நா…."."பாலை அப்டி வை. சாப்பிட்டுவிட்டு குடிக்கலாம். மனசுல என்ன கஷ்டமிருந்தாலும் ஒரு பிள்ளைதாச்சி பெண் வயிற்றைப் பட்டினி மட்டும் போடக்கூடாது. வா வந்து சாப்பிடு.".அண்ணி அவளை அழைத்துக்கொண்டு சாப்பாட்டு மேஜைக்கு வந்தாள். சுடச்சுட இருந்த பொங்கலும், கத்தரிக்காய் கொஸ்துவும், மெதுவடையும் வைத்தாள் அவள் தட்டில்.."நீ கர்ப்பமடைந்திருக்கும் நல்ல விஷயத்திற்காக மாலதியம்மாவிடம் ஏதேனும் இனிப்பு செய்யச் சொல்லியிருந்தோம்" என்றபடி ஒரு பாதாம் கேக்கையும் ஒரு சிறிய கப்பில் வைத்து அவள் தட்டின் பக்கத்தில் வைக்க, மைதிலியின் கண்கள் சட்டென கலங்கிற்று..வீடே மகிழும் ஒரு விஷயத்தை அவன் இன்னும் அறியக்கூட இல்லையே என்கிற துக்கம்..அண்ணி அவளோடு தானும் அமர்ந்து சாப்பிட்டாள்.."ஆனந்த் எழுந்தப்பறம் இந்த இனிப்பை அவனுக்குக் கொடுத்து விஷயத்தைச் சொல்லு. எல்லாம் சரியாப்போகும். மத்த விஷயங்கள் எதுபற்றியும் இப்போ அவனிடம் கேட்க வேண்டாம் புரிஞ்சுதா?" அண்ணி ஒரு டப்பாவில் இனிப்புகளை அள்ளிப்போட்டு மூடி அவளிடம் கொடுத்தனுப்பினாள்..ஒருவித அச்சத்துடன்தான் அவள் மாடிக்கு வந்தாள். படுக்கையில் அவனைக் காணவில்லை. பாத்ரூம் கதவு உட்புறம் தாழிடப்பட்டிருந்தது. அவள் படுக்கையை சரிசெய்துவிட்டு, துவைத்து காய்ந்த துணிகளை கட்டிலில் எடுத்துப் போட்டு ஒவ்வொன்றாய் மடித்தாள். அவற்றை சுவரோடு பொருத்தப்பட்ட வார்ட்ரோபில் அடுக்கி வைக்கும்போது பாத்ரூம் கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டது..வெளியில் வந்தவன், அவளைப் பார்த்தும், எதுவும் பேசாமல், அவசர அவசரமாக உடைமாற்றி, தலைசீவி, வெளிநாட்டு சென்ட்டைத் தெளித்துக் கொண்டு தன் பிரீஃப்கேசை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்..எதுவும் சாப்டலையே…..வேணாம்..அட்லீஸ்ட் ஒரு ஸ்வீட் தரவா?."வேணாம். டைம் ஆச்சு" அவன் அறைக்கு வெளியில் சென்றான். என்ன விசேஷம், எதற்கு இனிப்பு என்றுகூடக் கேட்கவில்லை. மைதிலி கண்ணீரை அடக்கினாள். மாடியிலிருந்து கீழே ஹாலை எட்டிப்பார்த்தாள். கீழே இறங்கிச்சென்றவன் யாரிடமும் எதுவும் பேசாமல் வேகமாக வெளியேறியதைக் கண்டதும் அவள் முகம் மாறியது..*** *** ***.ஜனவரி 1991.பொங்கல் பண்டிகை மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது தோட்டத்தில் சூரிய ஒளி விழுமிடத்தில் கோலம் போட்டு செங்கல்கள் கொண்டு அடுப்பு அமைத்து, விறகுகள் வைத்து அக்னிமூட்டி, குங்குமம் வைத்து புது மஞ்சள் கிழங்கை அதன் இலைகளோடு கட்டியிருந்த பெரிய மண் பானையை வைத்து புது அரிசி கொண்டு பொங்கலிட்டு அது பொங்கி வரும்போது குலவையிட்டார்கள். வெற்றிலை, பாக்கு, பழங்கள் இல்லத்திலிருந்த பெரியவர்கள் முதல் குழந்தைகள்வரை கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நடனமாடினார்கள். அதிலும், அறுபது வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகள் பரதநாட்டியம், கதக் முதற்கொண்டு, கரகாட்டம் வரை உற்சாகமாக ஆடி அசத்தினார்கள். அறுபதைக் கடந்த இரண்டு பெண்மணிகள், `காத்திருப்பான் கமலக்கண்ணன்' பாடலுக்கு நடனமாடியபோது பத்மினியும் ராகினியும் கண் முன்னால் தெரிந்தனர். கரகோஷம் விண்ணைப்பிளந்தது. மைதிலி மலைத்துப்போனாள். முதிய ஆண்கள் தாங்களும் குறைந்தவர்கள் அல்ல என்பது போல வெஸ்டர்ன், பிரேக் என்று ஆடி அசத்தினர்..ஒவ்வொருவர் வாழ்விலும் எத்தனையோ பிரச்னைகள். உறவுகளும் வாரிசுகளுமற்று இல்லத்திற்கு வந்தவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், பிள்ளைகள் வெளிநாட்டிலிருக்க, தனிமையைத் தவிர்ப்பதற்காக வந்தவர்கள் என்று ஒவ்வொரு முதியவருக்கும் பின்னே ஒவ்வொரு கதை. அதேபோலதான் குழந்தைகளும். பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டவர்கள், குப்பையில் வீசப்பட்டவர்கள், அரசு தொட்டில்களில் இடப்பட்டவர்கள் என்று பல குழந்தைகள் உறவுகளின் அன்பையே அறியாதவர்கள். ஆனாலும் எல்லோரிடமும் எத்தனை உற்சாகம்? எத்தனை திறமைகள்! தூயரங்களையே நினைத்துக்கொண்டு எவரும் மூலையில் அமர்ந்துவிடவில்லை.."நீங்க கிளாசிகல் டான்ஸ் கத்துக்கிட்டீங்களா?" காத்திருப்பான் கமலக்கண்ணன் பாடலுக்கு நடனமாடிய அறுபது வயதுக்கு மேற்பட்ட பெண்மணி மீனாக்ஷியிடம் கேட்டாள்.."அஞ்சு வயசுல கத்துக்கிட்டு நாற்பது வருடங்கள் சலங்கை கட்டி ஆடிய கால்கள் இவை. பிறகு கணவரின் மரணம். அதற்குப்பிறகும் கூட நிறைய நிகழ்ச்சிகளுக்கு கூப்ட்டாங்க. ஆனா உறவுகள் என்னை ஆடவிடல. புருஷன் போனப்பறம் என்ன ஆட்டம் வேண்டிக்கிடக்குன்னு குத்திக்காட்டினாங்க, ஆனா பையனைப் படிக்க வைத்து ஆளாக்க வேண்டிய கடமை இருந்ததால், ஆடுவதை விட்டுட்டு நடனம் சொல்லிக் கொடுத்தேன். பையனை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தேன். நாலு வருஷம் முன்பு அங்கயே ஒரு பெண்ணைக் காதலிச்சு கல்யாணம் செய்துக்கிட்டதா ஒரு ஃபோன் வந்துது. அப்பறம் ஒரு போட்டோ வந்துது தபாலில். நல்லாயிருங்கன்னு நானும் தபால் மூலமே வாழ்த்தினேன். எனக்கு மாசம் பத்தாயிரம் அனுப்பறான். அவனுக்காக வாங்கின கடன்கள் என கழுத்தை இறுக்கியது. அவன் அனுப்பும் பணத்தை வைத்து செலவை சமாளிக்க முடியலை. வீட்டை விற்றுக் கடனையடைத்தேன். ஆனா வேற வீடு தேடினா ஒற்றை அறைக்கே வாடகை ஏழாயிரம் எட்டாயிரம் கேட்டார்கள். வாடகை, கரண்ட் சார்ஜ் போக மிச்சமிருக்கும் சொற்ப பணத்துல என்னத்த பொங்கித் திங்க? என்ன செய்ய எங்க போவதுன்னு புரியாம குழம்பி நின்ன சமயத்தில்தான் இந்த இல்லத்தை நிறுவிய ஜம்புலிங்கம் ஆபத்பாந்தவரா வந்து எனக்கு கைகொடுத்தார். அவரது மகளுக்கு நான் நாட்டியம் சொல்லிக் கொடுத்திருப்பதால் என்னை நன்கறிந்தவர். என் கணவர் இறந்த சமயங்களில் ஒரு சகோதரனைப்போல பல உதவிகள் செய்திருக்கிறார். அவர்தான் என்னை இந்த இல்லத்தில் வந்து இரு. உன் வீடு போல நினைத்துக்கொள் என்று கூறி அழைத்து வந்தார். அன்றிலிருந்து இங்கே இருக்கிறேன். இங்குள்ள குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்குமகூட நடனம் சொல்லிக்கொடுக்கிறேன். அப்படி கற்றுக் கொண்டவர்தான் என்னோடு சேர்ந்து ஆடினார். இதனால் பொழுது போகிறது. சந்தோஷம் கிடைக்கிறது. நமக்கு யாருமில்லை என்கிற எண்ணம் அறவே இல்லை. மகன் அனுப்பும் பத்தாயிரத்தை அப்படியே இல்லத்திற்கு கொடுத்துவிட்டு நிம்மதியாக இருக்கிறேன்..மைதிலி பிரமிப்புடன் பார்த்தாள். மகனும் மருமகளும் உங்களை விசாரிக்கிறார்களா? போன் செய்து பேசுகிறார்களா?."ஆண்டுக்கொரு முறை அன்னையர் தினத்தன்று அழைத்து வாழ்த்து சொல்லுவார்கள் இருவரும்."."மகன் மீது எந்த வருத்தமும் இல்லையா உங்களுக்கு?"."ஆரம்பத்தில் வருத்தம் இருக்கவே செய்தது. ஆனால், ஆழ்ந்து யோசித்தோமானால் இந்த கோபம், வெறுப்பு, வருத்தம், எல்லாமே நம் எதிர்பார்ப்புகள் உடைவதால் ஏற்படுபவையே என்று புரிந்தது. நான் அவனுக்கு செய்தேன். அதனால் அவன் எனக்கு செய்வானென்ற எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பு உடையும்போது வருந்துகிறோம். ஆனால், இந்த அம்மா பிள்ளை உறவெல்லாம் இந்த ஜன்மத்தோடு முடிவதுதானே? ரயில் பிரயாணம் முடிந்து இறங்கும்போது நம்மோடு பயணிக்கும் யாரிடமாவது நாம் வருத்தமோ கோபமோ கொள்கிறோமா என்ன? வாழ்த்தி விடை கொடுப்பதில்லையா? என் மகன் என்னை முழுவதும் மறந்துவிடவில்லையே. மாதம் பத்தாயிரம் என் வங்கிக் கணக்கிற்கு வந்து கொண்டிருப்பதும், ஆண்டுக்கொருமுறை போன் செய்து பேசுவதும் என் மீதான அன்பின் சில துளிகள் அவனிடம் இருப்பதனால்தானே. அது போதுமே. அந்தப் பணத்தை இல்லத்திற்கு கொடுக்கும் ஒவ்வொரு முறையும், என் மகனின் குடும்பத்திற்கே இதன் புண்ணியம் போய்ச் சேரட்டுமென்றும், அவன் குடும்பம் அனைத்து நலன்களையும் பெற்று வாழட்டுமென்றும் பிரார்த்தித்தபடிதான் கொடுக்கிறேன். பெற்ற உறவு கடல்கடந்து போனாலும், கடவுள் இப்போது எனக்கு ஏகப்பட்ட உறவுகளைத் தந்து என்னை மகிழ்ச்சியாகவே வைத்திருக்கிறான். வேறென்ன வேண்டும்? அந்த மகிழ்ச்சிதான் என் நடனத்தில் முழுவதுமாக வெளிப்பட்டது. சோப்புத் தண்ணீரில் முக்கி ஒரு குழந்தை வாயால் ஊதிவிடும்போது பெரிதும் சிறிதுமாக காற்றில் மிதந்து செல்லும் வர்ணக்குமிழ்களைப் பார்த்திருக்கிறாயா? அவை குழந்தையை மட்டுமல்ல, அதைப்பார்க்கும் நம்மைப்போன்ற பெரியவர்களையும் சந்தோஷப்படுத்தும்தானே? ஒருவகையில் நாமெல்லோரும் கூட இறைவன் ஊதிவிடும் பல வர்ணக் குமிழ்கள்தான். இலகுவா மிதந்து எல்லோரையும் மகிழ்விப்போமே. எதுக்குத் தேவையில்லாத கனங்களை சுமந்துகொண்டு? இலகுவாயிருந்தால் உடையும் போதிலும் அழகாயிருக்கும்.".மைதிலி நெகிழ்ந்தாள். சட்டென மீனாக்ஷியம்மாவின் பாதம் தொட்டு வணங்கினாள்..அங்கிருப்பவர் ஒவ்வொருவருமே தன் வாழ்வில் நடந்து முடிந்த துன்பங்களை ஒதுக்கிவைத்துவிட்டு நிகழ்காலத்தின் இந்த நொடியில் மகிழ்ச்சியாக இருப்பதும், அவர்களிடமிருந்து கற்பதற்கும் நிறைய உள்ளதெனவும் புரிந்தது மைதிலிக்கு..(தொடரும்)
வித்யா சுப்ரமணியம்.சமையலறைக்குள் அவள் நுழைந்தபோது பெரியண்ணி மட்டுமே கணவருக்காக லெமன் டீ தயாரித்துக் கொண்டிருக்க, சமையல் செய்யும் பெண்மணி காய் நறுக்கிக் கொண்டிருந்தார். அண்ணி அவள் முகத்தை உற்றுப்பார்த்தாள்."அழுதியா?".கேட்கும்போதே கண்கள் பளபளக்கத் துவங்கியது.."அவர் ஏதோ பைத்தியக்காரத்தனமா பேசறார். அதைப்போய் பெரிசா எடுத்துக்கிட்டு…. ".கவலைப்படாதே. எங்க வீட்டுப் பையனைப்பத்தி எங்களுக்குத் தெரியாதா? ஆனா எங்க கவலையெல்லாம் என்னைக்காவது நம்ம விரலே நம்ம கண்ணைக் குத்திடுமோன்னுதான். நம்ம குழந்தைன்னாலும் அடிச்சா வலிக்கும்தானே? ஒருமுறை ரெண்டுமுறை வேணா கண்டுக்காம விட்டுரலாம். தொடர்ந்து அடிச்சு ரொம்ப வலிச்சா…? நம்ம கைல எதுவுமில்ல மைதிலி. கஷ்டம் நஷ்டம் எல்லாத்துக்கும் நம்மை எப்பவும் தயாராதான் வெச்சுக்கணும்.".அண்ணி நிறுத்த சரி என்பது போல மைதிலி பெருமூச்சு விட்டாள்.."டிபன் ரெடி ஆகிடுச்சும்மா டேபிளில் எடுத்து வைக்கவா?" சமையல்காரம்மா கேட்டாள். காலையில் நடந்த விஷயத்தினாலோ என்னவோ யாருமே டேபிளுக்கு வரவில்லை. மைதிலி தானே ஒவ்வொருவர் அறையாகச் சென்று அழைத்தாள்.."என்னமோ பசியில்லம்மா நீ சாப்பிடு" சொல்லி வைத்தாற்போல் ஒவ்வொருவரும் சொன்னார்கள்..அவளுக்கும் வேண்டியிருக்கவில்லை. வயிற்று சிசுவுக்காக ஒரு கிளாஸ் பால் மட்டும் குடிக்கலாமென்று அடுப்படிக்கு சென்று பாலை சுடவைத்தபோது நடு அண்ணி வந்தாள்.."வா மைதிலி எனக்கு பசிக்குது நாம சாப்பிடலாம்."."அண்ணி நா…."."பாலை அப்டி வை. சாப்பிட்டுவிட்டு குடிக்கலாம். மனசுல என்ன கஷ்டமிருந்தாலும் ஒரு பிள்ளைதாச்சி பெண் வயிற்றைப் பட்டினி மட்டும் போடக்கூடாது. வா வந்து சாப்பிடு.".அண்ணி அவளை அழைத்துக்கொண்டு சாப்பாட்டு மேஜைக்கு வந்தாள். சுடச்சுட இருந்த பொங்கலும், கத்தரிக்காய் கொஸ்துவும், மெதுவடையும் வைத்தாள் அவள் தட்டில்.."நீ கர்ப்பமடைந்திருக்கும் நல்ல விஷயத்திற்காக மாலதியம்மாவிடம் ஏதேனும் இனிப்பு செய்யச் சொல்லியிருந்தோம்" என்றபடி ஒரு பாதாம் கேக்கையும் ஒரு சிறிய கப்பில் வைத்து அவள் தட்டின் பக்கத்தில் வைக்க, மைதிலியின் கண்கள் சட்டென கலங்கிற்று..வீடே மகிழும் ஒரு விஷயத்தை அவன் இன்னும் அறியக்கூட இல்லையே என்கிற துக்கம்..அண்ணி அவளோடு தானும் அமர்ந்து சாப்பிட்டாள்.."ஆனந்த் எழுந்தப்பறம் இந்த இனிப்பை அவனுக்குக் கொடுத்து விஷயத்தைச் சொல்லு. எல்லாம் சரியாப்போகும். மத்த விஷயங்கள் எதுபற்றியும் இப்போ அவனிடம் கேட்க வேண்டாம் புரிஞ்சுதா?" அண்ணி ஒரு டப்பாவில் இனிப்புகளை அள்ளிப்போட்டு மூடி அவளிடம் கொடுத்தனுப்பினாள்..ஒருவித அச்சத்துடன்தான் அவள் மாடிக்கு வந்தாள். படுக்கையில் அவனைக் காணவில்லை. பாத்ரூம் கதவு உட்புறம் தாழிடப்பட்டிருந்தது. அவள் படுக்கையை சரிசெய்துவிட்டு, துவைத்து காய்ந்த துணிகளை கட்டிலில் எடுத்துப் போட்டு ஒவ்வொன்றாய் மடித்தாள். அவற்றை சுவரோடு பொருத்தப்பட்ட வார்ட்ரோபில் அடுக்கி வைக்கும்போது பாத்ரூம் கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டது..வெளியில் வந்தவன், அவளைப் பார்த்தும், எதுவும் பேசாமல், அவசர அவசரமாக உடைமாற்றி, தலைசீவி, வெளிநாட்டு சென்ட்டைத் தெளித்துக் கொண்டு தன் பிரீஃப்கேசை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்..எதுவும் சாப்டலையே…..வேணாம்..அட்லீஸ்ட் ஒரு ஸ்வீட் தரவா?."வேணாம். டைம் ஆச்சு" அவன் அறைக்கு வெளியில் சென்றான். என்ன விசேஷம், எதற்கு இனிப்பு என்றுகூடக் கேட்கவில்லை. மைதிலி கண்ணீரை அடக்கினாள். மாடியிலிருந்து கீழே ஹாலை எட்டிப்பார்த்தாள். கீழே இறங்கிச்சென்றவன் யாரிடமும் எதுவும் பேசாமல் வேகமாக வெளியேறியதைக் கண்டதும் அவள் முகம் மாறியது..*** *** ***.ஜனவரி 1991.பொங்கல் பண்டிகை மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது தோட்டத்தில் சூரிய ஒளி விழுமிடத்தில் கோலம் போட்டு செங்கல்கள் கொண்டு அடுப்பு அமைத்து, விறகுகள் வைத்து அக்னிமூட்டி, குங்குமம் வைத்து புது மஞ்சள் கிழங்கை அதன் இலைகளோடு கட்டியிருந்த பெரிய மண் பானையை வைத்து புது அரிசி கொண்டு பொங்கலிட்டு அது பொங்கி வரும்போது குலவையிட்டார்கள். வெற்றிலை, பாக்கு, பழங்கள் இல்லத்திலிருந்த பெரியவர்கள் முதல் குழந்தைகள்வரை கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நடனமாடினார்கள். அதிலும், அறுபது வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகள் பரதநாட்டியம், கதக் முதற்கொண்டு, கரகாட்டம் வரை உற்சாகமாக ஆடி அசத்தினார்கள். அறுபதைக் கடந்த இரண்டு பெண்மணிகள், `காத்திருப்பான் கமலக்கண்ணன்' பாடலுக்கு நடனமாடியபோது பத்மினியும் ராகினியும் கண் முன்னால் தெரிந்தனர். கரகோஷம் விண்ணைப்பிளந்தது. மைதிலி மலைத்துப்போனாள். முதிய ஆண்கள் தாங்களும் குறைந்தவர்கள் அல்ல என்பது போல வெஸ்டர்ன், பிரேக் என்று ஆடி அசத்தினர்..ஒவ்வொருவர் வாழ்விலும் எத்தனையோ பிரச்னைகள். உறவுகளும் வாரிசுகளுமற்று இல்லத்திற்கு வந்தவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், பிள்ளைகள் வெளிநாட்டிலிருக்க, தனிமையைத் தவிர்ப்பதற்காக வந்தவர்கள் என்று ஒவ்வொரு முதியவருக்கும் பின்னே ஒவ்வொரு கதை. அதேபோலதான் குழந்தைகளும். பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டவர்கள், குப்பையில் வீசப்பட்டவர்கள், அரசு தொட்டில்களில் இடப்பட்டவர்கள் என்று பல குழந்தைகள் உறவுகளின் அன்பையே அறியாதவர்கள். ஆனாலும் எல்லோரிடமும் எத்தனை உற்சாகம்? எத்தனை திறமைகள்! தூயரங்களையே நினைத்துக்கொண்டு எவரும் மூலையில் அமர்ந்துவிடவில்லை.."நீங்க கிளாசிகல் டான்ஸ் கத்துக்கிட்டீங்களா?" காத்திருப்பான் கமலக்கண்ணன் பாடலுக்கு நடனமாடிய அறுபது வயதுக்கு மேற்பட்ட பெண்மணி மீனாக்ஷியிடம் கேட்டாள்.."அஞ்சு வயசுல கத்துக்கிட்டு நாற்பது வருடங்கள் சலங்கை கட்டி ஆடிய கால்கள் இவை. பிறகு கணவரின் மரணம். அதற்குப்பிறகும் கூட நிறைய நிகழ்ச்சிகளுக்கு கூப்ட்டாங்க. ஆனா உறவுகள் என்னை ஆடவிடல. புருஷன் போனப்பறம் என்ன ஆட்டம் வேண்டிக்கிடக்குன்னு குத்திக்காட்டினாங்க, ஆனா பையனைப் படிக்க வைத்து ஆளாக்க வேண்டிய கடமை இருந்ததால், ஆடுவதை விட்டுட்டு நடனம் சொல்லிக் கொடுத்தேன். பையனை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தேன். நாலு வருஷம் முன்பு அங்கயே ஒரு பெண்ணைக் காதலிச்சு கல்யாணம் செய்துக்கிட்டதா ஒரு ஃபோன் வந்துது. அப்பறம் ஒரு போட்டோ வந்துது தபாலில். நல்லாயிருங்கன்னு நானும் தபால் மூலமே வாழ்த்தினேன். எனக்கு மாசம் பத்தாயிரம் அனுப்பறான். அவனுக்காக வாங்கின கடன்கள் என கழுத்தை இறுக்கியது. அவன் அனுப்பும் பணத்தை வைத்து செலவை சமாளிக்க முடியலை. வீட்டை விற்றுக் கடனையடைத்தேன். ஆனா வேற வீடு தேடினா ஒற்றை அறைக்கே வாடகை ஏழாயிரம் எட்டாயிரம் கேட்டார்கள். வாடகை, கரண்ட் சார்ஜ் போக மிச்சமிருக்கும் சொற்ப பணத்துல என்னத்த பொங்கித் திங்க? என்ன செய்ய எங்க போவதுன்னு புரியாம குழம்பி நின்ன சமயத்தில்தான் இந்த இல்லத்தை நிறுவிய ஜம்புலிங்கம் ஆபத்பாந்தவரா வந்து எனக்கு கைகொடுத்தார். அவரது மகளுக்கு நான் நாட்டியம் சொல்லிக் கொடுத்திருப்பதால் என்னை நன்கறிந்தவர். என் கணவர் இறந்த சமயங்களில் ஒரு சகோதரனைப்போல பல உதவிகள் செய்திருக்கிறார். அவர்தான் என்னை இந்த இல்லத்தில் வந்து இரு. உன் வீடு போல நினைத்துக்கொள் என்று கூறி அழைத்து வந்தார். அன்றிலிருந்து இங்கே இருக்கிறேன். இங்குள்ள குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்குமகூட நடனம் சொல்லிக்கொடுக்கிறேன். அப்படி கற்றுக் கொண்டவர்தான் என்னோடு சேர்ந்து ஆடினார். இதனால் பொழுது போகிறது. சந்தோஷம் கிடைக்கிறது. நமக்கு யாருமில்லை என்கிற எண்ணம் அறவே இல்லை. மகன் அனுப்பும் பத்தாயிரத்தை அப்படியே இல்லத்திற்கு கொடுத்துவிட்டு நிம்மதியாக இருக்கிறேன்..மைதிலி பிரமிப்புடன் பார்த்தாள். மகனும் மருமகளும் உங்களை விசாரிக்கிறார்களா? போன் செய்து பேசுகிறார்களா?."ஆண்டுக்கொரு முறை அன்னையர் தினத்தன்று அழைத்து வாழ்த்து சொல்லுவார்கள் இருவரும்."."மகன் மீது எந்த வருத்தமும் இல்லையா உங்களுக்கு?"."ஆரம்பத்தில் வருத்தம் இருக்கவே செய்தது. ஆனால், ஆழ்ந்து யோசித்தோமானால் இந்த கோபம், வெறுப்பு, வருத்தம், எல்லாமே நம் எதிர்பார்ப்புகள் உடைவதால் ஏற்படுபவையே என்று புரிந்தது. நான் அவனுக்கு செய்தேன். அதனால் அவன் எனக்கு செய்வானென்ற எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பு உடையும்போது வருந்துகிறோம். ஆனால், இந்த அம்மா பிள்ளை உறவெல்லாம் இந்த ஜன்மத்தோடு முடிவதுதானே? ரயில் பிரயாணம் முடிந்து இறங்கும்போது நம்மோடு பயணிக்கும் யாரிடமாவது நாம் வருத்தமோ கோபமோ கொள்கிறோமா என்ன? வாழ்த்தி விடை கொடுப்பதில்லையா? என் மகன் என்னை முழுவதும் மறந்துவிடவில்லையே. மாதம் பத்தாயிரம் என் வங்கிக் கணக்கிற்கு வந்து கொண்டிருப்பதும், ஆண்டுக்கொருமுறை போன் செய்து பேசுவதும் என் மீதான அன்பின் சில துளிகள் அவனிடம் இருப்பதனால்தானே. அது போதுமே. அந்தப் பணத்தை இல்லத்திற்கு கொடுக்கும் ஒவ்வொரு முறையும், என் மகனின் குடும்பத்திற்கே இதன் புண்ணியம் போய்ச் சேரட்டுமென்றும், அவன் குடும்பம் அனைத்து நலன்களையும் பெற்று வாழட்டுமென்றும் பிரார்த்தித்தபடிதான் கொடுக்கிறேன். பெற்ற உறவு கடல்கடந்து போனாலும், கடவுள் இப்போது எனக்கு ஏகப்பட்ட உறவுகளைத் தந்து என்னை மகிழ்ச்சியாகவே வைத்திருக்கிறான். வேறென்ன வேண்டும்? அந்த மகிழ்ச்சிதான் என் நடனத்தில் முழுவதுமாக வெளிப்பட்டது. சோப்புத் தண்ணீரில் முக்கி ஒரு குழந்தை வாயால் ஊதிவிடும்போது பெரிதும் சிறிதுமாக காற்றில் மிதந்து செல்லும் வர்ணக்குமிழ்களைப் பார்த்திருக்கிறாயா? அவை குழந்தையை மட்டுமல்ல, அதைப்பார்க்கும் நம்மைப்போன்ற பெரியவர்களையும் சந்தோஷப்படுத்தும்தானே? ஒருவகையில் நாமெல்லோரும் கூட இறைவன் ஊதிவிடும் பல வர்ணக் குமிழ்கள்தான். இலகுவா மிதந்து எல்லோரையும் மகிழ்விப்போமே. எதுக்குத் தேவையில்லாத கனங்களை சுமந்துகொண்டு? இலகுவாயிருந்தால் உடையும் போதிலும் அழகாயிருக்கும்.".மைதிலி நெகிழ்ந்தாள். சட்டென மீனாக்ஷியம்மாவின் பாதம் தொட்டு வணங்கினாள்..அங்கிருப்பவர் ஒவ்வொருவருமே தன் வாழ்வில் நடந்து முடிந்த துன்பங்களை ஒதுக்கிவைத்துவிட்டு நிகழ்காலத்தின் இந்த நொடியில் மகிழ்ச்சியாக இருப்பதும், அவர்களிடமிருந்து கற்பதற்கும் நிறைய உள்ளதெனவும் புரிந்தது மைதிலிக்கு..(தொடரும்)