தலையங்கம்."காலத்தே பயிர்செய்வது மட்டுமில்லை. காலத்தே பயிர்களுனூடே வளரும் களைகளையும் நீக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதும், தவறினால் பருவம் முழுவதும் உழைத்த உழைப்புக்குப் பயன் இல்லை" என்பதும் ஒரு நல்ல விவசாயிக்குத் தெரியும். அதுபோல் ஓர் அரசின் நல்ல நிர்வாகத்துக்கு "துறைகளில் வளர்ந்து கொண்டிருக்கும் களைகளையும் நீக்கிக்கொண்டிருக்க வேண்டும்" என்பது தெரிந்திருக்க வேண்டும்..தமிழக அரசு ஆட்சிமாற்றத்துக்குப் பின்னரும், இந்த ஓராண்டில் அதிக விமர்சனங்களைக் காவல் துறை தொடர்ந்து எதிர்கொள்கிறது. முறையற்ற கைதுகள், விசாரணை கைதிகளின் மரணங்கள், அண்மையில் கள்ளகுறிச்சியில் நடைபெற்றிருக்கும் முன்னுதாரணமற்ற கலவரம்… இவையெல்லாமே தமிழகக் காவல் துறை பெரும் சீர்திருத்தத்தை வேண்டி நிற்பதைச் சொல்கின்றன..தி.மு.க. ஆட்சியின் மீதான முதல் களங்கமாக இந்தச் சம்பவம் அமைந்துவிட்டது.உளுத்துப்போன ஓர் அமைப்பைச் சீரமைத்து நிர்வகிக்க எல்லா இடங்களிலும் திறன்மிகு அலுவலர்கள் வேண்டும்; சீர்திருத்தத்துக்கான முயற்சிகள் என்பது வெறும் அறிவிப்புகளாக சடங்குகளாக இல்லாமல் தொடர் செயல்பாடாக நடக்க வேண்டும். நிர்வாகத் திறன் அற்ற அதிகாரிகளைப் பணியில் அமர்த்துவதும், தவறுகளுக்குப் பின்னரும் நீடிக்கவிடுவதும் அரசியல் தலைமையின் நிர்வாகக் குறைபாடாகவே பார்க்கப்படும். இதற்குரிய தீவிரத்துடன் இந்த விவகாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அணுக வேண்டும்..இந்தக் கலவரத்தில் சாதியத்தின் பங்கைப் பேசுவதிலும், நடவடிக்கை எடுப்பதிலும் ஏன் காவல் துறை அடக்கி வாசிக்கிறது என்பதும் புரிபடவில்லை..வன்முறையின் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியரையும், காவல் கண்காணிப்பாளரையும் பணியிட மாற்றம் செய்திருக்கிறது தமிழக அரசு. பரபரப்பான எந்தவொரு நிகழ்வும் அடுத்த சில மணி நேரங்களில் மொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துவிடும் இன்றைய தகவல் தொலைத்தொடர்பு யுகத்தில், நடந்த சம்பவங்களுக்கான பொறுப்பை வெறும் மாவட்ட நிர்வாகத்துடன் மட்டும் சுருக்கிவிட முடியாது. காவல் துறையின் மாநில அளவிலான உயர் அதிகாரிகள் இதற்குப் பொறுப்பேற்கத்தான் வேண்டும். அவர்களுடைய இடையீடு, அவர்கள் கொடுத்த ஆலோசனைகள் என்ன என்பது வெளியேவர வேண்டும். இந்த விவகாரத்தில் விமர்சனத்துக்குரிய இன்னொரு தரப்பு ஆளும் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள். அந்த பிராந்தியத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ கையோடு இறங்கிச் செயல்பட்டு பதற்றத்தைத் தணித்திருக்க வேண்டும்.. எழுந்திருக்க கூடிய மிகப்பெரும் கலவரங்களைக்கூட மிக சாதுர்யமான பேச்சினால் வேண்டுகோள் விடுத்து அமைதியை ஏற்படுத்தியிருக்கும் உயர் காவல் அதிகாரிகளை தமிழகம் முன்பு கண்டிருக்கிறது. எங்கே போனது அந்தத் திறன்?.ஒரு படையெடுப்புபோலத் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது கள்ளக்குறிச்சி பள்ளி மீதான தாக்குதல். பல்வேறு ஊர்களில் இருந்தும் மோட்டார் சைக்கிள்களில், ஆயுதங்களோடு சில ஆயிரம் பேர் திரண்டு வந்து, ஒரு பள்ளியை நிதானமாக சூறையாடி, வாகனங்களை எரித்தழித்து, பொருட்களைக் கொள்ளையடித்து, இதையெல்லாம் செல்பேசியில் படம் பிடித்து காணொளியாகவும் சமூக வலைதளங்களில் பகிரும் அளவுக்கான ரௌடித்தனம் சாதாரண மனிதர்களிடம் எங்கிருந்து உருவாகிறது? இப்படி ஒரு சக்தி அந்தச் சின்ன கிராமத்தில் நுழைந்திருப்பதை கண்டுபிடிக்க முடியாமல் கையாலாகாதவர்களாகிவிட்டார்களா நம் காவல் துறையினர்?.இவ்வளவும் ஐந்து நாட்களில் நிதானமாக நடக்கிறது என்றால், தமிழகக் காவல் துறை என்ன செய்துகொண்டிருந்தது; உளவுத்துறை என்ன செய்துகொண்டிருந்தது? தமிழகக் காவல் துறையின் அவமானகரமான தோல்வி இது. 'தூத்துக்குடிபோல போராட்டக்காரர்களைச் சுட்டுக் கொல்வோம் அல்லது கள்ளக்குறிச்சிபோல வன்முறையாளர்களைச் சூறையாடவிட்டு, வாளாவிருந்து வேடிக்கை பார்த்திருப்போம்!' என்பதுதான் தமிழக காவல் துறை இன்று வந்தடைந்திருக்கும் இடம்..இந்தக் கலவரம் ஒரு "கும்பல் மனநிலை உருவாக்கும் செயல்பாடு" என்ற கூற்றை ஏற்க முடியாது. முழுத்திட்டமும் ஒரு புள்ளியிலிருந்து உருவாகியிருக்கிறது… அந்தப் புள்ளி எது? எவற்றால் அந்தப் புள்ளி உருவாக்கப்பட்டது?.சாதியா? மாற்று கருத்துகொண்ட அரசியல் கட்சியா? பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக எழுந்த சக்தியா?.எதுவாகயிருந்தாலும் ஈவிரக்கமே அரசு காட்ட வேண்டியதில்லை. இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள அந்தப் புள்ளியைக் கண்டுபிடித்து சகலரும் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பது மட்டுமில்லை, அதை விரைவாகவும் செய்து தமிழக அரசு, அதன் காவல்துறை பெற்றிருக்கும் அவப்பெயரை களையவேண்டும்.
தலையங்கம்."காலத்தே பயிர்செய்வது மட்டுமில்லை. காலத்தே பயிர்களுனூடே வளரும் களைகளையும் நீக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதும், தவறினால் பருவம் முழுவதும் உழைத்த உழைப்புக்குப் பயன் இல்லை" என்பதும் ஒரு நல்ல விவசாயிக்குத் தெரியும். அதுபோல் ஓர் அரசின் நல்ல நிர்வாகத்துக்கு "துறைகளில் வளர்ந்து கொண்டிருக்கும் களைகளையும் நீக்கிக்கொண்டிருக்க வேண்டும்" என்பது தெரிந்திருக்க வேண்டும்..தமிழக அரசு ஆட்சிமாற்றத்துக்குப் பின்னரும், இந்த ஓராண்டில் அதிக விமர்சனங்களைக் காவல் துறை தொடர்ந்து எதிர்கொள்கிறது. முறையற்ற கைதுகள், விசாரணை கைதிகளின் மரணங்கள், அண்மையில் கள்ளகுறிச்சியில் நடைபெற்றிருக்கும் முன்னுதாரணமற்ற கலவரம்… இவையெல்லாமே தமிழகக் காவல் துறை பெரும் சீர்திருத்தத்தை வேண்டி நிற்பதைச் சொல்கின்றன..தி.மு.க. ஆட்சியின் மீதான முதல் களங்கமாக இந்தச் சம்பவம் அமைந்துவிட்டது.உளுத்துப்போன ஓர் அமைப்பைச் சீரமைத்து நிர்வகிக்க எல்லா இடங்களிலும் திறன்மிகு அலுவலர்கள் வேண்டும்; சீர்திருத்தத்துக்கான முயற்சிகள் என்பது வெறும் அறிவிப்புகளாக சடங்குகளாக இல்லாமல் தொடர் செயல்பாடாக நடக்க வேண்டும். நிர்வாகத் திறன் அற்ற அதிகாரிகளைப் பணியில் அமர்த்துவதும், தவறுகளுக்குப் பின்னரும் நீடிக்கவிடுவதும் அரசியல் தலைமையின் நிர்வாகக் குறைபாடாகவே பார்க்கப்படும். இதற்குரிய தீவிரத்துடன் இந்த விவகாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அணுக வேண்டும்..இந்தக் கலவரத்தில் சாதியத்தின் பங்கைப் பேசுவதிலும், நடவடிக்கை எடுப்பதிலும் ஏன் காவல் துறை அடக்கி வாசிக்கிறது என்பதும் புரிபடவில்லை..வன்முறையின் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியரையும், காவல் கண்காணிப்பாளரையும் பணியிட மாற்றம் செய்திருக்கிறது தமிழக அரசு. பரபரப்பான எந்தவொரு நிகழ்வும் அடுத்த சில மணி நேரங்களில் மொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துவிடும் இன்றைய தகவல் தொலைத்தொடர்பு யுகத்தில், நடந்த சம்பவங்களுக்கான பொறுப்பை வெறும் மாவட்ட நிர்வாகத்துடன் மட்டும் சுருக்கிவிட முடியாது. காவல் துறையின் மாநில அளவிலான உயர் அதிகாரிகள் இதற்குப் பொறுப்பேற்கத்தான் வேண்டும். அவர்களுடைய இடையீடு, அவர்கள் கொடுத்த ஆலோசனைகள் என்ன என்பது வெளியேவர வேண்டும். இந்த விவகாரத்தில் விமர்சனத்துக்குரிய இன்னொரு தரப்பு ஆளும் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள். அந்த பிராந்தியத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ கையோடு இறங்கிச் செயல்பட்டு பதற்றத்தைத் தணித்திருக்க வேண்டும்.. எழுந்திருக்க கூடிய மிகப்பெரும் கலவரங்களைக்கூட மிக சாதுர்யமான பேச்சினால் வேண்டுகோள் விடுத்து அமைதியை ஏற்படுத்தியிருக்கும் உயர் காவல் அதிகாரிகளை தமிழகம் முன்பு கண்டிருக்கிறது. எங்கே போனது அந்தத் திறன்?.ஒரு படையெடுப்புபோலத் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது கள்ளக்குறிச்சி பள்ளி மீதான தாக்குதல். பல்வேறு ஊர்களில் இருந்தும் மோட்டார் சைக்கிள்களில், ஆயுதங்களோடு சில ஆயிரம் பேர் திரண்டு வந்து, ஒரு பள்ளியை நிதானமாக சூறையாடி, வாகனங்களை எரித்தழித்து, பொருட்களைக் கொள்ளையடித்து, இதையெல்லாம் செல்பேசியில் படம் பிடித்து காணொளியாகவும் சமூக வலைதளங்களில் பகிரும் அளவுக்கான ரௌடித்தனம் சாதாரண மனிதர்களிடம் எங்கிருந்து உருவாகிறது? இப்படி ஒரு சக்தி அந்தச் சின்ன கிராமத்தில் நுழைந்திருப்பதை கண்டுபிடிக்க முடியாமல் கையாலாகாதவர்களாகிவிட்டார்களா நம் காவல் துறையினர்?.இவ்வளவும் ஐந்து நாட்களில் நிதானமாக நடக்கிறது என்றால், தமிழகக் காவல் துறை என்ன செய்துகொண்டிருந்தது; உளவுத்துறை என்ன செய்துகொண்டிருந்தது? தமிழகக் காவல் துறையின் அவமானகரமான தோல்வி இது. 'தூத்துக்குடிபோல போராட்டக்காரர்களைச் சுட்டுக் கொல்வோம் அல்லது கள்ளக்குறிச்சிபோல வன்முறையாளர்களைச் சூறையாடவிட்டு, வாளாவிருந்து வேடிக்கை பார்த்திருப்போம்!' என்பதுதான் தமிழக காவல் துறை இன்று வந்தடைந்திருக்கும் இடம்..இந்தக் கலவரம் ஒரு "கும்பல் மனநிலை உருவாக்கும் செயல்பாடு" என்ற கூற்றை ஏற்க முடியாது. முழுத்திட்டமும் ஒரு புள்ளியிலிருந்து உருவாகியிருக்கிறது… அந்தப் புள்ளி எது? எவற்றால் அந்தப் புள்ளி உருவாக்கப்பட்டது?.சாதியா? மாற்று கருத்துகொண்ட அரசியல் கட்சியா? பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக எழுந்த சக்தியா?.எதுவாகயிருந்தாலும் ஈவிரக்கமே அரசு காட்ட வேண்டியதில்லை. இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள அந்தப் புள்ளியைக் கண்டுபிடித்து சகலரும் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பது மட்டுமில்லை, அதை விரைவாகவும் செய்து தமிழக அரசு, அதன் காவல்துறை பெற்றிருக்கும் அவப்பெயரை களையவேண்டும்.