ஆதித்யா.ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டவுடன் விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுவது வாடிக்கை. அதற்கு இந்த ஆண்டும் விதிவிலக்கல்ல..அண்மையில் 68-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கு தேர்வான படங்கள் மற்றும் கலைஞர்களின் பட்டியலை இந்திய அரசு வெளியிட்டது. இதில் சிறந்த நடிகர்களாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகர் சூர்யா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படத்துக்கு ஐந்து விருதுகள், 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' என்ற படத்துக்காக மூன்று விருதுகள் மற்றும் 'மண்டேலா' படத்துக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன..தமிழ் திரைப்படங்களுக்கு ஒரே ஆண்டில் இத்தனை பரிசுகள் கிடைத்ததில்லை. சிறந்த படம், நடிகர், நடிகை, திரைக்கதை, பின்னணி இசை என 5 தேசிய விருதுகள் பெற்று எண்ணிக்கையில் டைரக்டர் பரதன் இயக்கிய 'தேவர்மகனுக்கு கிடைத்தபோது தமிழுக்கு வேறு விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு வசந்த் சாயின் 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படத்துக்கு மூன்று விருதுகளும், 'மண்டேலா' படத்துக்கு இரண்டு விருதுகளும் கிடைத்துள்ளன..ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் இதற்காக பெருமிதம் கொண்டிருக்க வேண்டும். மாறாக ஒரு தரப்பிலிருந்து விமர்சனங்கள எழுந்திருக்கின்றன. அது தேசிய திரையுலகிலும் எதிரொலிக்கின்றன..சூரரைப் போற்று கதை ஒரு தொழில் முனைவோனைப் பற்றியது. முதலாளித்துவத்தை உயர்த்திப் பிடிக்கக் கூடியது. நம் மக்கள் அப்படியான கதைகளை ரசிக்கமாட்டார்கள். அதுதவிர விமானம், வியாபாரம், தொழில்நுட்பம் என்று பல இடங்களில் சாமானியர்களின் பொறுமையை சோதிக்கும் மேலதிக விவரங்களும் உள்ளன. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் எழுதுவதற்கு மட்டும் செலவிடப்பட்டுள்ளது. அதன் பிறகு பல முறை திருத்தம் செய்யப்பட்டு படமாக உருவான பிறகும் என்னைப் போல இன்னும் வெவ்வேறு வயது, பின்னணி கொண்ட ஐம்பது பேர்களுக்குத் திரையிடப்பட்டு அவர்கள் கருத்துகளுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு இறுதி வடிவம் எடுத்தது என்கிறார்கள் படக்குழுவினர். ஆனால், இந்த திரைப்படத்தின் மூலக்கதையான கேப்டன் கோபிநாத்தின் "simply fly" புத்தகத்தை பலமுறை வாசித்து அவருடன் விவாதித்திருக்கும் என்னால் துணிவுடன் சொல்லமுடியும். திரைப்படம் மூலக்கதையை சிதைத்திருக்கிறார்கள். எளிய கிராமப் பின்னணியில் வளர்ந்த ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி கேப்டன் கோபிநாத் (விமானி அல்ல) புதிய பாதையைத்தேடி சாவல்களை சந்தித்து விமானப் பயணத்தை சாதாரண மக்களுக்கு எளிதாக கிடைக்கச் செய்தவர். அவர் புத்தகத்தில் சாதியம் முதலாளித்துவம் வர்க்க போராட்டம் பேசப்படவில்லை. உழைப்பும் வெற்றிக்கான சாதுர்யமும்தான் பேசப்படுகிறது. ஆனால், திரைப்படம் முழுக்க புத்தகத்தில் சொல்லப்படாத விஷயங்களை உயர்த்திப்பேசுகிறது..புத்தகங்கள் திரைப்படங்களாகும்போது மாறுதல்களுக்கு உள்ளாவதை தவிர்க்க முடியாது என்பது உண்மை. ஆனால், புத்தகத்தின் அடிப்படை கருத்துகளை புறக்கணித்து வியாபரத்துக்காக அதைப் பயன்படுத்துவது எழுத்தாளனுக்கு செய்யும் அநீதி..சூறரைப்போற்றுவிற்காக சிறந்த இசையமைப்பு (பின்னணி இசை) ஜீவி பிரகாஷ் மற்றும் அலா வைகுண்டபுரம்லோவில் சிறந்த இசையமைப்பு (பாடல்கள்) தமண் அவர்களும் தேசிய விருதிற்காக தேர்வாகியுள்ளனர். ஆனால், பிரகாஷ் இதைவிட சிறப்பாக இசை அமைத்தப் படங்கள் இருந்தாலும், இதைத்தேர்வு செய்திருப்பது "இந்தப் படத்துக்கு பல விருதுகள் கிடைக்கச் செய்யவேன்டும் என்ற முன்முடிவோ என்ற சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது" என்கிறார் ஜான் கோஷி. இவர் ஆங்கில முன்னணி தினசரிகளில் திரைப்படங்கள் குறித்து எழுதுபவர்..'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்'. பெரிய அளவில் என்னை ஈர்க்கவில்லை. பெண்ணிய நோக்கில் அந்தக் கதைகளில் வரும் பெண்களின் அவல நிலையில் மனம் கவலை கொண்டாலும், ஒரு திரைப்படம் என்ற அளவில் தனித்துவமாக எதுவும் அதில் இருந்ததாகத் தெரியவில்லை. எழுபது, எண்பதுகளில் NFDC நிதி உதவியுடன் கலைப்படங்கள் என்ற பெயரில் சிலர் படம் எடுப்பார்கள். இது அந்தப் படங்களை நினைவூட்டியது. படத்தின் டைட்டில் கூட எழுபதுகளின் சாயலில்தான் இருக்கிறது. திரைக்கலையில் சிறப்பு ஆர்வம் இருப்பவனும் தீவிர பெண்ணியவாதியுமான நானே கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் பார்க்க வேண்டி இருந்தது எனில் இதர மக்களை யோசித்துப் பார்த்துக் கொண்டேன். என்கிறார் ஶ்ரீதர் சுப்ரமணியன், இவர் உலக சினிமா இந்திய சினிமா குறித்து ஆய்வு செய்து எழுதுபவர்.."சிவரஞ்சனியும் சில பெண்களும்" படத்திற்கு விருது கிடைத்தது ஆச்சரியமாக இல்லை, அதற்காக அது "சிறந்த படமா" என்று கேட்டால் "இல்லை" என்பேன், அதே நேரம் மோசமான படமும் இல்லை. படித்த கதைகள் திரையில் வரும்போது சில நேரம் நம் மனதிற்கு போதாது போகும். வாசிப்பவருக்கு கதையாசிரியரால் கடத்தப்படும் உணர்வுகள் திரை காட்சிகளால் கடத்த முடியாமல் போய்விடும். சில உணர்வுகளில் ஆழ்ந்து போவதற்கு திரை வடிவம் உதவுவதில்லை..இந்த படத்தை பொறுத்தவரையில் சிறந்த படமல்ல. ஆனால் அதனை எட்டும் தூரத்தில் இருக்கும் படம்..ஒரு பாடத்தை படித்து அதில் 80 மார்க் எடுக்க அதை முழுதும் படித்திருக்க வேண்டும், அல்லது அதன் தேர்வு கேள்வித்தாளின் கேள்விகள் இதுவாகத்தான் இருக்கும் என அதை மட்டும் சரியாக படித்து எழுதியிருக்க வேண்டும், இந்த படம் இரண்டாவது வகையறா, சிறந்த படம் என்றில்லாவிட்டாலும் ஒரு விருது படத்துக்கான எல்லா புள்ளிகளையும் சரியாக டிக் செய்திருக்கும் படம், அதனால்தான் பல வெளிநாட்டு விழாக்களிலும் விருதுகளை வாங்கியிருக்கிறது என்கிறார் விஷவ் கேசன். இவர் பல இந்தியமொழிப்படங்களை திறானாய்வு செய்பவர்..சில படங்கள் வெளியானவுடனேயே அது "தேசிய விருதுகள் பெறும்" என்று ரசிகர்களால் பேசப்படும். உதாரணமாக 'தேவர் மகன்', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ஆடுகளம்' போன்ற பல படங்கள் இப்படி மக்களால் முன்மொழியப்பட்டு விருது தேர்வுகளில் தேர்வாகியிருக்கின்றன. சில ஏமாற்றத்தும் உள்ளாகியிருக்கின்றன. இந்த ஆண்டும் மலையாளத் திரையுலகில் ஏதோ ஒரு வகையில் விருதுகள் பெறும் என ரசிகர்களால் எதிர்பார்த்தவைகள் – டிரான்ஸ், வரனே ஆவஷ்யமுண்டு, தில் பெச்சாரா, தப்பட், சப்பக், குஞ்சன் சக்சேனா, ஷகுந்தலாதேவி, அந்தகாரம், கப்பேலா அதேபோல ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் விருதுகளைப் பெற்றிருக்கிறது. 'ஐயப்பனும் கோஷியும்' 4 விருதுகள்… சிறந்த துணை நடிகர் பிஜு, சிறந்த டைரக்டர் சச்சி, சிறந்த பாடகி நஞ்சியம்மா (கலக்காத்தா சந்தனமேர), சிறந்த ஸ்டன்ட் மாஃபியா சசி, அந்த செருப்பை கழற்றி நெஞ்சில் மிதிக்கும் சீன் என இன்னும் பல சீன்களுடன் இந்த படம் பார்த்த பொழுதே இந்த அவார்டுகள் இவரிவர்க்கு என்று சாமானியர்களே கணித்திருப்பார்கள்.ஆனால், ரசிகர்களிடையே விருது பெறும் என்று எந்த எதிர்பார்ப்பும் ஏற்படுத்தாத இந்தப் படம் பல விருதுகளைப் பெற்றிருக்கிறது. எனப்து தான் ஆச்சரியம்..'ஃபீச்சர் படம்' என்ற சிறந்த திரைக்கதை பிரிவிற்கான நடுவர் குழுவின் தலைவரான திரைப்படத் தயாரிப்பாளர் விபுல் ஷா, செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்களுக்கு கிடைத்த விண்ணப்பங்கள் மற்றும் நாங்கள் பார்த்த படங்களின் எண்ணிக்கையை நினைத்துப்பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், மிக கடினமான கொரோனா காலங்களில் இந்த படங்கள் தயாரிக்கப்பட்டன," என்று கூறினார்..அதாவது, "உங்கள் ஊரிலிருந்து வேறு நல்ல படங்கள் வரவில்லை, வந்ததில் ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ என்ற ரீதியில் விருதுகள் கொடுத்திருக்கிறோம்" என்று சொல்லுகிறார் போலிருக்கிறது. இசையில்.வாழ்த்துகள்… மெளனம் பேசியதே, 7G, ராம், புதுப்பேட்டை, பருத்திவீரன், பேரன்பு என யுவனுக்கு எப்போதுதான் விருது கிடைக்கும் என்று பார்த்தால் அவர் 2020ல் ரெக்கார்டிங்கே செய்யவில்லை என்ற செய்தி கிடைத்தது. ஆனால், 2020 ஆண்டில் அவர் தான் அதிக யூட்யூப் வீயூவ்ஸ் கொண்ட தமிழ்ப்பாடலுக்கு இசையமைத்தவர் என்பது நினைவுக்கு வந்தது. (ரவுடி பேபி). நமது இசையமைப்பாளர்களுக்கே விருதுபெறும் அளவுக்கு படங்களுக்கு இசை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதபோது நாம் கவலைப்படுவதில் எந்த நியாயமும் இல்லை..எப்படியோ தமிழ் படங்களுக்கு இந்த ஆண்டு அதிக விருதுகள் கிடைத்திருக்கிறது என்ற மகிழ்ச்சியில் "ஸ்வீட் எடு… கொண்டாடு" என்று கொண்டாடுவோம்.
ஆதித்யா.ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டவுடன் விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுவது வாடிக்கை. அதற்கு இந்த ஆண்டும் விதிவிலக்கல்ல..அண்மையில் 68-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கு தேர்வான படங்கள் மற்றும் கலைஞர்களின் பட்டியலை இந்திய அரசு வெளியிட்டது. இதில் சிறந்த நடிகர்களாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகர் சூர்யா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படத்துக்கு ஐந்து விருதுகள், 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' என்ற படத்துக்காக மூன்று விருதுகள் மற்றும் 'மண்டேலா' படத்துக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன..தமிழ் திரைப்படங்களுக்கு ஒரே ஆண்டில் இத்தனை பரிசுகள் கிடைத்ததில்லை. சிறந்த படம், நடிகர், நடிகை, திரைக்கதை, பின்னணி இசை என 5 தேசிய விருதுகள் பெற்று எண்ணிக்கையில் டைரக்டர் பரதன் இயக்கிய 'தேவர்மகனுக்கு கிடைத்தபோது தமிழுக்கு வேறு விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு வசந்த் சாயின் 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படத்துக்கு மூன்று விருதுகளும், 'மண்டேலா' படத்துக்கு இரண்டு விருதுகளும் கிடைத்துள்ளன..ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் இதற்காக பெருமிதம் கொண்டிருக்க வேண்டும். மாறாக ஒரு தரப்பிலிருந்து விமர்சனங்கள எழுந்திருக்கின்றன. அது தேசிய திரையுலகிலும் எதிரொலிக்கின்றன..சூரரைப் போற்று கதை ஒரு தொழில் முனைவோனைப் பற்றியது. முதலாளித்துவத்தை உயர்த்திப் பிடிக்கக் கூடியது. நம் மக்கள் அப்படியான கதைகளை ரசிக்கமாட்டார்கள். அதுதவிர விமானம், வியாபாரம், தொழில்நுட்பம் என்று பல இடங்களில் சாமானியர்களின் பொறுமையை சோதிக்கும் மேலதிக விவரங்களும் உள்ளன. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் எழுதுவதற்கு மட்டும் செலவிடப்பட்டுள்ளது. அதன் பிறகு பல முறை திருத்தம் செய்யப்பட்டு படமாக உருவான பிறகும் என்னைப் போல இன்னும் வெவ்வேறு வயது, பின்னணி கொண்ட ஐம்பது பேர்களுக்குத் திரையிடப்பட்டு அவர்கள் கருத்துகளுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு இறுதி வடிவம் எடுத்தது என்கிறார்கள் படக்குழுவினர். ஆனால், இந்த திரைப்படத்தின் மூலக்கதையான கேப்டன் கோபிநாத்தின் "simply fly" புத்தகத்தை பலமுறை வாசித்து அவருடன் விவாதித்திருக்கும் என்னால் துணிவுடன் சொல்லமுடியும். திரைப்படம் மூலக்கதையை சிதைத்திருக்கிறார்கள். எளிய கிராமப் பின்னணியில் வளர்ந்த ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி கேப்டன் கோபிநாத் (விமானி அல்ல) புதிய பாதையைத்தேடி சாவல்களை சந்தித்து விமானப் பயணத்தை சாதாரண மக்களுக்கு எளிதாக கிடைக்கச் செய்தவர். அவர் புத்தகத்தில் சாதியம் முதலாளித்துவம் வர்க்க போராட்டம் பேசப்படவில்லை. உழைப்பும் வெற்றிக்கான சாதுர்யமும்தான் பேசப்படுகிறது. ஆனால், திரைப்படம் முழுக்க புத்தகத்தில் சொல்லப்படாத விஷயங்களை உயர்த்திப்பேசுகிறது..புத்தகங்கள் திரைப்படங்களாகும்போது மாறுதல்களுக்கு உள்ளாவதை தவிர்க்க முடியாது என்பது உண்மை. ஆனால், புத்தகத்தின் அடிப்படை கருத்துகளை புறக்கணித்து வியாபரத்துக்காக அதைப் பயன்படுத்துவது எழுத்தாளனுக்கு செய்யும் அநீதி..சூறரைப்போற்றுவிற்காக சிறந்த இசையமைப்பு (பின்னணி இசை) ஜீவி பிரகாஷ் மற்றும் அலா வைகுண்டபுரம்லோவில் சிறந்த இசையமைப்பு (பாடல்கள்) தமண் அவர்களும் தேசிய விருதிற்காக தேர்வாகியுள்ளனர். ஆனால், பிரகாஷ் இதைவிட சிறப்பாக இசை அமைத்தப் படங்கள் இருந்தாலும், இதைத்தேர்வு செய்திருப்பது "இந்தப் படத்துக்கு பல விருதுகள் கிடைக்கச் செய்யவேன்டும் என்ற முன்முடிவோ என்ற சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது" என்கிறார் ஜான் கோஷி. இவர் ஆங்கில முன்னணி தினசரிகளில் திரைப்படங்கள் குறித்து எழுதுபவர்..'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்'. பெரிய அளவில் என்னை ஈர்க்கவில்லை. பெண்ணிய நோக்கில் அந்தக் கதைகளில் வரும் பெண்களின் அவல நிலையில் மனம் கவலை கொண்டாலும், ஒரு திரைப்படம் என்ற அளவில் தனித்துவமாக எதுவும் அதில் இருந்ததாகத் தெரியவில்லை. எழுபது, எண்பதுகளில் NFDC நிதி உதவியுடன் கலைப்படங்கள் என்ற பெயரில் சிலர் படம் எடுப்பார்கள். இது அந்தப் படங்களை நினைவூட்டியது. படத்தின் டைட்டில் கூட எழுபதுகளின் சாயலில்தான் இருக்கிறது. திரைக்கலையில் சிறப்பு ஆர்வம் இருப்பவனும் தீவிர பெண்ணியவாதியுமான நானே கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் பார்க்க வேண்டி இருந்தது எனில் இதர மக்களை யோசித்துப் பார்த்துக் கொண்டேன். என்கிறார் ஶ்ரீதர் சுப்ரமணியன், இவர் உலக சினிமா இந்திய சினிமா குறித்து ஆய்வு செய்து எழுதுபவர்.."சிவரஞ்சனியும் சில பெண்களும்" படத்திற்கு விருது கிடைத்தது ஆச்சரியமாக இல்லை, அதற்காக அது "சிறந்த படமா" என்று கேட்டால் "இல்லை" என்பேன், அதே நேரம் மோசமான படமும் இல்லை. படித்த கதைகள் திரையில் வரும்போது சில நேரம் நம் மனதிற்கு போதாது போகும். வாசிப்பவருக்கு கதையாசிரியரால் கடத்தப்படும் உணர்வுகள் திரை காட்சிகளால் கடத்த முடியாமல் போய்விடும். சில உணர்வுகளில் ஆழ்ந்து போவதற்கு திரை வடிவம் உதவுவதில்லை..இந்த படத்தை பொறுத்தவரையில் சிறந்த படமல்ல. ஆனால் அதனை எட்டும் தூரத்தில் இருக்கும் படம்..ஒரு பாடத்தை படித்து அதில் 80 மார்க் எடுக்க அதை முழுதும் படித்திருக்க வேண்டும், அல்லது அதன் தேர்வு கேள்வித்தாளின் கேள்விகள் இதுவாகத்தான் இருக்கும் என அதை மட்டும் சரியாக படித்து எழுதியிருக்க வேண்டும், இந்த படம் இரண்டாவது வகையறா, சிறந்த படம் என்றில்லாவிட்டாலும் ஒரு விருது படத்துக்கான எல்லா புள்ளிகளையும் சரியாக டிக் செய்திருக்கும் படம், அதனால்தான் பல வெளிநாட்டு விழாக்களிலும் விருதுகளை வாங்கியிருக்கிறது என்கிறார் விஷவ் கேசன். இவர் பல இந்தியமொழிப்படங்களை திறானாய்வு செய்பவர்..சில படங்கள் வெளியானவுடனேயே அது "தேசிய விருதுகள் பெறும்" என்று ரசிகர்களால் பேசப்படும். உதாரணமாக 'தேவர் மகன்', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ஆடுகளம்' போன்ற பல படங்கள் இப்படி மக்களால் முன்மொழியப்பட்டு விருது தேர்வுகளில் தேர்வாகியிருக்கின்றன. சில ஏமாற்றத்தும் உள்ளாகியிருக்கின்றன. இந்த ஆண்டும் மலையாளத் திரையுலகில் ஏதோ ஒரு வகையில் விருதுகள் பெறும் என ரசிகர்களால் எதிர்பார்த்தவைகள் – டிரான்ஸ், வரனே ஆவஷ்யமுண்டு, தில் பெச்சாரா, தப்பட், சப்பக், குஞ்சன் சக்சேனா, ஷகுந்தலாதேவி, அந்தகாரம், கப்பேலா அதேபோல ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் விருதுகளைப் பெற்றிருக்கிறது. 'ஐயப்பனும் கோஷியும்' 4 விருதுகள்… சிறந்த துணை நடிகர் பிஜு, சிறந்த டைரக்டர் சச்சி, சிறந்த பாடகி நஞ்சியம்மா (கலக்காத்தா சந்தனமேர), சிறந்த ஸ்டன்ட் மாஃபியா சசி, அந்த செருப்பை கழற்றி நெஞ்சில் மிதிக்கும் சீன் என இன்னும் பல சீன்களுடன் இந்த படம் பார்த்த பொழுதே இந்த அவார்டுகள் இவரிவர்க்கு என்று சாமானியர்களே கணித்திருப்பார்கள்.ஆனால், ரசிகர்களிடையே விருது பெறும் என்று எந்த எதிர்பார்ப்பும் ஏற்படுத்தாத இந்தப் படம் பல விருதுகளைப் பெற்றிருக்கிறது. எனப்து தான் ஆச்சரியம்..'ஃபீச்சர் படம்' என்ற சிறந்த திரைக்கதை பிரிவிற்கான நடுவர் குழுவின் தலைவரான திரைப்படத் தயாரிப்பாளர் விபுல் ஷா, செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்களுக்கு கிடைத்த விண்ணப்பங்கள் மற்றும் நாங்கள் பார்த்த படங்களின் எண்ணிக்கையை நினைத்துப்பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், மிக கடினமான கொரோனா காலங்களில் இந்த படங்கள் தயாரிக்கப்பட்டன," என்று கூறினார்..அதாவது, "உங்கள் ஊரிலிருந்து வேறு நல்ல படங்கள் வரவில்லை, வந்ததில் ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ என்ற ரீதியில் விருதுகள் கொடுத்திருக்கிறோம்" என்று சொல்லுகிறார் போலிருக்கிறது. இசையில்.வாழ்த்துகள்… மெளனம் பேசியதே, 7G, ராம், புதுப்பேட்டை, பருத்திவீரன், பேரன்பு என யுவனுக்கு எப்போதுதான் விருது கிடைக்கும் என்று பார்த்தால் அவர் 2020ல் ரெக்கார்டிங்கே செய்யவில்லை என்ற செய்தி கிடைத்தது. ஆனால், 2020 ஆண்டில் அவர் தான் அதிக யூட்யூப் வீயூவ்ஸ் கொண்ட தமிழ்ப்பாடலுக்கு இசையமைத்தவர் என்பது நினைவுக்கு வந்தது. (ரவுடி பேபி). நமது இசையமைப்பாளர்களுக்கே விருதுபெறும் அளவுக்கு படங்களுக்கு இசை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதபோது நாம் கவலைப்படுவதில் எந்த நியாயமும் இல்லை..எப்படியோ தமிழ் படங்களுக்கு இந்த ஆண்டு அதிக விருதுகள் கிடைத்திருக்கிறது என்ற மகிழ்ச்சியில் "ஸ்வீட் எடு… கொண்டாடு" என்று கொண்டாடுவோம்.