ஶ்ரீ அரவிந்தரின் அமுதமொழி.ஒருவன் யோகபாதையில் இறங்கிவிட்டபின் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். என்ன நடந்தபோதிலும், என்ன கஷ்டங்கள் தோன்றினாலும் முடிவு வரை செல்வது என்று உறுதி பூண்பதுதான். உண்மையில் யாரும் தனது சொந்தத் திறமையால் யோகத்தில் சித்தி பெறுவதில்லை. உனக்குப் பக்கத்தில் நின்று உன்னைக் காத்து, வழி நடத்தும் சக்தியின் மூலமே அது வரும். எல்லா நிலை மாற்றங்களினூடும் அந்த சக்தியின் துணையை நாடி அழைக்கும் அழைப்பின் மூலமே சித்தி வரும். உன்னால் சுறுசுறுப்பாக ஆர்வமுற முடியாதபோதும் உதவி வருவதற்காக அன்னையை நோக்கித் திரும்பிய நிலையில் இரு – அது ஒன்றே எப்பொழுதும் செய்ய வேண்டியது ..தேவை விடாமுயற்சி – கஷ்டத்தினூடும் இயற்கையின் நடைமுறையும், அன்னையின் சக்தியின் செயலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன, அவை தேவையானவற்றையெல்லாம் செய்யும் என்பதை உணர்ந்து அதைரியப்படாமல் செய்ய வேண்டியதைச் செய்து கொண்டிருத்தல், நமது திறமையின்மை பெரிய விஷயமல்ல – எல்லா மனிதரும் அவர்களுடைய இயற்கை பாகத்தில் திறமையில்லாதவர்களே. ஆனால் தெய்வ சக்தியும் உள்ளது. நீ அதில் நம்பிக்கை வைத்தால் திறமையின்மை திறமையாக மாற்றப்பட்டுவிடும். கஷ்டமும் போராட்டமுமே வெற்றிக்கான சாதனமாகிவிடும் .."என்னால் முடியவில்லை".."நான் போதிய அளவு செய்யவில்லை" என்னும் எண்ணம் வந்து உன்னைத் தொல்லைப்படுத்த என்றுமே இடங்கொடாதே. அது தபோகுணசூசனை. அது மனச்சோர்வை உண்டாக்கும். மனச்சோர்வு தவறான சக்திகளின் தாக்குத லுக்குக் கதவு திறக்கும். இதுவே நீ எடுக்கவேண்டிய நிலை. என்னால் முடிந்ததை நான் செய்துள்ளேன். உரிய காலத்தில் எல்லாம் நல்லவையாக நடக்கும்படி பார்த்துக்கொள்ள அன்னையின் சக்தி உள்ளது என்று அடிக்கடி கூறிக்கொள்..தன்னுடைய சொந்த பலத்தினாலோநல்ல குணங்களினாலோ யாரும்தெய்விக மாற்றத்தை அடைய முடியாது..இரு விஷயங்கள் முக்கியமானவை.ஒன்று அன்னையின் சக்தி வேலை செய்தல்;இரண்டு அதற்குத் திறக்க வேண்டும்என்னும் சாதகனின் மன உறுதியும்அன்னை வேலை செய்கிறார்என்பதில் நம்பிக்கை வைத்தலும்.உனது மன உறுதியிலும்நம்பிக்கையிலுமிருந்து வழுவாதிரு,மற்ற எதைப் பற்றியும் கவலை கொள்ளாதேஅவை சாதனையில் ஏற்படும்கஷ்டங்கள்தாம்.
ஶ்ரீ அரவிந்தரின் அமுதமொழி.ஒருவன் யோகபாதையில் இறங்கிவிட்டபின் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். என்ன நடந்தபோதிலும், என்ன கஷ்டங்கள் தோன்றினாலும் முடிவு வரை செல்வது என்று உறுதி பூண்பதுதான். உண்மையில் யாரும் தனது சொந்தத் திறமையால் யோகத்தில் சித்தி பெறுவதில்லை. உனக்குப் பக்கத்தில் நின்று உன்னைக் காத்து, வழி நடத்தும் சக்தியின் மூலமே அது வரும். எல்லா நிலை மாற்றங்களினூடும் அந்த சக்தியின் துணையை நாடி அழைக்கும் அழைப்பின் மூலமே சித்தி வரும். உன்னால் சுறுசுறுப்பாக ஆர்வமுற முடியாதபோதும் உதவி வருவதற்காக அன்னையை நோக்கித் திரும்பிய நிலையில் இரு – அது ஒன்றே எப்பொழுதும் செய்ய வேண்டியது ..தேவை விடாமுயற்சி – கஷ்டத்தினூடும் இயற்கையின் நடைமுறையும், அன்னையின் சக்தியின் செயலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன, அவை தேவையானவற்றையெல்லாம் செய்யும் என்பதை உணர்ந்து அதைரியப்படாமல் செய்ய வேண்டியதைச் செய்து கொண்டிருத்தல், நமது திறமையின்மை பெரிய விஷயமல்ல – எல்லா மனிதரும் அவர்களுடைய இயற்கை பாகத்தில் திறமையில்லாதவர்களே. ஆனால் தெய்வ சக்தியும் உள்ளது. நீ அதில் நம்பிக்கை வைத்தால் திறமையின்மை திறமையாக மாற்றப்பட்டுவிடும். கஷ்டமும் போராட்டமுமே வெற்றிக்கான சாதனமாகிவிடும் .."என்னால் முடியவில்லை".."நான் போதிய அளவு செய்யவில்லை" என்னும் எண்ணம் வந்து உன்னைத் தொல்லைப்படுத்த என்றுமே இடங்கொடாதே. அது தபோகுணசூசனை. அது மனச்சோர்வை உண்டாக்கும். மனச்சோர்வு தவறான சக்திகளின் தாக்குத லுக்குக் கதவு திறக்கும். இதுவே நீ எடுக்கவேண்டிய நிலை. என்னால் முடிந்ததை நான் செய்துள்ளேன். உரிய காலத்தில் எல்லாம் நல்லவையாக நடக்கும்படி பார்த்துக்கொள்ள அன்னையின் சக்தி உள்ளது என்று அடிக்கடி கூறிக்கொள்..தன்னுடைய சொந்த பலத்தினாலோநல்ல குணங்களினாலோ யாரும்தெய்விக மாற்றத்தை அடைய முடியாது..இரு விஷயங்கள் முக்கியமானவை.ஒன்று அன்னையின் சக்தி வேலை செய்தல்;இரண்டு அதற்குத் திறக்க வேண்டும்என்னும் சாதகனின் மன உறுதியும்அன்னை வேலை செய்கிறார்என்பதில் நம்பிக்கை வைத்தலும்.உனது மன உறுதியிலும்நம்பிக்கையிலுமிருந்து வழுவாதிரு,மற்ற எதைப் பற்றியும் கவலை கொள்ளாதேஅவை சாதனையில் ஏற்படும்கஷ்டங்கள்தாம்.