
"தலை தீபாவளி முடிஞ்சு அடுத்த தீபாவளிக்கும் வாங்க மருமகனே."
"அப்போ நீங்க கூப்பிட மறந்துடுவீங்க மாமா… அதனால இங்கேயே இருந்துடுறேன் மாமா."
– ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்
"அவரு கிளி மாதிரி பொண்ணை வளர்த்து பூனைகிட்ட கொடுத்துட்டேன்னு சொல்றாரே… என்னவாம்."
"கறுப்புப் பூனை படையில் பணியாற்றும் அதிகாரிக்குக் கட்டிக்கொடுத்ததை அப்படிச் சொல்றார்."
– எஸ். மோகன், கோவில்பட்டி
''ஐந்து ஆண்டுகால ஆட்சியில் தலைவர் எதையெல்லாம் காத்தார் தெரியுமா?"
"மௌனம் காத்தார்."
– ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்
ஆசிரியர்: "தேர்தல் நடப்பது எந்தக் காலம்?"
மாணவன்: "ஓட்டுக்குப் பணம் கிடைக்கும் காலம் சார்."
– வெ.விஜயகுமாரி, திண்டுக்கல்
"கையை நீட்டச் சொன்னால் பல்லை காட்டுறீங்களே?"
"பல்ஸ் பார்க்கணும்னு நீங்கதானே சொன்னீங்க டாக்டர்?"
– சி.ஸ்ரீரங்கம், திருவெறும்பூர்
"தலைவர் இன்னிக்கு ''மௌன விரதம்' இருக்கப் போறாராமே ஏன்?"
"அமலாக்கத் துறையும் வருமானவரித் துறையும் தலைவரை விசாரிக்க வர்றாங்களாம்."
– ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்